Jump to content

தப்பிப் பறந்த சிட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

IfgeMY.jpg


ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அம்மாவின் பணம் மற்றும் சிலரிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வீட்டை செம்மையாக திருத்தி எழுப்பியிருக்கிறார். அப்போது இப்பெண் இவரை அழைத்து “ஏன் உங்களிடம் 25 லட்சம் கூட சேவிங்க்ஸாக இல்லையா? இப்படித்தான் நகையை விற்பீர்களா?” என்று பிரச்சினை பண்ணியிருக்கிறாள். இதே போல தொடர்ந்து பணம் குறித்து பல்வேறு விசாரணைகள், மிரட்டல்கள், எதையாவது மறுத்துப் பேசினால் அழுது ஒரே டார்ச்சர். இவரும் அவளுக்கு முதிர்ச்சியில்லை, வீட்டில் வளர்ப்பு சரியில்லை போல என பொறுத்திருக்கிறார். இவரது அம்மாவும் அவளை அழைத்து அறிவுரைத்திருக்கிறார். அவளோ தொடர்ந்து அதே போல மிரட்டல், கத்தல், அழுகை என நவரசங்களை காட்டி கலங்கடிதிருக்கிறார். கடைசியாக திருமணத்துக்கு முன்பு இவரது அம்மா, சகோதரி மற்றும் உறவினர்களுக்கு புது துணியெடுத்துக் கொடுத்ததற்கு “ஏன் இப்படி உன் பணத்தை வீணடிக்கிறாய்? இப்போதே இப்படியென்றால் கல்யாணத்துக்குப் பின்னால் எப்படி கட்டுப்பாடாக இருப்பாய்? உன்னைக் கட்டிக்கொண்டு நான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?” எனக் கேட்டு தகராறு பண்ணியிருக்கிறார். இவரால் திருமணம் இவ்வளவு நெருங்கி வந்த பிறகு அதை ரத்து பண்ணவும் மனம் வரவில்லை. அது தவறு எனும் உறுத்தல். இன்னொரு பக்கம் அப்பெண்ணின் டார்ச்சரால் நிம்மதியே இல்லை. என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தத்தளித்தபடி இருந்தவர் பேஸ்புக்கில் என் பதிவைப் படித்து மனம் தெளிந்திருக்கிறார். அப்பெண்ணை அழைத்து “முடியாது” என்று உறுதியாக சொல்லி திருமணத்தையும் ரத்து பண்ணியிருக்கிறார். 

இதை அவர் தன் நண்பர்களிடம் சொன்ன போது “நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாலே தப்பித்து விட்டாய்” என்று பாராட்டியிருக்கிறார்கள். நானும் “நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க” என்று சொன்னேன். “என் நண்பர்கள் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள், தப்புக்க முடியாது” என்று சிரித்தார். “உங்களுக்கு நன்றி சொல்வதற்காகத் தான் அழைத்தேன்.” என்றார்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் கிடைத்த போது நான் இந்தளவுக்கு மகிழ்ந்ததில்லை. என் படைப்புகள் பலமுறை பாராட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் எனக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டு இது தான். என்னால் முதன்முதலாக இச்சமூகத்துக்கு ஒரு பயன் ஏற்பட்டிருக்கிறது. இது போதும்!
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கில் அவரின் பதிவு என்னவாக இருக்கும்....... ஹீ ....ஹீ ......நானும் முயன்றுபார்க்கலாம் என்றுதான்.......!   😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கலியாணம்கட்டிய காலத்தில் அபிலாசை எனக்கு தெரியாது மற்றும் அபிலாஷ் இப்படி எழுதி அது என் கண்ணில் படாமல் போய்விட்டதே என்று கவலைப்படுகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

பேஸ்புக்கில் அவரின் பதிவு என்னவாக இருக்கும்....... ஹீ ....ஹீ ......நானும் முயன்றுபார்க்கலாம் என்றுதான்.......!   😴

இந்த இணைப்பில் சில கட்டுரைகள் இருக்கு, வாசித்துப் பாருங்கள் அண்ணை.

 

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் கலியாணம்கட்டிய காலத்தில் அபிலாசை எனக்கு தெரியாது மற்றும் அபிலாஷ் இப்படி எழுதி அது என் கண்ணில் படாமல் போய்விட்டதே என்று கவலைப்படுகிறேன்..

ஏன் புலவரே அவ்வளவு கடினமா குடும்பம் நடத்துவது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன் .......!   👍

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.