Jump to content

டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா!

கலிலுல்லா

941724.jpg  
 

கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரிக் காதலர்கள். இவர்களின் காதல் சின்னமாக அபர்ணா தாஸ் கர்ப்பமடைகிறார். இதையறிந்த கவின், உடனே கருவைக் கலைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார். இதற்கு அபர்ணா மறுப்பு தெரிவிக்க, இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, அவர்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இந்தச் சம்பவத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை எமோஷனல் கனெக்ட்டுடன் சொல்லும் படம் தான் ‘டாடா’.

கல்லூரி மாணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களில், அதற்கேயுண்டான நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் கவின். இப்படத்தின் மூலம் தன்னை அழுத்தமான நடிகராக பதியவைக்கும் அவர், உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் பார்வையாளர்களை கலங்கடிக்கிறார். கவினுக்கு ‘டாடா’ நடிப்பில் புதிய மைல்கல்.

முதல் பாதியில் பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் அபர்ணா தாஸுக்கும், கவினுக்குமான கெமிஸ்ட்ரி பொருந்துகிறது. இரண்டாம் பாதியில் குறிப்பாக இறுதிக் காட்சியில் தன்னுடைய நடிப்பால் கவனம் பெறுகிறார் அபர்ணா.

நடிகர்கள் வீடிவி கணேஷ், ஹரீஷ், பிரதீப் குமார் 3 பேரும் அவ்வப்போது சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முயல்கின்றனர். ஹரீஷ் போல ஒரு நண்பர் இல்லையே என ஏங்க வைக்கும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாகவே எழுதப்பட்டுள்ளது. தவிர பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நடிப்பின் மூலம் நியாயம் சேர்க்கின்றனர்.

16760262683078.png

முதல் படத்திற்கான சாயலே தெரியாத வகையில் நேர்த்தியான படைப்பை எமோஷனலாக கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ்.கே.பாபு. காமெடி வேணுமா காமெடி இருக்கு, காதல் வேணுமா காதல் இருக்கு, எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு என எல்லாவற்றையும் கலந்து கட்டி மிகையின்றி பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

படம் தொடங்கி முதல் 20 நிமிடங்கள் பொறுமையாகவே நகர்கிறது. தொடர்ந்து வரும் 2 பாடல்களுமே ரிங் அடிக்காத தொலைபேசியை எடுக்க தூண்டுகிறது. கதையை கட்டமைக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் இந்த நேரம் அயற்சி கொடுக்காமலில்லை. ஆனாலும், தொடர்ந்து படம் அதன் போக்கில் நகரும்போது, திரைக்கதை சூடுபிடிக்கிறது.

பெற்றோர்களின் துணையின்றி காதலித்து, திருமணம் செய்யும் தம்பதிகள் வாழ்க்கையில் எப்படியான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ, அட்டிடியூட், சில எமோஷனல்கள் என படத்தின் சிக்கலில்லாத கோர்வையும், அது கடத்தும் உணர்வும், ‘உங்களால நாங்க நல்லாருக்கணும், ஆனா உங்கள விட நல்லாருக்ககூடாது’ போன்ற வசனங்களும் ஈர்ப்பு.

ஜென் மார்ட்டின் பின்னணி இசை காமெடிக்காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அதற்கான உணர்வை தக்கவைக்கிறது. வசனமில்லாத காட்சிகளில் வெறும் தன்னுடைய பிஜிஎம் வழியாக கலங்கவைத்து காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். எழில் அரசின் ஒளிப்பதிவில் காட்சிகள் கவர்கின்றன.

16760262903078.jpg

தந்தை - மகனுக்கான பாசம், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் படம் ஸ்கோர் செய்தாலும், கவின் கதாபாத்திரத்தின் மனமாற்றம் அழுத்தமாக சொல்லப்படாமல் கடக்கிறது. வெறும் மான்டேஜ் காட்சி மூலம் நிகழும் மனமாற்றமும், குழந்தையை விட்டு அபர்ணா தாஸ் பிரிந்து செல்வதற்கு சொல்லப்படும் காரணமும் பலவீனம்.

மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும், ஜாலியான, அதேசமயம் எமோஷனல் டிராமாவாக உருவாயிருக்கும் ‘டாடா’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற லேபிளுக்கு சளைத்ததல்ல.

டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா! | kavin aparna das starrer dada movie review - hindutamil.in

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.