Jump to content

சாதிச் சான்றிதழ் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சரியா? சாதி ஒழிப்பை சாத்தியமாக்குவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதிச் சான்றிதழ் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சரியா? சாதி ஒழிப்பை சாத்தியமாக்குவது எப்படி?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
 
படக்குறிப்பு,

இயக்குநர் வெற்றிமாறன்

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் என்ற இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அவர் கூறியது போல், 'சாதியற்றவர்' சான்றிதழைப் பெறுவது இன்றைய சூழலில் அவ்வளவு கடினமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் பேசிய இயக்குநர் வெற்றிமாறனிடம், கல்லூரி மாணவர் ஒருவர் ‘பள்ளி, கல்லூரிகளில் சாதியை கண்டிப்பாக குறிப்பிடுமாறு கூறுவது குறித்த உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

 

"பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்"

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “இது எனக்கே பெரிய கொடுமையான விஷயம் தான். என் பிள்ளைகளுக்கு ‘No caste’ என்ற சான்றிதழை வாங்க முயற்சித்தேன். அவர்கள் தர மறுத்துவிட்டார்கள். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றார்கள். நீதிமன்றத்திற்கு சென்றேன். அங்கேயும் கூட, ‘அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்கள் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். இந்து என இருக்கிறதே எதாவது ஒரு சாதியை போடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.

எனக்கு எதுவுமே வேண்டாம் என கூறினேன் ஒப்புக்கொள்ளவேயில்லை. நான் சாதி சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதற்கான வேலைகளைத்தான் பார்த்துகொண்டிருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என்றார்.

உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டியதும், இடைமறித்த வெற்றிமாறன், “ஒரு நிமிடம். இது வந்து யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு மட்டும். எனக்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை

"எல்லோரும் ஒரேயடியாக சாதிச் சான்றை தூக்கி எறிந்துவிட முடியாது"

உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் அவர்கள் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். எனக்கு அது தேவையில்லை. நான் வேண்டாம் என கூறும் பட்சத்தில், ‘சரி இவன் வேணாம் என்கிறான். இவனை விட்டு விடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன். ஆகவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் இந்தப் பேச்சில், "பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும்," என்ற முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பலரும் விவாதப் பொருளாக்கிவிட்டனர். "பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்காவிட்டால் சாதி ஒழிந்து விடுமா? இயக்குநர் வெற்றிமாறன் இப்படி பேசலாமா?" என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை

"சாதி ஒழிப்பை திருமணங்களில் இருந்தே தொடங்க வேண்டும்"

இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணியிடம் பிபிசி சார்பில் பேசினோம். கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் என்று பல பரிமாணங்கள் கொண்ட அவர், "சாதி ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழியாக இயக்குநர் வெற்றிமாறன் ஒருவேளை அவ்வாறு பேசியிருந்தால் அது ஏற்கக் கூடியதாக இருக்காது," என்றார்.

"சாதி ஒழிப்பு பற்றி பேசியதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறதே? அதனை நிறுத்துவதில் இருந்தே சாதி ஒழிப்பைத் தொடங்க வேண்டும் என்று பேசுவது உயர் நடுத்தர வர்க்க மனோநிலை. அது சரியல்ல. ஏனெனில், இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்துவது திருமணங்கள்தான். காதல் திருமணம் தவிர்த்த ஏனைய நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்துமே சாதி அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. உண்மையில், சாதி ஒழிப்பு என்பதற்கான தொடக்கம் திருமணத்தில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும்," என்றார்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
 
படக்குறிப்பு,

பேராசிரியர் கல்யாணி

"பழங்குடியினர் சாதி சான்று பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும்"

"பகுத்தறிவும், பெரியார், அம்பேத்கர் கருத்துகளும் பேசப்படும் தமிழ்நாட்டில் சாதிய கட்டுமானத்தில் இறுக்கம் சற்று தளர்ந்துள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், நம் சமூகத்தில் அதன் ஆதிக்கம் இன்றும் தொடரவே செய்கிறது. திருமணத்தின் மூலம் அதன் கட்டுமானம் கட்டிக் காப்பாற்றப்படுகிறது.

