Jump to content

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

பையா பொறுமையாக இரு! நெடுமாறன் ஐயா இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். புலத்தில் உள்ள பலருக்கு தலைவரின் வருகை தேவையாய் இருக்கிறது போலும். பொறுத்திருந்து பார்ப்போம்.

ச‌ரி ந‌ண்பா
ப‌ழ‌நெடுமாற‌ன் வுடைய‌த்தில் ஒதுங்கி இருக்கிறேன்
ஆனால் நிஜ‌ வாழ்வில் த‌லைவ‌ர் 20வ‌ருட‌ம் க‌ழித்தும் வ‌ர‌ போவ‌தில்லை

த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌ கார‌ண‌த்துக்காக‌ தான் ப‌ழ‌ நெடுமாற‌ன் மேல் இம்ம‌ட்டு வெறுப்பு

இதோட‌ நிறுத்தி கொள்ளுறேன் இந்த‌ திரியில் எழுதுவ‌தை ந‌ண்பா

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம்............... 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்

நிழலி

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான்.  நெடுமாறன் எட

ரதி

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் முட்டை போட்ட ஆமையின் கதை தான் ஞாபகம் வருது 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

ஆயிரம் முட்டை போட்ட ஆமையின் கதை தான் ஞாபகம் வருது 🤣

அட நீங்களுமா தல…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

நெடுமாறன் ஐயா இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இம் முறை  அவர் வெளியிட்ட அறிவித்தலை யாழ்களத்து பெரியோர்கள் அவரின் வயதை  காரணம் காட்டி முதுமைகாரணமாக அவர் அப்படி சொல்லிவிட்டார் என்று நியாயபடுத்தியுள்ளார்கள். இதை அவர் பார்த்தால் இனி ஒவ்வொரு வருடமும் இப்படி அறிவிப்பை வெளியிடுவாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இம் முறை  அவர் வெளியிட்ட அறிவித்தலை யாழ்களத்து பெரியோர்கள் அவரின் வயதை  காரணம் காட்டி முதுமைகாரணமாக அவர் அப்படி சொல்லிவிட்டார் என்று நியாயபடுத்தியுள்ளார்கள். இதை அவர் பார்த்தால் இனி ஒவ்வொரு வருடமும் இப்படி அறிவிப்பை வெளியிடுவாரோ தெரியவில்லை.

இப்ப நம்ம அப்பா இப்படி பேசினா? அவருக்கு அறளைக்குணம் வந்திட்டுது குறைவிளங்காதீங்கோ என்று சொல்லி அப்பாவை வீட்டில் வைத்திருப்போமா? 

இல்லை உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை என்று வெளியே கலைத்து விடுவோமா?

(இதுக்கும் நெடுமாறன் ஐயாவுக்கும் தொடர்பில்லை. ஒரு உதாரணத்திற்கு மட்டும்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

அட நீங்களுமா தல…..

அட நான் சொன்னது தவளையை தவறா புரிஞ்சிட்டீங்க🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

அட நான் சொன்னது தவளையை தவறா புரிஞ்சிட்டீங்க🤣

இதில‌ பெரிய‌ த‌ல‌வ‌ளை யார் சின்ன‌ த‌வ‌ளை யார் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கூறிய முன்னாள் போராளி அச்சுறுத்தல் வருவதாக புகார்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழீழ விடுதலை புலிகள்
 
படக்குறிப்பு,

அரவிந்தன், முன்னாள் போராளி

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து, தனக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பிரபாகரனுடன் இறுதிவரை இருந்து போரிட்டதாக கூறியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு தமக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக குறிப்பிட்டு வவுனியாவில் இன்று (2023 பிப்ரவரி 18) ஊடக சந்திப்பொன்றை அவர் நடத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 13ம் தேதி தமிழ்நாட்டில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்த கருத்தானது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாகியது.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில், இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில், பிரபாகரனுடன் களத்திலிருந்து போராடிய போராளியான அரவிந்தனிடம், பிபிசி தமிழ் வினவியது.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை தான், இறுதிக் கட்ட முள்ளிவாய்க்கால் மோதலில் ஈடுபட்டதாக அரவிந்தன் தெரிவித்திருந்தார்.

''எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பது தான்" என அரவிந்தன் அன்றைய தினம் கூறியிருந்தார்.

அரவிந்தன் வெளியிட்ட இந்த கருத்தானது, உலகம் முழுவதும் பாரிய பேசுப் பொருளாக மாறியது.

இந்த நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என தன்னால் பிபிசிக்கு வெளியிடப்பட்ட கருத்தை அடுத்து, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அரவிந்தன், ஊடக சந்திப்பொன்றை நடத்தி இன்று (18) கூறியிருந்தார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இன்றைய தினம், நேற்றைய தினம் உட்பட சில தினங்களாகவே நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு நிலைமை காணப்படுகின்றது. பழ.நெடுமாறன் ஐயாவினுடைய, 'அண்ணன் வருகிறார்' என்ற கருத்துக்கு பதிலாக 'அண்ணன் இல்லை' என்ற கருத்தை நான் பிபிசிக்கு வழங்கியிருந்தேன். அதனைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் கருத்து கேட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசத்திலிருந்தும், இங்கே இருக்கக்கூடிய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய இன்பராசா அவர்களிடம் இருந்தும் ஒரு அச்சுறுத்தல் வந்தது.

நான் இராணுவத்தோடு பணியாற்றுவதாகவும், கருணாவோடு பணியாற்றுவதாகவும் வட்டுவாகலில் நின்று போராளிகளை காட்டிக் கொடுத்ததாகவும் அவர் சில கருத்துக்களை என்னிடம் தெரிவித்திருக்கிறார். அது சார்ந்து ஃபேஸ்புக் பதிவுகள் சிலதையும் அவர்கள் இட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்பில் நான் கரிசனைப்பட வேண்டிய தேவையில்லை. நான் உண்மையை பேச வேண்டியவனாக இருக்கின்றேன்.

இப்போதும் நான் சொல்கின்றேன், துவாரகாவையோ, சார்லஸையோ, அல்லது அண்ணியையோ, அண்ணணையோ, பாலசந்திரனையோ கொண்டு வந்து, என் முன் நிறுத்துவார்களாக இருந்தால், நான் (வெளியிட்ட கருத்துக்காக) தற்கொலை செய்துகொள்ளக்கூட தயாராக இருக்கின்றேன். உண்மையானவர்களாக, இதனை சொல்ல வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அண்ணன் இல்லை என்று கூறும் போது, எங்களுக்கு மிகுந்த வலியும், வேதனையும் ஏற்படக்கூடிய விடயம்." என அரவிந்தன் கூறினார்.

கந்தசாமி இன்பராசாவின் பதில்

கந்தசாமி இன்பராசா

பட மூலாதாரம்,INBARASA

 
படக்குறிப்பு,

கந்தசாமி இன்பராசா

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அரவிந்தனுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''நாங்கள் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஏன் தம்பி நீ இப்படி செய்தாய்" என்று முன்னாள் போராளியான அரவிந்தனிடம் தான் தொலைபேசியுடாக வினவியதாக அவர் கூறுகிறார்.

உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் கதைத்ததாகவும், தான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பில் வினவியபோது, தனக்கும், அரவிந்தனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு வந்ததாக அவர் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு,

பிரபாகரன் உயிர்: கடைசி யுத்தத்தில் போரிட்ட முன்னாள் போராளி பிபிசி தமிழுக்கு பேட்டி

