Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 25 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2023 அன்று யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது.

யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்கள் கடந்த வருட நடுப்பகுதியில் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். எனினும் யாழ் கள உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைய, பல தொழில்நுட்பச் சவால்களுக்கு மத்தியிலும் பிற நிர்வாக உறுப்பினர்களால் யாழ் இணையம் தொடர்ந்தும் இயங்கவைக்கப்படுகின்றது.

யாழ் இணையம் 25 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். எனினும், யாழ் கருத்துக்களத்தினூடாகப் பெற்ற அனுபவங்கள் சிந்தனையிலும், வாழ்விலும் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிய ஆக்கங்களும் விரும்ப்பப்படுகின்றது.

இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 25 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 25 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் எட்டு வார காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  • கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  • ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • Like 9
Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 25 இனை  சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் போன்று உறவுகள் கம்முன்னு இருக்காமல், வத்தலோ.. தொத்தலோ.. முத்தலோ.. சுய படைப்புகளை வாசித்து ஊக்கப்படுத்த வேண்டிக் கொல்(ள்)கிறேன்..! 😜🤝

 

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வணக்கம்,

யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்   சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.  கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தமிழ் இணையம் 25 வருட காலங்கள் என்பது முக்கியமான மைக்கல் ஆகும்  

இந்தமுறை ஆகக்குறைந்தது  25 வெவ்வேறு கருத்துக்கள உறவுகள் சுய ஆக்கங்களை பதிப்பித்தால் சிறப்பு. 🤗

நான் ஒவ்வோர் ஆக்கத்திற்கும் எனது பின்னூட்டங்களை வழங்குகின்றேன் என்னால் முடியுமான சிறு ஊக்குவிப்பு. 

ஜஸ்டின் ஐயா அவர்களின் ஆக்கம் மட்டும் மிக நீண்டதாகவும், கனதியாகவும் உள்ளதால் முழுமையாக வாசித்து விளங்காமல் பதிவிடக்கூடாது என்பதால் தவிர்த்து உள்ளேன். மிகுதி ஒவ்வொன்றாக பார்க்கின்றேன்.

சுவாரசியமானதும், சிந்தனையை தூண்டுபவையுமான ஆக்கங்கள். நன்றி எல்லோருக்கும்! 🙏

யாழ் முகப்பில் சுய ஆக்கங்களை இன்னும் காணவில்லையே ஏன்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மூத்த தமிழ் இணையம் 25 வருட காலங்கள் என்பது முக்கியமான மைக்கல் ஆகும்  

இந்தமுறை ஆகக்குறைந்தது  25 வெவ்வேறு கருத்துக்கள உறவுகள் சுய ஆக்கங்களை பதிப்பித்தால் சிறப்பு. 🤗

நான் ஒவ்வோர் ஆக்கத்திற்கும் எனது பின்னூட்டங்களை வழங்குகின்றேன் என்னால் முடியுமான சிறு ஊக்குவிப்பு. 

ஜஸ்டின் ஐயா அவர்களின் ஆக்கம் மட்டும் மிக நீண்டதாகவும், கனதியாகவும் உள்ளதால் முழுமையாக வாசித்து விளங்காமல் பதிவிடக்கூடாது என்பதால் தவிர்த்து உள்ளேன். மிகுதி ஒவ்வொன்றாக பார்க்கின்றேன்.

சுவாரசியமானதும், சிந்தனையை தூண்டுபவையுமான ஆக்கங்கள். நன்றி எல்லோருக்கும்! 🙏

யாழ் முகப்பில் சுய ஆக்கங்களை இன்னும் காணவில்லையே ஏன்?

25’வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழ். களத்திற்கு அழகான முகப்பை தயாரித்தவர்களுக்கு நன்றி.

உண்மையிலேயே… அதீத அழகுடனும், கற்பனை வளத்துடனும் தயாரித்த முகப்பு அது. 
பார்த்து மிகவும் ரசித்தேன். 🥰

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மூத்த தமிழ் இணையம் 25 வருட காலங்கள் என்பது முக்கியமான மைக்கல் ஆகும்  

இந்தமுறை ஆகக்குறைந்தது  25 வெவ்வேறு கருத்துக்கள உறவுகள் சுய ஆக்கங்களை பதிப்பித்தால் சிறப்பு. 🤗

நான் ஒவ்வோர் ஆக்கத்திற்கும் எனது பின்னூட்டங்களை வழங்குகின்றேன் என்னால் முடியுமான சிறு ஊக்குவிப்பு. 

