Jump to content

இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெற்றி..............😏

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

ஆசிய வீரர்கள் போல இவர்கள் பந்து சுழலும் திசைக்கு எதிராக விளையாடமாட்டார்கள், மனதளவில் அப்படி ஒரு நிலைப்பாடு எனோ காணப்படுகிறது. https://www.foxsports.com.au/cricket/no-way-back-aussies-torn-to-sh

vasee

கவுதம் கம்ப்பீர் முன்பு நான் இணைத்த காணொளியில் குறிப்பிடுகிறார் கர்பயன் (எறியம்) போலில்லாமல் ஜடேயா, அஸ்வின் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என கூறுகிறார். பந்தை கிடையாகவும், கோணத்தினை உருவாக்குவ

Eppothum Thamizhan

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. யாரை யாரோடு ஒப்பிடுவதென்ற அறிவேயில்லை. அக்சாருக்கும் கபிலுக்கும் இடையேயுள்ள தூரம் மலைக்கும் மடுவுக்குமானது! இந்தியாவில் விளையாடிய 4 டெஸ்ட்டிலேயே எடுத்தது 3 விக்கெட்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ரவீந்திர ஜடேஜா விக்கெட் திருவிழாவான இரண்டாவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது எப்படி?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் என்ற இலக்கை இந்தியா எட்டியது. இதன் மூலம் மூன்றாவது நாளிலேயே வெற்றிக் கனியை இந்தியா சுவைத்தது. இந்திய அணியில் புஜாரா அவுட் ஆகாமல் 31 ரன்களை எடுத்திருந்தார்.

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்ட நாயகனாக ஆனார்.

இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்தது மட்டும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும் எடுத்திருந்தார் ரவீந்திர ஜடேஜா.

 

நாக்பூரில் நடந்த முதல் போட்டியிலும் ஜடேஜாவே ஆட்ட நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாரா வெற்றிக்கு வழிவகுக்கும் 31 ரன்களை எடுத்துள்ளார்.

இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்ற ஆஸ்திரேலியா

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 113 ரன்களை எடுத்திருந்தது. எதிர்த்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 262 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களையும் எடுத்தது. இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களை எடுத்திருந்தது. எதிர்த்து ஆடிய இந்தியா 400 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியா குறைந்த ரன்களையே எடுத்தது. அதாவது வெறும் 91 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது. முதல் போட்டியின் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜா பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தர வரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் வரிசையிலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இருப்பினும் இந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல முதல் போட்டி நடைபெற்ற நாக்பூர் ஆடுகளத்தின் பிட்ச் குறித்தும் சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின. ஆஸ்திரேலியாவின் மூத்த கிரிக்கெட் பத்திரிகையாளர் ராபர்ட் கேடாக், நாக்பூர் பிட்ச் ஒரே மாதிரியாக இல்லை என்றும் இந்திய அணிக்கு ஏதுவாக பிட்ச் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையில் இந்தியாவின் ஓபனிங் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் இந்த போட்டியிலும் சரியாக சோபிக்கவில்லை என அவரின் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். எளிதான ரன்களை இலக்காக கொண்டிருந்ததால், இரண்டாவது இன்னிங்சில் எந்த அழுத்தமும் இல்லாமல் ஒபனிங் பேட்ஸ்மேன்கள் கே எல் ராகுலும் ரோஹித் ஷர்மாவும் இலக்கை எட்டி விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரே ரன்னில் கே எல் ராகுல் அவுட் ஆனார். அந்த சம்யத்தில் இந்தியா 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது,ஒரே ரன்னில் பெவிலியன் திரும்பியதும் சமூக வலைத்தளங்களில் மக்கள் ராகுலை கேலி செய்ய தொடங்கிவிட்டனர்.

பல திறமையான வீரர்களின் வாய்ப்பை கே எல் ராகுலின் தேர்வு தட்டிப் பறிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் எந்த ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் இவ்வளவு குறைந்த சராசரியுடன் இத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/sport-64697230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs ஆஸ்திரேலியா: டெல்லி மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய 'அந்த ஒரு ஷாட்'

  • சந்திரஷேகர் லூத்ரா
  • மூத்த விளையாட்டுப் பத்திர்கையாளர், பி பி சி ஹிந்திக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஸ்வீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியின் கோட்லா மைதானத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லுபேஷன் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலும் யூகித்திருக்க முடியாது.

12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்ஸை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இந்த இரு பேட்ஸ்மேன்கள் மீதும் இருந்தது. இந்த ஸ்கோருடன் தொடங்கிய இன்னிங்ஸ் 31.1 ஓவரில் 113 ரன்களுக்குச் சுருண்டது. 115 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலியாவின் 9 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பலவீனம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. குறைந்த பவுண்டரி ஆடுகளத்தில் ஸ்வீப் ஷாட்களை விளையாட முயன்று ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், இப்போது தொடரின் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோட்லா மைதானத்தை அறிந்தவர்கள், இந்த முறை விக்கெட் மிகவும் சிறப்பாக இருந்தது, பந்து சராசரி பவுன்ஸ் பெறுகிறது என்பதை முதல் இரண்டு நாள் ஆட்டத்திலேயே உணர்ந்துவிட்டனர். முகமது ஷமி முதல் நாளில் 60 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னிங்ஸின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகத் தன்னை நிரூபித்துக் கொண்டதற்கு இதுவே காரணம்.

 

ஷமியின் பந்துவீச்சைப் பார்த்து பேட் கம்மின்ஸ் அணியினர் யோசனையில் இருந்தனர். ஏனென்றால் 2017க்கு பிறகு முதல் முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் டெஸ்ட் விளையாடக் களமிறங்கியது இந்த அணி. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளின் போது முதல் நாள் ஆட்டத்தில் சராசரியாக 277 ரன்கள் எடுத்த இந்த அணி, கோட்லாவில் எடுத்த முதல் நாள் ஸ்கோர் மிகவும் குறைவு.

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அஸ்வின் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாவது நாள் காற்று யார் பக்கம்

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இந்த விக்கெட்டில் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என்ன செய்வார்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் கவலையாக இருந்தது.

கோட்லா ஆடுகளத்தில் ஸ்வீப் ஷாட்களை ஆடுவது ரிஸ்க் எடுப்பது போன்றது என்று எந்த டெல்லி கிரிக்கெட் வீரரும் சொல்லலாம். இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதானம் காட்டியதற்கு இதுவே காரணம், ஆனால் நாதன் லியானும் தனது முழுத் திறமையுடன் களமிறங்கினார்.

தனது கேம் பிளான் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தார். அவர் தனது பந்துகளின் வேகத்தை அதிகரித்தார்.

ரோஹித் சர்மாவை அவர் கிளீன் பவுல்டு செய்த பந்து மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது. லியான் நான்கு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, கோட்லா மைதானத்தில் அமைதி பரவியது.

அக்சர் படேல் மற்றும் ஆர் அஷ்வின் இடையே முக்கியமான பார்ட்னர்ஷிப் இருந்திருக்காவிட்டால், ஆஸ்திரேலியா பெரிய அளவில் முன்னிலை பெற்றிருக்கும். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணியின் கையே வலுவாக இருந்தது. அது, 62 ரன்கள் முன்னிலை பெற்று ஒன்பது விக்கெட்டுகளைப் பெற்றிருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய போது, இந்திய அணிக்கு அழுத்தம் அதிகம் இருந்தது. காரணம், நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்ததுடன், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை முன்னெடுத்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சீட்டுக் கட்டு சீட்டுகளாகச் சரிந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸைப் போலவே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆனால் ரவீந்திர ஜடேஜா தனது பந்துவீச்சில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் இந்த அவலநிலைக்கு ஜடேஜாவின் பந்துவீச்சு எவ்வளவு காரணமாக இருந்ததோ, அதை விட, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஸ்வீப் ஷாட் அடித்ததால் 6 விக்கெட்டுகளை இழந்தது.