பிரபாகரன் உயிருடன் உள்ளார் - கந்தசாமி இன்பராசா

நிச்சயமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''அவர் உயிருடன் இருக்கின்றார். காரணம் என்னவென்றால், அவரது இறந்த உடலை 12,000 போராளிகளுக்கு இலங்கை அரசாங்கம் காட்டவில்லை. அதனால், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியன இன்று வரை விடுதலைப் புலிகள் மீதான தடையை எடுக்காததும், அண்ணன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் என சொல்ல வேண்டும். நாங்கள் உண்மையைதான் சொல்கின்றோம். எங்களுடைய தேசிய தலைவர் உயிருடன் வந்தாலும், ஆயுத ரீதியாக வரமாட்டார். ஜனநாயக ரீதியாக வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் அவர் வரத்தான் போகிறார். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கத்தான் போகிறது. எங்கட தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை, ஜனநாயக ரீதியாக கிடைக்கத்தான் போகிறது" என தெரிவித்தார் கந்தசாமி இன்பராசா.

https://www.bbc.com/tamil/sri-lanka-64689647

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கூறிய முன்னாள் போராளி அச்சுறுத்தல் வருவதாக புகார்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழீழ விடுதலை புலிகள்
 
படக்குறிப்பு,

அரவிந்தன், முன்னாள் போராளி

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து, தனக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பிரபாகரனுடன் இறுதிவரை இருந்து போரிட்டதாக கூறியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு தமக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக குறிப்பிட்டு வவுனியாவில் இன்று (2023 பிப்ரவரி 18) ஊடக சந்திப்பொன்றை அவர் நடத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 13ம் தேதி தமிழ்நாட்டில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்த கருத்தானது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாகியது.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில், இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில், பிரபாகரனுடன் களத்திலிருந்து போராடிய போராளியான அரவிந்தனிடம், பிபிசி தமிழ் வினவியது.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை தான், இறுதிக் கட்ட முள்ளிவாய்க்கால் மோதலில் ஈடுபட்டதாக அரவிந்தன் தெரிவித்திருந்தார்.

''எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பது தான்" என அரவிந்தன் அன்றைய தினம் கூறியிருந்தார்.

அரவிந்தன் வெளியிட்ட இந்த கருத்தானது, உலகம் முழுவதும் பாரிய பேசுப் பொருளாக மாறியது.

இந்த நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என தன்னால் பிபிசிக்கு வெளியிடப்பட்ட கருத்தை அடுத்து, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அரவிந்தன், ஊடக சந்திப்பொன்றை நடத்தி இன்று (18) கூறியிருந்தார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இன்றைய தினம், நேற்றைய தினம் உட்பட சில தினங்களாகவே நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு நிலைமை காணப்படுகின்றது. பழ.நெடுமாறன் ஐயாவினுடைய, 'அண்ணன் வருகிறார்' என்ற கருத்துக்கு பதிலாக 'அண்ணன் இல்லை' என்ற கருத்தை நான் பிபிசிக்கு வழங்கியிருந்தேன். அதனைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் கருத்து கேட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசத்திலிருந்தும், இங்கே இருக்கக்கூடிய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய இன்பராசா அவர்களிடம் இருந்தும் ஒரு அச்சுறுத்தல் வந்தது.

நான் இராணுவத்தோடு பணியாற்றுவதாகவும், கருணாவோடு பணியாற்றுவதாகவும் வட்டுவாகலில் நின்று போராளிகளை காட்டிக் கொடுத்ததாகவும் அவர் சில கருத்துக்களை என்னிடம் தெரிவித்திருக்கிறார். அது சார்ந்து ஃபேஸ்புக் பதிவுகள் சிலதையும் அவர்கள் இட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்பில் நான் கரிசனைப்பட வேண்டிய தேவையில்லை. நான் உண்மையை பேச வேண்டியவனாக இருக்கின்றேன்.

