Jump to content

மனிதா உன்னைத்தான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

View of our Earth from Mars
 
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
Edited by karu
படத்துக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது.
  • Like 10
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கவிதை karu, இதை நீங்கள் யாழ் அகவை 25 ல் கூட பதியலாம் என்று நினைக்கின்றேன்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி சுவி.  முயற்சிக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி, கரு அவர்களே.

மிக்க நன்றி நுணாவிலான்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

கவிதை நன்று.

நன்றி ஈழப்பிரியன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, karu said:
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.

சிந்திக்க வைக்கும் நல்லதொரு சிந்தனைக் கவிதை.👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

கவிதை நன்று…! அதன் கருப்பொருளும் அருமை…!

மிகுந்த நன்றி புங்கையூரான்.

17 hours ago, குமாரசாமி said:

சிந்திக்க வைக்கும் நல்லதொரு சிந்தனைக் கவிதை.👍🏼

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி குமாரசாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 10:52, karu said:
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.

கவிதை நன்று.

இந்தப் பூமியின் ஓட்டில் எறும்புகள் போல ஊரும் மனிதர்கள் நிலத்துக்கு கீழும் வசிக்கமுடியாது. 8 km உயர மலையிலும் வசிக்கமுடியாது. இவற்றை அறியாமல் ஆடும் ஆட்டம் இருக்கே! அதை எப்படி பிரபஞ்சம் தாங்குகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 10:52, karu said:
குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்

👏🏾👏🏾👏🏾 அருமை அருமை கரு அவர்களே.

#நிலையாமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

👏🏾👏🏾👏🏾 அருமை அருமை கரு அவர்களே.

#நிலையாமை 

மிக்க நன்றி goshan_che.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 05:52, karu said:

No photo description available.

View of our Earth from Mars
 
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.

எல்லாம் அறியாமையே. அறியாமை நீங்கியவன் அமைதி ஆகின்றான். எல்லோருக்குமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் அறியாமை நீங்கியே ஆகவேண்டும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நமக்குள் உள்ள குறைகளை உணர்ந்தாலும் மாற்ற முடியாத அகம்பாவத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் கரு. கவிதை நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 13:11, nunavilan said:

கவிதைக்கு நன்றி, கரு அவர்களே.

மிக்க நன்றி நுணாவிலான்.

On 12/3/2023 at 02:44, நியாயத்தை கதைப்போம் said:

எல்லாம் அறியாமையே. அறியாமை நீங்கியவன் அமைதி ஆகின்றான். எல்லோருக்குமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் அறியாமை நீங்கியே ஆகவேண்டும். 

கருத்துக்கு நன்றி

On 24/3/2023 at 00:57, வல்வை சகாறா said:

நமக்குள் உள்ள குறைகளை உணர்ந்தாலும் மாற்ற முடியாத அகம்பாவத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் கரு. கவிதை நன்றாக உள்ளது.

கருத்துக்கு நன்றி வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் கண்ட கனவு நினைவு வருகிறது. தனியனாக பிரமாண்டத்தின் முன் நிற்பேன். அந்தக் கனவு இரண்டு/மூன்று முறை வந்தது. ஒவ்வொரு முறையும் பயந்து அம்மாவை அருகே தூங்க அழைப்பேன்.
பேரண்டத்தின் முன் நாமெல்லாம் தூசி தான்.

கரு உங்கள் கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.