Jump to content

விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

வேலைக்கு போக முதல்… விபத்தை ஏற்படுத்தியவனுடன்
சாதாரணமாக கதைக்கலாம் என்ற மன உணர்வுடன்தான் சென்றேன்.
ஆனால்… அவன் என்னை கண்டு ஒளித்த போது,
அவனை கூப்பிட்டு கதைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டது.
தவறு செய்தவன் தானே… என்னிடம் வந்து கதைக்க வேண்டும்.
நானாக போய் கதைப்பது… சரியல்ல என்பது எனது அபிப்பிராயம். 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். 🙂
 

உங்கள் எண்ணம் எதுவோ தெரியவில்லை.

அவரது இடத்தில் யாராக இருந்தாலும் இப்படித் தான் செய்வார்கள்.

உங்கள் இடத்தில் நான் இருந்தால் முதல்நாள் கண்டவுடனேயே கூப்பிட்டு கதைத்திருப்பேன்.

நீண்ட நாட்களின் பின் உங்களைக் கண்டதும் நீங்கள் கதைக்காததும் அவனுக்கு இன்னும் மன உழைச்சலாக இருக்கும்.

இதனாலேயே மீண்டும் மீண்டும் விபத்துக்களும் நேரலாம்.

நீங்கள் அழைத்து கதைத்தால் அழுவார் என எண்ணுகிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 23:41, ஈழப்பிரியன் said:

10 கிலோ என்பது மிகவும் அதிகம்.

நாளாக நாளாக முழங்கால் வலிகள் ஏற்படலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே டாக்ரர் உள்ளதால் நாங்கள் எழுத தேவையில்லை.

இருந்தும் ஏதோ எழுத வேண்டும் போல இருந்தது.

ஏன் தம்பி காலில் நகம் இல்லையா?

நிறை கூடிய பின்…
ஆசையாக தேடித் தேடி வாங்கிய கால் சட்டைகள் எதுவுமே அளவில்லை.
நிறை குறையும் என்ற நம்பிக்கையில், அதனை பத்திரப் படுத்தி வைத்துள்ளேன்.
இப்போ வேலைக்குப் போடுவதற்காக… புதிய கால் சட்டைகள்,
ஜக்கெற் போன்றவை வாங்க வேண்டி வந்தது. 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 03:07, nunavilan said:

தமிழ் சிறி மீண்டும் வேலைக்கு போனதை இட்டு மகிழ்ச்சி.  வேலைக்கு போனால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது தான். உங்களுக்கு தான் உங்களின் நிலை தெரியும்.  உடலின் எடை கூடினால் கால்களுக்கு தான் (முழங்காலுக்கு) அழுத்தம் கூட. ஆகவே முயற்சி செய்து எடையை குறைக்க முயலுங்கள். 

நன்றி நுணாவிலான்.
நீங்கள் சொல்வது  நூறு வீதம் உண்மை.
வேலைக்குப் போவதால்… மனம், உடலில் பெரிய மாற்றம் தெரிகின்றது. 👍🏽

On 14/2/2023 at 04:44, ராசவன்னியன் said:

ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி.👌

வயசு போன காலத்தில், "அங்கே ..இங்கே"ன்னு பராக்கு பார்க்காமல், சிரத்தையுடன் அலுவலக அறைக்குள் வேலையில் கவனம் செலுத்தவும். 😜

நன்றி ராஜவன்னியன். 🙂
வேலைக்குப் போறதே… பாதி நேரம் பராக்குப் பார்க்கவும், விடுப்பு கதைக்கவும்தானே… 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 08:18, தனிக்காட்டு ராஜா said:

ஒரு போட்டோவ இணைச்சா குறைஞ்சா போவியள்😍😍 நாங்களும் பார்த்து ரசிப்புத தானே தவிர 

வரவிற்கும், கருத்திற்கும்… நன்றி முனிவர் ஜீ. 🙂

On 14/2/2023 at 08:34, முதல்வன் said:

மகிழ்ச்சி சிறி அண்ணை. எழுதுங்கள்.

நன்றி முதல்வன். 🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

நிறை கூடிய பின்…
ஆசையாக தேடித் தேடி வாங்கிய கால் சட்டைகள் எதுவுமே அளவில்லை.
நிறை குறையும் என்ற நம்பிக்கையில், அதனை பத்திரப் படுத்தி வைத்துள்ளேன்.
இப்போ வேலைக்குப் போடுவதற்காக… புதிய கால் சட்டைகள்,
ஜக்கெற் போன்றவை வாங்க வேண்டி வந்தது. 🙂

நிறை கூடுனால் திரும்பவும் இறக்குவது மிகவும் சிரமம்.

உங்கள் வீட்டிலேயே டாக்ரர் உள்ளபடியால் இதைப் பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை.

