Jump to content

காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காக்கா நரிக் கதை

I ain’t playin

 

பொறுப்பு துறப்பு

கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. 

கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார்.

——————-//////————//////———————

நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது.

இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்….

பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்…

வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான்.

இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? 

எத்தனை பிரயத்தனம்? 

எத்தனை அவமானம்?

காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே….

அதுவெல்லாம் கூட பரவாயில்லை, 

என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? 

எத்தனை பெரிய ஒறுப்பு அது?

பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது.

ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். 

கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. 

இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது.

பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. 

நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. 

வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. 

இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம்.

ஆனால் அதுவல்ல முக்கியம். 

இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். 

இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். 

அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். 

முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். 

அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது.

நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். 

அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். 

காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது.

என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ?

நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.

காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி….

தொப் …

என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது….

காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. 

பறந்தே போயிற்று.

Edited by goshan_che
  • Like 8
  • Thanks 1
  • Haha 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில்  இந்த நிலைப்பாட்டுக்கும்  வருவதுமுண்டு..

இதுக்குப்போய்...?

ஆழ்ந்த  தகவல்

நன்றி  சகோ...

Edited by விசுகு
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் காக்கா நரிக் கதை சீன வடிவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் நரி றீமேக் நல்லாத் தான் இருக்குது! ஆனால், நரிக்கு வடை பிறீயாகக் கிடைத்தது கவலைக்குரியது! 😂      

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு  (வடைக்கு) தானே  ஆசைப்படடாய்  கொண்டு போ ...காகம் புகழ்ச்சியில்( பாட ) மயங்கவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ஒரே காக்கா காக்கா?

நரிக்கு தேவை வடை தானே.

அதை கொடுத்தா என்ன எறிந்தா என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகழ்ச்சிக்கு மயங்காதீர் என்று இப்படியும் சொல்லலாம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிலவேளைகளில்  இந்த நிலைப்பாட்டுக்கும்  வருவதுமுண்டு..

இதுக்குப்போய்...?

ஆழ்ந்த  தகவல்

நன்றி  சகோ...

நன்றி அண்ணா.

அனுபவங்களின் அடிப்படையில் ஆக்கம் இருந்தால் நல்லம் என்றது நிர்வாகம். அப்படியே எழுதிவிட்டேன் 😎.

 

1 hour ago, ஏராளன் said:

பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் காக்கா நரிக் கதை சீன வடிவம்

பகிர்வுக்கு நன்றி தம்பி.

இதே போல் வடையை தன் காலில் குத்தியபடி “இலங்கை காகம் நான்” என காக்கா பாடி நரிக்கு பல்பு கொடுத்தது என்று பொப்பிசை சக்ரவர்த்தி ஏ.ஈ மனோகரன் பாடியுள்ளார்.

 

1 hour ago, Justin said:

காகம் நரி றீமேக் நல்லாத் தான் இருக்குது! ஆனால், நரிக்கு வடை பிறீயாகக் கிடைத்தது கவலைக்குரியது! 😂      

நன்றி.

🤣

நரிக்கும் பசிக்கும்தானே.

 

1 hour ago, நிலாமதி said:

இதற்கு  (வடைக்கு) தானே  ஆசைப்படடாய்  கொண்டு போ ...காகம் புகழ்ச்சியில்( பாட ) மயங்கவில்லை. 

ஒம். அத்தோடு இனி அந்த வடையை நரி சாப்பிட்டால்…நரியின் மரியாதை போயே போச்சு…

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னது ஒரே காக்கா காக்கா?

நரிக்கு தேவை வடை தானே.

அதை கொடுத்தா என்ன எறிந்தா என்ன.

🤣. அதுவும் சரிதான். இப்படி பாத்தா நரிக்கு வெற்றிதான்.

55 minutes ago, முதல்வன் said:

புகழ்ச்சிக்கு மயங்காதீர் என்று இப்படியும் சொல்லலாம் போல.