என்னைப் பொருத்தவரை, சாதி சான்றிதழ், குறிப்பாக, பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ்கள் கொடுக்கும் நடைமுறை இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். அதன் மூலம் இருளர் உள்ளிட்ட பழங்குடியினரும் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்று சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஒன்றிணையும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஒரே பிரிவில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்," என்று பேராசிரியர் கல்யாணி வலியுறுத்தியுள்ளார்.

'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றை முதன் முதலாக பெற்ற ஸ்நேகா கூறுவது என்ன?

'சாதியற்றவர்' சான்றிதழ் பெற இன்னும் போராடிக் கொண்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டதும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி விட்டிருக்கிறது. அதுகுறித்து, நாட்டிலேயே முதன் முறையாக சாதியற்றவர் சான்றிதழைப் பெற்ற பெருமைக்குரிய திருப்பத்தூரைச் சேர்ந்த ஸ்நேகாவிடம் பேசினோம். சாதியற்றவர் சான்றிதழ் பெற விரும்பியது ஏன்? அதனைப் பெறுவதில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார்? அதன் மூலம் படைக்க விரும்பிய மாற்றம் என்ன? என்பன குறித்த கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

பேச்சைத் தொடங்கியதுமே, "சாதி சான்றிதழை ஒழிப்பதால் மட்டுமே சாதி ஒழிந்துவிடாது, அது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு மட்டுமே," என்று அவர் தீர்க்கமாக குறிப்பிட்டார்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
 
படக்குறிப்பு,

நாட்டிலேயே முதல் ஆளாக 'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றிதழைப் பெற்ற திருப்பத்தூர் ஸ்நேகா

"தாய், தந்தையர் ஆகிய இருவருமே சாதி, மத நம்பிக்கை அற்றவர்களாக இருந்ததால் பள்ளி சான்றிதழ்களிலேயே சாதி, மதம் குறிப்பிடப்படவில்லை. 'மாணவரின் சாதி, மதத்தை குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை' என்று 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி வாதிட்டதால் அது சாத்தியமானது.

 

ஆனால், வருவாய்த்துறையில் சாதியற்றவர் என்று குறிப்பிட்டு சான்றிதழை வாங்குவது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. சாதியற்றவர் சான்றிதழைப் பெற 2010-ம் ஆண்டு முதலே தொடர்ச்சியாக விண்ணப்பித்து வந்தேன். கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என அதிகாரிகள் மட்டத்தில் அந்த விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.

சுமார் 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் பலனாக, நாட்டிலேயே முதல் நபராக எனக்கு 2019-ம் ஆண்டு 'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றிதழ் கிடைத்தது. நான் அளித்த விரிவான விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அப்போதைய திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சாதியற்றவர் சான்றிதழை எனக்கு வழங்கினார்.

என்னை முன்மாதிரியாகக் கொண்டும், சிலர் நீதிமன்ற ஆணை வாயிலாகவும் இன்றைய நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சாதியற்றவர் சான்றிதழை வாங்கியுள்ளனர்," என்று ஸ்நேகா கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cll3v5pl9jdo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகநாடுகளில் மதம் எனக்கு இல்லை என்றே சுதந்திரமாக கொடுக்கலாம் 👍
இந்தியாவில் ஒரு சாதியை சொல்லியே ஆக வேண்டுமாம்.இப்படியும் இந்தியாவில் நடைபெறுகிறதா.  இலங்கையில் கூட இப்படி இல்லையே இந்தியா தேறுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 05:49, விளங்க நினைப்பவன் said:

மேற்குலகநாடுகளில் மதம் எனக்கு இல்லை என்றே சுதந்திரமாக கொடுக்கலாம் 👍
இந்தியாவில் ஒரு சாதியை சொல்லியே ஆக வேண்டுமாம்.இப்படியும் இந்தியாவில் நடைபெறுகிறதா.  இலங்கையில் கூட இப்படி இல்லையே இந்தியா தேறுமா ?