இப்போதும் நான் சொல்கின்றேன், துவாரகாவையோ, சார்லஸையோ, அல்லது அண்ணியையோ, அண்ணணையோ, பாலசந்திரனையோ கொண்டு வந்து, என் முன் நிறுத்துவார்களாக இருந்தால், நான் (வெளியிட்ட கருத்துக்காக) தற்கொலை செய்துகொள்ளக்கூட தயாராக இருக்கின்றேன். உண்மையானவர்களாக, இதனை சொல்ல வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அண்ணன் இல்லை என்று கூறும் போது, எங்களுக்கு மிகுந்த வலியும், வேதனையும் ஏற்படக்கூடிய விடயம்." என அரவிந்தன் கூறினார்.

கந்தசாமி இன்பராசாவின் பதில்

கந்தசாமி இன்பராசா

பட மூலாதாரம்,INBARASA

 
படக்குறிப்பு,

கந்தசாமி இன்பராசா

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அரவிந்தனுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''நாங்கள் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஏன் தம்பி நீ இப்படி செய்தாய்" என்று முன்னாள் போராளியான அரவிந்தனிடம் தான் தொலைபேசியுடாக வினவியதாக அவர் கூறுகிறார்.

உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் கதைத்ததாகவும், தான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பில் வினவியபோது, தனக்கும், அரவிந்தனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு வந்ததாக அவர் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு,

பிரபாகரன் உயிர்: கடைசி யுத்தத்தில் போரிட்ட முன்னாள் போராளி பிபிசி தமிழுக்கு பேட்டி

பிரபாகரன் உயிருடன் உள்ளார் - கந்தசாமி இன்பராசா

நிச்சயமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''அவர் உயிருடன் இருக்கின்றார். காரணம் என்னவென்றால், அவரது இறந்த உடலை 12,000 போராளிகளுக்கு இலங்கை அரசாங்கம் காட்டவில்லை. அதனால், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியன இன்று வரை விடுதலைப் புலிகள் மீதான தடையை எடுக்காததும், அண்ணன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் என சொல்ல வேண்டும். நாங்கள் உண்மையைதான் சொல்கின்றோம். எங்களுடைய தேசிய தலைவர் உயிருடன் வந்தாலும், ஆயுத ரீதியாக வரமாட்டார். ஜனநாயக ரீதியாக வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் அவர் வரத்தான் போகிறார். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கத்தான் போகிறது. எங்கட தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை, ஜனநாயக ரீதியாக கிடைக்கத்தான் போகிறது" என தெரிவித்தார் கந்தசாமி இன்பராசா.

https://www.bbc.com/tamil/sri-lanka-64689647

 

தலைவருடன் நின்ற  போராளிகள்  சொல்லட்டும்  என்றோம்

இப்ப  இருவரும் இப்படி  சொல்கிறார்கள்  முரணாக...?

முடிவு???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Backfire என்று ஆங்கிலத்தில் ஒருவார்த்தை உண்டு என்று நெறிப்படுத்திய உளவுத்துறை அறியாமலா இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, ஏராளன் said:

கந்தசாமி இன்பராசாவின் பதில்

கந்தசாமி இன்பராசா

பட மூலாதாரம்,INBARASA

 

பிரபாகரன் உயிருடன் உள்ளார் - கந்தசாமி இன்பராசா

நிச்சயமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''அவர் உயிருடன் இருக்கின்றார். காரணம் என்னவென்றால், அவரது இறந்த உடலை 12,000 போராளிகளுக்கு இலங்கை அரசாங்கம் காட்டவில்லை. அதனால், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியன இன்று வரை விடுதலைப் புலிகள் மீதான தடையை எடுக்காததும், அண்ணன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் என சொல்ல வேண்டும். நாங்கள் உண்மையைதான் சொல்கின்றோம். எங்களுடைய தேசிய தலைவர் உயிருடன் வந்தாலும், ஆயுத ரீதியாக வரமாட்டார். ஜனநாயக ரீதியாக வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் அவர் வரத்தான் போகிறார். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கத்தான் போகிறது. எங்கட தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை, ஜனநாயக ரீதியாக கிடைக்கத்தான் போகிறது" என தெரிவித்தார் கந்தசாமி இன்பராசா.

https://www.bbc.com/tamil/sri-lanka-64689647

 

எங்கட இனத்தில் வஞ்சகர்களுக்குப் பஞ்சமேயில்லை! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, முதல்வன் said:

Backfire என்று ஆங்கிலத்தில் ஒருவார்த்தை உண்டு என்று நெறிப்படுத்திய உளவுத்துறை அறியாமலா இருக்கும்.