ஜஸ்டின் ஐயா அவர்களின் ஆக்கம் மட்டும் மிக நீண்டதாகவும், கனதியாகவும் உள்ளதால் முழுமையாக வாசித்து விளங்காமல் பதிவிடக்கூடாது என்பதால் தவிர்த்து உள்ளேன். மிகுதி ஒவ்வொன்றாக பார்க்கின்றேன்.

சுவாரசியமானதும், சிந்தனையை தூண்டுபவையுமான ஆக்கங்கள். நன்றி எல்லோருக்கும்! 🙏

யாழ் முகப்பில் சுய ஆக்கங்களை இன்னும் காணவில்லையே ஏன்?

ஓம்.......குறைந்தது 25 ஆவது  வந்தால் சிறப்பாக இருக்கும்.......!  😁

யாழ் முகப்பு சும்மா அள்ளியெறியுது ......... சூப்பர் ..........!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ் களத்தின் இன்றைய அழகான தோற்றம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வண்ணங்களின் கலவை  வடிவமைப்பு செய்தவர்களுக்கு   என் பாராட்டுக்களும் நன்றியும்.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத் தோற்றம் புத்துணர்வாக இருக்கிறது. நன்றிகள்!

பி.கு: அதிகம் "நலமோடு நாம் வாழ" பகுதியில் கட்டுரைகள் இணைக்கும் ஏராளன், அந்தப் பகுதியை முகப்பில் தெரியக் கூடியவாறு செய்ய முடியுமாவென சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். இன்னும் நடக்கவில்லையென நினைக்கிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பைப் பார்க்க சந்தோசமாக இருந்தாலும்

மோகன் எங்களுடன் இல்லாதது ஏதோ வெறுமையாக உள்ளது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

முகப்புத் தோற்றம் புத்துணர்வாக இருக்கிறது. நன்றிகள்!

பி.கு: அதிகம் "நலமோடு நாம் வாழ" பகுதியில் கட்டுரைகள் இணைக்கும் ஏராளன், அந்தப் பகுதியை முகப்பில் தெரியக் கூடியவாறு செய்ய முடியுமாவென சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். இன்னும் நடக்கவில்லையென நினைக்கிறேன்.

ஜஸ்ரின் அண்ணை ஞாபகம் வைத்துள்ளீர்கள், நன்றி.

1 hour ago, இணையவன் said:

அனைவருக்கும் நன்றி.

'நலமோடு நாம் வாழ' பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

நன்றி இணையவன் அண்ணை.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

முகப்பைப் பார்க்க சந்தோசமாக இருந்தாலும்

மோகன் எங்களுடன் இல்லாதது ஏதோ வெறுமையாக உள்ளது.

முகப்பு நன்றாக உள்ளது. 
மோகன் அண்ணாவும் வாசிப்பார் என நம்புகிறேன். அவரும் கருத்தாடினால் மகிழ்ச்சி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பு அழகாக உள்ளது. ஆனால், சுய ஆக்கங்களுக்குரிய தொடுப்பு தொழிற்படவில்லையே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

சுய ஆக்கங்களுக்குரிய தொடுப்பு தொழிற்படவில்லையே. 

எனக்கு வேலை செய்கின்றதே

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

25’வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழ். களத்திற்கு அழகான முகப்பை தயாரித்தவர்களுக்கு நன்றி.

உண்மையிலேயே… அதீத அழகுடனும், கற்பனை வளத்துடனும் தயாரித்த முகப்பு அது. 
பார்த்து மிகவும் ரசித்தேன். 🥰

மிகவும் அழகான முகப்பு. நானும் ரசித்தேன்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

advertisement_alt

யாழ்களத்தின் 25வது ஆண்டு நிறைவு முகப்பு பளிச்சென்ற அழகு.
அதை தயாரித்தவர்களுக்கும் யாழ்கள நிர்வாகத்தினர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.:respekt:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

உண்மையிலேயே… அதீத அழகுடனும், கற்பனை வளத்துடனும் தயாரித்த முகப்பு அது. 
பார்த்து மிகவும் ரசித்தேன். 🥰

 உண்மை. பளிச் என்று கவரக் கூடியதாக உள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எனக்கு வேலை செய்கின்றதே

எனக்கும் இப்போது வேலை செய்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ஓம்.......குறைந்தது 25 ஆவது  வந்தால் சிறப்பாக இருக்கும்.......!  😁

யாழ் முகப்பு சும்மா அள்ளியெறியுது ......... சூப்பர் ..........!   👍

 

15 hours ago, நிலாமதி said:

 யாழ் களத்தின் இன்றைய அழகான தோற்றம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வண்ணங்களின் கலவை  வடிவமைப்பு செய்தவர்களுக்கு   என் பாராட்டுக்களும் நன்றியும்.  

