Jump to content

நாய்க் கவிதை


Recommended Posts

சபேசன்... இந்த இடத்தில் பாரதிதாசனின் கவிதை ஒன்றையும் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். நாய் பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றில் நாய்கள் நன்றியில்லாதவை என்று பொருள்படும்படி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதாவது நாய்கள் மனிதனுக்கு நன்றியுடையதாகவே இருக்கிறது, ஆனால் தனது இனத்துக்கு நன்றியுடையதாய் இல்லைல என்கிற பொருளில். அந்தக் கவிதை வேறு யாரிடமும் இருந்தால் அதை இங்கு இணையுங்கள். :)

Link to comment
Share on other sites

பாரதிதாசன் கவி (நாய்)

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது

முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்

கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;

என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்

அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது

முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;

மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!

என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது

நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்

வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்

வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்

என்றன் நாயின் பேர் அப்பாய்...

http://www.tamilnation.org/literature/bhar...dasan/mp093.htm

இளைஞன் இந்த கவியையா கேட்டீட்கள்...???

Link to comment
Share on other sites

ஓம் இது தான் தயா.

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்

அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்!

இந்த வரிகள் தான். நன்றி இணைத்தமைக்கு. :)

Link to comment
Share on other sites

நாயும் நானும்!

மரியாதையின் காரணம் விளைந்த

அன்பு எண்ணத்தால்

கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்

சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த

என் வீட்டு நாய்.

கவனம் கலைந்த வியப்புடன்

மரியாதையின் பொருள் யாது என்றேன்.

மரியாதையின் பொருள் அடுத்தவரை

அன்புசெய்தலில் உண்டு என்றது என் நாய்.

அன்பு செய்தலின் ருசி

ஒரு முறை சுவைத்தால்

தெரியும் அதன் தீராத எல்லை.

நாயாகப் பிறந்தால்தான் தெரியும்

மரியாதை என்பதன் பொருளும்

அன்பு செய்தலின் ருசியும்.

சிந்தனை வயப்பட்டு நான் மகிழ்வுடன்

சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்

சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு

நன்றியறிதலில் உண்டு என்றது என் நாய்.

நன்றியறிதலின் சுகம்

ஒருமுறை சுவைத்தால்

தெரியும் அதன் தீராத எல்லை

நாயாகப் பிறந்தால்தான் தெரியும்

நன்றியறிதலின் சுகமும்

சுதந்திரத்தின் சுவையும்.

இது அருமை என்று

நான் கூக்குரலிட்டேன்

இதுவே என் பெருமை

எனக் குரைத்தது என் நாய்.

வியந்து போய் நான்

எனக்குள் சொல்லிக் கொண்டேன்

அற்புதம்!

இந்த உண்மையை இதற்குச்

சொல்லிக் கொடுத்தது யார்?

அன்பும், நன்றியும்

சிறந்த பண்பென

மனிதன் உணராமல் போனது ஏன்?

பரிவுடன் நாய் சொன்னது

உன் இயல்பை மறந்து

உள்தேடுதலை விட்டு

ஊதாரியாய் சுற்றுவதால்

உணர முடியாமல் போயிற்று

உனக்கு.

"அன்பு செய்!

நன்றியுடன் இரு!

உனக்கும் புரியும்!"

http://aaththigam.blogspot.com

Link to comment
Share on other sites

  • 2 years later...

நாய்கள் குறித்து நிறைய கவிதைகள் கருத்துக்ள். சமூகம் சார்ந்த ஒரு காலத்தின் பதிவு

Link to comment
Share on other sites

நாய்கள் குறித்து நிறைய கவிதைகள் கருத்துக்ள். சமூகம் சார்ந்த ஒரு காலத்தின் பதிவு

மண் தோண்டி கிண்டி கிழங்கெடுத்தது போல, இந்தக் கவிதையை மீண்டும் யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்குள் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் (ம்ம்ம்... எல்லாம் சகாரா அக்காவின் இயங்கு முயங்கு கவிதையை மீண்டும் வெளியே கொண்டு வந்ததன் யோகம் போல இருக்கு :wub: )

Link to comment
Share on other sites

மண் தோண்டி கிண்டி கிழங்கெடுத்தது போலஇ இந்தக் கவிதையை மீண்டும் யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்குள் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் (ம்ம்ம்... எல்லாம் சகாரா அக்காவின் இயங்கு முயங்கு கவிதையை மீண்டும் வெளியே கொண்டு வந்ததன் யோகம் போல இருக்கு

தேண்டினால் ஏராளமான புதையல்கள் யாழ்க்களத்தில் கிடைக்கும். கவிதை கருத்தாடல்களில் உணர்வு மிகுதியானவை நிறைய இருக்கின்றது. அப்பப்ப தோண்டிப் படிப்பதுண்டு.