நானே இப்படி யோசிக்கவில்லை 👏🏾.  தனியே சீண்டலை விலக்கல், தந்திரத்துக்கு பலியாகாமல் இருத்தல் என்றே அணுகினேன். இப்போ நீங்கள் நிலாமதி அக்கா சொல்லத்தான் இந்த கோணமும் தெரிகிறது🙏🏾.

சரி..சரி…இனி அதுவும் கதையின் ஒரு கோணம் என்றுதான் எழுதினேன் எண்டு மெயிண்டேன் பண்ணுவம்🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பிடி எழுதமுடியவில்லையே என்று சில நரிகள் தமக்குள்ளா புழுங்கும். வேறுசில நரிகளோ பதிலுக்கு இன்னோரு நரிக்கதை சொல்லும் இல்லாவிட்டால் ஒரு பேய்க்கதை அல்லது கவிதையாவது சொல்லும்!😂

பிற்குறிப்பு: இங்கு சொல்லப்பட்ட நரி நான் தான் என்றால் நம்பவா போகின்றீர்கள் நீங்கள்!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது. 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வாலி said:

எனக்கு இப்பிடி எழுதமுடியவில்லையே என்று சில நரிகள் தமக்குள்ளா புழுங்கும். வேறுசில நரிகளோ பதிலுக்கு இன்னோரு நரிக்கதை சொல்லும் இல்லாவிட்டால் ஒரு பேய்க்கதை அல்லது கவிதையாவது சொல்லும்!😂

பிற்குறிப்பு: இங்கு சொல்லப்பட்ட நரி நான் தான் என்றால் நம்பவா போகின்றீர்கள் நீங்கள்!😂

நம்பவே மாட்டம் வாலி🤣

6 minutes ago, Nathamuni said:

உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது. 😉

🤣 வடிவா இன்னொருக்காவும் செக் பண்ணி பார்த்தனான், எல்லா இடத்திலும் நரி எண்டுதான் எழுதியிருக்கிறன் நாதம் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நம்பவே மாட்டம் வாலி🤣

🤣 வடிவா இன்னொருக்காவும் செக் பண்ணி பார்த்தனான், எல்லா இடத்திலும் நரி எண்டுதான் எழுதியிருக்கிறன் நாதம் 🤪

உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது.

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் &  நரி இரண்டுமே தந்திரமானவை என சமூகத்தில் பிரபலம்........அதிலும் இந்த நரியின் அண்ணன் சாயப் பட்டறைக்குள் விழுந்து நீல நிறமாகி நான்தான் காட்டுக்கு அரசன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்......ஒரு மழையுடன் அரசுரிமையை இழந்தவர்......நிமிடக் கதை அருமை......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

காகம் &  நரி இரண்டுமே தந்திரமானவை என சமூகத்தில் பிரபலம்........அதிலும் இந்த நரியின் அண்ணன் சாயப் பட்டறைக்குள் விழுந்து நீல நிறமாகி நான்தான் காட்டுக்கு அரசன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்......ஒரு மழையுடன் அரசுரிமையை இழந்தவர்......நிமிடக் கதை அருமை......!  👍

நன்றி அண்ணா. இரெண்டுமே தந்திரத்தில் வல்லது என்பது உண்மையே. நீங்கள் சொன்ன கருத்து என் கதையை விட அர்த்தம் பல பொதிந்தது🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா… 🍩 வடை போச்சே… கோசான்சே…. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறி உள்ளதை பறிகொடுத்த பின்பு  ஏமாந்த சோணகிரிகளாக வடை போச்சே என்ற கடுப்பில்  புலம்புவதில் எந்த பயனும் இல்லை.  உரிய வேளையில் தந்திரத்துடன் அதை எதிர் கொண்டிருக்க வேண்டும்.  

