Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறைந்தார் இசை வாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

சென்னை, 

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் 

சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


https://www.dailythanthi.com/News/State/popular-playback-singer-vani-jayaram-dies-892597

 

 

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

1971-ம் வருடப் புத்தாண்டில் வெளிவந்த 'குட்டி' (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற 'பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

இவரது முதல் பாடலே அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 19க்கும் மேற்பட்ட மொழி பாடல்களை பாடி பிரபலமானார்.

1974 ஆம் ஆண்டு தமிழில் "தீர்க்கசுமங்கலி" படத்தில் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற,முத்தான பாடலாக அமைந்தது.

தீர்க்கசுமங்கலி படத்திற்கு முன்பே, இவர், "வீட்டுக்குவந்த மருமகள்", "சொல்லத்தான் நினைக்கிறேன்" முதலான படங்களில் பாடியிருந்தாலும், தீர்க்கசுமங்கலி படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

மாடர்ன், கர்நாடக இசை, கஜல், பாப்நாட்டுப்புறஇசை, உள்ளிட்ட பலவிதமான இசைப்பாடல்களையும் நன்றாகப் பாடக்கூடியவர் பாடகி வாணிஜெயராம்.

இந்தியாவின் முதல் 3டி படமான "மைடியர் குட்டிச்சாத்தான்" படத்தில், இவர் பாடிய "செல்லக்குழந்தைகளே!" பாடலில், இசையிலும்சரி, குரலிலும் சரி, குழந்தைகளின் குதூகலஉணர்வு வழிந்தோடுவதை உணரமுடியும். பழைய "பாலைவனச்சோலை" படத்தில் இவர் பாடிய "மேகமே! மேகமே!" பாடல், இன்றளவும் கேட்பவர்கள் மனதை, நெகிழவைக்கக் கூடியது.

'புனித அந்தோனியார்' படத்தில் 'மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்', பி. சுசீலாவுடன் இணைந்து 'பாத பூஜை' படத்தில் 'கண்ணாடி அம்மா உன் இதயம்', 'அந்தமான் காதலி'யில் 'நினைவாலே சிலை செய்து', 'சினிமாப் பைத்தியம்' படத்தில் 'என் உள்ளம் அழகான வெள்ளித்திரை', 'தங்கப்பதக்க'த்தில் 'தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, 'பாலாபிஷேக'த்தில் 'ஆலமரத்துக் கிளி' எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் 'என்னுள்ளே ஏதோ', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெற்ற 'நானே நானா', 'சிறை' படத்தில் 'நான் பாடிக்கொண்டே இருப்பேன்' , 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் 'கட்டிக் கரும்பே கண்ணா', 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் 'ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்', 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் 'மணமகளே உன் மணவறைக் கோலம்' ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்", "கேள்வியின் நாயகனே", என்று வாணி ஜெயராம் அவர்களின் குரல் இனிமைக்கு, சாட்சிகளாக எத்தனையோ பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.

கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் தமிழ் நாடு வேலூரில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர்.

வாணிஜெயராம் ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, பாரத ஸ்டேட்வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். அவருடைய இசைத்திறமையை அறிந்த கணவர் ஜெயராம்தான், இவரை, முழுநேர பாடகியாக்க முயற்சிமேற்கொண்டார்.

இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடியுள்ளார் வாணிஜெயராம்.

அபூர்வராகங்கள், சங்கராபரணம் (தெலுங்கு), சுவாதிகிரணம்(தெலுங்கு) முதலான படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்றுதேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் வாணிஜெயராம். சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள்:

1975 – தேசிய விருது – சில பாடல்கள் –அபூர்வ ராகங்கள்

1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சங்கராபரணம்

1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" சுவாதி கிரணம்
 

 

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/popular-playback-singer-vani-jayaram-passes-away-892607

 

  • Thanks 1
  • Sad 2
Link to comment
Share on other sites

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Ftamil-cinema%2F938753-popular-playback-singer-vani-jayaram-passed-away-in-chennai.html&h=AT0cPSRmS7dnkid1YHHKg48k5wB58oNDtl-dlGiADSXupngr9iG9YVj0VYUNWbXgy868DybFfaL-0FK1hIpnn1CqSblDHl0sWwcBKlsXpLZRSPAvbAIYRI7wf1hLC4dIiGw

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். ஹிந்தியப் படை ஆக்கிரமிப்புக் கால..  விடுதலை கானங்களில் பாடி இருக்கிறார். 

