Jump to content

ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’

புருஜோத்தமன் தங்கமயில்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார். 

ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் அவசர அவசரமாக சர்வகட்சிக் கூட்டங்களைக் நடத்தி, நாட்டில் புரையோடிப்போயுள்ள இனமுரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்போவதாக கூறினார். அதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் அவர் ஆரம்பித்தார்.

சுதந்திர இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை, இனவாதமும் மதவாதமும் அடக்குமுறைகளுக்கான ஏதுகைகளுமே தீர்மானித்து வந்திருக்கின்றன. இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி கட்டமைப்பே பொருத்தமானது என்று சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் கூறிவந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா, நாடு முழுவதிலும் பேருரைகளை நிகழ்த்தி இருந்தார்.  அதற்காக, அவர் யாழ்ப்பாணம் வந்து, தமிழ்த் தலைவர்களின் ஆதரவையும் கோரியிருந்தார். 

ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர், அவர்தான் நாட்டில் மிக மோசமான இன முரண்பாடுகளுக்கான பெருந்தீயைக் கொளுத்தி எரிய விட்டார். ஐக்கிய  தேசிய கட்சியில் இருந்து பிரிந்து வந்த பண்டாரநாயக்க, ஆட்சியைப் பிடிப்பதற்காக தனிச் சிங்களச் சட்டம் என்ற பேரினவாத சதித்திட்டத்தை கையில் எடுத்தார். 

தனிச் சிங்களச் சட்டம் என்பது உண்மையிலேயே ஜே.ஆர் ஜெயவர்தனவின் திட்டம். ஆனால், அதனை, தென் இலங்கை மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக பண்டாரநாயக்க திருடிக் கொண்டார். அதை, பௌத்த பீடங்களின் துணையுடன் சிங்கள மக்களிடம் சேர்ப்பித்தார். அது, நாட்டின் முரண்பாடுகளை அதிகப்படுத்தியது. கலவரங்கள், காடைத்தனங்களுக்கு வித்திட்டது.

மேல் நாட்டு சிங்களவர், கரையோர சிங்களவர், தமிழ் -  முஸ்லிம்களின் பாரம்பரிய பகுதிகள் என்ற மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய சமஷ்டிக் கட்டமைப்பினூடான ஆட்சி அதிகாரமே இலங்கைக்கு பொருத்தமானது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற ஆரோக்கியமான ஆட்சிக்கும் ஒவ்வொரு பிராந்திய மக்களின் தனித்துவத்தை காப்பாற்றுவதற்கும் அதுவே பொருத்தமானது என்பது பண்டாரநாயக்கவின் நிலைப்பாடு. 

இந்த நிலைப்பாடு, சுதந்திர இலங்கையில் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு உண்மையிலேயே ‘ஆசியாவின் ஆச்சரியம்’ ஆக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறான ஏதும் நிகழவில்லை. 

மாறாக, 75ஆவது சுதந்திர வருடத்தில் நாட்டு மக்கள் நாட்டை விட்டு எப்படி தப்பி ஓடுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களுடைய நாடு என்கிற எண்ணம் மெல்ல மெல்ல மக்களிடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. அதற்கு, கடந்த காலத்தில் ஆட்சி நடத்திய தலைவர்களும் கட்சிகளும், அவர்களுக்கு ஆலோசனை என்கிற பெயரில் இனவாதத் தீயை வளர்க்க உதவிய தரப்புகளுமே காரணமாகி இருக்கின்றன.

75ஆவது சுதந்திரத்தை நாடு எதிர்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில், நாடு திவாலாகி சுருண்டு கிடக்கின்றது. அதிலிருந்து எப்படி மீள்வது என்று எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. 

பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடனை, நாட்டின் அவசரகால நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக கடந்த வருடம் இலங்கை  வாங்கியது. ஆனால், அந்தக் கடனுக்கான எல்லை தாண்டிய பின்னரும், அதைச் செலுத்தும் திராணி நாட்டுக்கு இல்லை. ஆறு மாத கால அவகாசத்தை, பங்களாதேஷிடம் அழுது புலம்பி வாங்கி வைத்திருக்கின்றது நாடு. 

சீனாவிடமும் இந்தியாவிடமும் ஏற்கெனவே வாங்கிக் குவித்த கடன்கள் பல பில்லியங்கள். அந்தக் கடன்களை மீளச் செலுத்துவது பற்றி யோசித்தால், நாடு இன்னும் பல ஆண்டுகள் இருளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது. 

அப்படியான நிலையில், பெருமளவு நிதியைச் செலவு செய்து, ஆடம்பரமாக சுதந்திர தினத்தை, பொதுமக்களின் பங்கேற்பின்றி, இராணுவப் பாதுகாப்போடு நடத்தி முடித்திருக்கிறார் ரணில். அன்று மாலை, நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றிய அவர், “நாடு படுகுழிக்குள் வீழ்ந்ததற்கு கடந்த கால ஆட்சியாளர்களும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் காரணம்” என்று கூறியிருக்கிறார். 

“தொடர்ந்தும் கடந்த கால ஆட்சியாளர்கள் இயங்கியது போல இருக்க முடியாது. மாறாக, பிரிவினைகள், பிளவுகள் அற்ற ஒரு தாய் நாட்டு மக்களாக இன, மத பேதங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டும்” என்று பேசியிருக்கின்றார். 

அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான், “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்” என்று அவர் யாழ்ப்பாணத்தில் பேசியிருந்தார்.

ரணில், 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதற்கான நிர்ப்பந்தம் என்பது, இந்தியாவால் ஏற்பட்டு இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்காகத் தீர்வு முறைமையை, 13ஆவது திருத்தச் சட்டத்தினூடு அமையும் மாகாண சபைகளினூடு பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியா, தமிழ் மக்களிடம் கூறியது. 

