Jump to content

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்

By RAJEEBAN

08 FEB, 2023 | 04:36 PM
image

இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால்  அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நான் வெற்றிபெறவேண்டுமா அல்லது தோல்வியடையவேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில்விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள்  நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147736

Link to comment
Share on other sites

47 minutes ago, ஏராளன் said:

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள்  நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடனேறுவது காகத்துக்கு தெரியவில்லை என்றால் எவ்வளவு  நாட்டில் (மக்களில்) அக்கறை உள்ளவர்  என்பது தெரிகிறது. இதற்குள் அமெரிக்க பிரஜா உரிமையை விடப்போறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதல் விட்ட ஒருத்தருக்கு நடந்த கதை தெரியும் தானே .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பதவி ஆசை விட்டுப்போகவில்லை. யுத்த வெற்றியை முதலீடாக்கி பிழைச்ச காலம் மலையேறிவிட்டது. மகிந்த கோத்தாவோடு தடைப்பட்டியலில் சேராமல் இருக்க வழிபார்ப்பதே நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி, புருசனை கைவிட்ட கதையாக இருக்கப் போகுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் ஆசை விடவில்லை, ஏழை மக்களின் முதுகில் சவாரி செய்து பழகிவிட்டது இவர்களுக்கு, அதிலிருந்து இறங்கி சொந்தக்காலில் நடக்க மனமில்லை.

2 hours ago, ஏராளன் said:

மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார்

இவ்வளவு காலமும் செய்தது போதும் வழி விடுங்கோ. இனி அமெரிக்க பிரஜா உரிமை இருந்து என்ன? இல்லாமல் என்ன? இலங்கையில் கொள்ளை அடிச்ச பணத்தில் அமெரிக்க சுகபோகம். இனிமேல் முதுகு வளைந்தாற்தான் சோறு. அதுக்கு நாட்டிலே இருந்து பந்தா காட்டலாம் இப்போதைக்கு. எதிர்காலம் எப்படியோ? நீங்கள் நாட்டில தான் இருக்க வேணும்  விதைச்சதை அறுக்க. இல்லாட்டி  பிளேன் பிடிச்செல்லே வரவேணும், அதுவும் எதிர்காலத்தில் சாத்தியமாகுமா தெரியாது?

2 hours ago, ஏராளன் said:

அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்

அது சரி போன தேர்தலில் எங்களை விரட்டிவிட்டு மீண்டும் ஏன் தெரித்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டவர் அண்ணர் விரட்டிய பின் இவர் ஏன் வருகிறார்?

2 hours ago, ஏராளன் said:

எனினும் ரணில்விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

2 hours ago, ஏராளன் said:

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள்  நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார்

  தெரிந்தால் ஒதுங்கிக்கொள்ளுங்கோ, மீண்டும் நாட்டில் வன்முறைகளையும், இரத்த ஆறையும் உருவாக்காதீர்கள், உங்கள் திட்டங்களை அவர் நிறைவேற்றுவார். நாட்டில் ஒரு சுடுகாட்டு அமைதி நிலவுகிறது அதுகூடப் பொறுக்கவில்லை இவர்களுக்கு, நாட்டில கொஞ்சம் பணம் வரப்போகுது என அறிந்து வெளிக்கிட்டு விட்டார்கள் கொள்ளையடிக்க.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இன்னும் பதவி ஆசை விட்டுப்போகவில்லை. யுத்த வெற்றியை முதலீடாக்கி பிழைச்ச காலம் மலையேறிவிட்டது. மகிந்த கோத்தாவோடு தடைப்பட்டியலில் சேராமல் இருக்க வழிபார்ப்பதே நல்லம். 

சிங்களத்திற்கு இனவாதத்தை விட்டால் வேறு ஏது முதலீடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களத்திற்கு இனவாதத்தை விட்டால் வேறு ஏது முதலீடு?

அதெல்லாம் முந்தி.

பிக்குகள் கொழுத்தாடு பிடிக்கும் விளையாட்டின் பின்னால மகிந்தர் எண்டு உலகத்துக்கே தெரியும்.

இப்படி செய்து போட்டு கடனையும் கேட்டால் கிளிஞ்சுது போங்க.

பங்களாதேஸ் நிதியமைச்சர், நவம்பிரிலாவது இருநூற்றம்பது மில்லியன் டொலர் திருப்பி தருவியல் எண்டு நம்புறம் எண்டு போட்டார்.

அரசியல் ஸ்திரம் இல்லாத நாட்டில், முதலிடவும் வராரார், நம்பி கடன் தரவும் முன்வரார்.