Link to comment
Share on other sites

"மல்லிகை என் மன்னன் மயங்கும்" புகழ் வாணி ஜெயராமின் இழப்பு தமிழ் இசையுலகின் பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடகி.மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாயின் குரல் என்றும் நிலைக்கும் எம் மனமெங்கினும்... வாழும்.

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஒரு காலத்தில் பொங்கும் பூம்புனல் எப்படா வரும் என எதிர்பார்த்திருந்த காலங்களில் இந்த அம்மாவின் பாட்டுக்களும் உள்ளடங்கும்.

எங்காவது போனாலும் தேநீர்கடைகளில் பெரிதாக ஒலிக்கும் சில பாட்டுக்களை கேட்க துவிச்சக்கர வண்டியை ஓரங்கட்டுவோம்.

Link to comment
Share on other sites

என் மனதுக்கு இனிய அருமையான பாடல்களை பாடிய இசைக் குயில் வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு என் அஞ்சலி.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது போன்ற பாடல்கள் இன்றும் நான் அடிக்கடி கேட்டு ரசிப்பவை..

தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், வீசும் காற்றே தூது செல்லு, நல்லூர் வீதியில் நடந்தது ஒரு யாகம் போன்ற மறக்க முடியாத தாயக விடுதலைப் பாடல்களை விடுதலைப் புலிகளுக்காக, இந்திய ஏவல் படைகள் தாயகத்தை ஆக்கிரமித்து படுகொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த காலத்தில் வாணி ஜெயராம் அவர்கள் பாடி இருந்தார். 

உங்கள் குரல் எம் நினைவுகளில் என்றும் இசைத்துக் கொண்டு தான் இருக்கும்

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்

வாணி ஜெயராம்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

4 பிப்ரவரி 2023, 09:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.

மேகமே... மேகமே, மல்லிகை என் மன்னன் மயங்கும்... உள்ளிட்ட காலத்தை வென்று நெஞ்சில் நிலைத்திருக்கும் பல பாடல்களைப் பாடிய வாணி, 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த வாரம் அவருக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருதை பெறுவதற்கு முன்னர் அவர் காலமானது அவரது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது உடலில், நெற்றியில் காயம் இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அவரது உடல் தற்போது அரசு ஓமந்தூரார் தோட்ட மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தடயவியல் வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்தனர்.

 

 

 

தமிழ், இந்தி, ஒடிசா, தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள வாணி ஜெயராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

 

பிபிசி தமிழிடம் பேசிய கர்நாடக சங்கீத பாடகி பூஷணி கல்யாணராமன், மிக நீண்ட காலத்திற்கு பிறகு, வாணி ஜெயராமுக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தற்போது அவரது மறைவு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

''தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல மொழிகளில் அவர் பாடல்களைப் பாடியது பெரிய சாதனை. பத்மபூஷன் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டபோது பல கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் நம்மிடம் இப்போது இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது,'' என்றார் அவர்.

 

 

1971ல் பாடத் தொடங்கிய வாணி ஜெயராம், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் தீர்க்கசுமங்கலி படத்திற்காக பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று.

தனிமையில் வாழ்ந்தார்

சுந்தரி
 
படக்குறிப்பு,

சுந்தரி, அடுக்கக ஊழியர்

நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்கக குடியிருப்பில் வாழ்ந்து வந்த வாணி ஜெயராம், அந்த வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாகவும், அவர் மிக அரிதாகவே, வெளியில் வருவார் என்றும், அவரது கணவர் சுமார் ஓராண்டு முன்பு இறந்துவிட்டார் என்றும் கூறுகிறார் அந்த அடுக்கக ஊழியர் சுந்தரி.

https://www.bbc.com/tamil/articles/cv23wel7e02o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !!

vani_jayram.PNG

கட்டுரையாளர்   – ஐங்கரன்விக்கினேஸ்வரா

(ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்த பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார். அவர் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

தமிழில் மல்லிகையாய் மணம்வீசி

எழு சுவரங்களுக்குள் எத்தனையோ பல பாடல்களை பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள், பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

காலம் கடந்தும் வாழ்வார்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வது வயதில் காலமானார். பத்தாயிரம் பாடல்களை பலமொழிகளில் பாடியிருக்கும் அந்தக் குரலிசைக் கலைஞர் காலமானாலும் காலம் கடந்தும் வாழ்வார்.

பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் இசைத்துக் கொண்டே இருக்கும்.

” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.

நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து, எமது தாயக விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது ஈழ மக்களின் மனதை நெருடிக் கொண்டுள்ளது.

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி…காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…என கணீரென ஒலித்த இவரின் குரலிசைஅமைதியின்றி தவிக்கும் அகங்களுக்கு என்றென்றும்.

அருமருந்தாகியதே என்று கூறலாம்.

‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..

நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.

தாயக விடுதலைக்கு தோள் கொடுத்தவர்:

தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை

எங்களின் சோதரர் காதில் சொல்லு..

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்

கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,

எத்தனை எத்தனை இங்கு நடந்திட

எங்களின் சோதரர் தூக்கமல்லோ..

இங்கு குயிலினம் பாட மறந்தது..

எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி தாயக விடுதலைக்கு தோள் கொடுத்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மண் ஒருபோதும் மறவாது.

ஈழப் போரின் உச்சக் கட்ட காரங்களான 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “சென்பகமே சென்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தேவேந்திரன்தான் இசையமைத்த “ஈட்டி முனைகள்” என்ற இசைத் தொகுப்பில் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.

1974இல் ‘தீர்க்க சுமங்கலி’

1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது. இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய இலக்கணம் தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

இசை மருந்து விருந்து:

பேசும்போதும் மிக மென்மையாக பேசக்கூடிய அவர் தமிழ் திரைப்படங்களில் அவர் பாடிய பலப் பாடல்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. இசை என்பது ஒரு வித மருந்து. அதை தம் குரல்களால் விருந்தாக படைக்கும் இசை வைத்தியர்கள் வரிசையில் பாடகி

வாணி ஜெயராம் முன்னிலையில் என்றும் நிற்கிறார் என்பதே உண்மை.

பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகி, வாணி ஜெயராம் தனது 78வது வயதில் காலமாகியது பலரையும் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த “பாடும் பறவைகள் வாருங்கள் என்ற பாடலுடன், களத்தில் கேட்கும் கானங்கள் ஒலி நாடாவில் வீசும் காற்றே தூது செல்லு, தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், என்னும் பாடல்கள், பாசறைப் பாடல்கள் ஒலி நாடாவில் பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம், மேகங்கள் இங்கு வாருங்கள், வீரன் மண்ணில் புதையும் போது, போன்ற விடுதலைப் பாடல்களுடன், தலை வாரி பூச் சூடினேன், செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் … போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தாயக விடுதலைக்கு உயிர்க்குரல் கொடுத்தவர் வாணி ஜெயராம்

அவர்களை ஈழத்துக் கலைஞர்கள் கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஒருபோதும் மறவர்.

இசை வாணியின் இதயக்குரலால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிரசித்தி பெற்றன.

இசை வாணியின் மாயக் குரலில் மயங்கிக் கிடந்த காலங்கள் பல. வானலைகளில் தேனென ஒலித்த அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்து தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே உள்ளது.

https://vanakkamlondon.com/stories/featured-story/2023/02/184744/

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

பாடகி வாணி ஜெயராம் இறப்புக்கான காரணம் வௌியானது!

பாடகி வாணி ஜெயராம் இறப்புக்கான காரணம் வௌியானது!

 

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்த நிலையில் அது சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர். அது பற்றி தீவிர விசாரணையும் நடைபெற்று வந்தது.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கை வந்திருக்கும் நிலையில் அதில் வாணி ஜெயராம் தலையில் ஏற்பட்ட காயத்தால் தான் இறந்திருக்கிறார் என தெரியவந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

அவரது படுக்கை அறையில் இருக்கும் சின்ன மேசையில் தலை இடித்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர் இறந்திருக்கிறார்.

