Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

 

(எம்.மனோசித்ரா)

ர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பின்னணியில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் நேற்று (ஜன. 31) செவ்வாய்கிழமை டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0.jpg

இச்சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடன் பயனுள்ள சந்திப்பு இடம்பெற்றது. எனது சமீபத்திய இலங்கை விஜயத்தை மறுபரிசீலனை செய்து புரிந்துகொள்ளல்களை மேம்படுத்துவதாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வரும் பின்னணியில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் (இந்து சமுத்திர பிராந்தியம்) புனித் அகர்வால் மற்றும் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.  

அதேவேளை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் டில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு நலன்களை பகிர்ந்துகொள்வது குறித்து சுமுகமான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது. 

உயர்ஸ்தானிகர் மொரகொட, இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த தொழில்முறை பயிற்சிகளை வழங்கிய இந்திய படைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதானியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

அதுதான் சிங்களவன் அங்க இருக்கான் ...
நாங்கள் பெட்டியை டிக்கிக்கு கீழே அமுக்கிவிட்டு விசுக்கோத்து சாப்பிடத்தான் லாயக்கு 

  • Like 1
Link to comment
Share on other sites

12 hours ago, alvayan said:

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

மிலிந்தவின் மனைவி ஜெனவர் புஸ் குடும்பத்தின் உறவினர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதான் சிங்களவன் அங்க இருக்கான் ...
நாங்கள் பெட்டியை டிக்கிக்கு கீழே அமுக்கிவிட்டு விசுக்கோத்து சாப்பிடத்தான் லாயக்கு 

தமிழந்தான் இனம் மாறி கட்டினால் அத்தோடு அந்த நபரை தூய தமிழன் இல்லை என்றாக்கி விடுவானே.

 

1 minute ago, nunavilan said:

மிலிந்தவின் மனைவி ஜெனவர் புஸ் குடும்பத்தின் உறவினர் என நினைக்கிறேன்.

 

12 hours ago, alvayan said:

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

மிலிந்த 13 ஐ பற்றி பெரிய அபிபிராயம் இல்லாத மனிதர். 

உண்மையில் ஒரு உயர் நிலை தரகர். கூலியை பொறுத்து நிலைப்பாட்டை மாற்றுவார்.

இவரை 13 எதிர் நிலை எடுக்க வைத்து, இந்திய தூதராயும் நியமித்தது நரி 🦊.

இந்த நரிதான் 13 ஐ அமல்படுத்துவேன் என ஊளையும் இட்டது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

 

 

 

மிலிந்த 13 ஐ பற்றி பெரிய அபிபிராயம் இல்லாத மனிதர். 

உண்மையில் ஒரு உயர் நிலை தரகர். கூலியை பொறுத்து நிலைப்பாட்டை மாற்றுவார்.

இவரை 13 எதிர் நிலை எடுக்க வைத்து, இந்திய தூதராயும் நியமித்தது நரி 🦊.

இந்த நரிதான் 13 ஐ அமல்படுத்துவேன் என ஊளையும் இட்டது🤣

எந்த சிங்களவன் 13 க்கு ஆதரவு....ஒருவருமே இல்லை..நரியின் நாடகம் கடன் கிடைக்கும்வரை...மொரகொட வுக்கு 12 13 ஐ சொன்னது ..அமெரிக்கா,இந்திய அதிகாரிகளின் பலவீனம் அறி ந்து ...12, 13 வயதினரை வைத்து அதி விசேட விருந்து வைப்பதில் கில்லாடிதான் இந்த் மொரகொட.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
    • சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்! சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் வீதிகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 3ஆம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் வீதிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2023/1328754
    • ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்? ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராக எளிய பெரும்பான்மை வாக்குகளுடன் உயர் பதவியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில், ஹம்சா யூசப்பை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் பின்னர் வாக்களிக்கும். 50,490 வாக்குகளில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹம்சா யூசப், கட்சித் தலைமையை வென்றார். 37 வயதான ஹம்சா யூசப், ஒரு பெரிய பிரித்தானிய கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் முஸ்லீம் ஆவார் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல் சிறுபான்மை இனத் தலைவராகவும் ஆனார். ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டக்ளஸ் ரோஸ், ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார் மற்றும் ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அலெக்ஸ் கோல்-ஹாமில்டன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை. https://athavannews.com/2023/1328790
    • சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும் காவல் காத்திருக்கின்றார்கள். நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.