Link to comment
Share on other sites

தயவு செய்து பழையவற்றை கிழறவேண்டாம்.சகிக்கமுடியாது.இந்த ஒரு தலைப்பு மட்டுமல்ல பல தலைப்புகள் கிழரினால் எமது அரசியல் ஞானம் அத்துபடியாகிவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பழையவற்றை கிழறவேண்டாம்.சகிக்கமுடியாது.இந்த ஒரு தலைப்பு மட்டுமல்ல பல தலைப்புகள் கிழரினால் எமது அரசியல் ஞானம் அத்துபடியாகிவிடும்

ப்ளீஸ் , இதனை அப்படியே ..... கிடப்பில் போட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்யகர்கள் ஓய்வெடுக்கட்டும் கீழ்வானம் சிவக்கிறது.

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன், நன்றி இளைஞன்,நன்று நுனாவிலான் நாய் பற்றி இப்படியெல்லாம் கூடக் கவிதை எழுத முடியுமா. நாயைப் பற்றி கவிதை வாசிப்பது இதுதான் முதற் தடவை. மிக நன்றாக இருந்தன. உங்கள் கவிதைகள் பார்த்ததும் என் வீடிலிருந்த நாய் பற்றி நானும் ஒன்று எழுதினேன்.

என்வீட்டில் ஒரு நாய் எந்நேரமும் படுத்திருக்கும்

எங்கே போனாலும் எம் பின்னால் தானும் வரும்

எதை எப்போ கொடுத்தாலும் எதிர்க்காது உண்டுவிடும்

எமக்காக வாலாட்டி தன் நன்றி சொல்லிவிடும்

எதிர் வீட்டு நாயோடும் எமக்காகக் குரைத்துவிடும்

எதிரி எவராயினும் எமக்கதைச் சொல்லிவிடும்.

எப்பொழுதும் அதை நான் எட்டவே வைத்திருந்தேன்.

எட்ட நின்று வாலாட்டத் தட்டிக்களித்திருந்தேன்

எம்மோடு அது வாழ்ந்த அத்தனை காலங்களில்

எப்படி நீ என்று ஒருநாள் கதைத்ததில்லை.

மாலைப் பொழுதின் மங்கிய இருளில்

மனதை மயக்கிய இசையில் மகிழ்ந்து

மோனநிலையில் மெய்மறந்திருக்கையில்

மதில் கடந்து கேட்டது மரண ஓலம்

.

எட்டிக் கால் வைத்து எழுந்து ஓடினேன்

வீதி கண்டதும் விழி பிதுங்க

விறைத்துப் போனது எந்தன் நெஞ்சம்

முதன் முதலாக இழப்புக் கண்டத்தில்

முகத்தில் சக்கரம் ஏறியதில்

முழுப் பற்களும் வெளியே கிடக்க

முக்கல் முனகல் ஏதுமிலாது

முடிந்து போனது நாயின் வாழ்வு.

இருக்கும் வரை நீ என்ன செய்தாய்

இப்போது மட்டும் கலங்கிப் போக

இடித்துக் கேட்டது எள்ளிய நெஞ்சம்

இன்றுவரைக்கும் நேசம் தொடர

Link to comment
Share on other sites

முன்பு ஆரம்பத்தில் தொடர்ந்து யாழில் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு தலைப்பை நீங்கள் மீட்டிப் பார்த்ததில் மகிழ்ச்சி.

உங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது. நாயின் இழப்பை மனம் கனக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

ஆயினும் ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். "ஏறியதாலே", "இடித்தே" என்று "ஏ"கரத்தில் சொற்களை அமைப்பதும் "எந்தன்" போன்ற சொற்களும் கவிதைகளில் காலாவதியாகி விட்டன என்று படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அரை குறை என்பதனால் இப்படியான தவறுகள் வருகின்றன.

Link to comment
Share on other sites

இது தவறு இல்லை. கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டதே. சில முறைகள் out of fashion ஆகி விட்டதாக எனக்குப் படுகிறது. அதையே சொன்னேன்.

Link to comment
Share on other sites

சபேசன் அண்ணன் , இந்த நாய்கவிதை சுட்ட நாய்கவிதை . பட் டிஃபறன்ற் ரைப்புங்க :lol: :lol: :D :D .