மேலும் சிசிடிவியை ஆராய்ந்ததில் வேறு யாரும் அவரது வீட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதையும் உறுதி செய்திருக்கும் பொலிசார் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கூறி இருக்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்த  செய்தியை கேட்டது முதல் மனதில் வெறுமை குடிகொண்டதை போல ஒரு உணர்வு.
வாணி அம்மா பாடிய அத்தனை பாடல்களும் மனதுக்கு இதமானதும், நெருக்கமானதுமான பாடல்கள்.
உங்கள் குரல் என்றும் எங்களோடு கலந்திருக்கும் அம்மா.
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது ..
கண்ணீர் அஞ்சலிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !!

vani_jayram.PNG

கட்டுரையாளர்   – ஐங்கரன்விக்கினேஸ்வரா

(ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்த பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார். அவர் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

தமிழில் மல்லிகையாய் மணம்வீசி

எழு சுவரங்களுக்குள் எத்தனையோ பல பாடல்களை பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள், பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

காலம் கடந்தும் வாழ்வார்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வது வயதில் காலமானார். பத்தாயிரம் பாடல்களை பலமொழிகளில் பாடியிருக்கும் அந்தக் குரலிசைக் கலைஞர் காலமானாலும் காலம் கடந்தும் வாழ்வார்.

பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் இசைத்துக் கொண்டே இருக்கும்.

” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.

நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து, எமது தாயக விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது ஈழ மக்களின் மனதை நெருடிக் கொண்டுள்ளது.

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி…காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…என கணீரென ஒலித்த இவரின் குரலிசைஅமைதியின்றி தவிக்கும் அகங்களுக்கு என்றென்றும்.

அருமருந்தாகியதே என்று கூறலாம்.

‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..

நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.

தாயக விடுதலைக்கு தோள் கொடுத்தவர்:

தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை

எங்களின் சோதரர் காதில் சொல்லு..

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்

கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,

எத்தனை எத்தனை இங்கு நடந்திட

எங்களின் சோதரர் தூக்கமல்லோ..

இங்கு குயிலினம் பாட மறந்தது..

எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி தாயக விடுதலைக்கு தோள் கொடுத்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மண் ஒருபோதும் மறவாது.

ஈழப் போரின் உச்சக் கட்ட காரங்களான 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “சென்பகமே சென்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தேவேந்திரன்தான் இசையமைத்த “ஈட்டி முனைகள்” என்ற இசைத் தொகுப்பில் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.

1974இல் ‘தீர்க்க சுமங்கலி’

1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது. இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய இலக்கணம் தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

இசை மருந்து விருந்து:

பேசும்போதும் மிக மென்மையாக பேசக்கூடிய அவர் தமிழ் திரைப்படங்களில் அவர் பாடிய பலப் பாடல்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. இசை என்பது ஒரு வித மருந்து. அதை தம் குரல்களால் விருந்தாக படைக்கும் இசை வைத்தியர்கள் வரிசையில் பாடகி

வாணி ஜெயராம் முன்னிலையில் என்றும் நிற்கிறார் என்பதே உண்மை.

பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகி, வாணி ஜெயராம் தனது 78வது வயதில் காலமாகியது பலரையும் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த “பாடும் பறவைகள் வாருங்கள் என்ற பாடலுடன், களத்தில் கேட்கும் கானங்கள் ஒலி நாடாவில் வீசும் காற்றே தூது செல்லு, தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், என்னும் பாடல்கள், பாசறைப் பாடல்கள் ஒலி நாடாவில் பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம், மேகங்கள் இங்கு வாருங்கள், வீரன் மண்ணில் புதையும் போது, போன்ற விடுதலைப் பாடல்களுடன், தலை வாரி பூச் சூடினேன், செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் … போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தாயக விடுதலைக்கு உயிர்க்குரல் கொடுத்தவர் வாணி ஜெயராம்

அவர்களை ஈழத்துக் கலைஞர்கள் கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஒருபோதும் மறவர்.

இசை வாணியின் இதயக்குரலால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிரசித்தி பெற்றன.