அண்ணா ஒரு த‌ம்பியாய் உங்க‌ளுக்கு சொல்லும் சின்ன‌ அட்வெஸ்

இப்ப‌டியான‌ திரிக்குள் நேர‌த்தை வீன் அடிக்காதைங்கோ...........கூட‌ எழுத‌ வெளிக்கிட்டா ர‌த்த‌ அழுத்த‌ம் கூடும்

இர‌ண்டு நாள் இதுக்கை நான் எழுதி வேண்டின‌து த‌ல‌ இடியை...............

நாம் என்ன‌ பால் குடி பிள்ளைக‌ளா எல்லாத்தையும் ந‌ம்ப அல்ல‌து எதுக்கும் த‌லை ஆட்ட‌............

5 minutes ago, நன்னிச் சோழன் said:

 

எங்கட இனத்தில் வஞ்சகர்களுக்குப் பஞ்சமேயில்லை! 

 

ச‌கோ இந்த‌ திரியை விட்டு நீங்க‌ளும் த‌ள்ளி நில்லுங்கோ..........எம்மை அறியாமையே கோவ‌ம் வ‌ரும்............பிற‌க்கு எம‌க்கு பாட‌ம் எடுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் மீது தேவை இல்லா விரிச‌ல் வ‌ரும்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய  அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான்.

 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, முதல்வன் said:

Backfire என்று ஆங்கிலத்தில் ஒருவார்த்தை உண்டு என்று நெறிப்படுத்திய உளவுத்துறை அறியாமலா இருக்கும்.

Eva Shop® Boomerang Australia 28 cm - Wurfspiel Flugspiel Wurfspiele  Bumerang aus hochwertigem Holz: Amazon.de: SpielzeugBoomerang போன்றது என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய  அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான்.

 

இணைப்புக்கு ந‌ன்றி மூத்த‌வ‌ரே
இப்ப‌ தான் இந்த‌ காணொளிய‌ பார்க்க‌ தொட‌ங்கிறேன்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
image

(ஆர்.ராம்)

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லையென்றால், அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் ஏன் மறுக்கின்றது என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எனது கடவுச்சீட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளது. தற்போது கணிசமான இடைவெளியில் எனது இருப்பினை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளும் தொடருகின்றன.

அவ்விதமான நபராக உள்ள நான் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆளாக எவ்வாறு இருக்க முடியும் என்றும் சீற்றமாக கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்ததன் பின்னரான சூழலில் இலங்கை இராணுவம் அதனை நிராகரித்துள்ளமை மற்றும் அக்கருத்துக்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்டுள்ள பிரதிபலிப்புக்கள் தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து  வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்ற பழ.நெடுமாறனின் கருத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகின்றேன். இதற்கு சில காரணங்கள் உள்ளன.  

முதலாவதாக, இறுதிப்போரின் போது பிரபாகரனுடன் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட போராளிகளில் யாரும் இதுவரையில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

அடுத்ததாக, இலங்கை இராணுவம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கை தங்களிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

இலங்கை இராணுவத்தினை பொறுத்தவரையில், அவர்கள் எமது எதிரிகள். அவர்களிடத்தில் உண்மையாகவே மரபணு பரிசோதனை அறிக்கை காணப்படுமாக இருந்தால், அதனை வெளியிடுவதில் தயக்கம் காண்பிப்பது ஏன் என்பதே பிரதான கேள்வியாகிறது. 

