Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார்.

வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார்.

 

https://athavannews.com/2023/1322954

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

By Rajeeban

04 Feb, 2023 | 12:05 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின்    80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்  புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்

 

https://www.virakesari.lk/article/147409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியின் ஒரு சில நடவடிக்கைகளை பார்க்கும் போது பழைய பழி தீர்க்கும் நடவடிக்கையோ என எண்ணத்தோன்றுகின்றது.

Quote

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

இவர் ஏன் இப்ப துள்ளுறார்? முழு உக்ரேன் சனத்தையும் அவுஸ்ரேலியா தத்தெடுக்கலாமே? :grinning_face:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

By Rajeeban

04 Feb, 2023 | 12:05 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின்    80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்  புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்

 

https://www.virakesari.lk/article/147409

யாழ் களத்திலேயே  ஒருவரும் மேற்குலகின் சொல்லை நம்புவதிலிருந்து மெதுவாக பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். இவரோ  கோமாவிலிருந்து தற்போதுதான் மீண்டு  வந்துள்ளார் போல பழையதையே பேசிக்கொண்டி....😏

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

யாழ் களத்திலேயே  ஒருவரும் மேற்குலகின் சொல்லை நம்புவதிலிருந்து மெதுவாக பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். 

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

யாழ் களம் சார்பாகவோ அல்லது  ஆதரவாளர்களாக மாறிவிட்டனர் எனக் கூறியதை காட்டுங்கள் பார்க்கலாம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

கிம் -  நான் மட்டும்தான் யாழில் அங்கீகரிக்கப்ட்ட ஒரே ஒரு கிம் ஆதரவாளன். 

வேறு யாரையும் இவ்வாறு அழைத்தால், அல்லது அழைக்க தூண்டினால் சட்ட நடவடிக்க எடுக்கப்படும்.

புட்லர் - பாவத்தை அடிச்சும் பார்த்தாச்சு, அவிழ்த்தும் பார்த்தாச்சு எண்டு இப்ப கொஞ்சம் லீவுல விட்டிருக்கு.

ஹிட்லர் - இது சும்மா குதர்கத்துக்காக எழுதுவது

#கு(தர்க)மாரசாமி அண்ணை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா? 

உக்ரேன் ? அப்படியென்றால் என்ன ? என்று ஒரு கேள்வி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை தேவாலயங்களில் பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். பேச்சிப்பாறையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸார் இவர்மீது வழக்கு பதிவுசெய்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் நேற்று காலை முதல் போலீஸார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியிருக்கிறார் பாதிரியார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம்கார்டுகளை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.     கைதான பாதிரியார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் உள்ளிட்டவை படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேவையாற்ற வேண்டும் என்பது மரபு. ஒருகட்டத்தில், பாதிரியார் பொறுப்பிலிருந்து வெளியேறி காதலியைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருக்கிறார்.   பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது   ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம். தனது காதல் ஆசை நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாம். அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் வைத்திருந்திருக்கிறார். சென்னையிலுள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை தனியாகச் சந்திப்பது வழக்கமாம்.   கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்திருக்கிறார். புது...புது இளம்பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சாட்டிங் செய்யும்போதே இளம்பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ விசாரணையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் | Police interrogates priest Benedict arrested for sexual abuse - Vikatan
    • ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும்.
    • நாங்கள் கேள்விமட்டும்தான் கேட்பம். அதையே நீங்கள் திருப்பிக்கேட்டால்?? வேறென்ன எஸ்கேப் அல்லது தூங்குபவர்களை போல நடிக்கிறார்கள் என்பது. கவுண்டர் சொல்வதுபோல், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!
    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை இப்போது இந்த குழந்தைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால்?? அது எமக்கு ஒரு துரும்பாக அமையலாம் அல்லவா?
    • நாம் அல்ல 2500 வருட வரலாற்றைக் கொண்ட இனமாக பீற்றிக் கொள்ளும் சிங்கள பெளத்த இனம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.