இசை வாணியின் மாயக் குரலில் மயங்கிக் கிடந்த காலங்கள் பல. வானலைகளில் தேனென ஒலித்த அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்து தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே உள்ளது.

https://vanakkamlondon.com/stories/featured-story/2023/02/184744/

இந்த அம்மா இத்தனை ஈழப் பாடல்களை பாடியுள்ளாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

என்ன இனிமையான குரல்வளம்..! ❤️

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் உயிருடன் இருக்கும் போது, அவர்களின் நல்ல செயல்கள் வெளியே தெரிவதில்லை.
வாணி ஜெயராம் அம்மா… பல ஈழ விடுதலைப் பாடல்களை பாடியமை,
அவர் மறைந்த பின்பே எனக்கு தெரிகின்றது.
கண்ணீர் அஞ்சலிகள் அம்மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்திடக் கேட்டிடும் தூரமெல்லோ!கடல் கை கொண்டு தாவிடும் நீளமல்லோ!!

வீசும் காற்றே தூது செல்லு!  தமிழ்நாட்டில் எழுந்தெரு சேதி சொல்லு!!

ஏழு ஸவரங்களுக்குள் எத்தனை பாடல்! இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி!

ஏழிசை கீதமே! எமக் கொரு ஜீவன் நீ!!
இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல்!!