இக்கதையில் நரி ஏமாற்ற முற்படுகிறது  என்பதை தெரிந்த காகத்திற்கு அதை எப்படி எதிர் கொண்டு நரியை தந்திரத்துடன் எதிர்கொண்டு தன்னிடம் உள்ளதை தக்க வைப்பது என்று தெரியாமல்,   கோபத்தில் உணர்சிவசபபட்டு இருந்ததையும்  எறிகிறேன் என்று நினைத்து இழந்து விட்டு சென்ற காகத்தின் நிலை சோகம். இந்த காகத்தின் மீது பரிதாபப்பட மட்டுமே முடியும் 

இக்கதையை இப்படியும் விளங்கி கொள்ளலாம். @goshan_che கோபிக்கக்கூடாது  உங்கள் symbolic meaning கதைக்கு தமாஷாக வேறு அர்ததம் கொடுத்து பொழிப்புரை எழுதியதற்கு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வேளைகளில் காகமாக இருப்பதால் குளிசை போடும் தேவை வராது.ஆனால் நரிகள் பத்து குளிசையாவது போட்டு விட்டு அங்கேயே படுத்துகிடக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஏமாறி உள்ளதை பறிகொடுத்த பின்பு  ஏமாந்த சோணகிரிகளாக வடை போச்சே என்ற கடுப்பில்  புலம்புவதில் எந்த பயனும் இல்லை.  உரிய வேளையில் தந்திரத்துடன் அதை எதிர் கொண்டிருக்க வேண்டும்.  

இக்கதையில் நரி ஏமாற்ற முற்படுகிறது  என்பதை தெரிந்த காகத்திற்கு அதை எப்படி எதிர் கொண்டு நரியை தந்திரத்துடன் எதிர்கொண்டு தன்னிடம் உள்ளதை தக்க வைப்பது என்று தெரியாமல்,   கோபத்தில் உணர்சிவசபபட்டு இருந்ததையும்  எறிகிறேன் என்று நினைத்து இழந்து விட்டு சென்ற காகத்தின் நிலை சோகம். இந்த காகத்தின் மீது பரிதாபப்பட மட்டுமே முடியும் 

இக்கதையை இப்படியும் விளங்கி கொள்ளலாம். @goshan_che கோபிக்கக்கூடாது  உங்கள் symbolic meaning கதைக்கு தமாஷாக வேறு அர்ததம் கொடுத்து பொழிப்புரை எழுதியதற்கு. 

 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

நீங்கள் கூறியதுதான் முதன்மை அர்த்தம்.

அதாவது நரிக்கு வடை கிடைத்தது, காகம் கோபப்பட்டது, வடையை இழந்து விட்டு போனது.

ஜஸ்டின் அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, நாதம், நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வகையில் சொல்ல நினைப்பது இதைத்தான், என நான் நினைக்கிறேன்.

ஆனால் வாழ்க்கையில் சில சமயம் less is more. இந்த கதையில் நரிக்கும், காகத்துக்கும் முக்கியமானது வடை அல்ல.

வடை, நரி சாப்பிடும் உணவல்ல. நரியே நினைக்கிறது  வடை ஒரு மேட்டரே இல்லை என.

காகம் கூட கோபப்படவில்லை. தலையை அங்கும் இங்குமாக்கி, கண்ணை மூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது.

நரிக்கும், காகத்துக்கும் வடையை விட வேறு ஏதோ ஒன்று முக்கியமாக உள்ளது.

காகம் வடையை இழந்தது. உண்மை.

நரி எதை இழந்தது? 

 

42 minutes ago, நந்தன் said:

பல வேளைகளில் காகமாக இருப்பதால் குளிசை போடும் தேவை வராது.ஆனால் நரிகள் பத்து குளிசையாவது போட்டு விட்டு அங்கேயே படுத்துகிடக்கும். 🤣

🤣 சிரிச்சு வயிறு புண்ணா போச்சு🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்தாள் 

ஒரு வடை ஒரு காகம் ஒரு நரி

இந்த மூன்றையும் வைத்தே மூன்று பக்கத்தை ஓட்டிடும் போல இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நரிக்கும், காகத்துக்கும் வடையை விட வேறு ஏதோ ஒன்று முக்கியமாக உள்ளது.

