Jump to content

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் அவர்களுக்காக நீதி கேட்கவில்லை:அருட்தந்தை ஜெபரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரு மாகாணங்களுக்கும் தனியான கர்தினால் ஒருவரை நியமிக்குமாறு வத்திக்கானிடம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் சிறுபான்மை தமிழ் கத்தோலிக்கர்கள் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்ததன் காரணமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நீதி கேட்கவில்லை

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் அவர்களுக்காக நீதி கேட்கவில்லை:அருட்தந்தை ஜெபரத்தினம் | Separate Cardinal For North East Of Sri Lanka

மேலும் கூறுகையில்,“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கொழும்பு பேராயர் நீதி கேட்பதில் தவறில்லை, ஆனால் வடக்கு கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்க எவரும் முன்வராத காரணத்தினால் தான் நீதியை நிலைநாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி புனித பேதுரு தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். 

அப்போது, வடக்கு மற்றும் கிழக்கு ஆயர்களின் கவனம் இந்த விடயத்தில் ஈர்க்கப்பட்டது, ஆனால் தெற்கில் இருந்து எந்த பதிலும் இல்லை.

ஏழு பாதிரியார்கள் மற்றும் பல கன்னியாஸ்திரிகள் போரில் இறந்தனர்.

1995 இல், ரெவரெண்ட் மேரி பாஸ்டியன் தனது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா செல்வதற்கு முன்னர் அவர் பகிரங்கமாக கொல்லப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் அவர்களுக்காக நீதி கேட்கவில்லை:அருட்தந்தை ஜெபரத்தினம் | Separate Cardinal For North East Of Sri Lanka

நினைவு தினத்தில் பங்கேற்க விரும்பவில்லை

யாழ்ப்பாண கன்னியாஸ்திரியின் தலைமையில் நடத்தப்பட்ட மேரி பாஸ்டியனின் நினைவு தினத்தில் கொழும்பு கன்னியாஸ்திரி ஒருவர் பங்கேற்க விரும்பவில்லை என தென்பகுதி ஆயர்கள் தெரிவித்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களுக்காக கொழும்பு பேராயர் நீதி கேட்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேபோன்று தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் தமிழ் மக்களுக்கு நீதி கேட்கவில்லை?

வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச தலையீடு தேவையற்றது என தென்னிலங்கை ஆயர்கள் கூறியுள்ள நிலையில், வடக்கு கிழக்கு ஆயர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/separate-cardinal-for-north-east-of-sri-lanka-1675455094

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி புனித பேதுரு தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். 

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

சதி. கொழும்பில் தாங்கள் வெள்ளையும் சுள்ளையுமாக அலையனுன்னா.. சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கனுன்னா.. தமிழர்களுக்கு எதிராகப் பேசனும்.. என்ற அடிமட்ட புத்தியோடு வாழ்பவர்கள் தான் தென்னிலங்கை வாழ் ஆயர்களும்.. போராயர்களும். இதில் முன்னாள் மட்டக்களப்பு பேராயரும் அடக்கம். 

ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள்.. தேவாலயத்தில் வைச்சு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனமோ.. விசாரணையோ கோராதவர்கள்.. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற கணிப்பைக் கூட வழங்கத் தவறியவர்கள்...இன்று சர்வதேச கவனம் பெற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக 2019 தாக்குதலுக்கு முன்னுரிமை கொடுத்து தங்களை மனிதாபிமானிகள் போலக் காட்டிக்கொள்ள போலி வேடம் போடுகின்றனர் அவ்வளவே.

அல்லைப்பிட்டியில்.. ஈபிடிபி மற்றும் கடற்படையால்.. கொல்லப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. இப்படி எத்தனையோ சம்பவங்கள். 2019 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சார்ப்பாக இவர்கள் வடிக்கும் கண்ணீரை.. நீலிக்கண்ணீராகத்தான் காட்டுது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தார்மீக மான தமிழீழக் கோரிக்கையை நிராகரிக்கும் இவர்கள்.. அண்மையில் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தென் சூடானுக்கு பாப்பரசர் விஜயம் செய்திருப்பதை கண்டிப்பினமாமோ... பதவி கிழிஞ்சிடும். 

Pope and archbishop on historic peace mission to South Sudan

https://www.bbc.co.uk/news/world-africa-64500535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் மீதான அத்தனை வன்முறையின் பின்னும் மகிந்தவை நேரில் அழைத்து ஆசீர்வதிதவர் போப்பாண்டவர். இதன் முக்கிய காரணம் - கர்தினால் என்ற வகையில் கொழும்பு பேராயர் சொல்வதன் படி வத்கிக்கான் ஒழுகுவதே.