[size=5]வாலை ஆட்டும் நாய் [/size]

vaalai_aattum_naai.JPG

காலை எழுந்தவுடன்

கால் தொட்டு

கண்ணில் ஒற்றி

கன்னம் தடவி

செல்லமாய் முத்தமிட்டு

கள்ளத்தனாமாய் எழுப்ப...

வாலை ஆட்டும் நாயாய்

சேலைத் தலைப்பை பிடித்தபடி

தெரு வீதி வந்தவன்

காலை தினசரியை அக்குளிலும்

பால் பாக்கெட்டை கையிலும்

லாவகமாய் எடுத்துச் சென்று

அவளிடம் நீட்ட...

கிட்சன் சென்று

பாலைச் சூடேற்றி

பக்குவமாய் காபி ஆற்றி

பவ்வியமாய் கையில் ஏந்தி...

சோபாவில் அமர்ந்து

ஆயாசமாய் பேப்பர் படிக்கும்

சொக்கத் தங்கத்தையும்

ரொக்க பணத்தையும்

தட்சணையாய் தந்தவளுக்கு

சிந்தாமல் சிதறாமல்

சேதாரமின்றி கொடுத்தான்

வரதட்சணை வாங்கியவன்...!

http://www.rishvan.c...g-post.html?m=0

Link to comment
Share on other sites

பன்றிக்கு மலமே தீனி,

பருந்துக்கு பிணமே தீனி;

கன்றுக்கு புல்லே தீனி,

கழுதைக்கு ஏடே தீனி,

குன்றத்துப் பாம்புக் கெல்லாம்

குழி எலி,தவளை தீனி!

என்றைக்கும் தீனிக் கென்றே,

இவை தந்தான் தேவஞானி!

பன்றியை வளர்த்துப் பார்த்து,

பருந்துக்கும் உணவு போட்டு;

கன்றையும் வைத்துக் காத்து,

கழுதைக்கும் காவல் நின்று;

குன்றத்து பாம்பையெல்லாம்,

கூடவே வைத்து பார்த்தும்

நன்றியைக் காணாதாலே,

நாய் ஒன்றை வாங்கி வந்தேன்!

சீசர்'ரென்று அந்த நாய்க்கு,

செல்லப் பெயரிட்டு அழைத்தேன்!

ஆசையாய் எடுத்து கையில்,

அணைத்து மகிழ்வேன் நெஞ்சில் !

சீசரின் நேசத்தை பெற்றதாயின்

பாலிலும் கண்டேன் இல்லை!

தேசத்தை நேசிப்போருக்கு தேவை

ஒரு நாயின் நெஞ்சம்!

வாலிலே நன்றி சொல்லும்,

வாயில்லா பிள்ளை ஆகும்!

காலிலே அன்பு காட்டும்,

கண்ணிலே உறவு காட்டும்;

தோலிலே முளைத்து எழுந்த,

ரோமமும் தோழன் ஆகும்!

வேலினால் தாக்கினாலும்-என்,

தான் விழுந்து சாகும்!

வளர்த்தவன் சிரிக கின்றானா?

வாய் விட்டு அழுகின்றானா?

தளர்ச்சியில் விழுகின் றானா?

தனிமையில் குமைகின்றானா?

கிளர்ச்சியில் எழுகின் றானா?

கேலியில் சமைகின்றானா?

உளத்தில் உள்ளது எல்லாம்,

உணர்வது நாயின் நெஞ்சம்!

குடத்திலே இடுமுன் விரைந்து,

தொடர்ந்து வந்து சோற்றை;

வெடுக்கென பறிக்கும்;-மாந்தர்

விழுங்கிய பருக்கை உள்ளே,

படுக்குமுன் கேலி பேசும்,

மானிடப் பதர்கள் போல,

நடக்குமோர் குணம் இல்லாத

நாய் எந்தன் சீசர் குட்டி!

அன்னையே உன்னை கேட்பேன்,

அடுத்ததொர் பிறவி உண்டேல்;

என்னையும் நாயாய்ப் பெற்று,

இத்தலை கடனை தீர்ப்பாய்!

தன்னையும் உணர்ந்து ,தன்னை

தழுவிய கையும் காக்கும்;

மன்னவன் பிறப்பு நாய்தான்!

மனிதராய் பிறப்பது அல்ல!!

நன்றி கவிஞர் கண்ணதாசன்

http://generationnee...og-post_22.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.