கோட்லாவில் தடுமாறக் காரணம்

முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா இந்த ஸ்வீப் ஷாட்டைப் பயன்படுத்தி நல்ல ரன்களை எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்சிலும் லாபுஷேன் நல்ல ஸ்வீப் செய்தார். ஆனால் கோட்லா ஆடுகளத்தில் இந்த ஷாட் எப்போது ஆபத்தாக முடியும் என்பதை யாரும் கணிக்க முடியாது.

டெல்லியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சுரிந்தர் கன்னா, "காலை ஈரப்பதத்தில் கோட்லா ஆடுகளம் வித்தியாசமாகச் செயல்படுகிறது. இது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குப் புரியவில்லை. ஜடேஜா நேராகவும் வேகமாகவும் பந்து வீசுகிறார். அவரது பந்துவீச்சு எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட்களை விளையாட ஆசைப்பட்டதால், அந்த அணி இந்த நிலையை அடைந்தது.

ஜடேஜா 12.1 ஓவரில் 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே அவரது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சாகும். முன்னதாக 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோட்லா ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்சில் 115 ரன்களை எடுப்பது எளிதல்ல. கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். மதிய உணவுக்குப் பிறகு, ரோஹித் சர்மா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் லியான் பந்தில் ஒரு வலுவான சிக்ஸரையும் அடித்தார். ஆனால் அவர் விரைவில் ரன் அவுட் ஆனார்.

புஜாரா தனது இந்த நூறாவது டெஸ்டில் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை, ஆனால் இந்தப் போட்டியில் அணியின் வெற்றிக்கு அவரது பவுண்டரிகள் முக்கியக் காரணமாக இருந்தன. அவர் 74 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய 'அந்த ஒரு ஷாட்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி தனது 20 ரன்களில் 25,000 சர்வதேச ரன்களை முடித்தார், ஆனால் அவர் டெஸ்ட்டில் முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார். இதையடுத்து ஐயரும் வெளியேறினார். ஆனால் இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சமன்பாடு

டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை இழக்காது என இந்திய அணி முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அடைந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான உரிமையையும் இந்திய அணி வலுப்படுத்தியுள்ளது.

இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்விக்கு தொழில்நுட்ப ரீதியாக 'ஆம்' என்று பதிலளிக்க முடியாது. அடுத்த இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்து, மறுபுறம், நியூசிலாந்தில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தினால், இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு வரலாம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய மூன்று அணிகளும் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தை அடையலாம். நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால், அதற்கும் சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும் இந்திய அணி இன்னும் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியை சமன் செய்தால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய 'அந்த ஒரு ஷாட்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகள்

தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளுக்கும் அதே அணியை தேர்வுக் குழு தக்கவைத்துள்ளது. சேத்தன் சர்மா ராஜினாமா செய்த பிறகு, நான்கு தேர்வாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து தோல்வியடைந்தாலும் கே.எல்.ராகுலின் இடம் அணியில் நீடிக்கிறது. சதம் அடிக்கும் வரை அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

நடப்பு தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இது தவிர ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப காரணங்களால் ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக இருப்பார்.

டெல்லி டெஸ்டின் போது அணியில் இருந்து வெளியேறிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளார். உனட்கட் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக பெங்கால் அணிக்கு எதிராக விளையாடினார்.

சௌராஷ்டிரா அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ரஞ்சி கோப்பையை வென்றது, இந்தப் போட்டியில் 129 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்திய உனட்கட் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-64701361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 06:30, vasee said:

அவுஸ்ரேலியா இடது கை பந்து வீச்சாளாரன ஆஸ்டன் அகரினையே இந்த தொடரில் விளையாட தீர்மானித்திருந்தது ஆனால் துரதிஸ்டவசமாக  அவர் காயம் அடைந்த காரணத்தினால் குழுவில் இடம் பெறவில்லை, அவர் இடம்பெற்றிருந்தால் இந்திய அணி மிக சிரமப்பட்டிருக்கக்கூடும், அவரது பூர்வீகம் இலங்கை(வெள்ளையினத்தவர்) என கூறப்படுகிறது.

இடது கை பந்துவீச்சாளர்கள் பந்து வீசும்போது ஏற்படுத்தும் கோணங்கள் துடுப்பாட்டக்காரர்களின் மட்டையின் உட்புறமும் வெளிப்புறமுமாக திரும்ப கூடியவை, அதிக மாற்றமில்லாமல் ஜடேயா போல சில சிறிய மாற்றங்கள் மூலம் நெருக்கடியினை ஏற்படுத்த கூடிய பந்து வீச்சாளர்.

 

On 19/2/2023 at 07:38, vasee said:

ஆசிய வீரர்கள் போல இவர்கள் பந்து சுழலும் திசைக்கு எதிராக விளையாடமாட்டார்கள், மனதளவில் அப்படி ஒரு நிலைப்பாடு எனோ காணப்படுகிறது.

https://www.foxsports.com.au/cricket/no-way-back-aussies-torn-to-shreds-after-getting-taste-of-their-own-medicine-india-view/news-story/b9d69edb4d491d4ab163f64be8f34346

எனக்கு துடுப்பாட்டம் பெரிதாக தெரியாது, இந்த காணொளியினை பார்க்கும் போது அவுஸ்ரேலிய அணி ஜடேயாவும், அஸ்வினும் round the stump இல் பந்து வீசும் போது புரிந்துகொண்டிருப்பார்கள் பந்தினை விக்கெட்டுதான் வீசுவார்கள் என்பது(LBW).

பந்து திரும்பாத நிலையில் பந்து வீச்சாளருக்கு மிக குறுகிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதனால் அளவு, வேகம் மற்றும் பந்தின் கட்டினை பயன்படுத்தும் விதத்தில் மட்டும் 4 அல்லது 5 வேறுபாடுகளை எதிர்பார்க்கலாம், அப்படியான நிலையில் அவுஸ்ரேலிய அணி ஏனோ தானோ என விளையாடுவது போல இருக்கிறது.

சுழல் பந்து வீச்சினை முன் காலில் சென்று விளையாடுவதுதான் சாதகம் என்பார்கள், அதன் மூலம் பந்து வீச்சாளரினை பந்தின் அளவை குறைக்க தூண்டுதல், ஆனால் அவுஸ்ரேலிய அணி கோட்டிற்குள் நின்று விளையாடியுள்ளது(பது வீச்சு தொடர்பான கணிப்பு தவறாக இருக்கலாம்).

