Jump to content

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார்.

வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார்.

 

https://athavannews.com/2023/1322954

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

By Rajeeban

04 Feb, 2023 | 12:05 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின்    80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்  புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்

 

https://www.virakesari.lk/article/147409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியின் ஒரு சில நடவடிக்கைகளை பார்க்கும் போது பழைய பழி தீர்க்கும் நடவடிக்கையோ என எண்ணத்தோன்றுகின்றது.

Quote

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

இவர் ஏன் இப்ப துள்ளுறார்? முழு உக்ரேன் சனத்தையும் அவுஸ்ரேலியா தத்தெடுக்கலாமே? :grinning_face:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

By Rajeeban

04 Feb, 2023 | 12:05 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின்    80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்  புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்

 

https://www.virakesari.lk/article/147409

யாழ் களத்திலேயே  ஒருவரும் மேற்குலகின் சொல்லை நம்புவதிலிருந்து மெதுவாக பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். இவரோ  கோமாவிலிருந்து தற்போதுதான் மீண்டு  வந்துள்ளார் போல பழையதையே பேசிக்கொண்டி....😏

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

யாழ் களத்திலேயே  ஒருவரும் மேற்குலகின் சொல்லை நம்புவதிலிருந்து மெதுவாக பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். 

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

யாழ் களம் சார்பாகவோ அல்லது  ஆதரவாளர்களாக மாறிவிட்டனர் எனக் கூறியதை காட்டுங்கள் பார்க்கலாம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

கிம் -  நான் மட்டும்தான் யாழில் அங்கீகரிக்கப்ட்ட ஒரே ஒரு கிம் ஆதரவாளன். 

வேறு யாரையும் இவ்வாறு அழைத்தால், அல்லது அழைக்க தூண்டினால் சட்ட நடவடிக்க எடுக்கப்படும்.

புட்லர் - பாவத்தை அடிச்சும் பார்த்தாச்சு, அவிழ்த்தும் பார்த்தாச்சு எண்டு இப்ப கொஞ்சம் லீவுல விட்டிருக்கு.

ஹிட்லர் - இது சும்மா குதர்கத்துக்காக எழுதுவது

#கு(தர்க)மாரசாமி அண்ணை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா? 

உக்ரேன் ? அப்படியென்றால் என்ன ? என்று ஒரு கேள்வி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

😀

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.