Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

 

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.

அந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தலைமையில் யார் முன்னெடுக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு

By DIGITAL DESK 5

04 FEB, 2023 | 06:27 PM
image

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின் யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

01__9_.jpg

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்று மும்மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.

01__7_.jpg

மாவட்ட மட்ட சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

01__4_.jpg

01__1_.jpg

01__10_.jpg

01__5_.jpg

01__6_.jpg

https://www.virakesari.lk/article/147426

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை 75வது சுதந்திர தினம்: கொண்டாட்டங்களுக்கு நடுவே வெறிச்சோடிய யாழ்ப்பாணம் - படங்கள்

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

4 பிப்ரவரி 2023, 10:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் (முழு அடைப்பு) அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த நாளை இலங்கை தன் சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் கொழும்புவில் கொடியேற்றினார்.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்.

 
இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

யாழ்நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

யாழ்ப்பாணம் நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்க கொடி பறக்கவிடப்படும் கம்பத்தில் சிங்க கொடிக்கு பதிலாக கறுப்பு கொடியை மாணவர்கள் பறக்க விட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவேறு மனநிலை நமக்குள், துயர் சுமந்த மண்ணில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தேசியக்கொடி; யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி - என்ன நடந்தது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people and text

 @goshan_che ::: ஓட்டுமொத்த சேட்டுகளும் ஒண்டா கூடிட்டாங்கய்யா 😂 🤣

Gobinath Pannirselvam

இதிலை... ஒறிஜினல் தொப்பி போடுற... காத்தான்குடி காரரும் நிற்கிறார்களா தெரியலியே. 😂

 

May be an image of 2 people and text that says 'பாத்திரத்தை மாற்றிவிட்டால் நஞ்சின் குணம் மாறுமா கோலம் மாறினால் கொண்ட கொள்கை மாறுமா'

 

May be an image of 9 people and text that says '. ) இத்தனை ஆண்டுகளாக கரிநாள் என இருந்தது இந்த ஆண்டு ஒருத்தன் அதை கரி பூசும் நாளாக்கினான்'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து மீண்டும் உயர்வடைந்தது ரூபாவின் பெறுமதி Published By: VISHNU 21 MAR, 2023 | 05:30 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது.  நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது. இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சடுதியான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துச்சென்றது.  ஆனால் நேற்று (20) திங்கட்கிழமை மீண்டும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன்படி நேற்று (20) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 331.71 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 349.87 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாக இன்று (21) உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.  அதன்படி இன்று (21) செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/151098
    • அது தான் பெயரைப் பார்த்தாலே அதிருதில்ல. சீனர்களின் கடைகளில் தாமரைக்கிழங்கு கிடைக்குமே.
    • 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம் - அரசாங்கம் Published By: DIGITAL DESK 5 21 MAR, 2023 | 11:43 AM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம். எனினும் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. எனவே நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிபந்தனைகளையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. இந்த கடனுதவி திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் , கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ள 48 மாதங்களும் யார் ஆட்சி செய்தாலும் , எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வதேசத்துடன் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் அல்லது அவற்றை ஏற்றுக் கொண்டாலும் அது தொடர்பில் சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமானால் அது சிறந்ததாகும். அத்தோடு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியிருக்கின்றோம். ஆனால் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. இதற்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி தேசிய ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் வழங்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீது ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்களாக இவ்வருடத்திற்குள் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறும். நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே அவற்றை வெளிப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட உரை நிகழ்த்துவார். நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த முழுமையான பொறுப்புக்கள் நாட்டு மக்களுடையது. வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாவிட்டால் , நாடு பாரிய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும். நாட்டை நேசிக்கும் மக்கள் அதைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்று ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கான சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/151027
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.