Jump to content

சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர்

இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

swiss-300x200.png

சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார்.

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது.

அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து பொலிஸார் அங்கு சென்ற போது பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/240077

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் பொது இடத்தில் கொலை செய்யும் அளவுக்கு என்றால்.. ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.