Jump to content

பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை

  • க.சுபகுணம்
  • பிபிசி தமிழ்
6 ஜனவரி 2022
புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2023
பறையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்."

இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும்.

ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான்.

2021ஆம் ஆண்டு இறுதியில், இளவரசர் ஆண்ட்ரூ குறித்து டேனியெல்லா எல்சர் எழுதிய ஒரு கட்டுரையில், "பறையா" என்று அவரைக் குறிப்பிட்டிருப்பார்.

 

இதேபோல், ஏன்.என்.ஐ செய்தியின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை மாத கடைசியில் ஆப்கானிஸ்தான் தாலின்பகளால் கைப்பற்றப்பட்ட நேரம். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆன்டனி ப்ளிங்கன், "தனது சொந்த மக்களுக்கு எதிராகவே அட்டூழியங்களைச் செய்யும் ஆப்கானிஸ்தான், தனது மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத ஆப்கானிஸ்தான், ஒரு பறையா நாடாக மாறிவிடும்," என்று குறிப்பிட்டார்.

இப்படியாக இந்தச் சொல், ஆங்கில மொழியில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் பயன்படுத்தப்படுவது சரியா என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

சாதிய பாரபட்சம் கொண்ட சொல்

2018-ம் ஆண்டு, டைம் இதழ் வெளியிட்ட ஓர் அட்டைப்படத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுடைய படத்தைப் போட்டு, "தயாரிப்பாளர், வேட்டையாடி, பறையா," என்று குறிப்பிட்டிருந்தது.

அதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் டைம் இதழுக்குக் கடிதம் எழுதினார். அதில், "இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பறையா என்று அழைக்கப்பட்டார்கள், அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய வழியில் வந்த பலரும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். உங்கள் நாட்டில் பயன்படுத்தப்படும் 'N (நிக்கர் அல்லது நீக்ரோ என்ற சொல் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பயன்படுத்தப்பட்டது)' என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லைப் போலவே மோசமாக, அவமானப்படுத்தும் விதமாக இது பயன்படுத்தப்படுகிறது" என்று கண்டித்திருந்தார்.

சாதிய பாரபட்சம் கொண்ட இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதைக் கண்டித்து அவர் கடிதம் எழுதியபோது, இதன் பயன்பாடு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இந்தச் சொல்லின் பயன்பாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆன்டனி ப்ளிங்கன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு குழுவில் இருந்தோ, பொதுச் சமூகத்திடம் இருந்தோ, ஏதோவொரு காரணத்திற்காக ஒதுக்கப்படுபவரைக் குறிக்க, "பறையா" என்ற சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. தனி மனிதரைக் குறிப்பதற்காக மட்டுமின்றி, சர்வதேச அளவில் மற்ற நாடுகளால் ஒதுக்கப்படும் நாட்டை கூட "பறையா ஸ்டேட் (Pariah State)" என்று குறிப்பிடுகிறார்கள்.

"பறையா" பரவியதன் வரலாற்றுப் பின்னணி

உலகின் ஒரு குறிப்பிட்ட மொழி பேசக்கூடிய ஒரு மக்களிடையே இருக்கின்ற சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக, ஒதுக்கப்பட்ட சாதியாக பறையர் இன மக்கள் வகைப்படுத்தப்பட்டனர். அதன் விளைவாக சொல்லவொண்ணா கொடுமைகளுக்கும் உள்ளானார்கள்.

இந்நிலையில், இத்தகைய சொல் பயன்பாடு அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே பல்வேறு மன உளைச்சலை உண்டாக்குவதாக சமூக ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.அ.பகத் சிங் கூறுகிறார்.

மேலும், இந்தியா முழுக்கவே இருக்கும் சமூகக் கட்டமைப்பில் நூற்றுக்கணக்கான சாதிகள் பட்டியலினத்தவர்களாக இருந்துள்ளனர், இருக்கின்றனர். ஆனால், தெற்கே இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் ஒரேயொரு சாதியின் பெயர் மட்டும் எப்படி, உலகளவில் ஒருவரையோ, ஒரு நாட்டையோ இழிவுபடுத்துவதற்குரிய அடையாளச் சொல்லாக மாறியது?

அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள, ஆங்கிலப் பேராசிரியர் முனைவர்.அழகரசனிடம் பேசினோம்.