அதற்கு பிரதான காரணம் பிற்படுத்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களை சரியாக அடையாளம் காணவும், நிவாரணம் வழங்கவும் என நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தெரிவித்த பதிலுக்கு நன்றி.
ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளை இந்தியாவில் சாதி வெறியர்கள் தீவைத்து எரிக்கிறார்கள்.பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது தானே. பள்ளிகள் கல்லூரிகளில் இருந்தே கட்டாயம் ஒரு சாதியை குறிப்பிட வேண்டும் என்று சாதி முறையை ஏன் திணிக்க வேண்டும்.பாதிகபட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காக அரசு  நீங்கள் என்ன சாதி என்று கேட்கின்றது என்றால் நிவாரணம் உதவிகளை சாட்டாக வைத்து சாதி முறையை வளர்க்கவே அரசு விரும்புகின்றது. மேற்குலக நாடுகளில்  சுழல்சூறாவளி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்புகள் வரும் போது நிவாரணம் உதவி வழங்குகிறார்கள்.பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குகிறார்கள்.சாதியை கண்டுபிடித்த இந்தியா தான் சாதி அடையாளத்தை மக்களிடம் கேட்கின்றது.சாதிக்கு சான்றிதழ் கொடுத்து சாதி வேற்றுமைகளை ஊக்குவித்து இந்திய அரசியல் கட்சிகள் இலாபம் அடைகின்றன என்று நம்புகிறேன்.
    

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மற்றும் அலுவலக விண்ணப்பங்களிலிருந்தே சாதி எனும் கேள்வி இடத்தை அழித்து விட வேண்டும். அதை அரசுதான் முன்னின்று செய்ய வேண்டும்.

எனினும் திராவிடவும் ஆரியமும் இருக்கும் வரை எதுவுமே சாத்தியமில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 00:19, விளங்க நினைப்பவன் said:

மேற்குலகநாடுகளில் மதம் எனக்கு இல்லை என்றே சுதந்திரமாக கொடுக்கலாம் 👍
இந்தியாவில் ஒரு சாதியை சொல்லியே ஆக வேண்டுமாம்.இப்படியும் இந்தியாவில் நடைபெறுகிறதா.  இலங்கையில் கூட இப்படி இல்லையே இந்தியா தேறுமா ?

இதற்கான காரணத்தை தம்பி ஏராளன் விளக்கி இருக்கிறார் உங்களுக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

சாதியை சான்றிதழில் அழிப்பதால் மட்டும் சாதி அழிந்துவிடாது.

நடைமுறையில், மனங்களில் சாதி(தீ)ய எண்ணம் இருக்கும் வரை சாதி இருக்கும்.

சாதி இருக்கும் வரை - அதனால் பாதிக்கப்பட்டவனை சமநிலை படுத்தி தூக்கி விட, சமூக நீதி செய்ய சாதி சான்றிதழில் இருக்க வேண்டும்.

இதைத்தான் வெற்றிமாறனும் சொல்கிறார். ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து விட்ட தனக்கு, சுயவிருப்பில் சாதி இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும், ஆனால் சாதியால் ஒதுக்கப்பட்ட, சமூக நீதி இட ஒதுக்கீடு தேவையுள்ள ஒருவருக்கு அது வழங்கபடவேண்டும்.

 

On 5/2/2023 at 17:21, ஏராளன் said:

ஒரு நிமிடம். இது வந்து யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு மட்டும். எனக்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

👆🏼👇

On 5/2/2023 at 17:21, ஏராளன் said:

உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் அவர்கள் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். எனக்கு அது தேவையில்லை. நான் வேண்டாம் என கூறும் பட்சத்தில், ‘சரி இவன் வேணாம் என்கிறான். இவனை விட்டு விடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன். ஆகவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் சொல்வதில் தப்பில்லை ஆனால் இப்படி சாதியற்றோர் சான்றிதழ் பெறுபவர்களும் அவர்கள் சந்ததியும் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் பின்னர் இடம் கோர கூடாது.