நீங்கள் நலமாக இருக்க வேண்டும்.அவ்வளவே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 09:08, விசுகு said:

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி மீண்டும் எழுந்து நின்று காட்டியதற்கு 

நன்றி விசுகர். 
உண்மைதான். நடந்த  சில சம்பவங்களை மீண்டும் நினைக்கும் போது
பெரிய அச்ச உணர்வும், விரக்தியும் ஏற்படும்.
ஏதோ… மருத்துவ மனையிலும், Reha விலும் கிடைத்த ஆறுதல் வார்த்தைகளும்,
ஊக்கமான செயல் பாடுகளும் அதிலிருந்து பெருமளவு மீட்டுத் தந்தது.
கடந்த 15 மாதங்களாக…  எனக்கு 300 பேருக்கு மேல் தெரப்பி செய்திருப்பார்கள்.
அத்தனை பேரும்… வித்தியாசமான அணுகு முறையை கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. 🙂

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 09:38, புங்கையூரன் said:

இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

நன்றி புங்கையூரான். 
வேலை இடத்திலும்…. விபத்து நடந்ததை நேரில் பார்த்தவர்கள்.. என்னை பலசாலி எனவும்
மீண்டும் திரும்ப நடப்பேன் என்று எதிர் பார்க்கவில்லை என்றும் சொன்னார்கள்.
வைத்தியர்களுக்கும், நேர்ஸ் மாருக்கும், தெரப்பி செய்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தித்தவர்களுக்கும், அந்த இறைவனுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை இடித்தவன்  வேணுமென்று செய்திருக்க மாடடான் எதோ அவதானபிழைபோல ...யாரிடமாவது தூது விடுங்கள் அவனை மன்னித்து விட்ட்தாக. அவனுக்கும் அச்ச உணர்வு இருக்கும் தானே. . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 18:20, alvayan said:

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

 உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று.

 தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி

வரவிற்கும், அக்கறையான கருத்து பகிர்விற்கும்  மிக்க நன்றி அல்வாயன். 🙂

22 hours ago, நந்தன் said:

சந்தோசம் சிறியர் 

நன்றி நந்தன். 🙏

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் மறபடியும் வேலைக்கு திரும்பி சென்றதில் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

மிக்க  நன்றி விளங்க நினைப்பவன். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாயினி said:

மீண்டும் வழமைக்கு திரும்புவதையிட்டு மிகவும் சந்தோசம் சிறியண்ண..என்ன றீகாப்பிலயா காலுக்கு நிறம் தீட்டப் பழக்கி விட்டவே.✍.அப்பிடியான இடங்களில் நேரத்தை போக்காட்ட ஏதாவது பழக்கு வீனம்.👋😆

வரவுக்கு நன்றி யாயினி.
ஐயோ… அது என்ரை கால் இல்லை. கூகிளில் எடுத்த படம்.
றீகாப்பில்…. சில கைவினைப் பொருட்கள் செய்ய பழக்கினார்கள்.
நான் பாண் வைக்கும் கூடையும், தோட்டத்தில் வைக்க மரத்தால் ஆன குருவிக் கூடும் செய்தேன். 🙂
சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை.

அப்ப கையுகு?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அப்ப கையுகு?

மீண்டும் கடுப்பு ஏத்துகிறார்கள். 😂 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்கள் எண்ணம் எதுவோ தெரியவில்லை.

அவரது இடத்தில் யாராக இருந்தாலும் இப்படித் தான் செய்வார்கள்.

உங்கள் இடத்தில் நான் இருந்தால் முதல்நாள் கண்டவுடனேயே கூப்பிட்டு கதைத்திருப்பேன்.

நீண்ட நாட்களின் பின் உங்களைக் கண்டதும் நீங்கள் கதைக்காததும் அவனுக்கு இன்னும் மன உழைச்சலாக இருக்கும்.

இதனாலேயே மீண்டும் மீண்டும் விபத்துக்களும் நேரலாம்.

நீங்கள் அழைத்து கதைத்தால் அழுவார் என எண்ணுகிறேன்.

 

47 minutes ago, நிலாமதி said:

உங்களை இடித்தவன்  வேணுமென்று செய்திருக்க மாடடான் எதோ அவதானபிழைபோல ...யாரிடமாவது தூது விடுங்கள் அவனை மன்னித்து விட்ட்தாக. அவனுக்கும் அச்ச உணர்வு இருக்கும் தானே. . 