"பாப்லா நெரூடா, டிம் மொராரி போன்ற எழுத்தாளர்கள்கூட தங்கள் எழுத்துகளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். இது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயராக உள்ளது. ஆனால், இதை வேறு மொழி பேசுபவர்கள் பயன்படுத்தும்போது, இழிவானவர்களை, ஒதுக்கப்படுபவர்களைக் குறிக்கக்கூடிய பொதுச் சொல்லாக மாறுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்களின் குறிப்புகள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், இனவியலாளர்களின் குறிப்புகள் போன்றவற்றில், இந்தச் சொல்லின் பயன்பாடு, அதன் பின்னணி போன்றவை 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.

டுவர்டே பர்போஸா

பட மூலாதாரம்,ARCHIVE.ORG

இந்தச் சொல் முதன்முதலாக போர்ச்சுகீசிய மொழியில் தான் உலா வரத் தொடங்குகிறது. 1500 முதல் 1517 வரை போர்ச்சுகீசிய அரசரின் சார்பாக இந்தியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த டுவர்டே பர்போஸா (Duarte Barbosa) என்பவரின் எழுத்துகளில் தான் முதன்முதலில் 'பறையாஸ் (Pareas)' என்ற சொல் பயன்பாடு தெரிகிறது.

அங்கிருந்து பிரெஞ்சு மொழிக்குச் சென்ற இந்தச் சொல், பிறகு, ஜெர்மன், ஸ்பானிய மொழிகளுக்கும் பின்னர் ஆங்கிலத்திற்கும் சென்றது" என்று கூறினார்.

பல்வேறு சாதிகள் இருக்கையில் ஏன் இது மட்டும் பரவியது?

அவரிடம், இந்த ஒரு குறிப்பிட்ட சொல், எப்படி இவ்வளவு மொழிகளில் இத்தகைய ஓர் அர்த்தத்தில் பயன்பாட்டிற்கு வர முடிந்தது என கேட்டபோது, "வேறு நாடுகளைச் சேர்ந்த இனவியலாளர்களின் குறிப்புகள் மற்றும் பயணக் குறிப்புகளில் தான் முதலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு இது மிகவும் புதிரான, புதிதான விஷயமாக இருந்ததுதான், அதைக் குறிப்பிடக் காரணம்.

இங்கிருந்த தீண்டாமை அவர்களுக்குப் புதிதாகவும் இவ்வளவு கட்டுப்பாடுகளை ஒரு சமூகத்தின் மீது எப்படிச் செலுத்த முடிகிறது என்று அவர்களுக்குப் புதிராகவும் இருந்தது," என்று கூறுகிறார்.

மேலும், இந்தியாவில் பல்வேறு சாதிகள் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும்போது, ஏன் இந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயர் மட்டும் வேறு மொழிகளுக்குச் சென்றது என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, "சுப்புராயலு போன்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், பட்டன் ஸ்டெயின், நொபோரு கராஷிமா போன்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரின் குறிப்புகளின்படி பார்த்தால், 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் 'தீண்டா' என்ற சொல் பிரயோகமே வருகிறது.

அப்படி நடைமுறையில் பின்பற்றப்படத் தொடங்கிய தீண்டாமை சார்ந்த சொல் பிரயோகம் இதில் பங்கு வகிக்கிறது. துடைப்பத்தை பின்னால் கட்டிக்கொண்டு, நடக்கும் பாதையைச் சுத்தம் செய்துகொண்டே செல்லுதல், செருப்பைக் கையில் எடுத்துச் செல்லுதல் போன்ற நடைமுறை பழக்க வழக்கங்கள் ஒரு வகை. அதேபோல் சாதியக் குறியீடு நிறைந்த சொல் பிரயோகம் ஒரு வகை.

அயோத்திதாச பண்டிதர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

கறுப்பாக இருக்கும் காக்கையை 'பற காக்கா', சொறி பிடித்த நாயை 'பற நாய்' என்று அழைப்பதை அவர் குறிப்பிடுகிறார். அதாவது இந்தச் சமுதாயத்தில் எவையெல்லாம் இழிவாகக் கருதப்பட்டனவோ அவற்றுக்கு எல்லாம் பற, பறை என்ற அடைமொழி வைக்கப்பட்டன.

மேலும், ஒருவரை வசைபாடும்போதும் கெட்ட வார்த்தைகளில் சாதியக் குறியீடு வைக்கப்பட்டன.

பறையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதைப் போல, ஒட்டுவைத்துப் பேசக்கூடிய பழக்கம் இந்தியாவில் பிற பண்பாடுகளில் இல்லை. கொல்கத்தாவிலோ, ஆந்திராவிலோ, மத்தியப் பிரதேசத்திலோ இதைப் பார்க்க முடியவில்லை. திராவிடக் கழகத்தில் தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காக மிகவும் பாடுபட்டவர் சாமி நாயுடு. அவரை பற நாயுடு என்று அழைத்தார்கள்.