மேற்கூறிய விடயங்கள் கேள்விபட்டதன் அடிப்படையில் குறிப்பிடுகிறேன், துடுப்பாட்டம் பற்றி தெரியாது, 2 - 2.5 (11 - 13)வருடம்  மட்டும் (சின்ன வயதில் விளையாடியது) அனுபவ அறிவு உள்ளது, அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

இந்த ஒரு நிமிட காணொளியின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது, 

https://www.espncricinfo.com/cricket-videos/ind-vs-aus-matthew-hayden-when-you-sweep-you-have-to-be-certain-ball-won-t-hit-stumps-1360199

இந்த காணொளியில் மத்தியு கைடனும், கவுதம் கம்பீரும் சுழல் பந்து வீச்சினை எதிர்கொள்வது எவ்வாறு என்பதனை குறிப்பிடுகிறார்கள், குறிப்பாக முன்னால் சென்று விளையாடுவது, பந்து மட்டையின் உள்ளேயும் வெளியேயும் திரும்பும் பந்தினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியா களமிறக்கிய 3வது சுழல் பந்து வீச்சாளர் இடது கை பந்துவீச்சாளர், எனினும் பெரிதாக எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
marnus-labuschagne-batting1-1608280489.jpg
 

 

இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியாவுக்கு வென்று இந்தியாவுக்கு எதிராக தொடரை சமன் செய்ய ஒரு சிறந்த வாய்ப்பிருந்தது. இரண்டாவது நாள் அடித்திருந்த 63 ரன்களுடன் ஒரு 150 ரன்கள் கூட அடித்திருந்தால் போதும், அந்த இலக்கை அடைய இந்தியா தத்தளித்திருக்கும். அவர்களின் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஐம்பது சொச்சம் ரன்களுக்கு அந்த விக்கெட்டுகளை மொத்தமாக பறிகொடுத்து வெற்றிவாய்ப்பை தொலைத்தனர். (ஷ்ரேயாஸ் ஐயர் சொன்னதைப் போல) நாளின் முதல் ஒருமணி நேரத்தில் பெரோஷா கோடா மைதானத்தில் ஆடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது, அப்போது சற்று பொறுத்தாடினாலே போதும், மிச்ச செஷன்களில் அடித்தாடுவது சற்று சுலபமாகும். ஆஸ்திரேலியா டிராவெஸ் ஹெட்டை இழந்த பின்னர் ஸ்மித், லேபுஷேன் ஜோடியின் ஆட்டத்தின் போதும் அதை சரியாகவே செய்தது. ஆனால் அஷ்வின் ஓவர் தெ விக்கெட் வந்து ஒரு பந்தை லெங்க்தில் சற்று வேகமாக வீசிய போது அது அங்குள்ள இளகலான மண்ணில் பட்டு எகிறி திரும்பியது. லேபுஷேன் அத்துடன் ஸ்வீப் செய்வதை நிறுத்தி தடுத்தாடத் தொடங்கினார். ஸ்மித்தின் பதற்றமானார். ஏனென்றால் அவர்கள் அதுவரை அவ்வப்போது தடுப்பது, இறங்கி அடிப்பது, ஸ்வீப் செய்வது என சரளமாக ஆடி வந்தன. அந்த ஒரு பந்து அவர்கள் மனதுக்குள் தடுத்தாடுவது மற்றும் ஸ்வீப் செய்வது குறித்த நம்பிக்கையை குலைத்தது. இப்போது அவர்கள் குழம்பிப் போய் தேவையில்லாத ஷாட்களை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் கண்மூடித்தனமாக ஸ்வீப் அடித்து விக்கெட்டுகளைக் கொடுத்ததைக் காண பரிதாபமாக இருந்தது. வர்ணனையாளர்கள் திரும்பத் திரும்ப சொன்னதைப் போல ஒரு ஆஸி அணி இவ்வளவு குருட்டுத்தனமாக அவலமாக ஆடி இதுவரை நாம் பார்த்ததில்லை. அவர்களுடைய கேப்டன் கம்மின்ஸ் தான் சந்தித்த முதல் பந்தில் அடித்த அந்த கேவலமான ஸ்லாக் ஸ்வீப் அவர்கள் எந்தளவுக்கு அவநம்பிக்கையுடன், கவனமின்மையுடன் ஆடினார்கள் என்பதற்கு சான்று.
அதன் பிறகு இந்தியா நூறு சொச்சம் ரன்களை எடுப்பதைத் தடுக்க முடியும் எனும் நம்பிக்கையை ஆஸியினர் முழுக்க இழந்திருந்ததால் அவர்கள் ஆடியது ஏதோ கட்டாய திருமணத்தின் போது அழுதபடி மணப்பெண் அமர்வதைப் போல இருந்தது.
இன்று ஆஸியினர் மட்டையாடியது ஜப்பானியரின் தற்கொலை சடங்கான ஹராகிரியை ஒத்திருந்தது. வாளை எடுத்து வயிற்றைக் கிழித்து கொடூரமாக ரத்தம் வழிய வழிய சாவது அது. இது ஒரு கூட்டு ஹராகிரி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 06:30, vasee said:

அவுஸ்ரேலியா இடது கை பந்து வீச்சாளாரன ஆஸ்டன் அகரினையே இந்த தொடரில் விளையாட தீர்மானித்திருந்தது ஆனால் துரதிஸ்டவசமாக  அவர் காயம் அடைந்த காரணத்தினால் குழுவில் இடம் பெறவில்லை, அவர் இடம்பெற்றிருந்தால் இந்திய அணி மிக சிரமப்பட்டிருக்கக்கூடும், அவரது பூர்வீகம் இலங்கை(வெள்ளையினத்தவர்) என கூறப்படுகிறது.

இடது கை பந்துவீச்சாளர்கள் பந்து வீசும்போது ஏற்படுத்தும் கோணங்கள் துடுப்பாட்டக்காரர்களின் மட்டையின் உட்புறமும் வெளிப்புறமுமாக திரும்ப கூடியவை, அதிக மாற்றமில்லாமல் ஜடேயா போல சில சிறிய மாற்றங்கள் மூலம் நெருக்கடியினை ஏற்படுத்த கூடிய பந்து வீச்சாளர்.

ஆஸ்டன் அகர், காயம் காரணமாக விளையாடவில்லை என தவறுதலாக பதிந்துள்ளேன், தவ்றுக்கு மன்னிக்கவும்.

அவர் இந்தியாவிலிருந்து அவுஸ்ரேலியா திரும்பியுள்ளார் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல், அதற்கான காரணத்தினை இந்த கட்டுரை விபரிக்கின்றது.

https://www.espncricinfo.com/story/how-ashton-agar-s-test-career-was-stalled-again-in-india-aus-vs-ind-1360503

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

ஆஸ்டன் அகர், காயம் காரணமாக விளையாடவில்லை என தவறுதலாக பதிந்துள்ளேன், தவ்றுக்கு மன்னிக்கவும்.

அவர் இந்தியாவிலிருந்து அவுஸ்ரேலியா திரும்பியுள்ளார் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல், அதற்கான காரணத்தினை இந்த கட்டுரை விபரிக்கின்றது.

https://www.espncricinfo.com/story/how-ashton-agar-s-test-career-was-stalled-again-in-india-aus-vs-ind-1360503

ஜ‌ந்து நாள் விளையாட்டை குறைந்த‌து 5 நாள் த‌ன்னும் தாக்கு பிடிக்க‌னும் அல்ல‌து ச‌ம‌ நிலையில் முடிக்க‌னும்

 

இந்திய‌ ம‌ண்ணில் அவுஸ் வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் விளையாடின‌ம்

அத‌ விட‌ கொடுமை நியுசிலாந்தில் வைத்து இங்லாந் நியுசிலாந் அணிய‌ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்கிறார்க‌ள்............இப்ப‌ ந‌ட‌ந்து கொண்டு இருக்கும் விளையாட்டில் நியுசிலாந் தோல்வி அடைய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

இங்லாந் இள‌ம் வீர‌ர் ஹாரி வுரொக் ப‌ல‌ ரெஸ் விளையாட்டில் 20ஓவ‌ர் போல் விளையாடி குறைந்த‌ ப‌ந்துக‌ளில் கூடின‌ ர‌ன்ஸ்................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ர் க‌ல‌க்க‌ கூடும்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டுக்கட்டு போல சரிந்த இந்திய விக்கெட்டுகள்; உடைந்துபோன ரசிகர்களின் நம்பிக்கை

