Jump to content

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன.

100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கம், துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில், 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

அத்துடன், தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து 4.0 அல்லது அதற்கும் அதிகமான அளவில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது

இன்றைய தினம், சமீபத்திய புதுப்பிப்பில் மத்திய துருக்கி பிராந்தியத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் குறைந்தது 1,293 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,411 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கமும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 593 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,411 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறைந்தது 700 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஒயிட் ஹெல்மெட்ஸ் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,316 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13,293 பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 7,340 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார், இதன் போது நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களில் துருக்கிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்.

துருக்கியின் நிவாரண முயற்சிகளுக்கு உதவ சீனா முதல் தவணையாக 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவியாக வழங்கியுள்ளது. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தலா 200,000 டொலர்கள் அவசர உதவி அளிக்கும்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தலைவர்கள் இணைந்து மொத்தம் 11.5 மில்லியன் டொலர்கள் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதுதவிர, துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஈராக் மற்றும் ஈரானில் இருந்து உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்காக, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள பேரிடர் மீட்புக் குழுக்கள் துருக்கி விரைந்துள்ளன.
 

 

https://athavannews.com/2023/1323405

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை. அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்க

alvayan

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு... இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை

விசுகு

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்? முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு...

இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை வேறை லெவெல்..எந்த சயத்தைவிடவும் நாம்தான் பெரிது..அல்லாதான் பெரிது..இப்ப..கதை வேறை..

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனாலும் ஆயுதங்களை மட்டும்தான் மேற்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. உதவியும் செய்யலாம். 

சிரியாவுக்கு உதவ வேண்டுமானால் அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையே போதுமானது. அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித குலத்திற்கான அழிவுகளை நான் ஆதரிப்பதில்லை.மனித அழிவுகளை பார்த்து புழகாங்கிதம் அடைபவனும் அல்ல. ஆனாலும் துருக்கி அண்டை நாடுகளுக்கு செய்த  அழிவு அஜாரகங்களை கூட்டி கழித்து பார்க்கும் போது இதுவும் ஒருவகை இயற்கையின் சீற்றம் தான்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனாலும் ஆயுதங்களை மட்டும்தான் மேற்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. உதவியும் செய்யலாம். 

சிரியாவுக்கு உதவ வேண்டுமானால் அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையே போதுமானது. அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது. 

மேற்குலகினர் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்....அதில் தம் நலனின் மட்டுமே  கண்ணாய் இருப்பர் :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மேற்குலகினர் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்....அதில் தம் நலனின் மட்டுமே  கண்ணாய் இருப்பர் :face_with_tears_of_joy:

அவர்களின் நலன் மட்டுமே. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அவர்களின் நலன் மட்டுமே. ☹️

இவ்வுலகில் யார் அவ்வாறு இல்லை சகோ. இதில் எமது நன்மைகளும் அடக்கம். அப்பனின் சொத்து வேண்டும் ஆனால் பழிபாவம் வேண்டாம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. கருத்து தானே என்று கண்டவற்றை யும் கொட்டமுடியாது அல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இவ்வுலகில் யார் அவ்வாறு இல்லை சகோ. இதில் எமது நன்மைகளும் அடக்கம். அப்பனின் சொத்து வேண்டும் ஆனால் பழிபாவம் வேண்டாம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. கருத்து தானே என்று கண்டவற்றை யும் கொட்டமுடியாது அல்லவா?

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என்றுதானே கூறுகிறோம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்?

முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

முள்ளிவாய்க்கால் அழிவை நிறுத்த முடியாதவர்கள் உக்ரேன் அழிவை நிறுத்துவார்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்?

முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மனிதாபிமானம் மட்டும் போதும். 

2 hours ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அழிவை நிறுத்த முடியாதவர்கள் உக்ரேன் அழிவை நிறுத்துவார்களா?

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

இதே கேள்வியைத்தான் அன்று தொடக்கம்  பல திரிகளில்,பல அரசியல் மற்றும்  நாடுகள் மீதான அத்துமீறல்களில் கேட்கப்பட்டது.

ஆனால்.....

 :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதே கேள்வியைத்தான் அன்று தொடக்கம்  பல திரிகளில்,பல அரசியல் மற்றும்  நாடுகள் மீதான அத்துமீறல்களில் கேட்கப்பட்டது.

ஆனால்.....

 :rolling_on_the_floor_laughing:

கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த பூனையின் நிலையில் பலர். ✍️🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மனிதாபிமானம் மட்டும் போதும். 

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

ஒரு இறைமையுள்ள நாடு மீது போர் கொடுத்ததை கட்டுரைகள் சமர்ப்பித்து வாதாட்டும் நடாத்தும் உங்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. வேசம் கலைந்து கனகாலமாச்சே. 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

  • Like 4
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மனித அழிவுகள் முக்கியமல்ல. அது எப்படிப்பட்ட அரசியல் மனித அழிவுகள் என்பதே முக்கியம்.
இயற்கை அனர்த்தங்களினால் வரும் மனித அழிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அது ஐம்பதினாயிரத்தையும் தாண்டினாலும் பரவாயில்லை. அல்லது நாம் விரும்பாத நாடுகளில் நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.

உக்ரேன் என்றால் மட்டும் உள்ளமெல்லாம் கொதிக்கும்.

1 hour ago, தமிழ் சிறி said:

கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த பூனையின் நிலையில் பலர். ✍️🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு இறைமையுள்ள நாடு மீது போர் கொடுத்ததை கட்டுரைகள் சமர்ப்பித்து வாதாட்டும் நடாத்தும் உங்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. வேசம் கலைந்து கனகாலமாச்சே. 

இன்றுவரை கணை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?