போர் நிறைவடைந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகின்ற நிலையில், இலங்கை இராணுவம் இன்னமும் பரிசோதனை அறிக்கையை வெளியிடத் தயங்குகின்றது என்றால் அதன் பின்னால் ஏதோ மர்மங்கள் உள்ளன என்பது வெளிப்படையான விடயமாகிறது.

இதேநேரம் தற்போது பிரபாகரன் இருப்பதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு வடக்கு, கிழக்கு மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பலர் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். உண்மையில் அது தவறானதாகும். எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அச்சத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்படும் என்பதே யதார்த்தமாகும்.

அதேநேரம் பிரபாகரன் நலமாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்தினை தொடர்ந்து நாம் எவருக்கோ எடுபிடிகளாக செயற்படுகின்றோம் அல்லது நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றோம் என்ற விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்திய மத்திய அரசாங்கத்தினால் அல்லது உளவுத்துறையினரால் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்கள். அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

நான் தாயகத்திலிருந்து வெளியேறி தமிழகத்துக்கு வருகை தந்த பின்னர் எனது கடவுச்சீட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிக்கப்பட்டது. நான் இந்தியாவுக்குள்ளே சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையில் தான் உள்ளேன்.

இது பலர் அறிந்திருக்காத விடயம். அதுமட்டுமன்றி, நான் இப்போதும் எனது இருப்பினை பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டிய நிலைமைகள் இருக்கின்றன. 

அவ்வாறான நிலையில் நான் மத்திய அரசாங்கத்தின் ஆளாக இருக்க முடியுமா?

அதேநேரம் தமிழகத்தில் உள்ள சில திராவிட சக்திகள் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவையாக உள்ளன. எம்மை பொறுத்தவரையில், எமது விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் மத்தியில் எவர் ஆட்சியில் இருந்தாலும், அத்தரப்புக்களுடன் முறையான அணுகுமுறைகளை செய்ய வேண்டியுள்ளது. 

இந்த நிலைப்பாட்டில் தான் பிரபாகரன் கூட இறுதியான காலத்தில் இருந்தார். அதற்கு அவருடைய இறுதி மாவீரர் உரையும் சான்றாகின்றது.

மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள இந்து ஆலயங்கள் பௌத்தத்தின் பெயரால் அதிகமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஆகவே, அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதால் என்னை ஒரு இந்து வெறியனாக சித்திரித்து பா.ஜ.க.வுடன் இணைத்துப் பார்க்கின்ற தரப்பினரும் உள்ளனர். அது தவறானதாகும்.

கள யதார்த்தத்தினை வெளிப்படுத்துகின்றபோது மத ரீதியான முத்திரை குத்தப்படுவது பொருத்தமற்ற செயற்பாடாகும். தாயகத்தில் பள்ளிவாசலோ தேவாலயமோ பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும்போது அதற்கு எதிராகவும் நான் குரல் கொடுப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/148545

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய  அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான்.

 

காணொளிய‌ இர‌வு முழுதாக‌  பார்த்தேன் சில‌ உண்மைக‌ளை உடைத்து பேசாட்டியும் 
ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவின் கூத்துக‌ளை தெளிவு ப‌டுத்தி இருக்கிறார்...............
இந்த‌ திரியில் பின் விளைவுக‌ள்  ப‌ற்றி தான் நான் அதிகம் எழுதினேன்............கோமாவில் இருந்து எழும்பி வ‌ந்த‌துக‌ளுட‌ன் வ‌ய‌தில் மூத்த‌வ‌ரும் என் கூட‌ கோவ‌ப் ப‌டும் வித‌மாய் ந‌ட‌ந்து கொண்டார்.............ப‌ழ‌ நெடுமாற‌னின் அறிக்கையால்  முத‌ல் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து ஈழ‌த்து எம் உற‌வுக‌ள் தான்...............

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of 1 person

இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!

வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...

துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...

கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...

முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...

தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...

இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...

அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...

எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!

அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!

