Jump to content

கல்முனை சாய்ந்தமருதுவின் பிரதான போதைப்பொருள் வியாபாரி வெள்ளையனும் சகோதரியும் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

ஹொரோயின்  போதைப்பொருள் முகவராக   செயற்பட்டார் எனக் கூறப்படும் இளைஞர் மற்றும் பெண் ஆகியோரை  ட்ரோன் , நவீன ஸ்கேனர் கருவிகளுடன்  கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Kalmunai.jpg

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரினுக்கு (40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இன்று (13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி  வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படும்  முஹமட் ஹனீபா அர்சாத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து  கைது செய்தனர்.

Kalmunai-4.jpg

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை அளவிடம்  இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகள்  கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் கடந்த மாதம்  13  ஆம் திகதி வீதியில்  சென்ற பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றினால் மோதிய பின்னர் தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kalmunai-2.jpg

மேலும் இச்சந்தேக நபர் அக்கரைப்பற்று நிந்தவூர் கல்முனை பெரிய நீலாவணை மருதமுனை சம்மாந்துறை பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும்  பிரதான வியாபாரி என பொலிஸார் குறிப்பிட்டனர்.

 சந்தேக நபரின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடுகள் பொலிஸாரின் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் இன்று (13)   பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Kalmunai-3.jpg

இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஸீன் பக்கீர்   ஆலோசனையில்    கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப்  தலைமையில் சென்ற  பொலிஸ் சார்ஜன்ட்களான எம்.எம்.எம். அன்வர்  (63037) பொலிஸ் கன்ஸ்டபிள்களான வை.நவராஜ் (8475) எம்.இஷாக்(76433) ராஜபக்ஸ ( 86765) எஸ்.தர்சீகன்(99058)ஆர்.ஹேமானந்த(99059)  வாகனச் சாரதி ஏ.எச்.எம் ஹம்தான் (80994)   குழுவினர் இணைந்து  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2  சந்தேக நபர்களான சகோதரன், சகோதரியை   கைது செய்துள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையின்போது கல்முனை பகுதி செயிலான் வீதியில் அமைந்துள்ள சந்தேக நபரின்  சகோதரியின்  வீடு மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள  சந்தேக நபரின்  வீடும் பொலிஸ் குழுக்களினால்  சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

Kalmunai-1.jpg

இதன்போது ஒரு தொகுதி போதைப்பொருட்கள் 2 அதி நவீன ஸ்கேனர்கள் சிசிரிவி டிவீஆர் உபகரணம்  பதிவு செய்யப்படாத ட்ரோன் பறக்கும் சாதனம் உள்ளிட்டவைகள் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டன.

குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபரின் சகோதரியான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கல்முனை தலைமையக  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு   விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

கல்முனை சாய்ந்தமருதுவின் பிரதான போதைப்பொருள் வியாபாரி வெள்ளையனும் சகோதரியும் கைது! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி  வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படும்  முஹமட் ஹனீபா அர்சாத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து  கைது செய்தனர்.

ம்ம்.... வெள்ளையன் ஆன முஹமட் ஹனீபா! பெயரையே உருமாற்றி செய்கிறார்கள். அதிலும் தமிழ்ப்பெயர் வேண்டும் ஆனால் சேர்ந்து மட்டும் வாழ மாட்டோம். போதைப்பொருள் வியாபாரி என்கிறார்கள் அதைக்காட்டவில்லையே, வேறெதையோ காட்சிப்படுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கத்தில செல்லியிருக்காங்களா வாப்பா

குடு வெக்க செல்லி

அதனா வெள்ளையன் எண்டு காக்கா பெயரை மாத்தினவர்…!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் போதை வியாபாரிக்கு, அசல் தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறார்கள். 😡

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.