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 மார்ச் 2023, 08:04 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் சீட்டுக்கட்டுகளைப் போல தனது விக்கெட்டுகளை சரியவிட்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் என எண்ணியிருந்த இந்திய ரசிகர்களுக்கு, மூன்றாவது போட்டியின் முதல் நாளே சற்று அதிர்ச்சியாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதற்கு முன்னர் இந்திய அணி இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பதாலும், குறுகிய பௌண்டரிகளும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்சும் இந்தியாவுக்குக் கைகொடுக்கும் என்பதாலும் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி. கே.எல். ராகுலுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த சுப்மான் கில்லும், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருவருமே நிதானமாக ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த போது, மேத்யூ குஹ்னேமன் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்தை கிரீஸுக்கு வெளியே வந்து ஆட நினைந்த ரோஹித் சர்மா ஸ்டம்ப்பிங் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இந்திய அணியில் ஸ்கோர் 27 ரன்கள்.

கேப்டனின் விக்கெட்டை தொடர்ந்து புஜாரா களத்திற்கு வந்தார். ஆனால், அடுத்த சில பந்துகளிலேயே மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த கில், மேத்யூ குஹ்னேமன் பந்தை ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுலுக்கு மாற்றாக வந்த கில், 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஒரு ரன் எடுத்திருந்த புஜாராவும் போல்ட் ஆகி வெளியேற, கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இவர்கள் இருவருமே அணியைப் பல முறை சரிவிலிருந்து மீட்டவர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்களை இவர்களது ஆட்டத்தை எதிர்நோக்க, அந்த எதிர்பார்ப்பை சிறிது நேரத்திலேயே சுக்கு நூறாக்கினார் ஜடேஜா. பதினோராவது ஓவரில் நான்கு ரன்கள் அடித்திருந்த ஜடேஜா வெளியேற, அடுத்த ஓவரிலேயே வந்த வேகத்திற்கு டக் அவுட் ஆகி வெளியேறினார் ஷ்ரேயஸ் ஐயர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன்பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த பரத் நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். அடுத்த பத்து ஓவர்களில் 25 ரன்களை சேர்த்த இந்த ஜோடி, டாட் மர்பி வீசிய 22வது ஓவரில் பிரிந்தது. ஆஸ்திரேலியாவின் புதுமுகமாக மர்பியிடம் இந்த போட்டியிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் கோலி. அதன்பிறகு 25ஆவது ஓவரில் பரத், 29ஆவது ஓவரில் அஸ்வின், 33ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் என இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

இறுதியில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும், சுப்மான் கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ குஹ்னேமன் வெறும் 16 ரன்களை மட்டுமே கொடுத்த ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://www.bbc.com/tamil/articles/cg32pdd1w1yo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியூன்மான் 5 விக்கெட் குவியல்: இந்தியா 109 ஓட்டங்களுக்கு சுருண்டது, ஆஸி. 156 - 4 விக்.

Published By: VISHNU

01 MAR, 2023 | 09:37 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தூரில் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் பிடியைத் தனதாக்கிக்கொண்டுள்ளது.

022.png

மெத்யூ கியூன்மானின் முதலாவது 5 விக்கெட் குவியல், உஸ்மான் கவாஜாவின் அரைச் சதம் ஆகியன அவுஸ்திரேலியாவை பலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன.

kuman.png

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, கியூன்மான், நெதன் லயன் ஆகியோரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் முதலாவது இன்னிங்ஸில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி அவுஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா முதல் தடவையாக தொடரில் சோபிக்கத் தவறியது.

வீரர்களின் மோசமான அடி தெரிவுகள், கவனக்குறைவான துடுப்பாட்டம் ஆகியன அதன் வீழ்ச்சிக்கு காரணமாகின.

இந்திய அணியில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்திய அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. மதிய போசனை இடைவேளைக்கு சற்று பின்னர்வரையே இந்தியாவினால் துடுப்பெடுத்தாடக்கூடியதாக இருந்தது.

இந்திய துடுப்பாட்டத்தில் விராத் கோஹ்லி அதிகப்பட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட ஷுப்மான் கில் (21), ஸ்ரீகர் பாரத் (17), உமேஷ் யாதவ் (17), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (12), அக்சார் பட்டேல் (12) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மெத்யூ கியூன்மான் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 9 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நெதன் லயன் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11.2 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதமிருக்க இந்தியாவை விட 47 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

உஸ்மான் கவாஜா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 60 ஓட்டங்களைப் பெற்றார்.

மார்னுஸ் லபுஸ்சான் 31 ஓட்டங்களையும் மீண்டும் தலைமைப் பதவியைத் தற்காலிகமாக ஏற்ற ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

வழமையான அணித் தலைவர் பெட் கமின்ஸின் தாயார் சுகவீனமுற்றிருப்பதால் அவர் நாடு திரும்பியுள்ளார்.

இந்திய பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/149485

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவ‌து ரெஸ்ட் விளையாட்டில் அவுஸ் வெல்ல‌க் கூடும்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜாவின் மாயாஜாலம் - 11 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

ஸ்டம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத சரிவைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

போட்டியின் தொடக்க நாளான நேற்று, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது இந்திய அணி. அதன்பிறகு பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலியா, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 47 ரன்கள் அதிகம்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். ஆட்டத்தின் முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் இழப்பின்றி மேலும் 30 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா அணி. இந்தியப் பந்துவீச்சாளர்களின் எந்தவித உத்திகளுக்கும் ஆடுகளம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், அதன் பிறகு வந்த தேநீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது.

ஒருபுறம், ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, நாதன் லயன் என அஸ்வின் சூழலுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, மறுபுறம் உமேஷ் யாதவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் கேமரூன் க்ரீன், ஸ்டார்க், டாட் மர்ஃபி ஆகியோர். இதனால், தேநீர் இடைவேளைக்கு பிறகான அடுத்த 34 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.

இந்த திடீர் சரிவினால் 88 ரன்கள் முன்னிலையுடன் 197 ரன்களுக்கு அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் நாளில் நடந்தது என்ன?

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

கே.எல். ராகுலுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த சுப்மான் கில்லும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, ஒரு எல்.பி.டபிள்யூ மற்றும் எட்ஜ் ஆகியவற்றிற்கு ஆஸ்திரேலிய அணி ரிவ்யூ எடுக்கத் தவறியதால் இரண்டுமுறை காப்பாற்றப்பட்டார் ரோஹித் சர்மா. ஆனாலும், நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியாமல் ஆறாவது ஓவரிலேயே ஸ்டம்ப்பிங் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா.

அதன்பிறகு கோலி மட்டுமே இந்திய அணியில் அதிகபட்சமாக 22 ரன்கள் அடிக்க, மற்ற அனைத்து வீரர்களும் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ குஹ்னேமன் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜடேஜாவின் சுழல் மேஜிக்

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான டிராவிஸ் ஹெட் ஜடேஜாவின் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவுடன் இணைந்தார் நட்சத்திர ஆட்டக்காரர் லபூஷனே. இவர்களது இணை அந்த அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. ஆஸ்திரேலிய அணி 108 ரன்கள் எடுத்திருந்த போது லபூஷனே விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா.