Nellai Nellaiyaan

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இருக்கிறாரோ – இல்லையோ: இலங்கையின் வடக்கும் – கிழக்கும் மோடியின் கைகளில்..!

7-17.jpg

இலங்கையைப் பொறுத்தவரை வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாண மக்கள் நம்பியிருக்கிறார்கள். என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம். 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சுட்டிகாட்டியிருக்கிறார்.

பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பது பற்றி பழ.நெடுமாறன் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அண்ணாமலை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து 13ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும்,இலங்கையில் இப்போது இந்தியப் பிரதமர் மோடியே பேசுபொருளாக உள்ளார். அண்மையில் இந்திய மத்திய இணை அமைச்சர் முருகன் இலங்கை சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மண்டபத்தை இலங்கை மக்களுக்கு, அதாவது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.

அங்கு வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. அந்த மாகாண மக்களும் அவரையே நம்பியுள்ளனர். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.

பலாலியில் விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுகம், மன்னாரூடாக இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து, யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டொலர் செலவில் கலாசார மண்டபம், கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து தண்டவாளம் என்று எங்கு பார்த்தாலும் இந்திய அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தம்தான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இலங்கைக்குச் சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இந்த விடயத்தை அந்தநாட்டு அரசாங்கத்திடம் உறுதியாகத் தெரிவித்து வந்திருக்கின்றார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தேவை மாகாணத்துக்கான அதிகாரங்கள் தான். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவை. இலங்கை சென்றிருந்த மத்திய இணை அமைச்சர் முருகனும் இது தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருந்தார். நிறைய விடயங்கள் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பது பற்றி பழ.நெடுமாறன் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
 

 

https://akkinikkunchu.com/?p=238713

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

 

தலைவருடன் நின்ற  போராளிகள்  சொல்லட்டும்  என்றோம்

இப்ப  இருவரும் இப்படி  சொல்கிறார்கள்  முரணாக...?

முடிவு???????

 

“தலைவர் கிருஷ்ணர் வரம்பெற்றவர்: அவருக்கு சாவு இல்லை”

image_8db48bb61f.jpg

 கனகராசா சரவணன்

விடுதலைப் புலிகள் தலைவருடன் பழநெடுமாறன் 40 வருடகாலமாக  நெருங்கிய தொடர்புடையவர் அவருக்கு மேல் இடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கலாம். அதேவேளை, கிருஷ்ணர் வரும் பெற்றவர் தலைவர். அவருக்கு சாவு என்றுமே இல்லை  அவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது ஜனநாயக ரீதியில் எமது மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே அவர் தோற்றம் பெறுவார் என  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் கே. இன்பராசா தெரிவித்தார்.

அம்பாறை காரைதீவில்   வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தற்போழுது பெசும்பொருளாக இருக்கும் விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் தொடர்பாக பழ.நெடுமாறன் இவ்வாறான செய்தியை விட்டிருப்பதென்பது தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்வியுடன் ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது என்றார்.

இன்று தலைவர் தொடர்பான விடயத்தில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில்தான் தலைவரின் விடயத்திலும் இருக்கின்றது. அனைத்து மதங்களும் கடவுள் இருக்கின்றார் என்ற ஏதோவொரு நம்பிக்கையில் தான் செயற்படுகின்றன என்றார்.

