Jump to content

கோட்டாவிடம்; மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவிடம்; மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை

By RAJEEBAN

08 FEB, 2023 | 03:41 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை திங்கட்கிழமை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சூழ்ந்ததை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தப்பிவெளியேறிய பின்னர் அங்கு பெருந்தொகை பணம் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரிடம் மூன்றுமணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147729

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு உரிமை கோரினார் கோட்டா

By RAJEEBAN

08 FEB, 2023 | 03:12 PM
image

கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பது திகதி ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியனிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  உரிமைகோரியுள்ளார்.

தனது சட்டத்தரணி மூலம் அந்த பணத்திற்கு அவர் உரிமை கோரியுள்ளார்.

எனினும் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் இதனை ஏற்க முடியாது என கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே நிராகரித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147722

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது : சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவிப்பு

By T. SARANYA

09 FEB, 2023 | 04:45 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. 

போராட்டக்காரர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய 17,856,000 ரூபா பணம் தன்னுடையது என்றும் அதனை நாட்டின் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரிவித்தது.

குறித்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மீண்டும் கையளிக்குமாறு அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஹரி குப்த சேனாதீர கோரிக்கை விடுத்தார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி  சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த பணம் தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு குறித்த பணத்தினை  அமைச்சர் திரன் அலஸிடம் ஒப்படைக்குமாறு  மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக பகுப்பாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/147830

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பற்றி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோட்டாவிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடு!

2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஜூலை 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சிட்டிசன் பவர் அமைப்பு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தொகை தொடர்பில் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய நீதிமன்றில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குறித்த பணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு பணத்தை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அந்த விசாரணைகளின் பகுதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மூலம் – மவ்றட்ட

https://thinakkural.lk/article/264308

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

குறித்த பணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு பணத்தை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நகைப்புக்கிடமான விளக்கம். போராட்டம் நடந்தது எப்போது? வீடுகள்  அழிக்கப்பட்டது எப்போது? யார் யாரிடம் கொடுத்தார்கள்? எப்போது கொடுத்தார்கள்? அப்போ, வீடுகள் கொழுத்தப்படும் என முன்பே அறிந்திருந்தார்களா இவர்கள்? ஏன் தடுக்கவில்லை?

15 hours ago, ஏராளன் said:

போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

அதெப்படி வழங்கிய பணம் காணாமல் போகவில்லை, ஆவணம் மட்டும் காணாமல் போனது? சரி..... கொடுத்தவர்களை முன்னிலையாகும்படி அழைக்கலாமே? பணத்தை வங்கி மூலம் அனுப்பாமல் கையில கொடுத்தனரோ? சி. சி. கமராவை ஆதாரமாக காட்டலாமே? அதற்கு ஏன் படுக்கையறையில் வைத்தவர்? தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலிருந்து, அதன்மூலம் பரப்புரைகள் செய்து கொண்டு, ஆவணம் பற்றி கதையளக்கிறார். 

On 10/2/2023 at 00:37, ஏராளன் said:

போராட்டக்காரர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய 17,856,000 ரூபா பணம் தன்னுடையது என்றும் அதனை நாட்டின் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரிவித்தது.

மக்களுக்கு வறுமையை ஏற்படுத்தியவர்களே இவர்கள்தான்! தெருவிலே மக்கள் அலைந்தபோது பகிர்ந்தளிக்காது பதுக்கி வைத்திருந்து விட்டு, எப்போ கொடுக்க ஆலோசித்திருப்பார்? அது மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம். அவரது சொந்தப்பணமானால் அது வங்கியிலல்லவா இருந்திருக்கும்? படுக்கையறைக்கு எப்படி வந்தது? முன்பும் மகிந்தாவின் புத்திரர்களின் பணமோசடி விசாரணையின் போது ஒரு பாட்டியை கூட்டி வந்து, அது அவருடைய பணம் என்றார்கள். அவருக்கு அந்தப்பணம் எப்படி வந்தது என விசாரிக்க, அவருக்கு மறதி நோய், அவரால் சரியாக பதில் சொல்ல முடியாத நிலையிலுள்ளார் என்று மழுப்பி விட்டார்கள்.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.