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம். Big picture: ஐரோப்பா/கனடாவோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 1. தேசிய வருமான வரி (Income tax) குறைவு. 2. நுகர்வுப் பொருட்களுக்கான விற்பனை வரி (sales tax) 0 முதல் 7% வரை (ஐந்து மாநிலங்களில் விற்பனை வரி கிடையாது பெரும்பாலான பொருட்களுக்கு) 3. இதை விட சோலை வரி/ஆதனவரி (property tax) நகர மட்டத்தில் ,எனவே அதைத் தனி வரியாக மக்கள் பார்ப்பது குறைவு. ஆனால், மருத்துவக் காப்புறுதி மிக அதிகம் (ஜேர்மனியின் ஆகக் குறைந்த காப்புறுதியை விட 4 மடங்கு அதிகம் இங்கே).  Welfare states உள்ளடங்கினாலும், முதலாளிய நாடுகளின் அடிப்படையே "இலவசச் சோறு கிடையாது - no free lunch" என்பது தான்! இதைத் தெரிந்து கொண்டு தான் இந்த நாடுகளுக்கு வருகிறோம், வர முன்னர் தெரியாதோரும் தெரிந்த பின்னர் தகவமைத்துக் கொள்கிறோம்! "எங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள், தெரிந்திருந்தால் கியூபா போய் பாலும் தேனும் ஓட வாழ்ந்திருப்போம்"😎 என்ற வகையிலான வாதம் நகைப்பிற்குரியதாகவே தெரிகிறது!
    • இந்த மோடியை தடை செய்த நாடு, தன் சுயநலத்திற்காக தடையெடுத்து கம்பளம் விரித்து வரவேற்றார்கள், இவர்களை என்ன வென்று சொல்வது, தங்கள் சுயநலத்திற்காக யாரையும் எப்படியும் மாற்றும் இவர்களை என்னவென்று சொல்வது 🤣😅 இந்த காந்தி என்றுமே எழ முடியாது இனி😎
    • எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை விளையாட்டு தான். டொலர் போனால் அல்லது ரசியா சீனாவிடம் பண அதிகாரம் போனால் உலகமக்கள் வாழ்வு செழிக்கும் என்ற உங்கள் கனவில் நான் தலையிட விரும்பவில்லை.  எனக்கு அவர்கள் இதைவிட மோசமான வியாபாரிகள் மக்கள் ஐனநாயக விரோதிகள். 
    • நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான 'திரில்லிங்' திருப்புமுனை பட மூலாதாரம்,GETTY IMAGES 27 மார்ச் 2023, 09:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஒரு திரில்லர் பாணியில் நடந்து முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த டி20 பெண்கள் உலகக் கோப்பையை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் அபாரமாக விளையாடி வந்த இந்திய அணி, அரை இறுதியில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஒரு மாதத்திற்குப் பின்னர் இது வேறோரு களம். மீண்டும் ஓர் அதி முக்கியமான போட்டியில் மெக் லானிங் மற்றும் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான அணிகள் மோதின. வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரியங்கா காந்தியின் தீவிர அணுகுமுறை காங்கிரசை கரை சேர்க்குமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லத் தவறியபோதும், இந்த முறை மனம் துவளாமல் நேர்த்தியாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.   நேற்றைய தினம் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டியின் முடிவைத் தாண்டியும் நடுவரின் ஒரு தீர்ப்பு மிகவும் சர்ச்சை கிளப்பியுள்ளது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதிரடி இளம் வீரர் ஷஃபாலி வர்மா, அனுபவம் வாய்ந்த கேப்டன் மெக் லானிங், துடிப்பான பேட்டர் ஜெமிமா, உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் மரிஜென் கப், பௌலிங் ஆல்ரவுண்டர் ஷீகா பாண்டே என டெல்லி வலுவான படையோடு களமிறங்கியது. அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள் ஃபுல் பார்மில் அணி என மும்பையும் சம பலத்தோடு களம் கண்டது. லீக் போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதிய இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. லீக் சுற்றுகள் முடிவில் இரு அணிகளும் விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரை மெக் லானிங் எதிர்கொண்டார். நட்சத்திர வீரர் நட் சிவர் ப்ரண்ட் பந்து வீசினார். ஐந்தாவது பந்தில்தான் முதல் ரன் எடுத்தார் லானிங். ஆறாவது பந்தை எதிர்கொண்ட ஷெஃபாலி வர்மா ஒரு ரன் எடுத்து பேட்டிங் முனைக்கு வந்தார். இப்போதுதான் அனல் பறக்கும் அந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தொடரில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் கீழ் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஸி வாங் பந்து வீச வந்தார். இந்தத் தொடரில் அபாரமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் அதிரடி பேட்டரான ஷெஃபாலி வர்மா வாங்கை எதிர்கொள்ளத் தயரானார். ஹாட்ரிக் எடுத்த நட்சத்திர பந்து வீச்சளராக உருவெடுத்திருந்த வாங், ஷெஃபாலிக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியே தனது முதல் பந்தை வீசினார். அந்த பந்தை லாங் ஆன் திசையில் விளாசினார் ஷெஃபாலி. பந்து சிக்சருக்கு சென்றது. அடுத்த பந்தையே பௌண்டரிக்கும் விளாசினார். இப்போது மூன்றாவது பந்து, ஹை ஃபுல் டாஸாக வீசினார் வாங், இடதுபுறம் நகர்ந்து லாகவமாக ஆஃப் சைடில் ஒரு ஸ்லைஸ் ஷாட் ஆடினார். அந்தப் பந்து மெலி கெர் கையில் தஞ்சமடைந்தது. பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தது என நம்பிய ஷெஃபாலி மற்றும் லானிங் உடனடியாக ரிவ்யூ செய்தனர். மூன்றாவது நடுவர் திரும்பத் திரும்ப அந்தப் பந்தின் ரீப்ளேவை பார்த்தார். பந்தை டிராக் செய்யும் தொழில்நுட்பம் அந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்து, கீழே இறங்குவது போன்று தெரிந்தது. மூன்றாவது நடுவர் ஷெஃபாலி அவுட் என கள நடுவரின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 களத்தில் இருந்த லானிங் மற்றும் ஷெஃபாலி