Jump to content

அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 09:02, விசுகு said:

கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த  ஒரு  இடம் அல்லது விடயம் அங்கொட.

அதோட அங்க  போற இபோச BUS இலக்கம் 134 என்றதும்  தெரியும்.

காரணம்  என்ன? எதுக்கு  கொழும்பில  இவ்வளவு  இடம்  இருக்க இந்த  இடமும் BUS இலக்கமும் நமக்கு  பாடம்  என்று 

கொஞ்சம்  மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம்  அல்லது மட்டம் தட்ட நமக்கு  இருக்கும் ஆர்வம் தான் காரணம்  என்று. 

தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல்  ஏற்றி  விடுங்கோ என்பதும்  பெரிய  பகிடி  அப்ப.  ஏன் இப்பவும் தான்.

அதாவது  ஒருவருடைய மனதில் ஏற்படும்  சிறு  பிசகை  அல்லது  சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக  எடுத்துக்கொள்கின்றோம்?

 

நான்  பிரான்சுக்கு  வந்தும் இந்த  மனநிலை  தான்.

நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை  இருக்கிறது.

மனைவி  மக்களுடன்  சிரிப்பதுண்டு. உங்களை  அடிக்கடி கொண்டு  திரிய முடியாது  என்று  தான் பக்கத்தில்  வீடு எடுத்தனான்  என்று.

 

ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது  தற்போதைய சூழ்நிலைப்படி  பார்த்தால் 

மனநிலை  வைத்தியரைப்பார்ப்பது  என்பது

சிறியவர்  தொடக்கம்  பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது  நித்திரை  வராததிலிருந்து வேலை  மற்றும்  படிக்க ஆர்வமில்லாதவர் வரை 

சர்வசாதாரணமாக மனநிலை  சார்ந்த  வைத்தியர்களின்  ஆலோசனைகளைக்கேட்பது  அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த  நிகழ்வாகிவிட்டது.

இன்றைய  இயந்திர வாழ்வு  காரணமாக அதற்கு  அடுத்த  கட்டமாக அதற்கு தேவையான  மாத்திரைகளை  பாவிப்பதும் சாதாரண  நிகழ்வுகள்.

 

ஆனால் தமிழர்கள்  நாம்  இன்றும் இவை  கொஞ்சம் குறைவான ஆட்கள்  என்ற மனநிலையுடன்??? அவர்களை  ஒதுக்கியபடி???

நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள்  இருப்பின் சமூதாய  பயத்தைக்காட்டி 

நாம்  எதை விதைத்தோமோ அதையே  இந்த  சமூகம்  பரிசாக நமக்கு  தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம்  மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு  நாளைக்கு  இன்னும்???

 

25வது சுய ஆக்கத்திற்காக  விசுகு...

உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் வழமையாகவே நையாண்டி செய்யப்படுகின்றார்கள். குறிப்பாக தமிழ் சினிமா அதை மிக நன்றாக செய்து வந்துள்ளது.

 

இதைவிட பெரிய கொடுமை என்ன என்றால் தங்களுடன்/கருத்துக்கள்/கொள்கைகளுடன் உடன்படாதவர்களை, தாங்கள் எதிர்பார்க்கும் நிலமைக்கு மாறுபாடாக செயற்படுபவர்களை: குறிப்பிட்டவர்களின் செயல் சிறப்பானது என்றாலும் மூளை சுகம் இல்லாதவர்கள் என பட்டம் கொடுக்கப்படுகின்றார்கள். ஒரு உதாரணம் குறிப்பிடுவது என்றால்: தமது பிள்ளை தமக்கு பிடிக்காத ஒருத்தனை காதல் செய்தாலோ/திருமணம் முடித்தாலோ பிள்ளைக்கு மூளை சுகம் இல்லை என கூறுவார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் பல குடும்பங்கள் மனநல வைத்திய தேவை இருந்தும் நாடாமல் அவ்வகையான பிரச்சனைகளில் இருந்து மீளாமலும் அல்லது வைத்தியதேவைக்குப் பதிலாக சூழல் மாற்றத்தைக் கூட செய்யத்துணிவில்லாதவர்களாகவும் வாழ்கின்றனர். மாற்றுத் தீர்வுகளை நிராகரிப்பவர்களாகவே அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவல் ....ஆரம்பமே அசத்தல்.....134 சந்தோசம் எனக்கும் இருக்கு...அது ஒரு பொற்காலம்..விசுகர்

  • Thanks 1
Link to comment
Share on other sites

நல்லதொரு கருத்தை முன்வைத்து ஆக்கம் எழுதியுள்ளீர்கள். இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.

எனக்கு மன நலம் பாதிக்கப்பட்ட சிலருடன் பழகவும், அவர்களை வைத்து சில நாட்களுக்கு பராமரிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. அதே நேரத்தில் அவர்களை அவர்களின் குடும்பம் எவ்வாறு நோக்கியது என்பதை உணரவும் முடிந்தது.

என் அப்பா தனக்கு புற்று நோய் வந்துவிட்டது, இறப்பதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன என அறிந்த போதும் கொடுத்த சிகிச்சைகளாலும், மன நலம் பாதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் மிகவும் கஷ்டப்பட்டார். 