அடுத்த சில ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்த கவாஜாவும் 26 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தும் ஜடேஜாவிடம் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cpve6kedvd1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதன் லயன் சுழலில் சரிந்த இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 76 ரன்கள் நிர்ணயம்

ஸ்டம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 மணி நேரங்களுக்கு முன்னர்

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இன்றைய நாளின் முதல் பாதியிலேயே ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியை, தொடக்கம் முதலே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் நாதன் லயன் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர் இந்திய வீரர்கள்.

முதல் 32 ரன்களிலேயே ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை லயனிடம் பறிகொடுத்தனர். அதன்பிறகு களத்திற்கு வந்த புஜாரா நிலைத்துநின்று ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை போராடிய புஜாரா 59 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் சுழலில் சிக்கி வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 163 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இந்திய அணியின் பத்து விக்கெட்டுகளில் நாதன் லயன் மட்டுமே 64 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாம் நாளில் கலக்கிய பந்துவீச்சாளர்கள்

போட்டியின் தொடக்க நாளான நேற்று, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது இந்திய அணி. அதன்பிறகு பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலியா, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 47 ரன்கள் அதிகம்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். ஆட்டத்தின் முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் இழப்பின்றி மேலும் 30 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா அணி. இந்தியப் பந்துவீச்சாளர்களின் எந்தவித உத்திகளுக்கும் ஆடுகளம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், அதன் பிறகு வந்த தேநீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது.

ஒருபுறம், ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, நாதன் லயன் என அஸ்வின் சூழலுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, மறுபுறம் உமேஷ் யாதவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் கேமரூன் க்ரீன், ஸ்டார்க், டாட் மர்ஃபி ஆகியோர். இதனால், தேநீர் இடைவேளைக்கு பிறகான அடுத்த 34 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.

இந்த திடீர் சரிவினால் 88 ரன்கள் முன்னிலையுடன் 197 ரன்களுக்கு அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் நாளில் நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

கே.எல். ராகுலுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த சுப்மான் கில்லும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, ஒரு எல்.பி.டபிள்யூ மற்றும் எட்ஜ் ஆகியவற்றிற்கு ஆஸ்திரேலிய அணி ரிவ்யூ எடுக்கத் தவறியதால் இரண்டுமுறை காப்பாற்றப்பட்டார் ரோஹித் சர்மா. ஆனாலும், நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியாமல் ஆறாவது ஓவரிலேயே ஸ்டம்ப்பிங் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா.

அதன்பிறகு கோலி மட்டுமே இந்திய அணியில் அதிகபட்சமாக 22 ரன்கள் அடிக்க, மற்ற அனைத்து வீரர்களும் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ குஹ்னேமன் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜடேஜாவின் சுழல் மேஜிக்

அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான டிராவிஸ் ஹெட் ஜடேஜாவின் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவுடன் இணைந்தார் நட்சத்திர ஆட்டக்காரர் லபூஷனே. இவர்களது இணை அந்த அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. ஆஸ்திரேலிய அணி 108 ரன்கள் எடுத்திருந்த போது லபூஷனே விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா.

அடுத்த சில ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்த கவாஜாவும் 26 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தும் ஜடேஜாவிடம் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cpve6kedvd1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தூர் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு பொருத்தமற்றதா? ஆஸி.யின் கடைசி 6 விக்கெட்கள் 11 ஓட்டங்களுக்கு சரிவு

02 MAR, 2023 | 06:59 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது போட்டியில் இரண்டு அணிகளும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டுள்ளன.

போட்டியன் 2ஆம் நாளாள இன்றுவரை 30 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 469 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா பெற்ற 197 ஓட்டங்களே இந்தப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாகும்.

_1__indor_holkar_cricket_pitch_on_march_

இந்தியா 1ஆவது இன்னிங்ஸில் 109 ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும் பெற்றது.

2ஆம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா தனது கடைசி 6 விக்கெட்களை வெறும் 11 ஓட்டங்களுக்கு இழந்தது.

இதன் காரணமாக இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததல்ல என ஐசிசி முத்திரை குத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் 3 நாள் ஆட்டம் மீதமிருக்க போட்டியில் வெற்றிபெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு வெறும் 76 ஓட்டங்களே தேவைப்படுகிறது.

_2__0203_ravindr_jadeja_ind_vs_aus.jpg

இந் நிலையில், துடுப்பெடுத்தாடுவதற்கு இந்த ஆடுகளம் மிகவும் சிரமமானது என இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் குறிப்பிட்டார்.

'இந்த ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் சிரமமானது. அது இலகுவானதல்ல. தடுத்தாடும்போது பந்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும். பந்தை முன்னங்காலால் எட்ட முடியும் என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். அல்லது பின்னோக்கி நகர்ந்து தடுத்தாட வேண்டும். 75 ஓட்டங்கள் முன்னிலை என்பது பெரியதல்ல. ஆனால், ஒரு வாய்ப்பு இருக்கிறது. எதிர்த்தாடலும் தடுத்தாடலும் கலந்த சிறப்பான இரட்டை ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தடுத்தாடிக்கொண்டே இருந்தால், எகிறிப்பாயும் ஒரு பந்து கையுறையில் உராய்ந்தவாறு சென்றுவிடும். நான் நேர்மறையாக துடுப்பெடுத்தாடினேன். முடிந்த மட்டும் ஓட்டங்களைப் பெற முயற்சித்தேன். அக்சாருடன் சிறப்பான இணைப்பாட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது உதவியிருக்கும்' என்றார்.

அவரது கூற்றின் பிரகாரம் இந்தூர் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு உகந்ததல்ல என்றே கருத வேண்டியுள்ளது. எனினும் ஐசிசி மத்தியஸ்தர்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள்? என்ன கருத்தை வெளியிடுவார்கள்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வெண்டும்.

கடந்த வருடம் பெங்களூரு ஆடுகளம், பிறிஸ்பேன் ஆடுகளம், ராவல்பிண்டி ஆடுகளம் ஆகியவற்றின் தன்மைகள் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக ஐசிசி குறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாம் நாள் ஆட்டம்

 

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2ஆம் நாள் ஆட்டத்தில் மாத்திரம் 16 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதுடன் 204 ஓட்டங்களே பெறப்பட்டன.

156 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, எஞ்சிய 6 விக்கெட்களை 41 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. அதிலும் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. (197 - 10 விக்.)

_3__0203_nathan_lyon_aus_vs_ind.jpg

அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையான 197 ஓட்டங்களில் உஸ்மான் கவாஜா முதல் நாளன்று பெற்ற 60 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. அவரை விட மார்னுஸ் லபுஸ்சான் (31), ஸ்டீவன் ஸ்மித் (26), கெமரன் க்றீன் (21) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். உதிரிகளாக 22 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்தது.

இந்திய பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்தது. இதன் காரணமாக இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

_1_a__0203_cheteshwar_pujara__ind_vs_aus

சேத்தேஷ்வர் புஜாரா மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 59 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் (26), ரவிச்சந்திரன் அஷ்வின் (16), அக்சார் பட்டேல் (15 ஆ.இ.) ஆகியோரே துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்த ஏனைய வீரர்களாவர்.

பந்துவீச்சில் நெதன் லயன் 64 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது 2ஆவது அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். 

