Jump to content

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன.

100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கம், துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில், 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

அத்துடன், தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து 4.0 அல்லது அதற்கும் அதிகமான அளவில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது

இன்றைய தினம், சமீபத்திய புதுப்பிப்பில் மத்திய துருக்கி பிராந்தியத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் குறைந்தது 1,293 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,411 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கமும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 593 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,411 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறைந்தது 700 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஒயிட் ஹெல்மெட்ஸ் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,316 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13,293 பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 7,340 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார், இதன் போது நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களில் துருக்கிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்.

துருக்கியின் நிவாரண முயற்சிகளுக்கு உதவ சீனா முதல் தவணையாக 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவியாக வழங்கியுள்ளது. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தலா 200,000 டொலர்கள் அவசர உதவி அளிக்கும்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தலைவர்கள் இணைந்து மொத்தம் 11.5 மில்லியன் டொலர்கள் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதுதவிர, துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஈராக் மற்றும் ஈரானில் இருந்து உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்காக, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள பேரிடர் மீட்புக் குழுக்கள் துருக்கி விரைந்துள்ளன.
 

 

https://athavannews.com/2023/1323405

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை. அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்க

alvayan

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு... இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை

விசுகு

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்? முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு...

இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை வேறை லெவெல்..எந்த சயத்தைவிடவும் நாம்தான் பெரிது..அல்லாதான் பெரிது..இப்ப..கதை வேறை..

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனாலும் ஆயுதங்களை மட்டும்தான் மேற்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. உதவியும் செய்யலாம். 

சிரியாவுக்கு உதவ வேண்டுமானால் அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையே போதுமானது. அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித குலத்திற்கான அழிவுகளை நான் ஆதரிப்பதில்லை.மனித அழிவுகளை பார்த்து புழகாங்கிதம் அடைபவனும் அல்ல. ஆனாலும் துருக்கி அண்டை நாடுகளுக்கு செய்த  அழிவு அஜாரகங்களை கூட்டி கழித்து பார்க்கும் போது இதுவும் ஒருவகை இயற்கையின் சீற்றம் தான்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனாலும் ஆயுதங்களை மட்டும்தான் மேற்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. உதவியும் செய்யலாம். 

சிரியாவுக்கு உதவ வேண்டுமானால் அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையே போதுமானது. அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது. 

மேற்குலகினர் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்....அதில் தம் நலனின் மட்டுமே  கண்ணாய் இருப்பர் :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மேற்குலகினர் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்....அதில் தம் நலனின் மட்டுமே  கண்ணாய் இருப்பர் :face_with_tears_of_joy:

அவர்களின் நலன் மட்டுமே. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அவர்களின் நலன் மட்டுமே. ☹️

இவ்வுலகில் யார் அவ்வாறு இல்லை சகோ. இதில் எமது நன்மைகளும் அடக்கம். அப்பனின் சொத்து வேண்டும் ஆனால் பழிபாவம் வேண்டாம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. கருத்து தானே என்று கண்டவற்றை யும் கொட்டமுடியாது அல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இவ்வுலகில் யார் அவ்வாறு இல்லை சகோ. இதில் எமது நன்மைகளும் அடக்கம். அப்பனின் சொத்து வேண்டும் ஆனால் பழிபாவம் வேண்டாம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. கருத்து தானே என்று கண்டவற்றை யும் கொட்டமுடியாது அல்லவா?

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என்றுதானே கூறுகிறோம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்?

முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

முள்ளிவாய்க்கால் அழிவை நிறுத்த முடியாதவர்கள் உக்ரேன் அழிவை நிறுத்துவார்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்?

முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மனிதாபிமானம் மட்டும் போதும். 

2 hours ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அழிவை நிறுத்த முடியாதவர்கள் உக்ரேன் அழிவை நிறுத்துவார்களா?

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

இதே கேள்வியைத்தான் அன்று தொடக்கம்  பல திரிகளில்,பல அரசியல் மற்றும்  நாடுகள் மீதான அத்துமீறல்களில் கேட்கப்பட்டது.

ஆனால்.....

 :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதே கேள்வியைத்தான் அன்று தொடக்கம்  பல திரிகளில்,பல அரசியல் மற்றும்  நாடுகள் மீதான அத்துமீறல்களில் கேட்கப்பட்டது.

ஆனால்.....

 :rolling_on_the_floor_laughing:

கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த பூனையின் நிலையில் பலர். ✍️🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மனிதாபிமானம் மட்டும் போதும். 

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

ஒரு இறைமையுள்ள நாடு மீது போர் கொடுத்ததை கட்டுரைகள் சமர்ப்பித்து வாதாட்டும் நடாத்தும் உங்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. வேசம் கலைந்து கனகாலமாச்சே. 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

  • Like 4
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மனித அழிவுகள் முக்கியமல்ல. அது எப்படிப்பட்ட அரசியல் மனித அழிவுகள் என்பதே முக்கியம்.
இயற்கை அனர்த்தங்களினால் வரும் மனித அழிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அது ஐம்பதினாயிரத்தையும் தாண்டினாலும் பரவாயில்லை. அல்லது நாம் விரும்பாத நாடுகளில் நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.

உக்ரேன் என்றால் மட்டும் உள்ளமெல்லாம் கொதிக்கும்.

1 hour ago, தமிழ் சிறி said:

கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த பூனையின் நிலையில் பலர். ✍️🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு இறைமையுள்ள நாடு மீது போர் கொடுத்ததை கட்டுரைகள் சமர்ப்பித்து வாதாட்டும் நடாத்தும் உங்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. வேசம் கலைந்து கனகாலமாச்சே. 

இன்றுவரை கணை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?