 

13 hours ago, ஈழப்பிரியன் said:

முகப்பைப் பார்க்க சந்தோசமாக இருந்தாலும்

மோகன் எங்களுடன் இல்லாதது ஏதோ வெறுமையாக உள்ளது.

 

13 hours ago, ஏராளன் said:

முகப்பு நன்றாக உள்ளது. 
மோகன் அண்ணாவும் வாசிப்பார் என நம்புகிறேன். அவரும் கருத்தாடினால் மகிழ்ச்சி.

 

11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

முகப்பு அழகாக உள்ளது. ஆனால், சுய ஆக்கங்களுக்குரிய தொடுப்பு தொழிற்படவில்லையே. 

 

9 hours ago, nilmini said:

மிகவும் அழகான முகப்பு. நானும் ரசித்தேன்.

 

9 hours ago, குமாரசாமி said:

advertisement_alt

யாழ்களத்தின் 25வது ஆண்டு நிறைவு முகப்பு பளிச்சென்ற அழகு.
அதை தயாரித்தவர்களுக்கும் யாழ்கள நிர்வாகத்தினர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.:respekt:

பலரையும்... புதிய  யாழ் முகப்பு கவர்ந்துள்ளதற்கான காரணம் என்னவெனில் 
அதன்  கண்ணை உறுத்தாத  வண்ணத் தேர்வும்,
அந்த சதுர பெட்டியில் வலது  பக்கம்  கடுமையான நிறமும்,
 இடது பக்கம் உள்ள  மெல்லிய நிறமும்...
யாழ்கள உறவுகள்... அவுஸ்திரேலியா தொடக்கம், அமெரிக்கா வரை 
எந்த நாட்டில் இரவு, பகலாக இருந்தாலும்... 
24 மணித்தியாலமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது  என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

அந்த 25´ல் உள்ள எண்களை,  யாழ். என்னும் இசைக்கருவி போல்  வடிவமைத்து
அதில்... தேவையான  அளவுடன் வெள்ளி, தங்க நிறங்களில்...  மெரு கூட்டியமை இன்னும் சிறப்பாக இருந்தது. 👍 🥰

Edited by தமிழ் சிறி
  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின்  அழகிய முகப்பின் வடிவமைப்பை செய்த  கற்பனை வடிவை  செயலாக்கிய அந்த பொற் கரங்களுக்கு சொந்தக் காரர்( கள்) யார் என அறிய  மிகவும் ஆவல்    

  • Like 1
Link to comment
Share on other sites

11 minutes ago, நிலாமதி said:

யாழ் களத்தின்  அழகிய முகப்பின் வடிவமைப்பை செய்த  கற்பனை வடிவை  செயலாக்கிய அந்த பொற் கரங்களுக்கு சொந்தக் காரர்( கள்) யார் என அறிய  மிகவும் ஆவல்    

கருத்துக்களம் எப்படி கள உறவுகளின் எழுத்துக்களால் கட்டியெழுப்பப்பட்டதோ அதேபோலதான் வடிவமைப்பும் காலத்துக்குக் காலம் நிர்வாக உறுப்பினர்களால் வடிவமைக்கப்படுகிறது. உரிமைகோர வேண்டியதில்லை 🙂.

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl25banner.png.848bba20e2147ba5c6f10a7

'கிராஃபிக்ஸ் வடிவமைப்பு' யாழுக்கு மெருகூட்டி கண்களை கவர்ந்திழுக்கிறது.

வடிவமைத்த கரங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை.

Picture1.png

  • Like 1
Link to comment
Share on other sites

On 17/3/2023 at 11:18, இணையவன் said:

கருத்துக்களம் எப்படி கள உறவுகளின் எழுத்துக்களால் கட்டியெழுப்பப்பட்டதோ அதேபோலதான் வடிவமைப்பும் காலத்துக்குக் காலம் நிர்வாக உறுப்பினர்களால் வடிவமைக்கப்படுகிறது. உரிமைகோர வேண்டியதில்லை 🙂.

 அவையடக்கம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

 அவையடக்கம்!

நான் அவரது மாணவன் ❤️

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.