இல்லாவிடில் உயர்த்தபட்ட சாதியை சேர்ந்தோர் இதை ஒரு தந்திரமாக பாவித்து - இட ஒதுக்கீட்டை பெறுவர்.

அதே போல் வெற்றிமாறன் என்ற தனி மனிதன் முடிவை, அவர் சந்ததி, பிள்ளைகள் மீது திணிக்க முடியுமா? நாளைக்கு 18 வயதான பின், அவரின் பிள்ளை எனக்கு என் சாதி அடிப்படையில் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் இடம் வேண்டும் என கேட்கலாம் அல்லவா?

ஆகவே இதை கண்மூடித்தனமா எடுத்தாளமுடியாது.

 

14 hours ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளில்  சுழல்சூறாவளி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்புகள் வரும் போது நிவாரணம் உதவி வழங்குகிறார்கள்.பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குகிறார்கள்.சாதியை கண்டுபிடித்த இந்தியா தான் சாதி அடையாளத்தை மக்களிடம் கேட்கின்றது

இங்கே ஏராளன் நிவாரணம் என சொன்னது - வரலாற்று அடக்கு முறைக்கு எதிரான - மறுவினையாக வழங்கப்படும் - இட ஒதுக்கீட்டை. அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் quota/ reservation system. 
இந்தியாவிலும் இயற்கை பேரிடரின் போது நிவாரணம் சாதி பார்க்காமல்தான் கொடுப்பார்கள்.

On 5/2/2023 at 17:21, ஏராளன் said:

சாதி ஒழிப்பு பற்றி பேசியதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறதே? அதனை நிறுத்துவதில் இருந்தே சாதி ஒழிப்பைத் தொடங்க வேண்டும் என்று பேசுவது உயர் நடுத்தர வர்க்க மனோநிலை.

👆🏼இதை நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி அடையாளங்களை தனிமனித பெயர் சூட்டுவதிலும் மாற்றியமைக்க வேண்டும்.
ஊரில் பெயர்களை வைத்தே இன்னார் என கண்டு பிடிக்கலாமாம். அதே போல் இந்தியாவிலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சாதி அடையாளங்களை தனிமனித பெயர் சூட்டுவதிலும் மாற்றியமைக்க வேண்டும்.
ஊரில் பெயர்களை வைத்தே இன்னார் என கண்டு பிடிக்கலாமாம். அதே போல் இந்தியாவிலும்....

இது கடந்த 75 வருடத்தில் தமிழக்கதில் பெருமளவு மாறி விட்டது. 

வ. உ. சிதம்பரம் பிள்ளை,

காம்ராஜ் நாடார்,

வ. வே. சு ஐயர்,

ஜி. கே நாயுடு,

மூப்பனார்,

ராமசாமி படையாட்சி,

முத்துராமலிங்க தேவர்,

இவ்வாறு ஒரு காலத்தில் தலைவர்கள், சாமான்யர்கள் பெயர்களில் எல்லாம் சாதி மிக சாதாரணமாக ஒட்டி கொண்டிருந்தது.

ஆனால் இன்று, இராமதாஸ், திருமாவளவன், அன்புமணி, முருகன், ஸ்டாலின், வாசன், அண்ணாமலை, ராஜா, சீமான், வைகோ, என எந்த தலைவர் பெயரின் பின்னாலும் சாதி அடையாளம் இல்லை. மக்கள் மத்தியிலும் அதிகம் இல்லை.

ஆனால் வட இந்தியாவில் ஏன் கேரளாவில் கூட இன்னும் இந்த வழக்கம் உள்ளது. 

கீழே இந்தியன் ஒன்றிய அரசின் அமைச்சரவை லிஸ்ட் உள்ளது. இதில் சாதியை ஊகிக்க முடியாத பெயர்களாக இருப்பவை, நிர்மலா சீதாராமனும், சுப்ரமண்யன் ஜெய்சங்கரும்தான்.

https://en.m.wikipedia.org/wiki/Union_Council_of_Ministers

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்தியன் ஒன்றிய அரசின் அமைச்சரவை லிஸ்ட் உள்ளது. இதில் சாதியை ஊகிக்க முடியாத பெயர்களாக இருப்பவை, நிர்மலா சீதாராமனும், சுப்ரமண்யன் ஜெய்சங்கரும்தான்.