நீங்கள் சொல்வதும் சரிதான்.
அவர் வேறு பகுதியில் வேலை செய்வதால்… அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.
அடுத்த முறை… நேரில் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கதைக்கின்றேன். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

வரவுக்கு நன்றி யாயினி.
ஐயோ… அது என்ரை கால் இல்லை. கூகிளில் எடுத்த படம்.
றீகாப்பில்…. சில கைவினைப் பொருட்கள் செய்ய பழக்கினார்கள்.
நான் பாண் வைக்கும் கூடையும், தோட்டத்தில் வைக்க மரத்தால் ஆன குருவிக் கூடும் செய்தேன். 🙂
சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை. 😂 🤣

சரி இதுக்கு போய் சத்தியம் எல்லாம் வேணாம்.எனக்கு தெரியும் றீகாப்பில் முக்கியமாக மேலும் உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஏற்றால் போல் சிலவற்றைப் பழக்குவார்கள்..மறுபடியும் சக பணியாளரோடு பேசிக்கொள்வது நல்லது..யாரும் தெரிந்து கொண்டு எந்த தவறும் விடுவதில்லை தானே.

பேசி பார்த்தால் தொடர்ந்து பேச விருப்பப்டுபவர் போன்று இருந்தால் பேசுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.👋

.உங்கள் அவதானக்குறைவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லயா.✍.கோவிக்க வேணாம்.சொல்ல வேண்டும் போல் இருந்தது.😆👋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

அவர் வேறு பகுதியில் வேலை செய்வதால்… அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.
அடுத்த முறை… நேரில் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கதைக்கின்றேன்.

15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம்.

சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும்.

மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது.

வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன.

அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன்.

கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது.

காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா?

அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார்.

ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், 

ஆம் என்றார்.

அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன்.

அதுவரை என்ன  நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார்.

நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார்.

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார்.

நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்).

இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:


 

நன்றி நிழலி.
முதலே சொன்ன பின்பும்.. கடுப்பேத்துறார், மை லாட். 😂

..இல்லாவிடின் எப்படி எனக்கு சாப்பாடு செமிக்கும்? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 20:17, யாயினி said:

சரி இதுக்கு போய் சத்தியம் எல்லாம் வேணாம்.எனக்கு தெரியும் றீகாப்பில் முக்கியமாக மேலும் உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஏற்றால் போல் சிலவற்றைப் பழக்குவார்கள்..மறுபடியும் சக பணியாளரோடு பேசிக்கொள்வது நல்லது..யாரும் தெரிந்து கொண்டு எந்த தவறும் விடுவதில்லை தானே.

பேசி பார்த்தால் தொடர்ந்து பேச விருப்பப்டுபவர் போன்று இருந்தால் பேசுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.👋

.உங்கள் அவதானக்குறைவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லயா.✍.கோவிக்க வேணாம்.சொல்ல வேண்டும் போல் இருந்தது.😆👋

வவுனியாவில் மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியர்!! – வவுனியா நெற் 

யாயினி... என்னை, சத்தியம் பண்ண  வேண்டாம் என்று சொல்லிவிட்டு...
திரும்பவும் என்னை சத்தியம் பண்ண தூண்டுகிறீர்கள். 😁

இந்த விபத்து, மற்றவரின் அவதானாக் குறைவால் நடந்தது.  🙂
இது... சத்தியம், சத்தியம், சத்தியம். 🙂
வேணுமென்றால்...  கையில்,  கற்பூரம் கொழுத்தி  சத்தியம் பண்ணுகிறேன். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள்.

நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் முருக்க மரம் எறியதுக்கு வாழ்த்துக்கள்.

அந்த ஒளிந்து கொண்ட, ஆளை தேடிப் பிடித்து, என்னப்பா, அடுத்து யாரு எண்டு கேட்டு வையுங்கோ.

இந்த 15 மாதமும் உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருந்த கள உறவுகளுக்கு நன்றிகள். 

29 minutes ago, nedukkalapoovan said:

இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள்.

நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம். 

சிறியர் விசுவாச மடையர் இல்லை. 😁

வீட்டில் இராமல், சும்மா பம்பலுக்கு போய் இருக்கிறார். 😜

இதனிடையே, போனவருசம், ஏப்ரல் முதலாம் திகதி இந்திய, இலங்கை அரசுகளையே விழி பிதுங்க வைத்தார்.🤣

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 20:31, vasee said:

15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம்.

சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும்.

மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது.

வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன.

அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன்.

கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது.

காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா?

அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார்.

ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், 

ஆம் என்றார்.

அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன்.

அதுவரை என்ன  நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார்.

நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார்.

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார்.

நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்).

இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).

Thumbs Up.gif | Trouble Free Pool

நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்...
வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். 

//மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.//


நீங்கள், கூறியற்றவைத்தான்  விபத்தை ஏற்படுத்தியவரும் 
மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂

சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை 
வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது 
மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁

animiertes-telefon-bild-0002.gif                       animiertes-telefon-bild-0105.gif

கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் 
பல தடவைகள் தொடர்பு  கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... 
இவன்  ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான்.
அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎

animiertes-polizei-bild-0004.gif

இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும்,
Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர்  
நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே  வந்து...  

animiertes-richter-bild-0050.gif   

அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு..
தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், 
ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள்.

animiertes-richter-bild-0041.gif

நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது...
அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும்,
அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... 
ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள்.

நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... 
காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன்.
அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு 
"சிப்பிலி"  ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது...
அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும்,
அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... 
ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள்.

நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... 
காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன்.
அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு 
"சிப்பிலி"  ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

எனக்கு சட்டம் தெரியாது, ஆனால் இது ஒரு பாரதூரமான குற்றம் என நினைக்கிறேன் (crime negligence).

அவர் மீது வழக்கு தாக்கல் செய்யாமல் விட்டு விட்டமையால் அவர் தப்பித்தார் என நினைக்கிறேன், நீங்கள் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறீர்கள், உங்களது குடும்பத்தினரும் தான். உங்களுக்கு வேலையிலிருந்து நட்ட ஈடு கிடைக்கவில்லையா?(சரியாக தெரியவில்லை எனது கருத்து தவறாக இருக்கலாம்), 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணை  மீண்டும் வேலைக்கு போவது மிகவும் மகிழ்வான விடயம் ...உங்களுக்கு தாக்குதல் எற்படுத்தியவனும்.   நீங்களும் முன்பு ஒரே பகுதியில் வேலை செய்தீர்கள். ...இப்போது மாத்தி விட்டார்களா   ? அதுவும் நல்லது தான்  சிலசமயம். நீங்கள் அவனுக்கு சாத்தவும்.  கூடும்   🤣 அவனுக்கும். கூட அந்த பயம் இருக்கலாம்  ...மனிதாபிமானம் வேண்டும் தான்...அது ஏற்கனவே வழக்கு போடமால் விட்டதில். காட்டப்பட்டுள்ளது..இனி நீங்கள் வழியப்போய். கதைப்பது அழகு இல்லை   ஏனெனில் உங்களில் பிழை என்று ஒரு விம்பம். எற்பட வாய்ப்புகள் உண்டு”  ஆனால் அவன் மன்னிப்பு கேட்டு கதைத்தால். தொடர்ந்தும். பழைய மாதிரி  பாழாகி கொள்ளலாம்...எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டும்  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை, தொடருங்கள்!  மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை, மன்னிப்பது மகா மகா பெருந்தன்மை. சிலர் தம் தவறை மற்றவர்மேல் போட்டு தப்பித்துவிடுவார் இது பெரும்பாலும் பலரில் காணலாம் தற்போது, அல்லது அதற்கொரு விளக்கம் கொடுப்பார். இன்னும் சிலர் குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் தம்மையே வருத்திக்கொண்டும், தவித்துக்கொண்டும் எப்படி அதிலிருந்து விடுபடுவது என்று தெரியாமலும் ஒதுங்கியிருப்பர். சிலநேரம் அது மிகவும் இலகுவானது ஆனால் பயம் விடாது அல்லது இப்படி ஒரு வழி இருக்கிறது என்பது புரியாமல் அவர்கள் பழிவாங்கி விடுவார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்கிற உணர்வு. சிலநேரம் ஈகோ. ஒவ்வொருவரின் மனநிலை, ஏற்றுக்கொள்ளும் தன்மையிலுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

Thumbs Up.gif | Trouble Free Pool

நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்...
வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். 

//மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.//


நீங்கள், கூறியற்றவைத்தான்  விபத்தை ஏற்படுத்தியவரும் 
மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂

சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை 
வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது 
மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁

animiertes-telefon-bild-0002.gif                       animiertes-telefon-bild-0105.gif

கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் 
பல தடவைகள் தொடர்பு  கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... 
இவன்  ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான்.
அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎

animiertes-polizei-bild-0004.gif

இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும்,
Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர்  
நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே  வந்து...  

animiertes-richter-bild-0050.gif   

அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு..
தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், 
ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள்.

animiertes-richter-bild-0041.gif

நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது...
அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும்,
அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... 
ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள்.

நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... 
காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன்.
அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு 
"சிப்பிலி"  ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

வேண்டாம் தமிழ்சிறி..!

நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்!

அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்டும் வேலையில் சேந்தமை மகிழ்ச்சி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.