Jump to content

படம் கூறும் கதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. 

நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!!

அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. 

உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 

முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. 

large.736CF981-49B5-4E9B-B1D4-65E9D669CD9C.jpeg.b42154c85c2b841306d1369adad166fa.jpeg

31613-A29-1-EF5-45-E3-90-C3-056-A710-B36

இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்..

படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். 

நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை. வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 8
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல

P.S.பிரபா

இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது..  இந்த தேவாலயத்தினைக் கடந்துதான்  மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்ச

MEERA

அண்ணா, பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட

  • கருத்துக்கள உறவுகள்

நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா?

பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…!

தொடருங்கள்…!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

large.736CF981-49B5-4E9B-B1D4-65E9D669CD9C.jpeg.b42154c85c2b841306d1369adad166fa.jpeg

 

 

 

 இது பிளாட்டினத்திலும் பாசி பிடிக்கும் காலம்

 

பிகு

அருமையான கான்செப்ட். மிக பொருத்தமான படங்கள் 👏🏾.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனை கார்முகில் மறைத்தல் போல் தலைவனின் இல்லத்தை கரிமுகில் மறைத்துள்ளது......!

கரிநீர் கழுவி ஓட மீண்டும் இல்லம் ஒளிரும் ........!

நன்றாக இருக்கு தொடருங்கள்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா?

பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…!

தொடருங்கள்…!

நன்றி அண்ணா!!

அப்படித்தான் அந்த சுவரொட்டியில் கூறியுள்ளது.. எனக்குத் தெரிந்த ஒருவர் கூறினார் இப்ப மாவீரர் தினத்திற்கு தென்னங்கன்று கொடுத்தவுடன் கடமை முடிந்துவிட்டது என நினைக்குமளவிற்கு மக்களின் மனநிலை மாறுகிறது என. 

நான் இன்னமும் ஒன்றிரண்டு படங்களை இணைக்க நினைத்திருப்பதால்தான் படங்கள் கூறும் கதைகள் என தலைப்பிட்டேன். 

 

4 hours ago, goshan_che said:

இது பிளாட்டினத்திலும் பாசி பிடிக்கும் காலம்

உண்மைதான்.. பார்த்தவுடன் இப்படி செய்துவிட்டார்களே என கோபமும் இயலாமையும் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. 

நன்றி .. 

2 hours ago, suvy said:

சூரியனை கார்முகில் மறைத்தல் போல் தலைவனின் இல்லத்தை கரிமுகில் மறைத்துள்ளது......!

கரிநீர் கழுவி ஓட மீண்டும் இல்லம் ஒளிரும் ........!

நன்றாக இருக்கு தொடருங்கள்.......!  👍

கடைசியில அவருக்கு ஒன்றுமே மிச்சமாக இல்லை. ஒரு இடிந்த சுவரைத் தவிர!!! 

நன்றி அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்தில்... எதை ஓட்டுவது என்று சிந்திக்கும் அறிவு அற்றவர்கள்.
தலைவனின் இல்லம் என்று எழுதியிருந்ததற்கு கூட மதிப்பு கொடுக்காமல்,
அந்த விளம்பரத்தை கொண்டு போய் ஒட்டியுள்ளார்கள்.
பட பகிர்விற்கு நன்றி, பிரபா சிதம்பரநாதன். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்..

பிரபா நீங்கள் நிறைய பயணங்கள் போவதால் பயணக் கட்டுரையாகவே எழுதலாம்.

பழைய அகவைகளில் பலரும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள்.

அது வெளிநாடு உள்நாடு எதுவாகவும் இருக்கலாம்.

அத்துடன் உங்களுக்கு படம் எடுக்கும் திறமை இருப்பதால் படத்துடன் சேர்த்து இடங்களை எழுதுவதால் நாங்களும் அந்த இடங்களை தெரிந்து கொள்ளலாமல்லவா.

மேலே உள்ள படத்தை பார்க்க கோபமும் கவலையாகவும் இருக்கிறது.

புலனாய்வுப் பிரிவுகளின் வேலையாக இருக்கலாம்.

அடுத்த படம் எமது ஊரைப் (இருபாலை)போலவே கிராமத்தில் எடுத்த படம் போல உள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

எந்த இடத்தில்... எதை ஓட்டுவது என்று சிந்திக்கும் அறிவு அற்றவர்கள்.
தலைவனின் இல்லம் என்று எழுதியிருந்ததற்கு கூட மதிப்பு கொடுக்காமல்,
அந்த விளம்பரத்தை கொண்டு போய் ஒட்டியுள்ளார்கள்.
பட பகிர்விற்கு நன்றி, பிரபா சிதம்பரநாதன். 

உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.. 

நன்றி. 

22 hours ago, ஈழப்பிரியன் said:

பிரபா நீங்கள் நிறைய பயணங்கள் போவதால் பயணக் கட்டுரையாகவே எழுதலாம்.

பழைய அகவைகளில் பலரும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள்.

அது வெளிநாடு உள்நாடு எதுவாகவும் இருக்கலாம்.

அத்துடன் உங்களுக்கு படம் எடுக்கும் திறமை இருப்பதால் படத்துடன் சேர்த்து இடங்களை எழுதுவதால் நாங்களும் அந்த இடங்களை தெரிந்து கொள்ளலாமல்லவா.

மேலே உள்ள படத்தை பார்க்க கோபமும் கவலையாகவும் இருக்கிறது.