 

சீதாராமன், சுப்ரமண்யன் என்றாலே அவா பெயர்தானே… அம்பி. 🤣

இது நோக்கு தெரியாதோன்னா… 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சீதாராமன், சுப்ரமண்யன் என்றாலே அவா பெயர்தானே… அம்பி. 🤣

இது நோக்கு தெரியாதோன்னா… 😂

என்ன நீங்க இப்படிச் சொல்றேள், அது அப்டி இல்லண்ணா, நீங்க ஆல்ரெடி இவா, அவான்னு தெரிஞ்சுண்டு படிக்கறச்சே உங்க மனசில அப்படி தோண்றதுண்ணா.

வேற வேற மனுசாளும் சீதாராமன், சுப்ரமணியன் எண்டு பேர் வச்சுண்டுதானே இருக்காள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

ஆனால் இன்று, இராமதாஸ், திருமாவளவன், அன்புமணி, முருகன், ஸ்டாலின், வாசன், அண்ணாமலை, ராஜா, சீமான், வைகோ, என எந்த தலைவர் பெயரின் பின்னாலும் சாதி அடையாளம் இல்லை. மக்கள் மத்தியிலும் அதிகம் இல்லை.

சாதி, இன அடையாளம் இல்லையெனில் ஏன் ஆளுக்கொரு கட்சி வைத்திருக்கின்றார்கள்?

வேறு கொள்கைகள் ஏதாவது வைத்திருக்கின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

சாதி, இன அடையாளம் இல்லையெனில் ஏன் ஆளுக்கொரு கட்சி வைத்திருக்கின்றார்கள்?

வேறு கொள்கைகள் ஏதாவது வைத்திருக்கின்றார்களா?

இது என் கருத்தல்ல அவர்கள் கருத்து.

சாதி சான்றிதழ் போலவே, தாம் சார்ந்த சாதி மக்களின் உரிமை நிலை நாட்டப்பட, அவர்கள் சார்பாக போராட ஒரு அமைப்பு வேண்டும் என்கிறார்கள்.

அதாவது தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி இனவாத கட்சி அல்ல, ஆனால் தம் இன உரிமைக்காக போராடிய கட்சி.

அதே போல் இராமதாஸ், திருமா நடத்துவது சாதிவாதி கட்சிகள் இல்லையாம். தத்தம் சாதி மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகளாம்.

பிகு

சாதி அடையாளம் தமிழ் நாட்டில் இல்லை என நான் சொல்லவில்லை. 

75 வருடத்தில் வட இந்தியாவுடனும் ஒப்பிட்டு என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை பெயர்களை உதாரணமாக எடுத்து விளக்கியுள்ளேன்.

சாதி அடையாளமே இப்போ இல்லை என்பது என் நிலைப்பாடு என்றால் - சான்றிதழும் தேவையில்லை என்றல்லவா கூறி இருப்பேன்?

 

தமிழ்நாட்டில் சாதி 600-1000 வருட புற்று நோய். அதை 75 வருடத்தில் குணப்படுத்த முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சாதியை சான்றிதழில் அழிப்பதால் மட்டும் சாதி அழிந்துவிடாது.

நடைமுறையில், மனங்களில் சாதி(தீ)ய எண்ணம் இருக்கும் வரை சாதி இருக்கும்.

தான் உயர்ந்த சாதி என்று உயர்வாகவும் மற்றவர் தாழ்ந்த சாதி என்று தாழ்வாகவும் நம்பும்  மனநிலை ஒழிய வேண்டியது முக்கியம். சாதிகள் இல்லை என்று சொல்லி கொண்டு சாதிக்கு சான்றிதழ் கட்டயபடுத்தி வழங்கினால் இந்தியாவில் சாதி வேற்றுமைகள் தொடர்ந்து பாதுகாப்பாக பாதுகாக்கபடும். அந்த சினிமாவை சேர்ந்தவர் கூட சொல்கிறார் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும்   என்று தன்னை கேட்டார்கள்.

