Jump to content

கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Published By: VISHNU

21 FEB, 2023 | 05:44 PM
image

தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், சீரான  எரிபொருள் விநியோகத்துக்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு மின்சார தட்டுப்பாடோ அல்லது எரிபொருள் தட்டுப்பாடோ ஏற்படாது என உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர, QR குறியீடுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எரிபொருளை வழங்குவது மூன்று மாதங்களுக்குள் இடைநிறுத்தப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் மின்சாரத்தை வழங்குவதற்கான நிலக்கரியை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், நிலக்கரி கப்பல்களுக்கான நிதியும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/148796

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரலில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நீக்கப்படாது - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

Published By: T. SARANYA

27 FEB, 2023 | 01:46 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக தேசிய எரிபொருள் விநியோக முறைமையின் கீழ் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் நிதியமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடைமுறை பற்றிய முடிவுகள் எடுக்கப்படும். அதனை விடுத்து கியூ.ஆர். குறியீட்டு முறைமை இரத்து செய்யப்பட மாட்டாது. 

https://www.virakesari.lk/article/149259

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

நண்பர்களின் கியூ ஆரை பயன்படுத்தலாம், அதோடு கியூ.ஆர் ஒன்றுக்கான எரிபொருள் அளவை அதிகரிக்கப் போகிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

விமானநிலையத்திலேயே வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏதோ ஒரு பாஸ் நடைமுறை வழங்க போவதாக சொன்னார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

நண்பர்களின் கியூ ஆரை பயன்படுத்தலாம், அதோடு கியூ.ஆர் ஒன்றுக்கான எரிபொருள் அளவை அதிகரிக்கப் போகிறார்களாம்.

நன்றி ஏராளன். ஆனால் கிழமைக்கு 20லீற்றர்கள்  தான்  ஆகக் கூடியதாம்… 

46 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானநிலையத்திலேயே வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏதோ ஒரு பாஸ் நடைமுறை வழங்க போவதாக சொன்னார்களே?

நாங்க சொல்லுவம்… ஆனால் செய்ய மாட்டம்

Edited by MEERA
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 04:13, ஏராளன் said:

தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

10 hours ago, ஏராளன் said:

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

9 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

தான் சொன்னதையே மறுத்துரைக்கும் மின்சக்தி அமைச்சர்! நாளைக்கு எதைச்சொல்லுவார் என்பதை யாரறிவார்? ஆளாளுக்கு ஒரு சட்டம், அறிக்கை. கடிவாளம் இல்லாத குதிரையை நம்பி சவாரி செய்ய புறப்படலாமா? உங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

போகும் போது….. ஒரு மாசம் போரெண்டா…. இரெண்டு மாசத்துக்கு தேவையான மருந்து மாத்திரையளை எடுத்துக் கொண்டு….

ஒரு நல்ல ஆளாய் பிடிச்சு போதியளவு பெற்றோலையும் எடுத்து வச்சிட்டு…

குறைந்த பட்சம் கொழும்பு பிரிடிஷ் ஹைகொமிசனுக்கு ஓடி வர கூடிய மாரியாவது ஏற்பாடுகளை செய்து போட்டு…

பொத்தினாமேரி போயி…பொத்தினாமேரி வந்திரணும்….சரியா🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

 

 

தான் சொன்னதையே மறுத்துரைக்கும் மின்சக்தி அமைச்சர்! நாளைக்கு எதைச்சொல்லுவார் என்பதை யாரறிவார்? ஆளாளுக்கு ஒரு சட்டம், அறிக்கை. கடிவாளம் இல்லாத குதிரையை நம்பி சவாரி செய்ய புறப்படலாமா? உங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

💯 உண்மை சாத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

போகும் போது….. ஒரு மாசம் போரெண்டா…. இரெண்டு மாசத்துக்கு தேவையான மருந்து மாத்திரையளை எடுத்துக் கொண்டு….

ஒரு நல்ல ஆளாய் பிடிச்சு போதியளவு பெற்றோலையும் எடுத்து வச்சிட்டு…

குறைந்த பட்சம் கொழும்பு பிரிடிஷ் ஹைகொமிசனுக்கு ஓடி வர கூடிய மாரியாவது ஏற்பாடுகளை செய்து போட்டு…

பொத்தினாமேரி போயி…பொத்தினாமேரி வந்திரணும்….சரியா🤣🤣🤣

கான்களில் பெற்றோல் அடிக்க ஏலாதாம். வேறு வாகனங்களுக்கு அடிச்சுத்தான் கான்களை நிரப்பணும்.ஒரு மாதத்திற்கு எத்தனை கான் தேவையோ🙄

வாயை சாப்படுவதற்கு மட்டுமே திறப்பது மற்றும் படி பொத்தோ பொத்துத் தான் 🤣.

Edited by MEERA
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

கான்களில் பெற்றோல் அடிக்க ஏலாதாம். வேறு வாகனங்களுக்கு அடிச்சுத்தான் கான்களை நிரப்பணும்.ஒரு மாதத்திற்கு எத்தனை கான் தேவையோ🙄

வாயை சாப்படுவதற்கு மட்டுமே திறப்பது மற்றும் படி பொத்தோ பொத்துத் தான் 🤣.

கான்களில் அடிக்கலாம்.மற்றும் வெளிக் கடைகளிலும் வாங்கலாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.