உங்கள் கண்களுக்கு முன்னர்தான் ஈராக், லிபியா, சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரMப்பும் படையெடுப்பும் நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் சிரியா அமெரிக்கப் படையினரால் அதன் வளங்கள் சூறையாடப்படுகின்ற. ஈரான், கியூபா, வடகொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளை பட்டினிபோட்டு வைத்திருக்கின்றது. இந்த லட்சணத்தில் இறைமை பற்றியும் மனிதாபிமானம் தொடர்பாகவும் US +EU மனிதாபிமானிகள் பாடமெடுக்கின்றனர். 😀

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

மதகுகளின் மேலிருந்து விசிலடிக்கும் ஆட்களைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். 🤣

எல்லோருக்கும் புதிய புதிய பெயர்கள்  வைக்கிறீர்களே முன்னர் மகப்பேற்று மருத்துவமனையில் தாதியாக வேலை பார்த்தீர்களோ 🤣

செலன்ஸ்க்கியோ மாமா என்கிறார், காகிதப்புலியோ துரோகி என்கிறார், விசுகரோ அரச பணத்தில் வாழ்ந்துகொண்டு வேலைக்குப் போவதில்லை என்கிறார. நீவீரோ அற்ப புத்தியுள்ளவர் என்கிறீர். 

 எல்லோரும் என்ன  ஊரில் பூவரசு மரத்திற்குக் கீழிருந்து போவோர் வருவோருக்கு பட்டப்பெயர் வைத்து கூக்காட்டியிருப்பீர்களோ, முற்பிறவியில் 🤣

எல்லோருக்கும் US + EU இராச(வெள்ளை) விசுவாசம் கூடிப்போச்சு 🤣

1 hour ago, குமாரசாமி said:

இங்கு மனித அழிவுகள் முக்கியமல்ல. அது எப்படிப்பட்ட அரசியல் மனித அழிவுகள் என்பதே முக்கியம்.
இயற்கை அனர்த்தங்களினால் வரும் மனித அழிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அது ஐம்பதினாயிரத்தையும் தாண்டினாலும் பரவாயில்லை. அல்லது நாம் விரும்பாத நாடுகளில் நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.

உக்ரேன் என்றால் மட்டும் உள்ளமெல்லாம் கொதிக்கும்.

 

இராச விசுவாசமாக்கும் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

மதகுகளின் மேலிருந்து விசிலடிக்கும் ஆட்களைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். 🤣

@Kapithan, நீங்களும் இன்னும் சில புட்டின் விசுவாசிகளும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்களில் பாவித்த முகக்குறிகளில் இருந்தே தெரிகின்றது நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் மக்கள் அழிவுகளுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்று.

தகப்பனின் மரணச் செய்தி வரும் வேளையிலும் கஸ்தூரிபாயுடன் படுக்கப்போன காந்தி போலத்தான் நீங்களும். போய் துக்கத்தைக் கொண்டாடுங்கள்.

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

@Kapithan, நீங்களும் இன்னும் சில புட்டின் விசுவாசிகளும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்களில் பாவித்த முகக்குறிகளில் இருந்தே தெரிகின்றது நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் மக்கள் அழிவுகளுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்று.

தகப்பனின் மரணச் செய்தி வரும் வேளையிலும் கஸ்தூரிபாயுடன் படுக்கப்போன காந்தி போலத்தான் நீங்களும். போய் துக்கத்தைக் கொண்டாடுங்கள்.

 

70 வருடங்களுக்கு மேலாக கண்ணீர் சிந்துபவர்களுக்கு யார் கண்ணீர் சிந்தினார்கள்?

அழுத கண்ணீரும் கடன் தான்...எனக்காக எவன் கவலைப்படுகின்றானோ அவனுக்காக மட்டுமே நான் கவலைப்பட முடியும்.

உக்ரேனுக்காக மட்டும் ஞானோதய கண்ணீர் வடிக்க எல்லோரும் கேணையர்கள் அல்ல...

Link to comment
Share on other sites

சிரியா 3000, துருக்கி 13000 இறப்புகள் இப்போ வரைக்கும். மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இன்றுவரை கணை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?

உங்கள் கண்களுக்கு முன்னர்தான் ஈராக், லிபியா, சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரMப்பும் படையெடுப்பும் நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் சிரியா அமெரிக்கப் படையினரால் அதன் வளங்கள் சூறையாடப்படுகின்ற. ஈரான், கியூபா, வடகொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளை பட்டினிபோட்டு வைத்திருக்கின்றது. இந்த லட்சணத்தில் இறைமை பற்றியும் மனிதாபிமானம் தொடர்பாகவும் US +EU மனிதாபிமானிகள் பாடமெடுக்கின்றனர். 😀

அப்பாடா தப்பித்தேன்

உங்கள் முருகன் சூரனை வதை செய்து கொன்றபோது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் என்று கேட்காமல் விட்டதால்???😷

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்பாடா தப்பித்தேன்

உங்கள் முருகன் சூரனை வதை செய்து கொன்றபோது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் என்று கேட்காமல் விட்டதால்???😷

மேலே 👆சிரிப்புக் குறி எனது. 🤣

சிரியாவும், கியூபாவும், வெனிசுவேலா, வடகொரியா, ஈராக், ஈரான், லிபியா எல்லாமே உங்களுக்கு பழைய கதையாகிவிட்டதுபோல.. ☹️

 

உக்ரேனில் சண்டைக்காக மேற்குலகு பில்லியனில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. 

துருக்கிக்கும் சுரியாவுக்கும் கிள்ளியாவது கொடுத்தார்களா ? மனிதாபிமானத்துக்காக கண்ணீர் விடுபவர்கள் பதில் கூறுங்கள். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.