24 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் சாதி 600-1000 வருட புற்று நோய்.

அந்த புற்று நோயை மேலும் தீவிரமாக பரவவைப்பதற்கு சிகரெட் குடிப்பது போன்றது சாதிக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாதி சான்றிதழ் போலவே, தாம் சார்ந்த சாதி மக்களின் உரிமை நிலை நாட்டப்பட, அவர்கள் சார்பாக போராட ஒரு அமைப்பு வேண்டும் என்கிறார்கள்.

அதாவது தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி இனவாத கட்சி அல்ல, ஆனால் தம் இன உரிமைக்காக போராடிய கட்சி.

சாதி வேறு. இனம் வேறு. இரண்டையும் சேர்த்து குழப்புவதால் இன்னும் பல பிரச்சனைகள் தோன்றும்.
எனது மன அடிப்படையில் ஆரியத்தையும் திராவிடத்தையும் ஒதுக்க தமிழினம் மிளிரும்.

இலங்கை தமிழர்கள் தமிழினத்திற்காக மட்டும் போராடியவர்கள். என்றுமே சாதி ஒழிப்பிற்காக போராடவில்லை. போராட வேண்டிய அவசியமும் இல்லை. சாதி வேற்றுமைகள் இருந்தாலும் தமிழினம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணித்தார்கள்.

அடுத்தது சாதீயம் என வரும் போது பிராமணீயம் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் சாதீயத்தின் ஆணி வேரே பிராமணீயம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தான் உயர்ந்த சாதி என்று உயர்வாகவும் மற்றவர் தாழ்ந்த சாதி என்று தாழ்வாகவும் நம்பும்  மனநிலை ஒழிய வேண்டியது முக்கியம். சாதிகள் இல்லை என்று சொல்லி கொண்டு சாதிக்கு சான்றிதழ் கட்டயபடுத்தி வழங்கினால் இந்தியாவில் சாதி வேற்றுமைகள் தொடர்ந்து பாதுகாப்பாக பாதுகாக்கபடும். அந்த சினிமாவை சேர்ந்தவர் கூட சொல்கிறார் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும்   என்று தன்னை கேட்டார்கள்.

அந்த புற்று நோயை மேலும் தீவிரமாக பரவவைப்பதற்கு சிகரெட் குடிப்பது போன்றது சாதிக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பது.

சரி கீழே ஒரு உதாரணம் தருகிறேன்.

சாதி சான்றிதழ் தேவையா இல்லையா என இதை வைத்து உங்கள் முடிவை சொல்லுங்கள்.

பாபு - இவன் ஒரு தாழ்த்தப்பட்ட/பழங்குடி வீட்டில் பிறந்தவன். அவன் தந்தை ஒரு மலம் அள்ளும் தொழிலாளி. தாய் - விவசாய கூலி. இவர்கள் பரம்பரையில் யாரும் 8ம் வகுப்பு தாண்டவில்லை. நில உரிமை இல்லை.

ஆயிரம் ஆண்டுகளாக நில, வழிபாட்டு, கல்வி உரிமை உனக்கு கொடுக்ககூடாது என வர்ணாசிரமம் சொல்கிறது என்று சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மகன்.

இந்த வரலாற்று பிழையை முடிந்தளவு சரி செய்ய, இவனுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை (85% மார்க் எடுத்தாலே போதும்) என இந்திய சட்டங்கள் சொல்லி, அது நடைமுறையிலும் உள்ளது.

கோபு - இவன் ஒரு டாக்டரின் மகன். தாய் கலெக்டர். இரு வழி பாட்டாக்களும் உயர் அரச அதிகாரிகள். கொள்ளு பாட்டா பிரிடிஸ் காலத்தில் ஜட்ஜ். அவரின் அப்பா ஒரு ராஜாவின் மந்திரி. 

