Jump to content

மகளிர் ஐபிஎல் 2023 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செல்ல‌த்தின்ட‌ அணி முத‌ல் வெற்றி......................ஆனாலும் வேபின்ட‌ விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியா இல்லை😏....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு முதலாவது வெற்றி

Published By: DIGITAL DESK 5

16 MAR, 2023 | 09:45 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் தனது முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவி கடைசி இடத்தில் இருந்துவந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதலாவது வெற்றியை புதன்கிழமை (15) சுவைத்தது.

UP வொரியர்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் பயிற்சியக விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் எலிஸ் பெரியின் துல்லியமான பந்துவீச்சு, கனிக்கா அஹுஜா, ரிச்சா கோஷ் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூர்  அணிக்கு 5 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 2 புள்ளிகளுடன் சிறந்த நிகர ஓட்டவேக அடிப்படையில் றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூர் முதல் தடவையாக 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட UP வொரியர்ஸ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் 9ஆவது ஓவரில் UP வொரியர்ஸ் அணியின் 5ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தது.

356338.webp

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவி அலிசா ஹீலி (1), தேவிகா வைத்யா (0), தஹ்லியா மெக்ரா (2) ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை UP வொரியர்ஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

இதன் காரணமாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிக இலகுவாக தனது முதலாவது வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் ஒரு பிடியையும் ஒரு ஸ்டம்ப்பையும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தவறவிட்டதைப் பயன்படுத்தி க்றேஸ் ஹெரிஸ், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து UP வொரியர்ஸ் அணியை கௌரவமான நிலையை அடைய உதவினர்.

க்றேஸ் ஹெரிஸ் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 22 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரைவிட கிரான் நவ்கிரே 22 ஓட்டங்களையும் சொஃபி எக்லஸ்டோன் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எலிஸ் பெரி 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொஃபி டிவைன் 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோபனா ஆஷா 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

356333.webp

மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது சொஃபி டிவைன் (14), அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா (0) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இந்த சுற்றுப் போட்டியில் மந்தனா 6ஆவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் 5ஆவது தடவையாக சுழல்பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

எலிஸ் பெரி (10), ஹீதர் நைட் (24) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் கனிக்கா அஹுஜா, ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிப் பாதையில் இட்டனர்.

30 பந்துகளை எதிர்கொண்ட கனிக்கா அஹுஜா 8 பவுண்டறிகள், 1  சிக்ஸுடன் 46 ஓட்டங்களைப் பெற்றதடன் ரிச்சா கோஷ் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஷ்ரேயன்கா பட்டில் ஆட்டம் இழக்காமல் 5 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்றேஸ் ஹெரிஸ், சொஃபி எக்லஸ்டோன், தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/150638

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஜாராத்திடம் தோல்வி அடைந்தது டெல்ஹி

Published By: DIGITAL DESK 5

17 MAR, 2023 | 12:45 PM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி கெப்பிட்டல் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாயகி ஏஷ்லி கார்ட்னர் சகலதுறைகளிலும் பிரகாசித்து குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு 11 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

எனினும் அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலிருக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டுள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 6 புள்ளிகளையே பெற முடியும்.

நட்சத்திர வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரொட்றிக்ஸ், ஜெஸ் ஜோனாசன் ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டமை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம். இந்த மூவரும் அவசரப்பட்டு தவறான அடிகளைப் பிரயோகித்து விக்கெட்களை இழந்தனர்.

மெக் லெனிங், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து  அணியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்து 38 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லெனிங் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

356369.webp

மோத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் சேர்ந்தபோது அலிஸ் கெப்சி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். (50 - 3 விக்.).

356360.webp

அதன் பின்னர் 48 ஓட்டங்கள் இடைவெளியில் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பெரும் தடுமாற்றம் அடைந்தது. (100 - 8 விக்.)

356357.webp

ஆட்டமிழந்த ஐவரில் நால்வர் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேற மாரிஸ்ஆன் கெப் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 36 ஓட்டங்களைப் பெற்றார்.

356373.webp

இந் நிலையில் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அருந்ததி ரெட்டி, ஷிக்கா பாண்டி ஆகிய இருவரும் வெற்றி இலக்கை நோக்கி நிதானத்துடன் நகர்ந்துகொண்டிருந்தனர்.

356374.webp

இருவரும் 9ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அருந்ததி ரெட்டி 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க டெல்ஹி கெப்பிட்டல்ஸின் எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டது.