உங்கள் கண்களுக்கு முன்னர்தான் ஈராக், லிபியா, சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரMப்பும் படையெடுப்பும் நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் சிரியா அமெரிக்கப் படையினரால் அதன் வளங்கள் சூறையாடப்படுகின்ற. ஈரான், கியூபா, வடகொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளை பட்டினிபோட்டு வைத்திருக்கின்றது. இந்த லட்சணத்தில் இறைமை பற்றியும் மனிதாபிமானம் தொடர்பாகவும் US +EU மனிதாபிமானிகள் பாடமெடுக்கின்றனர். 😀

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

மதகுகளின் மேலிருந்து விசிலடிக்கும் ஆட்களைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். 🤣

எல்லோருக்கும் புதிய புதிய பெயர்கள்  வைக்கிறீர்களே முன்னர் மகப்பேற்று மருத்துவமனையில் தாதியாக வேலை பார்த்தீர்களோ 🤣

செலன்ஸ்க்கியோ மாமா என்கிறார், காகிதப்புலியோ துரோகி என்கிறார், விசுகரோ அரச பணத்தில் வாழ்ந்துகொண்டு வேலைக்குப் போவதில்லை என்கிறார. நீவீரோ அற்ப புத்தியுள்ளவர் என்கிறீர். 

 எல்லோரும் என்ன  ஊரில் பூவரசு மரத்திற்குக் கீழிருந்து போவோர் வருவோருக்கு பட்டப்பெயர் வைத்து கூக்காட்டியிருப்பீர்களோ, முற்பிறவியில் 🤣

எல்லோருக்கும் US + EU இராச(வெள்ளை) விசுவாசம் கூடிப்போச்சு 🤣

1 hour ago, குமாரசாமி said:

இங்கு மனித அழிவுகள் முக்கியமல்ல. அது எப்படிப்பட்ட அரசியல் மனித அழிவுகள் என்பதே முக்கியம்.
இயற்கை அனர்த்தங்களினால் வரும் மனித அழிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அது ஐம்பதினாயிரத்தையும் தாண்டினாலும் பரவாயில்லை. அல்லது நாம் விரும்பாத நாடுகளில் நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.

உக்ரேன் என்றால் மட்டும் உள்ளமெல்லாம் கொதிக்கும்.

 

இராச விசுவாசமாக்கும் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

மதகுகளின் மேலிருந்து விசிலடிக்கும் ஆட்களைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். 🤣

@Kapithan, நீங்களும் இன்னும் சில புட்டின் விசுவாசிகளும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்களில் பாவித்த முகக்குறிகளில் இருந்தே தெரிகின்றது நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் மக்கள் அழிவுகளுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்று.

தகப்பனின் மரணச் செய்தி வரும் வேளையிலும் கஸ்தூரிபாயுடன் படுக்கப்போன காந்தி போலத்தான் நீங்களும். போய் துக்கத்தைக் கொண்டாடுங்கள்.

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

@Kapithan, நீங்களும் இன்னும் சில புட்டின் விசுவாசிகளும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்களில் பாவித்த முகக்குறிகளில் இருந்தே தெரிகின்றது நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் மக்கள் அழிவுகளுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்று.

தகப்பனின் மரணச் செய்தி வரும் வேளையிலும் கஸ்தூரிபாயுடன் படுக்கப்போன காந்தி போலத்தான் நீங்களும். போய் துக்கத்தைக் கொண்டாடுங்கள்.

 

70 வருடங்களுக்கு மேலாக கண்ணீர் சிந்துபவர்களுக்கு யார் கண்ணீர் சிந்தினார்கள்?

அழுத கண்ணீரும் கடன் தான்...எனக்காக எவன் கவலைப்படுகின்றானோ அவனுக்காக மட்டுமே நான் கவலைப்பட முடியும்.

உக்ரேனுக்காக மட்டும் ஞானோதய கண்ணீர் வடிக்க எல்லோரும் கேணையர்கள் அல்ல...

Link to comment
Share on other sites

சிரியா 3000, துருக்கி 13000 இறப்புகள் இப்போ வரைக்கும். மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இன்றுவரை கணை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?

உங்கள் கண்களுக்கு முன்னர்தான் ஈராக், லிபியா, சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரMப்பும் படையெடுப்பும் நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் சிரியா அமெரிக்கப் படையினரால் அதன் வளங்கள் சூறையாடப்படுகின்ற. ஈரான், கியூபா, வடகொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளை பட்டினிபோட்டு வைத்திருக்கின்றது. இந்த லட்சணத்தில் இறைமை பற்றியும் மனிதாபிமானம் தொடர்பாகவும் US +EU மனிதாபிமானிகள் பாடமெடுக்கின்றனர். 😀

அப்பாடா தப்பித்தேன்

உங்கள் முருகன் சூரனை வதை செய்து கொன்றபோது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் என்று கேட்காமல் விட்டதால்???😷

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்பாடா தப்பித்தேன்

உங்கள் முருகன் சூரனை வதை செய்து கொன்றபோது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் என்று கேட்காமல் விட்டதால்???😷

மேலே 👆சிரிப்புக் குறி எனது. 🤣

சிரியாவும், கியூபாவும், வெனிசுவேலா, வடகொரியா, ஈராக், ஈரான், லிபியா எல்லாமே உங்களுக்கு பழைய கதையாகிவிட்டதுபோல.. ☹️

 

உக்ரேனில் சண்டைக்காக மேற்குலகு பில்லியனில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. 

துருக்கிக்கும் சுரியாவுக்கும் கிள்ளியாவது கொடுத்தார்களா ? மனிதாபிமானத்துக்காக கண்ணீர் விடுபவர்கள் பதில் கூறுங்கள். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.