என்னுடைய இங்குள்ள ஒரு இந்திய நண்பரின் மனைவி மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தார். ஆனால் நண்பர் இதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு வீட்டிலேயே வைத்திருக்க, அவர் மனைவி தன் 2 வயது குழந்தையை கொல்லும் நிலைக்கு சென்று, ஈற்றில் பொலிஸ் தலையிட்டு சிகிச்சைக்கு போக வேண்டி வந்தது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதைப்பது நமது கடமை

அந்த வகையில் சில விடயங்களை எழுதத்தோன்றும். அதற்கு இடம் தரும் யாழுக்கு தான் நன்றிகள் சேரும்.

தனித்தனியாக பின்னர் எழுதுகிறேன். நன்றி அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மாமா ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் வந்ததன் பின்னர் மூளை பாதிக்கப்பட்டது. அவரை சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எத்தனை பேர் கிண்டலடித்தார்கள். அவரது குடும்பம் அவரை ஓரளவுக்குநன்றாகவே பார்த்தார்கள். ஆனால் இறுதியாக அவர் யாருமில்லா இடத்தில் தான் இறந்து கிடந்தார். மற்றவர்களிடம் வன்முறையாகநடந்து கொள்ளும் அவர் (பெரும்பாலானவர்கள் அவரை கிண்டலடித்தவர்கள்) என்னுடனும் எங்கள் குடும்பத்தினருடனும் அன்பாகவேநடந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 22:02, விசுகு said:

 

நாம்  எதை விதைத்தோமோ அதையே  இந்த  சமூகம்  பரிசாக நமக்கு  தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம்  மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு  நாளைக்கு  இன்னும்???

 

25வது சுய ஆக்கத்திற்காக  விசுகு...

அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்? --- இந்த தலைப்பே பிழை, மனநிலை பாதிக்கப்பட்ட யாரையும் குறைவான ஆட்கள் என்று கூறும் யாரையும் நான் இதுவரை பார்த்தில்லை, அனுதாப ப்பட்டே பார்த்திருக்கின்றேன், குறைவான ஆட்களென சாதியை தூக்கி பிடிப்பவர்கள்தான் இப்படி கூறுவார்கள்

 

புலம் பெயர்ந்த பலருக்கு இந்த வியாதியிருக்கு, மன உளைச்சலில் பலர் உள்ளனர், இதனால் சைகோவாக பலர் உள்ளனர், நானும் ஒரு சைக்கோ, எம் மக்கள் முன்னேற வேண்டுமென்ற

 இப்படி இந்த திரியை திறந்த நீங்கள் சைகோ வென்றவுடன் கோப படுவதேனோ?

இந்த திரியை சும்மா பொழுது போக்கிற்காக திறந்தீர்களா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்? --- இந்த தலைப்பே பிழை, மனநிலை பாதிக்கப்பட்ட யாரையும் குறைவான ஆட்கள் என்று கூறும் யாரையும் நான் இதுவரை பார்த்தில்லை, அனுதாப ப்பட்டே பார்த்திருக்கின்றேன், குறைவான ஆட்களென சாதியை தூக்கி பிடிப்பவர்கள்தான் இப்படி கூறுவார்கள்

 

புலம் பெயர்ந்த பலருக்கு இந்த வியாதியிருக்கு, மன உளைச்சலில் பலர் உள்ளனர், இதனால் சைகோவாக பலர் உள்ளனர், நானும் ஒரு சைக்கோ, எம் மக்கள் முன்னேற வேண்டுமென்ற

 இப்படி இந்த திரியை திறந்த நீங்கள் சைகோ வென்றவுடன் கோப படுவதேனோ?

இந்த திரியை சும்மா பொழுது போக்கிற்காக திறந்தீர்களா?😎

 

உண்மையில் நல்ல  மனநல வைத்தியரை பாருங்கள்  தம்பி  என்று  அண்ணன்  நான்  சொன்னால்???

உங்கள்  பதில்  எப்படியோ???🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

 

உண்மையில் நல்ல  மனநல வைத்தியரை பாருங்கள்  தம்பி  என்று  அண்ணன்  நான்  சொன்னால்???

உங்கள்  பதில்  எப்படியோ???🙏

நான் கட்டாயம் பார்ப்பேன் அண்ணா👍, ஆனா தலைப்பை கொஞ்சம் பாருங்கள்

5 minutes ago, விசுகு said:

 

உண்மையில் நல்ல  மனநல வைத்தியரை பாருங்கள்  தம்பி  என்று  அண்ணன்  நான்  சொன்னால்???

உங்கள்  பதில்  எப்படியோ???🙏

புலம்பெயர்ந்ததிலிருந்து மனநிலை பதிப்படைந்துவிட்டது, இந்த பாதிப்பு போகவேண்டுமென்றதிற்காக என்னால் இயன்றளவு சிலரை தூக்கிவிட்டுகொண்டிருக்கின்றேன், அதுதான் என் மன நோய்க்கு மருந்து விசுகண்ணா

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

நான் கட்டாயம் பார்ப்பேன் அண்ணா👍, ஆனா தலைப்பை கொஞ்சம் பாருங்கள்

நான் எழுதிய  பின்னர் அது பற்றி  சுட்டிக்காட்டப்பட்டது தான்

எனது  மனதில்  முதலில்  எழுந்த  தலைப்பு  என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்

நன்றி நேரத்திற்கும் கருத்துக்கும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நான் எழுதிய  பின்னர் அது பற்றி  சுட்டிக்காட்டப்பட்டது தான்

எனது  மனதில்  முதலில்  எழுந்த  தலைப்பு  என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்

நன்றி நேரத்திற்கும் கருத்துக்கும்

 

 

நன்றி உண்மையை சொன்னதிற்கு, 👍

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.