பந்துவீச்சில் கிம் கார்த் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷ்லி கார்ட்னர் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

356359.webp

லோரா வுல்வார்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களினால் குஜராத் அணி பலமான நிலையை அடைந்தது.

சொஃபியா டன்க்லி (4) ஆட்டமிழந்தபின்னர் (4 - 1 விக்.) லோரா வுல்வார்ட், ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டியோல் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து லோரா வுல்வார்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

லோரா வுல்வார்ட் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 57 ஓட்டங்களையும் ஏஷ்லி காரட்னர் 9 பவுண்டறிகள் அடங்களாக ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் ஜெஸ் ஜொனாசன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

356368.webp

https://www.virakesari.lk/article/150744

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB அணி தொட‌ர்ந்து இர‌ண்டு வெற்றி...............செல்ல‌த்துக்கு வாழ்த்துக்க‌ள்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்னேறியது UP வொரியர்ஸ்

Published By: DIGITAL DESK 5

21 MAR, 2023 | 11:50 AM
image

(நெவில் அன்தனி)

மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய UP வொரியர்ஸ் அணி, மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கு 3ஆவது அணியாக தகுதிபெற்றுக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

356593.webp

தயாளன் ஹேமலதா, ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜராத் ஜயன்ட்ஸை பலப்படுத்தினர்.

ஹேமலதா 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட சொஃபியா டன்க்லி 23 ஓட்டங்களையும் லோரா வுல்வார்ட் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

356604.webp

பந்துவீச்சில் பார்ஷவி சொப்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஜேஷ்வரி கயக்வாட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்க 7 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

தஹ்லியா மெக்ரா, க்றேஸ் ஹெரிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில்  78 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை நல்ல நிலையில் இட்டனர்.

356618.webp

தஹ்லியா மெக்ரா 11 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து க்றேஸ் ஹெரிஸும் சொஃபி எக்லஸ்டோனும் 6ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர். க்றேஸ் ஹெரிஸ் 41 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்தார்.

வெற்றிக்கு மேலும் 3 ஓட்டங்கள் தேபைப்பட்டபோது இல்லாத 2ஆவது ஓட்டத்தை எடுக்க முயற்சித்து சிம்ரன் ஷய்க் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். எனினும் அடுத்த பந்தில் எக்லஸ்டோன் பவுண்டறி விளாச UP வொரியர்ஸ் வெற்றியீட்டியது.

எக்லஸ்டோன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கிம் கார்த் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

356612.webp

https://www.virakesari.lk/article/151030

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

Published By: DIGITAL DESK 5

21 MAR, 2023 | 12:53 PM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (20) இரவு நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 9 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அடைந்த 2ஆவது தோல்வி இதுவாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மும்பை இண்டியன்ஸ் 7ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.

356635.webp

எனினும் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (23), பூஜா வஸ்த்ராக்கர் (26), இஸி வொங் (23), ஆமன்ஜோத் கோர் (19) ஆகிய நால்வரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று மும்பை இண்டியன்ஸ் அணி 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

356627.webp

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிக்கா பாண்டி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெஸ் ஜோன்சன் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

110 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

356636.webp

அணித் தலைவி மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகியோர் 27 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஷஃபாலி வர்மா 15 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

356634.webp

அவர் ஆட்டம் இழந்த பின்னர் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மெக் லெனிங், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் அடுத்த 27 பந்துகளில் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை 9 ஓவர்கள் நிறைவில் உறுதிசெய்தனர்.

மெக் லெனிங் 22 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 32 ஓட்டங்களுடனும் அலிஸ் கெப்சி 17 பந்துகளில் 5 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

கடைசி லீக் போட்டிகள்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மும்பை டி.வை. பட்டில் மைதானத்திலும் WP வொரியர்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி ப்றேபோர்ன் மைதானத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெறவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளுடன் மகளிர் பிறீமியர் லீக் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் நிறைவுக்கு வருகின்றன.

https://www.virakesari.lk/article/151034

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி : நீக்கல் போட்டியில் மும்பை - UP வொரியர்ஸ்

Published By: DIGITAL DESK 5

22 MAR, 2023 | 11:40 AM
image

(என்.வீ.ஏ.)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் நடத்தப்பட்டுவரும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் (WPL) இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை (21) நிறைவுபெற்ற லீக் சுற்றைத் தொடர்ந்து டெல்ஹி  கெப்பிட்டல்ஸ்  12 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மும்பை இண்டியன்ஸும் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 2ஆம் இடத்தில் இருப்பதுடன் UPவொரியர்ஸ் 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது.