இந்த மாதிரியான போக்கு, மாலா, மதியா, வால்மீகி போன்ற சமூகங்களுக்கு வரவில்லை.

வால்மீகி என்றொரு தாழ்த்தப்பட்ட சமூகம் இருக்கிறது. அதற்காக, வால்மீகி என்று கூறித் திட்டும் பழக்கம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தான் பற நாய் என்று பறையர் சாதியக் குறியீட்டை வைத்துத் திட்டும் பழக்கம் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, அயோத்திதாசப் பண்டிதரின் குறிப்புகளின்படி, பறை என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓரிடத்தில் ஒரு செயலைக் குறிக்கப் பயன்படும் அதேநேரம், இன்னோரிடத்தில் ஒரு நபரையோ உயிரினத்தையோ குறிக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை அடிப்படையாகக் கொண்ட சொல் பிரயோகம் பொதுத் தளத்தில் பயன்பாட்டில் இருப்பது, வேறு மாநிலங்களில் இல்லை. அதனால் இங்கிருந்த இந்தக் குறிப்பிட்ட வார்த்தைப் பயன்பாட்டின் மீது வெளிநாட்டவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியாக, ஒரு வார்த்தையைப் பொதுவான இழிவுக்குப் பயன்படுத்துவதைப் பார்த்தவர்கள், அதை ஒரு பொதுவான இழிசொல்லாகவே ஆரம்பத்தில் கருதினார்கள். அதனால், அதைத் தம் மொழியிலும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

அடையாளப்படுத்திய ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி

அப்படிப் பயன்படுத்திய வெளிநாட்டவர்கள், 18, 19-ம் நூற்றாண்டு வரை, பறையா என்ற சொல்லை தீண்டப்படாதோருக்கான ஒரு பொது சொல்லாகவே புரிந்திருந்தார்கள். அதன்பிறகுதான் முழுமையாகத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், அதேநேரத்தில் அந்தச் சொல்லின் பயன்பாடும் பெருமளவு வளர்ந்துவிட்டது," என்று கூறினார் முனைவர்.அழகரசன்.

முனைவர் அழகரசன் கூறியதைப் போல, போர்ச்சுகீசிய மொழிக்குச் சென்ற பறையா என்ற சொல், பிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல்வேறு ஐரோப்பிய மொழிகளுக்கும் பரவியது. 1823-ம் ஆண்டில், டெர் பறையா (Der Paria), என்ற தலைப்பில் பெர்லினில் ஜெர்மனியிலுள்ள யூதர்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளைப் பற்றிய நாடகத்தை மைக்கேல் பீர் என்ற யூதக் கவிஞர் உருவாக்கினார். அது பின்னர், 1826-ம் ஆண்டில் பாரீஸிலும் இயற்றப்பட்டது.

பறையா என்ற சொல்லை, வெறுமனே அரசியல் ரீதியிலான சொல்லாக மட்டுமின்றி, மானுடவியல் ரீதியாக, சமூக ரீதியாக ஒருவரை, ஒரு குழுவைச் சிறுமைப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்று எலெனி வரிகாஸ் தன்னுடைய தி ஃபிகர் ஆஃப் தி அவுட்காஸ்ட் (The Figure of the Outcast) ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாகத் தொடங்கிய இந்தச் சொல்லின் பயன்பாடு, பிற்காலங்களில் இந்தச் சொல்லின் வரலாற்றுப் பின்னணி குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்த பிறகும், இப்போதும்கூட பொதுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

2011-ம் ஆண்டு அமெரிக்காவில் "பறையா" என்று பெயரிடப்பட்டு ஒரு படம் வெளியானது. தன்பால் ஈர்ப்பாளராக இருக்கும் ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் குடும்பத்தாலும் சுற்றத்தாலும் ஒதுக்கப்படுவது குறித்த அந்தப் படத்திற்கு இட்ட பெயர் தான் இது.

இப்படியாக தமிழ்நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் சொல்லை, உலகின் பல்வேறு பகுதிகளில் இழிசொல்லாக, மோசமான நிலையிலுள்ள ஒருவரைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, இந்தச் சொல்லை அவமதிப்பான சொல் என்று அடையாளப்படுத்தியது.

பறையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2011-ம் ஆண்டு வெளியான 'பறையா'

இருப்பினும் இதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட உலகச் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவில் ஒருவருடைய சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகளவிலான ஒரு சொற்பிரயோகம், அந்த மக்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

மொழிச் சீர்திருத்தம் நடக்கவேண்டும்

இத்தகைய சொற்பிரயோகம், என்ன மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது எனத் தெரிந்துகொள்ள, மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.அ.பகத் சிங் பிபிசி தமிழுக்காகப் பேசியபோது, "எந்த ஒரு மொழியிலும், ஒரு கலாச்சாரத்தை வரையறுப்பதற்கான அவசியம் இருக்கும். பிரிட்டிஷ்-இந்திய சமூகத்தில் ஆங்கில மொழி நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியதால் தான், அதன் முதன்மைத்துவம் இன்றும் இருக்கிறது.

