Jump to content

சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல்

IMG-20230205-115037.jpg

சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தாங்கள்தான் சமஷ்டிக்கு உண்மையானவர்கள்; அதற்காகவே போராடினோம் என்று கூறுகின்றார்கள். ஆனால், சமஷ்டி என்பது தமிழரசுக் கட்சியின் கோஷம். அதுவே எமது அரசியல் சித்தாந்தம். எனவே, சமஷ்டி என்ற வார்தையை உச்சரிப்பதற்கு எம்மைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

இன்று தமிழரசுக் கட்சி தனித்து நிற்பதையும் பலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு விபரம் தெரியாது. அத்துடன் விபரம் தெரியாமல் பல ஊடகங்களும் எம்மை விமர்சிக்கின்றன” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/184717/

டிஸ்கி

அதெல்லாம் சரி.. அந்த குல்லா.. 

jawahar_lal_nehru_843f597724.jpg

அசல் நேரு மாமா போலவே இருக்கீங்க..😊

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிப்பதே இன்றைய ஒன்றுகூடலின் நோக்கம். அதற்கும் இவரது இந்த பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? எப்போதும் தவறான இடத்தில பொருத்தமற்றதை பேசி மாட்டுப்படுவதும் அதை சமாளிக்க வேறொன்றை சொல்லி அசடு வழிவதும் இவரது பிழைப்பாய்ப்போச்சு. த. தே. கூட்டணியை கலைத்து தமிழரசுக்கட்சிக்கே வேட்டு வைக்கிறார். இவருக்கு இவரது நாக்குதான் சகுனப்பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனக்கூட்டம், பத்திரிகையாளர் கூட்டம், ஒலிவாங்கி கிடைத்தால் போதும், சந்தர்ப்பம், தான் யார், என்ன பேசுறேன் எண்டதையே மறந்து ஆள் குஷியாகிவிடுவார். பிறகு தான் பேசாததை பத்திரிகையாளர் எழுதிவிட்டனர் என்று பாய்வார். ஆனால் அவர்கள் எழுதியது தவறு என  சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குவார். கடைசியில் அவர் சொன்னதும் அவர்கள் எழுதியதும் ஒன்று என நிரூபணமாகும். இதெல்லாம் ஒரு ராஜதந்திரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கு/ தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் புறக்கணித்த சுதந்திர தினத்தை  3வருடங்களுக்கு முன்னர் சம்பந்தரோடு சேரர்துக் கொண்டாடியவரல்லவா இவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு சந்தர்ப்பவாதி. இப்போதும் போயிருப்பார், ஒன்று தேர்தல் நெருங்குகிறது, அடுத்தது தமிழர் ஒன்று சேர்ந்து கரிநாள் என்று பகிஸ்கரிக்கும்போது தான் மட்டும் கொண்டாடினால் தான் யார் என்பது மக்களுக்கு புரிந்து... அது ஒன்றும் பிரச்சனையில்லை, சர்வதேசம் தன்னை அடையாளம் கண்டு இரகசிய பேச்சுவார்த்தைக்கு ஆபத்தாகிவிடும் என்று நினைத்தாரோ? ஆனாலும் பாருங்கோ! "இருள் சூழ்ந்த சுதந்திரம்." என்று பிரகடனப்படுத்தி விட்டு, யாரைத்தாக்குகிறார் என்று. இவரது அரைகுறை அறிவு. சிங்களத்தை கோவிக்க பயமா அல்லது அதன்மீதுள்ள பாசமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

IMG-20230205-115037.jpg

jawahar_lal_nehru_843f597724.jpg

அசல் நேரு மாமா போலவே இருக்கீங்க..😊

தோழர் நீங்க லேட் தோழர் நேற்றே சுமந்திரன் மாமா என திண்ணையில் பெயர்சூட்டி விட்டோம்🤣.

சாணக்கியனை 1ம் படத்தில் பார்க்க எல்லை காந்தி,  என அழைக்கப்பட்ட அப்துல் கபார் கான் போல இருக்கல்லவா?😜

அவர் பிரிடிஸ் இந்தியாவின் எல்லையில் இருந்து வந்தார், இவர் வடக்கு-கிழக்கின் எல்லையில் இருந்து வருகிறார்🤣

large.FD86CEF6-C189-4489-8D21-D03540D3185D.webp.468209f9d0804ee1b893473923189a96.webp

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா தான் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்.. தமிழரசுக் கட்சி சார்ப்பாக. அதே தந்தை செல்வா தான் தமிழீழக் கோரிக்கையையும் முன்மொழிந்தார். சமஸ்டி தந்தை செல்வா காலத்திலேயே சிங்களத்தால் நிராகரிப்பட்டு விட்டது. இவர் என்ன மண்ணாங்கட்டிக்கு இப்ப சமஸ்டி பேசி காலத்தை வீணடிக்கிறார். இருப்பது ஒன்று தான்.. சிங்களத்திடம் 13 ஐ கூட வாங்க முடியாது. ஆகவே... ஐநா மத்தியஸ்தோடு சர்வதேச கண்காணிப்பில்.. தனிநாட்டுக்கான தேர்தலை அதாவது சுயநிர்ணய உரிமைக்கான தேர்தலை.. கிழக்கு திமோர்...கொசாவோ.. தென் சூடானில் நடத்திய போல் நடத்தக் கோருவதை எது தடுக்கிறது.. தந்தை செல்வாவின் கட்சியின்.. விறாந்தையில் பின் கதவால் புகுந்து கால்நீட்டிப் படுத்திருக்கும் இவருக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.