இந் நிலையில் மும்பை இண்டியன்ஸும் UP வொரியர்ஸும் வெள்ளிக்கிழமை (24) நீக்கல் போட்டியில் விளையாடவுள்ளன. அதில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை ஞாயிறன்று எதிர்த்தாடும்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் அணி 4 விக்கெட்களாலும் UP வொரியர்ஸ் அணியை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 5 விக்கெட்களாலும் வெற்றிகொண்டிருந்தன.

மும்பை இண்டியன்ஸ் எதிர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

356674.webp

றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எலிஸ் பெரி (29), ரிச்சா கோஷ் (29), ஸ்ம்ரித்தி மந்தனா (24) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் நெட் சிவர்-ப்றன்ட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஸி வொங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்ற வெற்றியீட்டியது.

அமெலியா கேர் (31), யஸ்டிகா பாட்டியா (30), ஹெய்லி மெத்யூஸ் (24) ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் கனிக்கா அஹுஜா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் எதிர் UP வொரியர்ஸ்

356700.webp

UP வொரியர்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியதன் மூலம் மகளிர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான நேரடி தகுதியை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பெற்றுக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய வீராங்கனை தஹ்லியா மெக்ரா அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவியும் மற்றொரு அவுஸ்திரேலிய வீராங்கனையுமான அலிசா ஹீலி 36 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அலிஸ் கெப்சி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராதா யாதவ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி மெக் லெனிங் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 39 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 21 ஓட்டங்களையும் பெற்றதுடன் 29 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து மாரிஸ்ஆன் கெப் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் எலிஸ் கெப்சி 34 ஓட்டங்களையும் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபமாக்கினர்.

பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/151131

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குரார்ப்பண WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி - மும்பை இன்று மோதுகின்றன

Published By: VISHNU

26 MAR, 2023 | 10:52 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவந்த 5 அணிகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் (WPL) இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி மும்பை ப்றேபோன் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது.

women_s_premier_league.png

டெல்ஹி கெப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தலா 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றிருந்தன.

நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஆனால், நீக்கல் போட்டியில் UP வொரியர்ஸ் அணியை 72 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலமே மும்பை இண்டியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நெட் சிவர் - ப்றன்ட் குவித்த ஆட்டம் இழக்காத 72 ஓட்டங்களும் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இசி வொங் பதிவு செய்த முதலாவது ஹெட்-ட்ரிக்கும் மும்பை இண்டியன்ஸின் வெற்றியை இலகுவாக்கின.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு தடவைகள் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டபோது முதலாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்களாலும் 2ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 9 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன.

இரண்டாவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி பெற்ற 110 ஓட்டங்களே இரண்டு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளிலும் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

இரண்டு அணிகளிலும் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணித் தலைவர் மெக் லெனிங் 2 அரைச் சதங்களுடன் 310 ஓட்டங்களை மொத்தமாக பெற்று சுற்றுப் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

ஷஃபாலி வர்மா 2 அரைச் சதங்களுடன் 241 ஓட்டங்களையும் மாரிஸ்ஆன் கெப் 159 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி 159 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 117 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் ஷிக்கா பாண்டி 10 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 9 விக்கெட்களையும் ஜெசி ஜோனாசன் 8 விக்கெட்களையும் தாரா நொரிஸ் 7 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மும்பை இண்டியன்ஸ் அணியில் நெட் சிவர் - ப்றன்ட் 2 அரைச் சதங்களுடன் 272 ஓட்டங்களையும் ஹெய்லி மெத்யூஸ் 258 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் 3 அரைச் சதங்களுடன் 244 ஓட்டங்களையும் யஷ்திகா பாட்டியா 210 ஓட்டங்களையும் அமேலியா கேர் 135 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சய்க்கா இஷாக் 15 விக்கெட்களையும் அமேலியா கேர், ஹெய்லி மெத்யூஸ் ஆகிய இருவரும் தலா 13 விக்கெட்களையும் இஸி வொங் 12 விக்கெட்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 10 விக்கெட்களையும் வீழ்த்தி பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட வீராங்கனைகளின் பெறுதிகளின் அடிப்படையில் மும்பை இண்டியன்ஸ் சற்று முன்னிலையில் இருக்கின்றபோதிலும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்க முடியாது.

