Jump to content

விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு

 
20210712_232614.jpg

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை  நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. 

இந்த மானுடம்  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும்  கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில்  விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் தன்மை கொண்டவை. 

பொதுவாக வாழ்க்கை என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. இதில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் தனக்கான உயிர்வாழ்ப் பாதையினை இயற்கை கொடுத்த வழியில் வாழ்ந்து, தங்களுடைய இறுதி நிலையினை இயற்கை விட்ட வழியில் எய்துகின்றன. இதற்கு எதிராக அவைகள் சுயநினைவினை இழந்து, வேண்டுமென்று பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, தன்னுடைய வாழ்வினை இடையில் அதாவது தற்கொலையில் முடித்துக் கொள்வதில்லை. இவைகள் அனைத்தும் பெரும்பாலும் இயற்கை மரணத்தையும் சில நேரங்களில் அகால மரணங்களை அடையுமே தவிர, எவையும் தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதில்லை. இவை அபூர்வத்திலும் அபூர்வம். 

ஆனால்,  சில மனிதர்கள் மட்டுமே  வாழ்விற்கு முரணான வகையில் இந்தத் தற்கொலைகளையும் அதன்  எண்ணங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். 

மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு இரண்டு மரணங்கள் உண்டு. ஒன்று, இயற்கை மரணம். இன்னொன்று, தவிர்க்கமுடியாத அகால மரணம். இதில் மூன்றாவதான தற்கொலை மரணம் என்ற எண்ணம் இந்த விலங்கு  உயிரினத்திற்கே பொருந்தாத ஒன்று. 

ஆனால், மனிதன் மட்டுமே மூன்று வகையான மரணத்திற்கு உரிமை உள்ளவனாக இருக்கிறான். ஒன்று இயற்கை மரணம், இரண்டாவது அகால மரணம், மூன்றாவது தற்கொலை மரணம். இதில் மூன்றாவது மரணம் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தும். 

தற்கொலை விடயத்தில் ஏன் விலங்கினங்களை மனிதனுடன் ஒப்பிட வேண்டும் என அய்யம்  எழலாம். அதாவது, விலங்கினங்கள் ஐந்து அறிவு கொண்டவை. மனிதன் ஆறு அறிவு கொண்டவன். இவை இப்படி இருக்கையில், ஏன் இந்த ஒப்பிடுகை எனச் சிந்திக்க வேண்டும்.  தொடக்கத்தில் சொன்னதைப் போன்று தற்கொலை மரணங்கள் மனிதனுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. ஆனால், விலங்குகளுக்கு இவை இல்லவே இல்லை. இன்னொன்று, அதற்கு அப்படி ஒரு கேடுகெட்ட இயற்கை அறிவோ செயற்கை அறிவோ இல்லை என்பது இயற்கையின் அற்புதம்; அதிசயம். இதே அதிசயத்தினையும் இதனைவிடப் பன்மடங்கு கூடுதலான பகுத்தறிவினையும் இயற்கை மனிதனுக்குக் கொடுத்துள்ளது என்பது இதனைவிட அதிசயத்திலும் அதிசயம். 

மேலும், மனிதன்  பகுத்தறிவுள்ளவன். எதனையும் சிந்திக்கக் கூடிய சாதிக்கக் கூடியவன். இந்த உலகையே தலைகீழாக மாற்றிக் காட்டும் அதீதத் திறமையுள்ளவன் என்ற பாராட்டிற்கும் அழியா பெருமைக்கும் சொந்தக்காரன். 

இந்தத் தற்கொலை விடயத்தில் ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை விட, மிக மிகத் தாழ்ந்து போகிறான் என்னும்போது,  விலங்கினங்கள் இவனை விட ஒரு படி என்ன, ஆயிரம் படி மேம்பட தக்கதாகவே உள்ளது என்பது தான் உண்மை. 

சில மனிதர்கள், வாழ்வு என்பது வாழ்வதற்குத்தான் என்பதை மறந்து தாழ்ந்து போகிறார்கள். மனித வாழ்வு என்பது வாழ்வதற்காக மட்டுமே. இந்த மானுடம் அனைத்தையும் வெல்லும் தகுதி படைத்தவை. அதற்கான கால நேரங்களை - சூழல்களை இம்மானுடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கான நல் வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அதனை யாராவது தட்டிப் பறித்து கொள்வார்களா என்ன ?  இல்லை. 

இந்த மானுடப் பிறப்பு என்பது ஒரு முறைதான். அதனைத் தனக்காக நன்கு பயன்படுத்திக் கொண்டு பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். 

தற்கொலை செய்வதனால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள புவிக்கு எந்தக் கடுகளவும் தீமையும் ஏற்படப் போவதில்லை. 

இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினந்தோறும் சூரியன் உதிக்கும்; சூரியன் மறையும். மழை பெய்யும், புயலடிக்கும், பணி கொட்டும், வெள்ளம் வரும், இன்னும் இதில் ஏராளம். இந்த இயக்கம் அனுதினமும் நடந்து கொண்டேதான் இருக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

ஆனால், இந்தத் தற்கொலை  செய்வதில் பெரும் கேடு உண்டு. அவை அவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் இவை மிகப்பெரிய பேரிடியாக இருக்கும். இவை கொஞ்ச நாள் கழித்து இவையும் மறைந்துபோகும். பின்பு எதார்த்த உலக ஓட்டத்தில் அவனின் குடும்பத்தார்கள் கலந்துவிடுவார்கள். பின்பு இதனைப் பற்றி நினைப்பதற்கு ஏதும் அங்கு இருக்கப்போவதில்லை. 

இப்பொழுது இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் ஒரு முடிவிற்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். வாழ்க்கை வாழ்வதற்கா? அல்லது இடையில் முடித்துக் கொள்வதற்கா? என்று. 

உண்மையான மனிதத் தன்மை கொண்டவர்கள் வாழ்வினை வாழத்தான் என்பதனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மனிதன் பிறக்கும் போதே அவனுக்கான மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதில் எந்த மாற்றமுமில்லை. இவை இயற்கையின் விதி அல்ல நியதி. விதி மூட நம்பிக்கை சார்ந்தது; விதி என்பது இயற்கை மெய்ஞானம் சார்ந்தது. இறுதி முடிவு இப்படி இருக்கையில், முன்னமே சொன்னதனைப் போன்று நாம்  உயிருடன் இருந்தாலும் இயற்கையின் இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

இடையில் தன்னை வேண்டுமென்று  மாய்த்துக்கொண்டாலும், இந்த இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம். அப்படி என்றால், இன்றே இப்பொழுது இந்த நிமிடமே அந்த மலிவான எண்ணத்தை விட்டொழித்து, அந்த இடத்தில் வாழ்க்கை வாழ்வதற்காகவே என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். 

இப்படி எளிமையாகச் சொன்னால் அவை எப்படி முடியும் என்ற எண்ணமும் வரக்கூடும். இருந்தாலும் இறுதி முடிவு வாழ்வா, தற்கொலையா என்றால் வாழ்வுதான் என்ற விடை மட்டுமே மிஞ்சும். 

எனவே, நாம் இயற்கை மரணத்தினை  அடையும் முன்பே நம்மால் என்னவெல்லாம்  சாதிக்க முடியுமோ அதனையெல்லாம் சாதிக்கத் துடிக்க வேண்டும். நாமும் சாதிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும். இதுதான் மனிதனின் இயற்கைக் குணம். 

இந்தப் புவி நமக்கானது; இந்தச் சூரியன் நமக்கானது. இந்தக் காற்று நமக்கானது; இந்த மலை நமக்கானது; இந்த மழை நமக்கானது; இந்த நட்சத்திரங்கள் நமக்கானது. இன்னும் சொல்லப்போனால்,  இந்த அண்டவெளி  நாம் வாழ்வதற்கான அத்துனை சாதகங்களையும் செய்து கொண்டே இருக்கிறது.  இப்படி அனைத்தும் நாம் வாழ்வதற்கான அனைத்து நல் சூழ்நிலைகளில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கையில், நாம் மட்டும் ஏன் இந்த இயற்கைக்கும்,  மனித இனத்திற்கே முரணான ஒரு கேடு கெட்ட தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். 

நீங்கள் சுவாசிப்பது உங்களுக்காக; நீங்கள் உண்பது உங்களுக்காக. நீங்கள் தாகம் தீர்த்துக் கொள்வது உங்களுக்காக. இன்னும் சொல்லப்போனால்,  இந்த உடலே உங்களுக்கானது என்பதனை மறந்து விடவேண்டாம். மேலும் மது மற்றும் புகைப்பழக்கத்தினால்  உடலினை அழித்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, இழந்த உடலினைத் திரும்ப பெறப்போகிறேன் என்று லட்சம் லட்சமாம் பணத்தினைச் செலவழிப்பது பைத்தியக்காரத்தனம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்கள், மலைகள், காடுகள் என அனைத்தும் எல்லையில்லாத் தன்மை  கொண்டிருக்கையில், நமக்கான வாழ்வும் சாதனை எல்லையில்லாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. இடையில் கெடுத்துக் கொள்வதற்கும் மாய்த்துக் கொள்வதற்கும் அல்ல. 

கட்டுரையாளர்:                            க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.

https://aerithazh.blogspot.com/2021/07/blog-post_13.html

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.