முன்பே சொன்னதுதான்.

தமிழர் அல்லாதோர் எம்மை தமிழராக மட்டுமே பார்கிறனர். இதில் வத்திகனும், கொழும்பின் பேராயரும் (கர்தினாலும்) அடங்குகிறனர்.

நாம்தான் சைவன், கத்தோலிக்கன், புரடஸ்தாந்து என நமக்குள்  பார்க்கிறோம்

இந்த மாற்றாந்தாய் அணுகுமுறையை இப்போதாவது சுட்டி காட்டி, பரிகாரமாக தமிழ் பேசும் இரு மாகாணங்களுக்கும் ஒரு கர்தினாலை நியமிக்க அருட்தந்தை பத்திநாதர் கோருவது நியாயமானது, காலத்தின் தேவை.

இதை சமய வேறுபாடுகளை மறந்து ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சதி. கொழும்பில் தாங்கள் வெள்ளையும் சுள்ளையுமாக அலையனுன்னா.. சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கனுன்னா.. தமிழர்களுக்கு எதிராகப் பேசனும்.. என்ற அடிமட்ட புத்தியோடு வாழ்பவர்கள் தான் தென்னிலங்கை வாழ் ஆயர்களும்.. போராயர்களும். இதில் முன்னாள் மட்டக்களப்பு பேராயரும் அடக்கம். 

ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள்.. தேவாலயத்தில் வைச்சு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனமோ.. விசாரணையோ கோராதவர்கள்.. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற கணிப்பைக் கூட வழங்கத் தவறியவர்கள்...இன்று சர்வதேச கவனம் பெற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக 2019 தாக்குதலுக்கு முன்னுரிமை கொடுத்து தங்களை மனிதாபிமானிகள் போலக் காட்டிக்கொள்ள போலி வேடம் போடுகின்றனர் அவ்வளவே.

அல்லைப்பிட்டியில்.. ஈபிடிபி மற்றும் கடற்படையால்.. கொல்லப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. இப்படி எத்தனையோ சம்பவங்கள். 2019 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சார்ப்பாக இவர்கள் வடிக்கும் கண்ணீரை.. நீலிக்கண்ணீராகத்தான் காட்டுது.

நன்றி அருமையான கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

நாம்தான் சைவன், கத்தோலிக்கன், புரடஸ்தாந்து என நமக்குள்  பார்க்கிறோம்

கத்தோலிக்கர் புரட்டஸ்தான்து என்று  அவர்கள் தங்களுக்குள்  பார்க்கிறார்களோ தெரியவில்லை பிரான்ஸ் லூர்து மாதவிடமும் வொசிங்கம் சேர்சிலும் அழுது பிரார்தனை  செய்து சேவிப்பவர்கள்  இலங்கை சைவர்கள் தான் அதிகம் . 

புறாவுக்கு  தெரியாது அடிக்கிற மணி சேர்சில் இருந்து வருதா இல்லை சைவ கோயிலில் இருந்து வருதா என்பது போல் இருந்த இலங்கை தமிழர்களுக்குள் புலிகள் இல்லாமல் போன காலத்துக்குள் பிரிவினைகளை உருவாக்க மறவன் புலவு .. வேலன் சுவாமி  போன்றவர்கள் இந்திய இலங்கை அரசுகளால் இறக்கி விடபட்டுள்ளார்கள் . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

ஒரு முடிவுக்கான ஆரம்பம். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புனித யாகப்பர் ஆலயம், மடுமாதா ஆலயம் இப்படி இவர்களால் குண்டு வீசி அழிக்கப்பட்ட தேவாலயங்கள், அடைக்கலம் புகுந்து, வழிபட சென்று கொல்லப்பட்டவர்கள் இவர்களைப்பற்றி வாயே திறக்கவில்லை கர்தினால், போப்பும் கேள்வி கேட்கவில்லை, மனவருத்தம் தெரிவிக்கவுமில்லை, அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவுமில்லை. நொந்த பிள்ளையை தாயும் பாரமென்று நினைத்து கைவிட்டாளோ? மந்தையை மறந்த ஆயர்கள். என்னோடு என் சிலுவையை சுமந்துகொண்டு என்பின்னே வாருங்கள் என்று அந்த கிறிஸ்து அழைத்தாரோ தமிழரை?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.