அணிகள்

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: மெக் லெனிங் (தலைவி), ஜெமிமா ரொட்றிக்ஸ் (உதவித் தலைவி), ஷஃபாலி வர்மா, மாரிஸ்ஆன் கெப், அலிஸ் கெப்சி, ஜெஸ் ஜோனாசன், தானியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிக்கா பாண்டி, பூணம் யாதவ், தாரா நொரிஸ், லோரா ஹெரிஸ், மின்னு மணி.

மும்பை இண்டியன்ஸ்: ஹார்மன்ப்ரீத் கோர் (தலைவி), யஸ்திகா பாட்டியா, ஹெய்லி மெத்யூஸ், நெட் சிவர் - ப்றன்ட், அமேலியா கேர், பூஜா வஸ்த்ராக்கர், இசி வொங், ஹுமாரியா காஸி, ஆமன்ஜோத் கோர், ஜிந்திமணி கலிட்டா, சய்க்கா இஷாக், நீலம் பிஷ்த், ப்ரியன்கா பாலா, ஹீதர் க்ரஹம், தாரா குஜார், க்ளோ ட்ரயொன், சோனம் யாதவ்.

https://www.virakesari.lk/article/151409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை முதல் முறையாக சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியன்ஸ்

Published By: DIGITAL DESK 5

27 MAR, 2023 | 10:49 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவந்த 5 அணிகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியனஸ்.

டெல்ஹி  கெப்பிட்டல்ஸ்  அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையில் மும்பை, ப்றேபோன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 3 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களை சமாளித்தவாறு 49.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று  வெற்றியீட்டி  சம்பியன் பட்டத்தை உறுதிசெய்துகொண்டது.

நெட் சிவர்-ப்றன்ட் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம், அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோரின் நிதான துடுப்பாட்டம், அமேலியா கேரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தன.

இந்த இறுதிப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக ஷிக்கா பாண்டி, ராதா யாதவ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்த சுற்றுப் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியபோதிலும் அது இறுதியில் வீண்போனது.

மும்பை  இண்டியன்ஸ் ஆரம்ப வீராங்கனைகளான யஸ்திகா பாட்டியா (13), ஹெய்லி மெத்யூஸ் (4) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டமிழந்ததும் மும்பை இண்டியன்ஸ் பெரும் அழுத்தத்தையும் சவாலையும் எதிர்கொண்டது.

எனினும் நெட் சிவர் - ப்றன்ட், ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 75 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

ஹார்மன்ப்ரீத் கோர் 37 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 17ஆவது ஓவரின் முதலாவது பந்தில் ஆட்டமிழந்தபோது மும்பையின் வெற்றிக்கு 23 பந்துகளில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நெட் சிவர்-ப்றன்டுடன் ஜோடி சேர்ந்த அமேலியா கேர் 8 பந்துகளில் 14 ஓட்டங்களைப் பெற்று மும்பை இண்டியன்ஸின் அழுத்தத்தைக் குறைத்தார். மறுபக்கத்தில் கடைசி நேரத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடிய நெட் சிவர் - ப்றன்ட் கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் பவுண்டறி அடித்து மும்பை இண்டியன்ஸ் சம்பியனாவதை உறுதிசெய்தார்.

55 பந்துகளை எதிர்கொண்ட நெட் சிவர் - ப்றன்ட் 7 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ராதா யாதவ் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜெஸ் ஜோனாசன் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது ஓவரில் ஷஃபாலி வர்மா (11), அலிஸ் கெப்சி (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தடுமாற்றம் அடைந்தது.

தொடர்ந்து ஜெமிமா ரொட்றிக்ஸ் 9 ஓட்டங்களுடன் 5ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது. இந்த மூவரையும் ஃபுல் டொஸ் பந்துகள் மூலம் இஸி வொங் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.

எவ்வாறாயினும் அணித் தலைவி மெக் லெனிங், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 11ஆவது ஓவரில் 73 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், மாரிஸ்ஆன் கெப் (18), மெக் லெனிங் (35), அருந்ததி ரெட்டி (0), ஜெஸ் ஜோனாசன் (22), மின்னு மணி (1), தானியா பாட்டியா (0) ஆகிய 6 வீராங்கனைகளும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க 16 ஓவர்கள் நிறைவில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 9 விக்கெட்களை இழந்து வெறும் 79 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், ஷிக்கா பாண்டி, ராதா யாதவ் ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களும் துணிவே துணை என்பதை நிரூபிக்கும் வகையில் எதிர்த்தாடலில் ஈடுபட்டு பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 24 பந்துகளில் (கடைசி 4 ஓவர்கள்) சாதனைமிகு 52 ஓட்டங்களைப் பகிர்ந்து டெல்ஹி கெப்பிட்டல் அணியை பலமான நிலையில் இட்டனர்.

மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவாகும்.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இஸி வொங் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கேர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: நெட் சிவர்-ப்றன்ட்.

harmanpreet_kaur___1_.jpg

மிகவும் பெறுமதிவாய்ந்த வீராங்கனை: ஹெய்லி மெத்யூஸ்

harmanpreet_kaur___2_.jpg

mumbai_indians___1_.jpg

mumbai_indians___2_.jpg

600327-01-02.jpg

600323-01-02.jpg

https://www.virakesari.lk/article/151464

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான 'திரில்லிங்' திருப்புமுனை

மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

27 மார்ச் 2023, 09:18 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஒரு திரில்லர் பாணியில் நடந்து முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த டி20 பெண்கள் உலகக் கோப்பையை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் அபாரமாக விளையாடி வந்த இந்திய அணி, அரை இறுதியில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

ஒரு மாதத்திற்குப் பின்னர் இது வேறோரு களம். மீண்டும் ஓர் அதி முக்கியமான போட்டியில் மெக் லானிங் மற்றும் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான அணிகள் மோதின.

ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லத் தவறியபோதும், இந்த முறை மனம் துவளாமல் நேர்த்தியாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.

 

நேற்றைய தினம் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டியின் முடிவைத் தாண்டியும் நடுவரின் ஒரு தீர்ப்பு மிகவும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதிரடி இளம் வீரர் ஷஃபாலி வர்மா, அனுபவம் வாய்ந்த கேப்டன் மெக் லானிங், துடிப்பான பேட்டர் ஜெமிமா, உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் மரிஜென் கப், பௌலிங் ஆல்ரவுண்டர் ஷீகா பாண்டே என டெல்லி வலுவான படையோடு களமிறங்கியது.

அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள் ஃபுல் பார்மில் அணி என மும்பையும் சம பலத்தோடு களம் கண்டது. லீக் போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதிய இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. லீக் சுற்றுகள் முடிவில் இரு அணிகளும் விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரை மெக் லானிங் எதிர்கொண்டார். நட்சத்திர வீரர் நட் சிவர் ப்ரண்ட் பந்து வீசினார். ஐந்தாவது பந்தில்தான் முதல் ரன் எடுத்தார் லானிங். ஆறாவது பந்தை எதிர்கொண்ட ஷெஃபாலி வர்மா ஒரு ரன் எடுத்து பேட்டிங் முனைக்கு வந்தார்.

இப்போதுதான் அனல் பறக்கும் அந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தொடரில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் கீழ் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஸி வாங் பந்து வீச வந்தார். இந்தத் தொடரில் அபாரமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் அதிரடி பேட்டரான ஷெஃபாலி வர்மா வாங்கை எதிர்கொள்ளத் தயரானார்.

ஹாட்ரிக் எடுத்த நட்சத்திர பந்து வீச்சளராக உருவெடுத்திருந்த வாங், ஷெஃபாலிக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியே தனது முதல் பந்தை வீசினார்.

அந்த பந்தை லாங் ஆன் திசையில் விளாசினார் ஷெஃபாலி. பந்து சிக்சருக்கு சென்றது. அடுத்த பந்தையே பௌண்டரிக்கும் விளாசினார்.

இப்போது மூன்றாவது பந்து, ஹை ஃபுல் டாஸாக வீசினார் வாங், இடதுபுறம் நகர்ந்து லாகவமாக ஆஃப் சைடில் ஒரு ஸ்லைஸ் ஷாட் ஆடினார். அந்தப் பந்து மெலி கெர் கையில் தஞ்சமடைந்தது.

பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தது என நம்பிய ஷெஃபாலி மற்றும் லானிங் உடனடியாக ரிவ்யூ செய்தனர்.