சிங்களவர் செய்யும் இந்த தவறுகள், எமக்கு பலனலிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்

அங்கு போனால் கோமணத்துடன்  அனுப்புவார்கள் என்று சிங்கனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது அதனால் அந்தர் பல்டி அடித்து உள்ளார் அதற்காக அமெரிக்கா ஒன்றும் நீதி நியாயம் பார்க்கும் நாடு என்று நினைக்க வேண்டாம் . உள்நாட்டில் இருப்பதே போர் குற்ற சாட்டுகளில் இருந்து தப்ப சொந்த நாடு தான் ஒரே வழி  என்று உணர்ந்து விட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார்

நீங்கள் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுப்பதால் நாட்டுக்கு எந்த நன்மையையும் வரப்போவதில்லை, அதை விடுங்கள், வைத்திருங்கள் அது உங்கள் சவுகரியம். ஆனால் சொன்னீர்கள் பாருங்கள்! எதனையும் விட்டுக்கொடுக்கத்தயார் என்று, ஒன்று கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள பணத்தை திருப்பி மக்களுக்கு, அபிவிருத்திக்கு செலவழியுங்கள், அரசியலில் இருந்து வெளியேறுங்கள். அதுவே நீங்கள் மக்களுக்கு ஆற்றும் பெரிய, சிறந்த பணி! சொறிஞ்ச கையை சும்மா வைத்திருக்க மாட்டீர்கள் நீங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

நீங்கள் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுப்பதால் நாட்டுக்கு எந்த நன்மையையும் வரப்போவதில்லை, அதை விடுங்கள், வைத்திருங்கள் அது உங்கள் சவுகரியம். ஆனால் சொன்னீர்கள் பாருங்கள்! எதனையும் விட்டுக்கொடுக்கத்தயார் என்று, ஒன்று கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள பணத்தை திருப்பி மக்களுக்கு, அபிவிருத்திக்கு செலவழியுங்கள், அரசியலில் இருந்து வெளியேறுங்கள். அதுவே நீங்கள் மக்களுக்கு ஆற்றும் பெரிய, சிறந்த பணி! சொறிஞ்ச கையை சும்மா வைத்திருக்க மாட்டீர்கள் நீங்கள்.

May be a cartoon

  • Like 2
Link to comment
Share on other sites

13 hours ago, satan said:

நீங்கள் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுப்பதால் நாட்டுக்கு எந்த நன்மையையும் வரப்போவதில்லை, அதை விடுங்கள், வைத்திருங்கள் அது உங்கள் சவுகரியம். ஆனால் சொன்னீர்கள் பாருங்கள்! எதனையும் விட்டுக்கொடுக்கத்தயார் என்று, ஒன்று கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள பணத்தை திருப்பி மக்களுக்கு, அபிவிருத்திக்கு செலவழியுங்கள், அரசியலில் இருந்து வெளியேறுங்கள். அதுவே நீங்கள் மக்களுக்கு ஆற்றும் பெரிய, சிறந்த பணி! சொறிஞ்ச கையை சும்மா வைத்திருக்க மாட்டீர்கள் நீங்கள்.

மக்களே இவர் போன்றவர்களை நிராகரித்து விட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்கள்.

14 hours ago, Nathamuni said:

பங்களாதேஸ் நிதியமைச்சர், நவம்பிரிலாவது இருநூற்றம்பது மில்லியன் டொலர் திருப்பி தருவியல் எண்டு நம்புறம் எண்டு போட்டார்.

ஆசை தோசை அப்பளம் வடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon

ரணில் இவர்களை சுமந்து, இவர்களின் ஊழல்களை மறைத்து, களைத்து விழும்போது; இவர்கள் அவர்மேல் ஏறி நின்று (இவரை சிறையில் கூட போடலாம்) அரசியல் செய்வார்கள். நரியார் தமிழரை சிதைப்பதில் வல்லவராய் இருந்தாலும் இனவாதிகளை காப்பதில் சிறந்தவர் என்பது இவரது கடந்தகால அரசியல் சாட்சி. ஐ. நாவில் ராஜபக்ஸாக்களை காப்பாற்றியது, தான் அரச கட்டிலேறிய போது அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது, அவர்களது ஊழல்களை நீதிமன்றின்முன் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்காதது, தன்னை பாதியில் கலைத்த சந்திரிக்காவோடு கூட்டுச்சேர்ந்தது, இறுதியாக ஆர்பாட்டக்காரரை அடக்கி பக்ஸாக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை மீண்டும் அரசியலுக்கு அனுமதிப்பது. ஆனால் பக்சாக்கள் தருணம் பாத்துக்கொண்டு, இவரை பாவிச்சுக்கொண்டு இருக்கிறார்கள்.          

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.