காலாகாலமாக வருணாசிரம முறை படிக்க, படிபிக்க, இறைவனோடு ஏனையோர் சார்பில் கதைக்க, அரசருக்கு ஆலோசனை சொல்ல, இன்னும் உள்ள எல்லா உயர் தொழிலும் செய்ய வேண்டிய உயர் சாதி என கூறி வளர்த்த சாதியில் பிறந்த மகன். 

கோபுவுக்கு உள்ள வரலாற்று அனுகூலத்தை கணக்கில் எடுத்து, இவனுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை கொடுக்க தேவையில்லை (92% மார்க் எடுக்க வேண்டும்) என இந்திய சட்டங்கள் சொல்லி, அது நடைமுறையிலும் உள்ளது.

இப்போ பரீட்சையில் பாபு 89% கோபு 90%  எடுக்கிறார்கள். உயர் கல்வி வாய்ப்பில் ஒரு இடம்தான் உள்ளது.

இந்திய சட்டபடி, சாதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பாபுவுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கவேண்டும் (இது சட்டம் இதை நீங்கள் மாற்ற முடியாது). 

சாதி சான்றிதழ் பார்க்காமல் எப்படி பாபு இந்த சாதிதான் என உறுதி செய்து அந்த இடத்தை பாபுக்கு கொடுப்பீர்கள்?

Edited by goshan_che
என்னை அறியாமலேயே பாபுவை இவன் என்றும். கோபுவை இவர் என்றும் எழுதியுள்ளேன். Unconscious bias.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

சாதி வேறு. இனம் வேறு. இரண்டையும் சேர்த்து குழப்புவதால் இன்னும் பல பிரச்சனைகள் தோன்றும்.
எனது மன அடிப்படையில் ஆரியத்தையும் திராவிடத்தையும் ஒதுக்க தமிழினம் மிளிரும்.

இலங்கை தமிழர்கள் தமிழினத்திற்காக மட்டும் போராடியவர்கள். என்றுமே சாதி ஒழிப்பிற்காக போராடவில்லை. போராட வேண்டிய அவசியமும் இல்லை. சாதி வேற்றுமைகள் இருந்தாலும் தமிழினம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணித்தார்கள்.

அடுத்தது சாதீயம் என வரும் போது பிராமணீயம் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் சாதீயத்தின் ஆணி வேரே பிராமணீயம் தான்.

மேலே சாதியையும் இனத்தையும் ஒன்றாக குழப்பவில்லை. ஒப்பீடு செய்துள்ளேன்.

செல்வா இன வெறியர் அல்ல. ஆனால் யு என் பி யில், சுதந்திர கட்சியில் இருந்து தமிழருக்கு உரிமை பெற முடியாது என உணர்ந்து தமிழருக்கு தனி கட்சி தொடங்கினார்.

அவர்களின் கூற்றுப்படி, ஏனைய சாதிகளின் பிடியில் இருக்கும் காங்கிரஸ், திமுக, அதிமுக, பிஜேபியில் இருந்து வன்னியருக்கும், தலித்துகளுக்கும் உரிமையை பெற முடியாது என்பதால் தனி கட்சி கண்டோம் என்கிறார்கள் இராமதாசும், திருமாவும்.

இங்கே இனத்துக்கும், சாதிக்கும் லாஜிக் ஒன்றுதான்.

30 minutes ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் தமிழினத்திற்காக மட்டும் போராடியவர்கள்.

30 minutes ago, குமாரசாமி said:

என்றுமே சாதி ஒழிப்பிற்காக போராடவில்லை

இல்லை நிச்சயமாக சாதியை தமது கட்டுப்பாட்டு பகுதியில் பொது வாழ்க்கையில் கடைபிடிப்பதை முற்றாக தடை செய்தார்கள். சாதிய வசவுகள் சொல்லியோர் கூட எச்சரிக்க/தண்டிக்கப்பட்டார்கள்.

அவர்களின் ஆளுகைக்குள் வாழ்ந்த எவரும் இதை உண்மை என ஒத்து கொள்வார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

போராட வேண்டிய அவசியமும் இல்லை.