காகம் வடையை இழந்தது. உண்மை.

நரி எதை இழந்தது? 

படைப்புக்குப் பாராட்டுகள் !

நரியார் எதையுமே இழக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் இழக்க ஏதுமில்லை. ஆனால், தன்மானத்தை இரந்தல்லவா ஒரு வடையைப் பெற்றிருக்கிறார். ஒரு வடையைவைத்தே பல வித்தைகளைக் காட்டக்கூடும். பார்வையாலேயே வீழ்த்தினனான் என்று ஒரு புரளியை எடுத்துவிட்டு விழுந்து விம்பத்தை தூக்கிநிறுத்தவும் கூடும். ஏனென்றால் அவளவு தந்திரமானவரல்லவா? மீண்டும் காகங்களுக்கு ஆப்பா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா இந்தாள் 

ஒரு வடை ஒரு காகம் ஒரு நரி

இந்த மூன்றையும் வைத்தே மூன்று பக்கத்தை ஓட்டிடும் போல இருக்கே.

இதெல்லாம் தொழில் நேக்கு தெரியுமா.

அங்கால ஒருத்தர் ஒரே ஒரு அப்பாவி ஜேர்மன் பையனை வைத்து பக்கம் பக்கமா இழுக்கிறார் - நான் அதுக்கு பரவாயில்லை 🤣.

4 minutes ago, nochchi said:

படைப்புக்குப் பாராட்டுகள் !

நரியார் எதையுமே இழக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் இழக்க ஏதுமில்லை. ஆனால், தன்மானத்தை இரந்தல்லவா ஒரு வடையைப் பெற்றிருக்கிறார். ஒரு வடையைவைத்தே பல வித்தைகளைக் காட்டக்கூடும். பார்வையாலேயே வீழ்த்தினனான் என்று ஒரு புரளியை எடுத்துவிட்டு விழுந்து விம்பத்தை தூக்கிநிறுத்தவும் கூடும். ஏனென்றால் அவளவு தந்திரமானவரல்லவா? மீண்டும் காகங்களுக்கு ஆப்பா?   

நன்றி நொச்சி.

நீங்கள் முற்றிலும் புதிய ஒரு கோணத்தை திறக்குறீகள்👏🏾.

நீங்கள் சொல்லும் கோணத்தில் கதையை வாசித்தால் 12பி படம் மாரி இன்னொரு கதை எழுதலாம் போல இருக்கு😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதெல்லாம் தொழில் நேக்கு தெரியுமா.

அங்கால ஒருத்தர் ஒரே ஒரு அப்பாவி ஜேர்மன் பையனை வைத்து பக்கம் பக்கமா இழுக்கிறார் - நான் அதுக்கு பரவாயில்லை 🤣.

இப்ப இது @தமிழ் சிறிக்கு தெரிந்தால் என்னையா சும்மா இருக்கிற என்னை கோத்துவிடுறாய் என்று உங்களுடன் சண்டைக்கு வர போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரிக்கதை காலா காலத்துக்கு தொடர்வது போல் தமிழர் பிரச்சனையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

நல்லதொரு ரீமிக்ஸ் :thumbs_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப இது @தமிழ் சிறிக்கு தெரிந்தால் என்னையா சும்மா இருக்கிற என்னை கோத்துவிடுறாய் என்று உங்களுடன் சண்டைக்கு வர போகிறார்.

அவர் ஜேர்மன் பெட்டையை பேட்டி எடுக்க முடியாத சோகத்தில் இதை கவனிபாரோ தெரியாது🤣

17 minutes ago, குமாரசாமி said:

நரிக்கதை காலா காலத்துக்கு தொடர்வது போல் தமிழர் பிரச்சனையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

நல்லதொரு ரீமிக்ஸ் :thumbs_up:

உண்மைதான். நன்றி அண்ணை.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.