பெங்களூருவில் 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 50 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களைக் கைப்பற்றிதன் மூலம் நெதன் லயன் அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்திருந்தார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டி பெரும்பாலும் 3 நாளான வெள்ளிக்கிழமை (03) பகல் போசன இடைவேiளைக்கு முன்னர் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

https://www.virakesari.lk/article/149572

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 08:17, பையன்26 said:

ஜ‌ந்து நாள் விளையாட்டை குறைந்த‌து 5 நாள் த‌ன்னும் தாக்கு பிடிக்க‌னும் அல்ல‌து ச‌ம‌ நிலையில் முடிக்க‌னும்

 

இந்திய‌ ம‌ண்ணில் அவுஸ் வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் விளையாடின‌ம்

அத‌ விட‌ கொடுமை நியுசிலாந்தில் வைத்து இங்லாந் நியுசிலாந் அணிய‌ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்கிறார்க‌ள்............இப்ப‌ ந‌ட‌ந்து கொண்டு இருக்கும் விளையாட்டில் நியுசிலாந் தோல்வி அடைய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

இங்லாந் இள‌ம் வீர‌ர் ஹாரி வுரொக் ப‌ல‌ ரெஸ் விளையாட்டில் 20ஓவ‌ர் போல் விளையாடி குறைந்த‌ ப‌ந்துக‌ளில் கூடின‌ ர‌ன்ஸ்................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ர் க‌ல‌க்க‌ கூடும்..................

கருத்துக்கு நன்றி, தொடர்ந்து எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கருத்துக்கு நன்றி, தொடர்ந்து எழுதுங்கள். 

நாளை அவுஸ் முத‌லாவ‌து வெற்றிய‌ ஈட்டும்............... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கருத்துக்கு நன்றி, தொடர்ந்து எழுதுங்கள். 

அண்ணா யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌லாமே........................ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அவுஸ்திரேலியா தகுதி; காத்திருப்பில் இந்தியா

Published By: DIGITAL DESK 5

03 MAR, 2023 | 12:15 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக இந்தூர், ஹொல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2021 - 2023 சுழற்சிக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றுக்கொண்டது.

இந்தூரில் அடைந்த தோல்வியின் காரணமாக இறுதி ஆட்ட வாய்ப்புக்காக இந்தியா காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இன்றைய வெற்றியுடன் அவுஸ்திரேலியா 68.52 சதவீத புள்ளிகளுடன் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலாம் இடத்தைப் பெற்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியை உறுதி செய்துகொண்டது.

3ஆவது டெஸ்டில் தோல்வி அடைந்த இந்தியாவின் சதவீத புள்ளிகள் 60.29 ஆக அமைந்துள்ளது.

எனவே, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.இலங்கை 53.33 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

travis_head.jpg

ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்து நியூஸிலாந்துடனான 2 டெஸ்ட்களிலும் இலங்கை வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெறும். ஆனால், அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.

இது இவ்வாறிருக்க, இந்தியாவுக்கு எதிரான 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்ற போதிலும் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

travis_head_and_marnus_labuschagne.jpg

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 3ஆவது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு 76 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 3 நாளான இன்று வெள்ளிக்கிழமை (03) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 50 நிமிடங்களில் ஒரு விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ind_vs_aus.jpg

முதலாவது ஓவரிலேயே உஸ்மான் கவாஜா ஓட்டம் பெறால் ஆட்டம் இழந்தபோதிலும் ட்ரவிஸ் ஹெட் (49 ஆ.இ.), மானுஸ் லபுஸ்சான் (28 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

355511.webp

இந்தியா 1ஆவது இன்: 109 (விராத் கோஹ்லி 22, ஷுப்மான் கில் 21, மெத்யூ கியூன்மான் 16 - 5 விக்., நெதன் லயன் 35 - 3 விக்.),

355509.webp

அவுஸ்திரேலியா 1ஆவது 197 (உஸமான் கவாஜா 60, மார்னுஸ் லபுஸ்சான் 31, ஸ்டீவன் ஸ்மித் 26, உதிரிகள் 22, ரவிந்த்ர ஜடேஜா 73 - 4 விக்., உமேஷ் யாதவ் 12 - 3 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 44 - 3 விக்.)

355507.webp

இந்தியா 2ஆவது இன்: 163 (சேட்டேஷ்வர் புஜாரா 59, ஷ்ரேயாஸ் ஐயர் 26, ரவிச்சந்திரன் அஷ்வின் 16, அக்சார் பட்டேல் 15 ஆ.இ., நெதன் லயன் 64 - 8 விக்.)

355508.webp

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 76) 2ஆவது இன்: 78 - 1 விக். (ட்ரவிஸ் ஹெட் 49 ஆ.இ., மார்னுஸ் லபுஸ்சான் 28 ஆ.இ.)

355516.webp

ஆட்டநாயகன்: நெதன் லயன்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2021 - 2023 அணிகள் நிலை

icc_test_championship_points_table.png

https://www.virakesari.lk/article/149603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியில் தள்ளிய ஆஸ்திரேலியா; இனி இந்தியாவுக்கு ‘இதுதான்’ ஒரே வாய்ப்பா?

இந்திய அணி இப்படித் தோற்றது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

42 நிமிடங்களுக்கு முன்னர்

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இதன்மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதையும் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இன்று காலை ஆட்டத்தை தொடங்கியது ஆஸ்திரேலியா.

உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங்கை தொடங்கினர். கடந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா, இம்முறை தனது இரண்டாவது பந்திலேயே அஸ்வின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

அதன் பிறகு இணைந்த லபூஷனே, டிராவிஸ் ஹெட் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த இணை ஆஸ்திரேலிய அணியை மிக எளிதாக வெற்றி இலக்கை நோக்கி அழைத்து சென்றது.

இதனால் வெற்றிக்கு தேவையான 76 ரன்களை அந்த அணி 19ஆவது ஓவரிலேயே எட்டியது.

 

தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் கிட்டத்தட்ட ஒருநாள் போட்டியை போலவே சற்று அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் பொறுமையாக விளையாடிவந்த லபூஷனே 58 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் தோல்வியை தழுவினாலும் 2-1 என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய அணி இப்படித் தோற்றது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021–2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு இதுவரை எந்த அணியும் தேர்வாகாமல் இருந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் இருந்தன.

இந்த போட்டியில் வெற்றிபெற்றது மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது ஆஸ்திரேலியா. பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியை ட்ரா செய்தாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் சென்றுவிடலாம் என்ற நிலை அந்த அணிக்கு இருந்தது.

இந்த சூழலில், இப்போட்டியில் வென்று அந்த வாய்ப்பை தற்போது உறுதி செய்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்திய அணி இப்படித் தோற்றது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா என்ன செய்யவேண்டும்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு அடுத்ததாக நடக்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 60.29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா நழுவ விடவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாவது உறுதியாகும். அதேநேரம் அப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலோ அல்லது ட்ராவில் முடிந்தாலோ இலங்கைக்கு இறுதி போட்டிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நான்காவது போட்டியில் இந்தியா வெற்றியை தவறவிடும்பட்சத்தில், இம்மாதம் நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

எனவே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்ய அடுத்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. அப்படி வெற்றி பெற முடியவில்லை என்றால் இலங்கை, நியூஸிலாந்து தொடரை பொறுத்தே இந்தியாவின் வாய்ப்பு அமையும். எனவே அடுத்த போட்டி இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டியாக இருக்கும்.

https://www.virakesari.lk/article/149610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு முத‌ல் வெற்றி...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"We're here to win - whether it's two days or five days, it doesn't really matter. We don't want to prepare a pitch where the results are not coming. We are here to win." - Rohit Sharma
 