இருவருமே அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கேப்டன் லானிங் கள நடுவரிடமே அதிருப்தியை வெளிப்படுத்தினார். நடுவரின் தீர்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக சென்றதையடுத்து அந்தப் பந்து நோ பாலா இல்லையா என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. பொதுவாக கிரிக்கெட் விதிகளின்படி, பந்து வீச்சாளர் வீசும் பந்து ஃபுல் டாஸாக பேட்டரின் இடுப்புக்கு மேல் சென்றால் அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்படும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட பந்தில் இரு வகையான விவாதங்கள் எழுந்தன. எனினும் நடுவரின் முடிவு குறித்து பலர் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 அபாயகரமான பேட்டர் ஷெஃபாலியை வீழ்த்தியதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமடைந்தனர். 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஷெஃபாலி பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்குப் பின் வந்த அலிஸ் கேப்சி அதே ஓவரில் மீண்டும் ஒரு ஃபுல் டாஸ் பந்தில் இரையானார். ஒரே ஓவரில் இரண்டு ரிவ்யூக்களையும் இழந்தது டெல்லி. அடுத்த ஓவரை பிரன்ட் வீச லானிங் மற்றும் ஜெமிமா மூன்று பௌண்டரிகளை விளாசினர். ஐந்தாவது ஓவரை வீச மீண்டும் வாங் வந்தார். மீண்டும் ஒரு லோ ஃபுல் டாஸ் வீசினார் வாங். இந்த முறை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இப்படி பவர்பிளேவுக்குள்ளாகவே ஃபுல் டாசுக்கு மூன்று பேட்டர்களை இழந்தது டெல்லி. ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக நின்றார் கேப்டன் லானிங். எனினும் அவரும் 12வது ஓவரில் ரன் அவுட் ஆனார். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் லானிங் அவுட்டானதை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணி. ரன்கள் எடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்த ஜெஸ் ஜொனாசன் அழுத்தம் காரணமாக எடுத்த ஒரு தவறான முடிவால் லானிங் தமது விக்கெட்டை இழந்தார். 16 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி. 73 ரன்களுக்கு மூன்று விக்கெட் என இருந்த ஸ்கோர் அடுத்த ஐந்து ஓவர்கள் கழித்துப் பார்த்தால் 79/9 என இருந்தது. டெல்லியின் பேட்டிங்கின்போது அந்த அணியின் மிக மோசமான பகுதியாக அந்த ஐந்து ஓவர்கள் அமைந்தன. இந்த ஐந்து ஓவர்களில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. ஆனால், அப்போதுதான் இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, டெல்லி கேபிட்டல்ஸ் வீராங்கனை ஷிகா பாண்டே கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராதா யாதவ் மற்றும் ஷிகா பாண்டே அபராமாக விளையாடினர். குறிப்பாக ஃபுல் டாஸில் திணற வைத்துக் கொண்டிருந்த இசி வாங் வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட இந்த இணை மூன்று பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரையும் விட்டு வைக்காமல் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ராதா. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது டெல்லி. இந்த இணை வெறும் 24 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, அதிரடியில் மிரட்டிய டெல்லி கேபிட்டல்ஸ் வீராங்கனை ராதா யாதவ். கடைசி விக்கெட்டுக்கு ஒரு கூட்டணி 50 ரன்களுக்கும் மேல் குவிப்பதும், அதையும் இறுதிப்போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த சூழலில் இதைச் சாதிப்பதையும் டி20 போட்டிகளில் மிக மிக அரிதாகவே பார்க்க முடியும். இந்த இரு பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் அசத்தியதைப் பார்க்கும்போது ஆடுகளம் அவ்வளவு ஒன்றும் பேட்டிங்கிற்கு கடினமாக இல்லை என்றே தோன்றியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் சேஸிங்கை தொடங்கியதும், டெல்லியை போல மந்தமாகவே விளையாடியது. பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ஹர்மன் ப்ரீத் கவுரும் நட் சிவர் ப்ரண்டும் பொறுமையாக விக்கெட் விழக்கூடாது எனக் கவனமாக விளையாடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்திய நட் சிவர் ப்ரண்ட் 17வது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் ஆனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்ததும், ஒரு மாதம் முன்பு நடந்த உலகக் கோப்பை அரை இறுதி போட்டி பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். ஏனெனில் அரை இறுதியில் சேஸிங்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்மன் ப்ரீத்தின் ரன் அவுட் இந்திய அணிக்கு பாதகமானது. ஆனால், இம்முறை அவரது அணியின் சக வீரர்கள் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு அந்த தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்று பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. பிரண்ட் கடைசி வரை களத்தில் நின்று பொறுப்பாக விளையாடி 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவரே பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் வென்றார். போட்டி முடிந்த பிறகு பேசிய மெக் லானிங், மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்த அணி எனக் குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்குக் காத்திருந்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நேற்றைய தினம் அவருக்கான நாளாக அமைந்தது. https://www.bbc.com/tamil/articles/c137e3rz5n4o
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.