Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது : இதுவே அரசியல் தீர்வுக்கான இழுபறிக்கு பிரதான காரணம் - வாசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது : இதுவே அரசியல் தீர்வுக்கான இழுபறிக்கு பிரதான காரணம் - வாசு

By VISHNU

07 FEB, 2023 | 03:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது, இதுவே அரசியல் தீர்வு இழுபறிக்கு பிரதான காரணியாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமை மாகாண சபை தேர்தல் ஊடாக பாதுகாக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் அந்த உரிமையையையும் பறித்துக் கொண்டது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து ஏனைய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க கூடாது என மகாசங்கத்தினர் உட்பட பெரும்பாலான தரப்பினர் கடுமையாக வலியுறுத்துகிறார்கள்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்க பகிர்ந்தளிக்கும் போது நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

அதிகாரங்கள் பகிரப்படாத நிலையிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரசியல் பரிந்துரைகளின் பிரகாரம் நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அல்ல எந்த மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்க கூடாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் தமிழ் தலைமைகள் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் காணப்படும் கருத்து மற்றும் கொள்கை வேறுபாடுகள் அதிகார பகிர்வு விவகாரம் காலம் காலமாக இழுபறி நிலையில் இருக்க ஏதுவான காரணியாக உள்ளது.

அதிகாரத்தை பகிர்ந்தளிக்க நான் தயாராக இருந்தேன் ,அதிகார பகிர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவிப்பார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் தரப்பு எடுக்கும் தீர்மானம் சிறந்ததாக அமையாது, முரண்பாடுகளை மாத்திரம் தோற்றுவிக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/147607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கக்கிறது முழுக்க இனத்துவேசம்.... சம்பந்திமட்டும் தமிழர் வேணூம்...இவரை வால் பிடிக்கவும் நிறைய தமிழரும் இருக்கினம்..மகிந்த கோட்டாவின் அமைச்சரவையில்  இருந்து கக்கிவிட்ட துவேசம் கணக்கிலடங்காது...இப்ப நீலிக்கண்ணீர் வடிக்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

இதை மட்டும் நம்மால் ஏற்படுத்தவே முடியாது. தொன்று தொட்டு வரும் பரவணிக்குணம். எவ்வளவோ சாதித்த தலைவராலும் முடியவில்லை இனி யாரால் முடியும்? இவர்களே நம்மை அழித்துவிடுவார்கள்.

3 hours ago, alvayan said:

கக்கிறது முழுக்க இனத்துவேசம்....

ரோகண விஜயவீர, வாசுதேவ நாணயக்கார, சஜித் போன்றோர் தேர்தலில் நின்ற போது; விஜயவீர தன் தேர்தல் வாக்குறுதியில், தான் வென்றால் இருபத்து நான்கு  மணி நேரத்தில் புலிகளை தூக்கில் போடுவேன் என்றும், வாசு தான் வென்றால் அதே இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் புலிகளுடன் பேசி தீர்வுக்கு வருவேன் என்றாராம். ஆனால் தோற்றுப்போன வாசு இனவாதியாக மாறினார் என அறிந்தேன். ரோகணவுக்கு நடந்தது உலகமே அறியும். இனவாதம் கக்க விரும்பாத அரசியல் வாதிகளை சிங்கள மக்கள் ஒதுக்கினார்கள், அவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள், அரசியலில் அவர்கள் மறங்கடிக்கப் பட்டார்கள். இன்று சிங்கள இனவாதிகள் நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டு பழித்தும் உரைக்கிறார்கள், நமக்கு உறைக்கவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

கக்கிறது முழுக்க இனத்துவேசம்.... சம்பந்திமட்டும் தமிழர் வேணூம்...இவரை வால் பிடிக்கவும் நிறைய தமிழரும் இருக்கினம்..மகிந்த கோட்டாவின் அமைச்சரவையில்  இருந்து கக்கிவிட்ட துவேசம் கணக்கிலடங்காது...இப்ப நீலிக்கண்ணீர் வடிக்குது..

என்ன இருந்தாலும் எங்கடையளுட்டை ஒற்றுமை இல்லையெண்டது உண்மைதானே?

சிங்கள அரசியல்வாதியளிட்டை உள்ள ஒற்றுமை எங்கடை கோதாரியளிட்டை இல்லையெண்டதை வருசக்கணக்காய் பார்க்கிறம் எல்லோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்குள் ஒன்றுபட முடியாதவர்கள், தங்கள் பிழைகளை திருத்திக்கொள்ள முடியாதவர்கள் எப்படி எமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள போராடுவார்கள்? அதென்னவோ சிங்களத்துக்கு வால் ஆட்டுவதில் மட்டும் எல்லோருக்கும் ஒருமித்த குணம். அது எப்படி சாத்தியம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாதவூரான் said:

அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு

அவர்கள் எதுவுமே கொடுக்கப்போவதில்லை என்பது 70 வருட வரலாறு. அவர்கள் தமிழர் பிரச்சனை என வரும் போது இன ரீதியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதும் வரலாறு.

சிங்கள கட்சிகளில் தமிழர்கள் பதவி மற்றும் கட்சி அங்கத்துவம் வகிக்கின்றார்கள்.

தமிழ் கட்சிகளில் ஒரு சிங்கள காக்கா, குருவி குஞ்சுகளாகவது அங்கம்  வகிக்கின்றதா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

தமிழ் கட்சிகளில் ஒரு சிங்கள காக்கா, குருவி குஞ்சுகளாகவது அங்கம்  வகிக்கின்றதா?

தமிழ்த்தேசியம் என்றால் சிங்களத்துக்கு வெறுப்பு, பயம் எனும் கட்சியில் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்ட பின் எங்கிருந்து வந்தாரோ அங்கே சென்றுவிட்டார் பியசேன. அவர்களை வளர்த்து சிங்களத்துக்கு தாரைவாத்து விட்டு பெருமை அடைவார்கள், நம்மவரை தட்டி வீழ்த்தி வேடிக்கை பார்ப்பார்கள். தமிழ் கட்சியில் இருந்தாலும் சிங்களத்துக்கே சேவை செய்யும் நம்மவர், இதில அவர்கள் அங்கம் வகித்தாலென்ன வகிக்காவிட்டாலென்ன? அவர்களுக்கு தேவையான சேவை எம்பக்கத்திலிருந்து தாராளமாக அவர்களுக்கு கிடைக்கிறதே எதற்கு வீணாக ஒருவரை மினைக்கெடுத்திக்கொண்டு.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
    • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.