புலனாய்வுப் பிரிவுகளின் வேலையாக இருக்கலாம்.

அடுத்த படம் எமது ஊரைப் (இருபாலை)போலவே கிராமத்தில் எடுத்த படம் போல உள்ளது.

நன்றி அங்கிள். பயணக் கட்டுரை ஒன்று pendingல் உள்ளது.. Aboriginals சம்பந்தப்பட்டமையால் சரியானதை எழுதவேண்டும் அத்துடன் அப்பாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால்  எழுதமுடியாமல் தள்ளிப் போகிறது..பார்ப்போம்.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

பார்வைக்கு பாசையூர் அந்தோனியார் கோவில் போல உள்ளது.

நீங்கள் வடமராட்சி என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்வைக்கு பாசையூர் அந்தோனியார் கோவில் போல உள்ளது.

நீங்கள் வடமராட்சி என்கிறீர்கள்.

பாசையூர் அந்தோனியார் கோயிலில் இப்படி சுருவம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.....!  😁

Link to comment
Share on other sites

19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

பாசையூர் அந்தோனியார் கோயிலில் இப்படி சுருவம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.....!  😁

பாசையூர் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் எனது உயிர் நண்பன் இருந்தான்.84 வரை அடிக்கடி போய் வந்தேன்.அவன் ஜேர்மனி போனபின் அந்தப் பக்கம் போனதில்லை.

அவனது வீட்டில்த் தான் முதன்முதலாக ஆமை இறைச்சி சாப்பிட்டேன்.

2 minutes ago, nunavilan said:

கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம். 

நாகர்கோவில் தாளையடி பக்கமும் நிறைய கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் வடமராட்சியில் என்றல்லவா எழுதியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

பாசையூர் அந்தோனியார் கோயிலில் இப்படி சுருவம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.....!  😁

உண்மைதான் பாசையூரில் இல்லை..

22 hours ago, nunavilan said:

கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம். 

இந்த தேவாலயம் இருக்கும் இடத்தை கடந்தே நீங்கள் கூறிய இடத்திற்குப் போக வேண்டும்😊

22 hours ago, ஈழப்பிரியன் said:

நாகர்கோவில் தாளையடி பக்கமும் நிறைய கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் வடமராட்சியில் என்றல்லவா எழுதியிருக்கு.

அங்கிள் வடமராட்சி என்ற ஊர் இருக்கிறதா? நான் நினைப்பது வடமராட்சி என்றால் பருத்தித்துறை, VVT, கரவெட்டி தாளையடி   கட்டைக்காடு இப்படி பல ஊர்கள் சேர்ந்து என்று!!!

இந்த சுருவம் அண்மையில் கட்டியது இல்லை.. முன்பே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அங்கிள் வடமராட்சி என்ற ஊர் இருக்கிறதா? நான் நினைப்பது வடமராட்சி என்றால் பருத்தித்துறை, VVT, கரவெட்டி தாளையடி   கட்டைக்காடு இப்படி பல ஊர்கள் சேர்ந்து என்று!!

வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

கூகிள் தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

கூகிள் தகவல்.

அண்ணா,

பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட முற்படுகின்றனர்.

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பொற்பதி   குடத்தனை    St. Peter's Church. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அண்ணா,

பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட முற்படுகின்றனர்.

நன்றி மீரா.

இது விக்கியில் இருந்து சுட்டது.

வடமராட்சிப் பக்கம் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 பொற்பதி   குடத்தனை    St. Peter's Church. 

கூகிள் பண்ணி பார்த்ததில் பிரபா இணைத்த சிலை இந்த இடத்தில் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

கூகிள் பண்ணி பார்த்ததில் பிரபா இணைத்த சிலை இந்த இடத்தில் காணவில்லை.

இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. 

இந்த தேவாலயத்தினைக் கடந்துதான்  மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. 

0-D5-B4327-29-AB-45-A1-9-E73-67-ADB4-A33

சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. 

இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று.. 

large.79170989-144E-4607-855F-38869E4EA494.jpeg.64fe869ab7deca33ef5ee7ea84834764.jpeg

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரி.......படங்களும் அழகாக இருக்கின்றன.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)
 

29-DAF843-5961-4600-BFF1-EC09-F0-AA5-EAD

முல்லைத்தீவில் ஒரு கிராமம்

இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)
 

29-DAF843-5961-4600-BFF1-EC09-F0-AA5-EAD

முல்லைத்தீவில் ஒரு கிராமம்

இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…!

பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புங்கையூரன் said:

மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…!

பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!

உண்மைதான் 

நன்றி அண்ணா!!

முல்லைத்தீவில் சர்ச்சைக்குரிய நீராவியடியில் உள்ள புத்தர் சிலையே அது.. 

முல்லைத்தீவில் சிவனின் மகனை தள்ளிவிட்டு புத்தர் வந்துவிட்டார். யாழ்ப்பாணத்தில் புத்தர் வந்தாலும் என்று சிவன் முந்திவிட்டார்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)

பலாலி வீதி, பழம் வீதியில் இருக்கும் ஆலடி சந்தி போலவும் தெரிகின்றது. 
ஆனால்... பலாலி வீதி ஒடுக்கம் குறைவாக தெரிவதால், 
சிலவேளை வேறு இடமாகவும் இருக்கலாம். 🙂

சுந்தரம்  பிறதர்ஸ்... இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். 
அந்த நிறுவனத்திற்கு... 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கின்றேன். 🙂

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.