புலிகள் வர முன்னம் அவசியம் இருந்தது. ஆலய பிரவேசம் உட்பட பல போராட்டங்களும் நடந்தன.

புலிகள் சாதியத்தை அடித்து நொறுக்கியதால் அவர்கள் காலத்தில் சாதியம் தலை எடுக்காமல் இருந்தது, அல்லது வெளி நாட்டுக்கு ஓடி வந்திருதது, ஆகவே 83-2009 கால்பகுதியில் மட்டும் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை (காரணியை புலிகள் அடக்கி விட்டமையால்). 

37 minutes ago, குமாரசாமி said:

அடுத்தது சாதீயம் என வரும் போது பிராமணீயம் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் சாதீயத்தின் ஆணி வேரே பிராமணீயம் தான்.

நிச்சயமாக. புலிகளால் ஈழத்தில் சாதியை இலகுவில் அடக்க முடியுமாய் இருக்க அங்கே பிராமணியம் அதிகம் வேரூன்றாமையும் காரணமாகியது.

அதே போல் நாராயணன்களும், சோக்களும், சுப்ரமணிய சுவாமிகளும் புலிகளை ஜென்மபகைவராக கருத - வர்ணாசிரம/சாதிய/பிரமணிய மேலாண்மை பருப்பு அவர்களிடம் வேகாது என்பதும் ஒரு பிரதான காரணியாகியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

சரி கீழே ஒரு உதாரணம் தருகிறேன்.

சாதி சான்றிதழ் தேவையா இல்லையா என இதை வைத்து உங்கள் முடிவை சொல்லுங்கள்.

மிகவும் சிக்கலான கேள்வியை வைத்துள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது சரி.பாபுவுக்கு  சாதி சான்றிதழ் தேவை. அப்படி தேவையானவர்கள் விண்ணப்பித்து சாதி சான்றிதழை பெற்று கொள்ளலாம் என்று இருக்க வேண்டும். மற்றும்படி சாதியே வேண்டாம் என்பவர்களிடம் நீ ஒரு சாதியை கட்டாயம் போட வேண்டும் என்பது அநீதியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் சிக்கலான கேள்வியை வைத்துள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது சரி.பாபுவுக்கு  சாதி சான்றிதழ் தேவை. அப்படி தேவையானவர்கள் விண்ணப்பித்து சாதி சான்றிதழை பெற்று கொள்ளலாம் என்று இருக்க வேண்டும். மற்றும்படி சாதியே வேண்டாம் என்பவர்களிடம் நீ ஒரு சாதியை கட்டாயம் போட வேண்டும் என்பது அநீதியானது.

ஓம். இதைதான் வெற்றிமாறனும் சொல்கிறார்.

இதை நானும் ஏற்கிறேன்.

கூடவே சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் கூட, ஆணும் பெண்ணும் சாதியாவது ஹைகோர்ட்டாவது என சொல்லி மணம் முடித்த பின், பிறக்கும் பிள்ளைக்கு இருவரில் ஒருவர் சாதியை போடுங்கள் என சொல்லுவார்கள். எவ்வளவு அநியாயம் இது!

நிச்சயம் - சாதி அற்றோர் என சுயவிருப்பில், அதிக தடங்கல் இன்றி போடப்படும் நடைமுறை வர வேண்டும். 

ஆனால் இப்படி போடுபவர்களும், சந்ததியினரும் இட ஒதுக்கீட்டு நடைமுறையில் இருந்து சுயமாக விடுப்பு எடுத்தோராக கருதப்பட வேண்டும்.

ஆனால் சாதி மறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் முகமாக - ஒரு உயர்த்தப்பட்ட+தாழ்தப்பட்ட தம்பதியின் பிள்ளைகள் சாதி அற்றோர் என வழங்க்ப்பட்டாலும், அவர்களுக்கு தாழ்தப்பட்ட சாதியினருக்குரிய சலுகைகை வழங்கலாம்.

எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு வகை அடையாளப்படுத்தல், சான்றிதழ் தேவையே. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.