Jump to content

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை வழங்க பாரிஸ்கிளப் தயார் - ரொய்ட்டர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை வழங்க பாரிஸ்கிளப் தயார் - ரொய்ட்டர்

By RAJEEBAN

02 FEB, 2023 | 03:56 PM
image

பாரிஸ் கிளப் இலங்கையின் கடன் உதவி தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை வழங்கவுள்ளது.

ரொய்ட்டர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கை பெறுவதற்கு அவசியமான நிதி உத்தரவாதங்களை சர்வதேச நாணயநிதியத்திற்கு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் தயார் என இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த இருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான ஆதரவை( கடன்மறுசீரமைப்பிற்கான)  பாரிஸ் கிளப் விரைவில் வெளியிடும் என தனது பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்கம் பொருளாதார மந்தநிலை நாணயபெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்டுள்ள இலங்கை கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச நாணயநிதியத்துடன்  பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்துகொண்டது.

இலங்கையின் பொதுக்கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 122 வீதமாக  காணப்படுகின்றது .

பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளன.

பாரிஸ் கிளப்பின் உத்தரவாதம் சீனாவில் தங்கியிருக்கவில்லை என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்பொன்று தெரிவித்தது.

பாரிஸ் கழகம் சீனா உட்பட தனதுஅமைப்பில் அங்கத்துவம் வகிக்காத நாடுகளை  இலங்கை தொடர்பான நிதி உத்தரவாதங்களிற்காக அணுகியுள்ளது என மற்றுமொரு தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் அந்த தரப்பு இது குறித்த மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

சர்வதேச நாணயநிதிய திட்டத்தின் கீழ் இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கு உதவுவதாக இந்தியா உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

இதேவேளை சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடன்களை மீளப்பெறுவதை இரண்டு வருடகாலத்திற்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

சீனாவின் இலங்கை தொடர்பான இந்த நிலைப்பாடு குறித்து சர்வதேச நாணயநிதியம் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் உயர் அதிகாரியொருவர் சீன இந்த விடயத்தில் போதியளவு செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/147288

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவு - சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்தது பாரிஸ்கிளப்

By RAJEEBAN

03 FEB, 2023 | 02:45 PM
image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக  பாரிஸ்கிளப் சர்வதேச நாணயத்திற்கு தெரிவித்துள்ளது

சர்வதேச ஊடகமான புளும்பேர்க் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கடன் மறுசீரமைப்பு மற்றும்  சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து  நிதி உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பாரிஸ்கிளப் சர்வதேச நாணயநிதியத்துடன் தொடர்புகொண்டுள்ளது என புளும்பேர்க் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியம் இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

இந்தியாவால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை குறித்து மாத்திரம் சர்வதேச நாணயநிதியம் இதுவரை கருத்து தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/147365

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் கடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ்கிளப் அறிவிப்பு

Published By: RAJEEBAN

15 APR, 2023 | 08:42 AM
image

இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளதாக பாரிஸ்கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான கடன்வழங்குநர்கள் குழு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பாரிஸ்கிளப் இதனை தெரிவித்துள்ளது.

ஜப்பான் இந்திய நிதியமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதி அதன் பிரதிநிதிகளுடன் இணைந்து வியாழக்கிழமை இலங்கைக்கு கடன்வழங்கியவர்களின்   குழுவை ஏற்படுத்தியுள்ளனர் என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

கடன்வழங்கியவர்களின் குழுக்கள் எதிர்கால கடன்நிவாரண உடன்படிக்கைக்கான வழிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு தலைமை வகிக்கவுள்ளன.

தற்போதைய உத்வேகத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ள பாரிஸ்கிளப் நியாயமான கடன்சுமை பகிர்வு வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி; செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/152872

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.