ரோஹித்தின் இந்த கருத்து மிக மட்டமானது - இப்படியான ஆடுதளங்களில் உருட்டி உருட்டி இந்திய மட்டையாளர்கள் தம் ஆட்டத்திறனை இழக்கப் போகிறார்கள். ஒரு ஆடுதளம் எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். வெறுமனே சுழலர்கள் மட்டும் செயல்பட எதற்கு ஒரு டெஸ்ட் போட்டி? கடந்த மூன்று போட்டிகளிலும் அதற்கு முன் வங்கதேசத்தில் நடந்த போட்டிகளிலும் ஒருவர் கூட சதமடிக்கவில்லை. 
வேகப்பந்து வீச்சாளர்களும் மொத்தமாக இருபது ஓவர்கள் கூட் வீசுவதில்லை. ஒரே ஒரு வேகவீச்சாளருடன் ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் ஆடியது. என்னவொரு அவலம். 1930களில் தான் இந்தியா இப்படி ஆடியது. நாம் 90 ஆண்டுகள் பின்னால் போய் விட்டோம். ஆஸ்திரேலியாவைத் தவிர அனேகமாக எல்லா கிரிக்கெட் ஆடும் நாடுகளும் இப்படி பந்துவீச்சுக்கு மிக அதிகமாக ஆதரவளிக்கும் ஆடுதளங்களை உருவாக்கி ஆட்டம் 3 நாளுக்குள் முடிந்தால் ஓக்கே எனும் சமாதானத்துக்கு வந்துவிட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற புள்ளிகளைப் பெறும் ஆவேசம். டெஸ்ட் போட்டி வடிவத்துக்கு தெம்பளிக்க உருவாக்கப்பட்ட உலக டெஸ்ட் போட்டித்தொடர் எனும் திட்டம் டெஸ்ட் வடிவத்தையே சிதைத்து விட்டது. 
 
இதை சரி செய்ய இரண்டு விசயங்களை ஐ.சி சி செய்ய வேண்டும்:
 
அயல் நாடுகளில் ஆடும் போட்டிகளில் பெறும் வெற்றிக்கு இரண்டு மடங்கு அதிக புள்ளிகளை அளிக்க வேண்டும். அத்துடன் ஆறாத அப்பத்தை வாயிலிட்டு திணிப்பதைப் போல கிரிக்கெட் ஆடுவது முடிவுக்கு வரும். சமநிலை வரும்.
 
அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணி செய்வதை பிற அணிகளும் செய்ய வேண்டும் - Bazball. அதற்கு ஒரு அணி வெற்றி பெறும் போட்டிகளில் 5க்கு மேல் சராசரி ரன்ரேட்டுடன் மட்டையாடினால் மட்டுமே இரட்டிப்பு புள்ளிகள் என bazball விதியை உருவாக்க வேண்டும். அப்போது மெதுவான, பவுன்ஸ் இல்லாத, முதல் ஓவரிலே பம்பரம் போல் திரும்புகிற ஆடுதளங்கள் ஒழிந்துவிடும். ஆட்டம் இயல்பாகவே 5வது நாள் வரை போகும்.
 
 நான் முன்பு சென்னையில் இருக்கையில் ஐந்து நாள் டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் போய் வந்திருந்த போட்டிகள் நினைவுக்கு வருகின்றன. அது அந்த காலம் ஆகிவிட்டது. அது மீண்டும் இந்த காலம் ஆக வேண்டும்.
1677917229900725-0.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தூர் ஆடுகளம் மோசமானது - ஐசிசி அறிவிப்பு

Published By: DIGITAL DESK 5

04 MAR, 2023 | 02:31 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இரண்டரை நாட்களுக்குள் முடிவடைந்த டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட இந்தூர் ஆடுகளம் மோசமானது  என  ஐசிசி அறிவித்துள்ளது.

அப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தூர் ஹோல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக 197 ஓட்டங்களை அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்றிருந்தது.

12 மணித்தியாலங்கள், 50 நிமிடங்களில் நிறைவுபெற்ற அப் போட்டியில் வீழ்த்தப்பட்ட 31 விக்கெட்களில் 26 விக்கெட்கள் சுழல்பந்துவீச்சாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. 4 விக்கெட்களே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமானது. ஒருவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 109 ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும் பெற்றது. அவுஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந் நிலையில் அப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மோசமானது என ஐசிசிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் போட்டி பொது மத்தியஸ்தர் க்றிஸ் ப்றோட் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆடுகளத்துக்கு 3 தகுதிநீக்கப் புள்ளிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

அப் போட்டி துடுப்பாட்டத்துக்கும் பந்துவீச்சுக்கும் இடையில் சம அளவில் மோதிக்கொள்ளப்படவில்லை என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள க்றிஸ் ப்றோட், ஆரம்பத்திலிருந்தே சுழல்பந்துவீச்சு ஆதிக்கம் வெளிப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தகுதிநீக்கப் புள்ளிகளை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு 14 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

New-Project-2023-03-04T114130.524-696x39

இது இவ்வாறிருக்க, 5 வருட காலப்பகுதிக்குள் ஏதேனும் ஒரு ஆடுகளத்திற்கு 5 தகுதிநீக்க (அபராதம்) புள்ளிகள் வழங்கப்பட்டால் அந்த ஆடுகள மைதானத்திற்கு ஒரு வருட சர்வதேச போட்டித் தடை விதிக்கப்படும்.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களின் ஆடுகளங்களின் தன்மை சராசரி என பொது மத்தியஸ்தர் அண்டி பைக்ரொவ்ட் அறிவித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் பூனேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மோசமானது என ஐசிசி அறிவித்திருந்தது. அப்போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்ததுடன் பொது மத்தியஸ்தராக  க்றிஸ் ப்றோட்தான் செயல்பட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, 'இந்த (இந்தூர்) ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு பொருத்தமானதல்ல என ஐசிசி முத்திரை குத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது' 2ஆம் நாள் ஆட்டம் தொடர்பான செய்தி அறிக்கையில் வீரகேசரி குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் 'ஐசிசி மத்தியஸ்தர்கள் இந்த ஆடுகளம் தொடர்பாக என்ன தீர்ப்பு வழங்குவார்கள்? என்ன கருத்தை வெளியிடுவார்கள்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' எனவும் அந்த செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், போட்டி முடிவில் ஆடுகளம் மோசமானது என ஐசிசி போட்டி பொது மத்தியஸ்தர் க்றிஸ் ப்றோட் தனது அறிக்கையில் குறிப்பிட்டு 3 தகுதிநீக்க புள்ளிகளை அபராதமாக விதித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/149693