ஆனால், 13ஆவது திருத்தம் ஏற்படுவதற்கான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதே, அதன் பங்காளிகளாக தமிழ் மக்கள் இருக்கவில்லை. அப்போதே, மாகாண சபைகள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்று தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இன்று இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைத் தவிர, மாகாண சபைகளை அங்கிகாரமாக யாரும் கருதவில்லை. 

இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்காக, மாகாண சபையை ஏற்ற, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட சில மாதங்களில், “அதில் ஒன்றுமில்லை” என்று அறிவித்துவிட்டு அதிலிருந்து வெளியேறிவிட்டது. அப்படியான நிலையில், மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்த காலம் தாண்டிய பின்னரும், மாகாண சபைகள் தான், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்தியா செயற்படுகின்றது. 

இது, இந்தியாவின்  அரசியல் இராஜதந்திர நலன்களைக் கருத்தில் கொள்ளும் திட்டமாகும். மாகாண சபை நாட்டின் அரசியலமைப்பில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டால், இந்திய - இலங்கைக்கான ஒப்பந்தமும் வறியதாகிவிடும். இலங்கை, ஒருவகை தர்மசங்கடத்துடன் இந்தியாவோடு செய்துகொண்ட ஒப்பந்தமொன்றின் மூலம், நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிட வைத்திருக்கின்றது. இதை இல்லாமல் செய்வதற்கு இந்தியா விரும்பாது. அதனால்தான், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள தங்களில் கருவிகளைக் கொண்டு,  அடிக்கடி 13ஆவது திருத்தம் குறித்த விடயத்தை பிரதான பேசுபொருளாக்குவதில் இந்தியா குறியாக இருந்து வந்திருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் டெலோவைத் தேர்ந்தெடுத்து, 13ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திப்புகளை நடத்தி, இந்தியாவுக்கு கடிதம் எழுத வைத்ததும் அதன் நோக்கில்தான். 

அந்தக் கடிதத்தை, ராஜபக்‌ஷர்களிடம் பெரிய விடயம் மாதிரி இந்தியா எடுத்துச் செல்ல முயன்றமையானது, அப்போது புதிய அரசியலமைப்பு என்கிற பெயரில் ராஜபக்‌ஷர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இல்லாமல் செய்யும் திட்டங்களோடு இருந்தமையாலாகும். 

ஆனால், சிறிய காலத்துக்குள்ளேயே கோட்டாவை நாட்டு மக்கள் பதவியில் இருந்து அகற்றியதும், ரணில் வந்தார்.  இப்போது நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை காட்டி இந்தியா, தன்னுடைய பிடியைப் பேண நினைக்கின்றது. அதற்காகத்தான், அதாவது இந்தியாவை மகிழ்விப்பதற்காகத்தான் ரணில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக கூறியிருக்கின்றார்.

இன்னொரு பக்கம், 13ஆவது திருத்தத்தை முன்வைத்து ரணில் ஆடும் இராஜதந்திர சதுரங்கத்தின் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட்டேன் என்று சர்வதேசத்துக்கு அவர் காட்ட நினைக்கிறார். அதாவது, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சில வாரங்களுக்குள்ளேயே, சர்வகட்சி கூட்டத்தை நடத்தி, இனமுரண்பாடுகளுக்கான தீர்வு குறித்து பேச்சுகளை நடத்தியிருப்பதாக அவர் காட்டினார்.

 அத்தோடு, சுதந்திர தினத்துக்கு முன்னர், தீர்வைக் காணப்போவதாகவும் கூறி, தமிழ்த் தரப்புகளோடு பேச்சுகளை நடத்தினார். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்துமே ஓர் ஏமாற்று நாடகமாக மாத்திரமே இருந்தன. அப்படியான நிலையில், 13ஆவது திருத்தத்தை அவர் கையிலெடுத்து ஆடுகிறார். அதன் மூலம், இந்தியாவை திருப்திப்படுத்த முடியும் என்பது அவர் நம்பிக்கை. 

ஆனால், அவர் தன்னை ‘கைதேர்ந்த சதிகாரத் தலைவர்’ ஆக முன்னிறுத்துவற்காக பௌத்த பீடங்களையும் தென் இலங்கையின் கடும்போக்கு சக்திகளையும் கொண்டு, 13ஆவது திருத்தம் நாட்டின் பிரிவினைக்கான சூத்திரம் என்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். வடக்கில் வந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக சொல்லி, இந்தியாவை குளிர வைத்துவிட்டு, தெற்கில் அதற்கு மாற்றாக விடயத்தை தென் இலங்கை சக்திகளைக் கொண்டே அவர் செய்கிறார். இப்போது அவர் ஏமாற்றுவது இந்தியாவை. ஏனெனில், 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் கருதவில்லை; ஏற்றுக் கொள்ளவில்லை.

தென் இலங்கையின் பாரம்பரிய அரசியல் ஒழுங்கு என்பது, இனவாத மதவாத, அடக்குமுறை, சதிகாரத்தனம் சார்ந்தது. அதைத்தான் ரணிலும் ‘பசுத்தோல் போர்த்திய நரி’யாக தற்போது செய்கிறார். அவர், தன்னுடைய குறுகிய நலனுக்காக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் இந்தியாவையும் ஏமாற்றுகிறார். 

மற்றப்படி, 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதோ, அது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதோ கானல் நீருக்கு ஒப்பான ஒன்று!
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணில்-எனும்-பசுத்தோல்-போர்த்திய-நரி/91-312224

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.