உள்ளூர் நிர்வாகத்திற்கு, இங்கிருக்கும் கலாச்சாரத்தை, சமூக அமைப்பை வரையறுக்கக்கூடிய சொற்கள் தேவைப்பட்டன. இந்திய கலாச்சாரத்தில் இருக்கக்கூடிய சாதிய அமைப்பை, அதில் இருக்கும் பாகுபாட்டை விவரிக்கக்கூடிய வகைப்பாட்டில் இருந்து வரக்கூடிய சொல்தான் பறையா.

அம்பேத்கர் இருக்கின்ற தனிப்பட்ட சாதிய அடையாளங்களை நீக்கவே பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் என்ற வகைப்பாட்டை உருவாக்கினார்.

ஆனால், ஒரு மொழியை நிர்வகிக்கக்கூடிய இடத்தில் மேல்தட்டைச் சேர்ந்த, மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் இருக்கையில், அவர் இந்தக் குறிப்பிட்ட சொல், இழிவுபடுத்தக்கூடியதாக இருக்கிறது என நினைக்கப்போவதில்லை. ஏனெனில், அந்தச் சொல் அவரைப் பாதிக்கப்போவதில்லை. அவருக்கும் அந்தச் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆனால், உலகளவில் மக்கள் பரவி வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற பேச்சுவழக்கு அந்தச் சமூகத்தினரிடையே மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே, இத்தகைய வார்த்தைப் பயன்பாடுகள், இத்தகைய பாகுபாடுகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அது எந்தளவுக்குப் பாதிக்கக்கூடும் என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது. அதுவும், இந்த ஒரு சொல்லுக்கு மட்டுமல்ல, இதுபோல் வேறுமொழிகளில் இருந்து பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் அனைத்திற்குமே உள்ளது. இதைப் போலவே, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை, திருநங்கைகளை இழிவுபடுத்தும் சொற்களைச் சரிசெய்யும், மொழியைச் சீர்திருத்தும் முயற்சிகளில் பல்வேறு மொழியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இதைச் சீர்திருத்துவதற்கான தேவையும் அதிகமாகவே உள்ளது.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான அமைப்புகள் வெகுவாக வளர்ச்சியடையத் தொடங்கிய பிறகு தான், நீக்ரோ என்ற சொல்லின் பயன்பாடு மாறத் தொடங்கியது. இந்தியாவிலேயே, அழியும் நிலையில் இருந்த பழங்குடிக் குழுக்களைக் குறிக்க, பின்தங்கிய பழங்குடிக் குழு (Primitive tribal group)என்று குறிப்பிடப்பட்டது. அதை மாற்றி தற்போது, அழியும் நிலையிலுள்ள பழங்குடியினக் குழு (PVTG) என்று மாற்றப்பட்டது.

அதேபோல், இந்திய சமூகத்திலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற இழிவுபடுத்தக்கூடிய சொற்களையும் விவாதித்து, சீர்திருத்தவேண்டும். சமூக செயல்முறையில், இவை அனைத்துமே ஒரு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, தவறு என்று நிரூபிக்கப்படும்போது, அடுத்த கட்டத்தில் அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்கக்கூடிய சமூக சூழலை நோக்கி நகரமுடியும்," என்று கூறினார்.

இதுகுறித்துப் பேசிய பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டுவரும் சமூக ஆர்வலர் புனித பாண்டியன், "2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களிடையே திருமணத்திற்கு வரன் பார்க்கும் ஷாதி டாட் காம் என்ற ஓர் இணையதளம் சாதியரீதியிலான பாகுபாட்டை மேற்கொள்வதாகக் கூறி கடுமையாகச் சாடப்பட்டது.

சாதிரீதியாக வரன் பார்ப்பது குறித்த வசதியைக் குறிப்பிட்டு, அது தன் நாட்டு சமத்துவச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இங்கிலாந்தின் சமத்துவச் சட்டத்தின் கீழ் சாதியரீதியிலான பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதும் உள்ளடங்கியுள்ளது. அதைப் போல, மொழியிலுள்ள வார்த்தைப் பயன்பாட்டிலும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பிலும் இத்தகைய பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதுதான், சமூகப் புரிதலுக்கு வழிவகுக்கும்," என்று கூறினார்.

இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-59885980

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.