Link to comment
Share on other sites

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி…

 
match-2-586x365.jpg
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பாா்டா் – கவாஸ்கா் கிண்ணத்திற்காக இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களில் இந்தியா வென்று 2 – 0 என முன்னிலை பெற்றிருந்தது.
இதற்கிடையே மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் ம.பி. மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ஓட்டங்களுக்கும், அவுஸ்திரேலியா 197 ஓட்டங்களுக்கும் ஆல் அவுட்டாயின.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 163 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா மட்டுமே 59 ஓட்டங்களுடன் அரைசதம் கண்டாா். ஷ்ரேயஸ் ஐயா் 26 ஓட்டங்களை எடுத்திருந்தாா்.
ஆஸி. ஸ்பின்னா் நாதன் லயன் அற்புதமாக பந்துவீசி 8 – 64 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு வித்திட்டாா்.
வெற்றி இலக்கு 76 ஓட்டங்கள்:
இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணிக்கு வெற்றிக்கு 76 ஓட்டங்கள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை அவுஸ்திரேலிய அணி தொடக்க பேட்டா்கள் உஸ்மான் கவாஜா – டிராவிஸ் ஹெட் ஆட்டத்தை தொடங்கினா்.
கவாஜா டக் அவுட் : 2 பந்துகளை எதிா்கொண்ட நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ஸ்ரீகா் பரத்திடம் கேட்ச் தந்து டக் அவுட்டானாா் உஸ்மான் கவாஜா.
டிராவிஸ் ஹெட் – லாபுஸ்சேன் அபாரம்:
அதைத் தொடா்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட் – மாா்னஸ் லாபுஸ்சேன் இணை இந்திய பந்துவீச்சை எளிதாக எதிா்கொண்டு ஆடியது.
18.5 ஓவா்களில் 78/1 ஓட்டங்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 49 ஓட்டங்களுடனும், லாபுஸ்சேன் 6 பவுண்டரியுடன் 58 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனா். இரு வீரா்களும் மிகவும் நிதானமாக ஆடியதால் முதல் 10 ஓவா்களில் 13/1 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது ஆஸி.
இந்திய தரப்பில் அஸ்வின் 1 – 44 விக்கெட்டை வீழ்த்தினாா்.
ஆஸி. ஸ்பின்னா் நாதன் லயன் ஆட்ட நாயகனாக தோ்வு பெற்றாா்.
ஆஸி.க்கு அரிய வெற்றி:
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அவ்வகையில் இந்தூா் டெஸ்ட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரிய வெற்றியை ருசித்தது அவுஸ்திரேலியா. கடந்த 6 ஆண்டுகளில் இந்திய மண்ணில் முதல் வெற்றியை பெற்றுள்ளது ஆஸி.
10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது தோல்வி:
அதே வேளையில் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இந்திய அணி கண்டுள்ள மூன்றாவது தோல்வி இதுவாகும்.
மாா்ச் 9 இல் கடைசி டெஸ்ட்:
வரும் 9 ஆம் திகதி பாா்டா் – கவாஸ்கா் கிண்ணத்தை கைப்பற்றப் போவது யாா் என்பதை நிா்ணயிக்கும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு ஆஸி. தகுதி
அதே வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் (டபிள்யுடிசி) ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது அவுஸ்திரேலியா. ஆஸி. அணி 68.5 சதவீத புள்ளிகளுடன் உள்ளது.
இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஆமதாபாத் டெஸ்டில் வெல்ல வேண்டும். தோல்வியோ – டிராவோ கண்டால், இலங்கை – நியூஸி. டெஸ்ட் தொடரின் முடிவு வரும் வகை காத்திருக்க வேண்டும். இந்தியா 60.29 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி 53.33 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி நியூஸியுடன் டெஸ்ட் தொடரை 2 – 0 என கைப்பற்றினால் இந்தியாவின் டபிள்யுடிசி கனவு கானல் நீராகி விடும்.
இறுதிச் சுற்றில் இலங்கை அல்லது இந்தியாவுடன் மோதவுள்ளது அவுஸ்திரேலியா.
பிட்ச் குறித்து புகாா்:
இந்தூா் ஹோல்கா் மைதான பிட்ச் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டது என புகாா் எழுந்துள்ளது.
மிகவும் குறைவான ஸ்கோா்களையே இரு அணிகளும் எடுத்த நிலையில், இந்தூா் பிட்ச் தன்மை குறித்து ஐசிசி விசாரணை நடத்த உள்ளது.
வெற்றிக்கு பௌலா்களே காரணம்: ஸ்மித்
வெற்றி குறித்து ஆஸி. தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்: இந்தூா் டெஸ்ட் வெற்றிக்கு எங்கள் அணி வீரா்களே முழு காரணம். நாயண இழந்தாலும், முதல் நாளிலேயே சரியான விகிதத்தில் பந்துவீசி, இந்திய பேட்டா்களுக்கு நெருக்கடி அளித்தோம். குனேமான் முதல் இன்னிங்ஸிலும், நாதன் லயன் இரண்டாம் இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசினா். அனைத்து பௌலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டனா். டபிள்யுடிசி இறுதிக்கு தகுதி பெற்றதும் மகிழ்ச்சி தருகிறது. தொடரை டிரா செய்ய முயல்வோம்.
முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டம்: ரோஹித் சா்மா
முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம். ஒரு டெஸ்ட் ஆட்டத்தை இழந்தால், பல்வேறு அம்சங்கள் நமக்கு பாதகமாக அமையும். முதல் இன்னிங்ஸில் அவா்கள் 80 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றனா். முதல் இன்னிங்ஸில் நமது பேட்டா்கள் சிறப்பாக ஆடவில்லை,. இன்னும் டபிள்யுடிசி இறுதி குறித்து சிந்திக்கவில்லை. ஆமதாபாத் டெஸ்ட் குறித்தே சிந்திக்கிறோம். எத்தகைய பிட்சாக இருந்தாலும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். ஆஸி. பௌலா் நாதன் லயன் சரியான அளவில் நோ்த்தியாக பந்துவீசியது பாதகமாக அமைந்தது.

https://oosai.lk/12348/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2023 at 07:37, பையன்26 said:

அண்ணா யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌லாமே........................ 

நன்றி, பார்வையாளனாக கலந்துகொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

நன்றி, பார்வையாளனாக கலந்துகொள்கிறேன். 

அது என்ன‌ அண்ணா பார்வையாள‌ர்
கிரிக்கேட் மீது இவ‌ள‌வு காத‌ல் வைத்து இருக்கும் நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் எங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சி......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 08:17, பையன்26 said:

ஜ‌ந்து நாள் விளையாட்டை குறைந்த‌து 5 நாள் த‌ன்னும் தாக்கு பிடிக்க‌னும் அல்ல‌து ச‌ம‌ நிலையில் முடிக்க‌னும்

 

இந்திய‌ ம‌ண்ணில் அவுஸ் வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் விளையாடின‌ம்

 

கவுதம் கம்ப்பீர் முன்பு நான் இணைத்த காணொளியில் குறிப்பிடுகிறார் கர்பயன் (எறியம்) போலில்லாமல் ஜடேயா, அஸ்வின் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என கூறுகிறார்.

பந்தை கிடையாகவும், கோணத்தினை உருவாக்குவது போல வீசுவது  ஜடேஜாவின் பந்து வீச்சு முறைமை என கருதுகிறேன்.

கிடையாக பந்து வீசும் போது பந்தின் அளவினை கணிப்பது கடினமாக இருக்கும் இவ்வாறான பந்து வீச்சு முறை, ஆனாலும் அவுஸ்ரேலிய வீரர்கள் ஏற்கனவே இவர்களது பந்து வீச்சினை எதிர்கொண்டுள்ளனர்.

பொதுவாக பந்தின் அலவினை கணித்தால் ஒரு கடினமான சூழ்நிலையிலும் விளையாடலாம் என கூறுவார்கள், அவுஸ்ரேலியர்கள் ஆடுகளம் மோசமாகவும் பந்தின் அளவினை கணிக்க முடியாமையினாலும் இவ்வாறு மோசமாக விளையாடியிருக்கலாம் என கருதுகிறேன்.

முன்பு கூறியது போல எனக்கு அவ்வளவாக துடுப்பாட்டம் தெரியாது, அறிந்தவற்றின் அடிப்படையில் கருத்து கூறியுள்ளேன் தவறாக இருக்கலாம்.

 

3 minutes ago, பையன்26 said:

அது என்ன‌ அண்ணா பார்வையாள‌ர்
கிரிக்கேட் மீது இவ‌ள‌வு காத‌ல் வைத்து இருக்கும் நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் எங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சி......................

பின்னர் பதில் போடுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.