அதேபோல யேசுநாதர் பிறந்தார் மக்களுக்காக கஸ்டப்பட்டார் அவரை கடவுளாக மக்கள் வனங்கி கொள்கின்றனர் அதே மாதிரி கிருஷ்ணன் பிறந்த வரலாறு புத்தர் பிறந்த வரலாறு இருக்கின்றது. அதுபோல தேசிய தலைவரின் வரலாறு இருக்கின்றது. எங்கள் தேசியத் தலைவர் ஒட்டு மொத்த போராளிகள் மட்டுமல்ல எமது மக்களின் இதையத்தில் அன்று தொட்டு இன்று மட்டுமல்ல என்றும்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அவர் இல்லை என்று சொல்வதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நடக்கின்ற விடயங்கள் எல்லாம் எமது தலைவர்களால் தீர்க்க தரிசனமாக 1990களிலேயே சொல்லப்பட்டவை. ஓரு கட்டத்தில் எமது போராட்டம் பல நாடுகளின் உதவியுடன் நசுக்கி ஆயுதம் மௌனிக்கப்படும் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம் தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற சர்ச்சை வரும் அக்காலத்தின் பின் எமது தலைவரின் பெயர் ஏதொவொரு வகையில் வெளிவரும் அந்த சமயத்தில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வொன்று தலைவர் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் என அன்று கபிலஅம்மான் எமக்கு படம் கற்பிக்கும் போது  தீர்கத்தரிசனமாக சொல்லப்பட்டது என்றும் இன்பராசா தெரிவித்தார்.

தலைவர் இல்லை என்று அரசாங்கம் சொல்லட்டும். இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை, கைது செய்யப்பட்டவர்கள் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களில் சிலர் தற்போது வந்தார்கள், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் என்றார்.

ஒரு விடுதலையை நோக்கிப் போராடிய இயக்கம். போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று பதின்மூன்று வருடங்களாக எந்தவித ஆயுதமேந்திய போராட்டங்களையும் மேற்கொள்ளாத நிலையில் எமது இயக்கத்தின் போராட்டத்தை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை அங்கிகரிக்க வேண்டும். அந்த இயக்கம் எதற்காகப் போராடியதோ அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும் அந்த நியதி இருக்கின்றது என்றும் இன்பராசா மேலும் தெரிவித்தார்.

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இன்றுவரை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் இயங்கவில்லை என்ற ரீதியில் நாங்கள் நேர்மையானவர்கள், நேர்த்தியானவர்கள் என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு எமது தேசியத் தலைவரின் கோட்பாட்டின் கீழ் ஜனநாயக ரீதியில் அனைத்து நாடுகளும் இணைந்து தலைவரின் வழிநடத்தலில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தை அவரின் கைகளில் வழங்கும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இன்பராசா தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/தலைவர்-கிருஷ்ணர்-வரம்பெற்றவர்-அவருக்கு-சாவு-இல்லை/175-312629

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையும் திரியோடு சம்பந்தப்படுவதால் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration of 1 person

இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!

வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...

துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...

கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...

முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...

தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...

இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...

அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...

எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!

அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!

Nellai Nellaiyaan

த‌மிழ் சிறி அண்ணா 
இதை எழுதின‌து ப‌ழைய‌ யாழ்  க‌ள‌வு உற‌வு நெல்லையன் அண்ணாவா 

நேர்மையான‌ ந‌ல்ல‌ உற‌வு 

முக‌ம் பார்காட்டியும் ந‌ல்ல‌ உற‌வு போல் என் ம‌ன‌தில் இருக்கிறார்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா 
இதை எழுதின‌து ப‌ழைய‌ யாழ்  க‌ள‌வு உற‌வு நெல்லையன் அண்ணாவா 

நேர்மையான‌ ந‌ல்ல‌ உற‌வு 

முக‌ம் பார்காட்டியும் ந‌ல்ல‌ உற‌வு போல் என் ம‌ன‌தில் இருக்கிறார்.................

பையன்...  அவர் தனது முகநூல் பக்கத்தில், 
இந்தத் கவிதைக்கு மேல் Copy என்று எழுதியுள்ளமையால் 
வேறு எவரோதான்.. இந்தக் கவிதையை எழுதியுள்ளதாக ஊகிக்கின்றேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

பையன்...  அவர் தனது முகநூல் பக்கத்தில், 
இந்தத் கவிதைக்கு மேல் Copy என்று எழுதியுள்ளமையால் 
வேறு எவரோதான்.. இந்தக் கவிதையை எழுதியுள்ளதாக ஊகிக்கின்றேன். 

அப்ப‌டியா தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.