மூன்றாவது நடுவர் திரும்பத் திரும்ப அந்தப் பந்தின் ரீப்ளேவை பார்த்தார். பந்தை டிராக் செய்யும் தொழில்நுட்பம் அந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்து, கீழே இறங்குவது போன்று தெரிந்தது. மூன்றாவது நடுவர் ஷெஃபாலி அவுட் என கள நடுவரின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

களத்தில் இருந்த லானிங் மற்றும் ஷெஃபாலி இருவருமே அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கேப்டன் லானிங் கள நடுவரிடமே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நடுவரின் தீர்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக சென்றதையடுத்து அந்தப் பந்து நோ பாலா இல்லையா என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன.

பொதுவாக கிரிக்கெட் விதிகளின்படி, பந்து வீச்சாளர் வீசும் பந்து ஃபுல் டாஸாக பேட்டரின் இடுப்புக்கு மேல் சென்றால் அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்படும்.

ஆனால் இந்தக் குறிப்பிட்ட பந்தில் இரு வகையான விவாதங்கள் எழுந்தன. எனினும் நடுவரின் முடிவு குறித்து பலர் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

அபாயகரமான பேட்டர் ஷெஃபாலியை வீழ்த்தியதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமடைந்தனர். 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஷெஃபாலி பெவிலியனுக்கு திரும்பினார்.

அவருக்குப் பின் வந்த அலிஸ் கேப்சி அதே ஓவரில் மீண்டும் ஒரு ஃபுல் டாஸ் பந்தில் இரையானார். ஒரே ஓவரில் இரண்டு ரிவ்யூக்களையும் இழந்தது டெல்லி.

அடுத்த ஓவரை பிரன்ட் வீச லானிங் மற்றும் ஜெமிமா மூன்று பௌண்டரிகளை விளாசினர். ஐந்தாவது ஓவரை வீச மீண்டும் வாங் வந்தார்.

மீண்டும் ஒரு லோ ஃபுல் டாஸ் வீசினார் வாங். இந்த முறை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இப்படி பவர்பிளேவுக்குள்ளாகவே ஃபுல் டாசுக்கு மூன்று பேட்டர்களை இழந்தது டெல்லி.

ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக நின்றார் கேப்டன் லானிங். எனினும் அவரும் 12வது ஓவரில் ரன் அவுட் ஆனார்.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் லானிங் அவுட்டானதை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணி.

ரன்கள் எடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்த ஜெஸ் ஜொனாசன் அழுத்தம் காரணமாக எடுத்த ஒரு தவறான முடிவால் லானிங் தமது விக்கெட்டை இழந்தார்.

16 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி. 73 ரன்களுக்கு மூன்று விக்கெட் என இருந்த ஸ்கோர் அடுத்த ஐந்து ஓவர்கள் கழித்துப் பார்த்தால் 79/9 என இருந்தது.

டெல்லியின் பேட்டிங்கின்போது அந்த அணியின் மிக மோசமான பகுதியாக அந்த ஐந்து ஓவர்கள் அமைந்தன.

இந்த ஐந்து ஓவர்களில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. ஆனால், அப்போதுதான் இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டெல்லி கேபிட்டல்ஸ் வீராங்கனை ஷிகா பாண்டே

கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராதா யாதவ் மற்றும் ஷிகா பாண்டே அபராமாக விளையாடினர்.

குறிப்பாக ஃபுல் டாஸில் திணற வைத்துக் கொண்டிருந்த இசி வாங் வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட இந்த இணை மூன்று பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்கள் குவித்தது.

கடைசி ஓவரையும் விட்டு வைக்காமல் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ராதா.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது டெல்லி. இந்த இணை வெறும் 24 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அதிரடியில் மிரட்டிய டெல்லி கேபிட்டல்ஸ் வீராங்கனை ராதா யாதவ்.

கடைசி விக்கெட்டுக்கு ஒரு கூட்டணி 50 ரன்களுக்கும் மேல் குவிப்பதும், அதையும் இறுதிப்போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த சூழலில் இதைச் சாதிப்பதையும் டி20 போட்டிகளில் மிக மிக அரிதாகவே பார்க்க முடியும்.

இந்த இரு பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் அசத்தியதைப் பார்க்கும்போது ஆடுகளம் அவ்வளவு ஒன்றும் பேட்டிங்கிற்கு கடினமாக இல்லை என்றே தோன்றியது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் சேஸிங்கை தொடங்கியதும், டெல்லியை போல மந்தமாகவே விளையாடியது. பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆனால் ஹர்மன் ப்ரீத் கவுரும் நட் சிவர் ப்ரண்டும் பொறுமையாக விக்கெட் விழக்கூடாது எனக் கவனமாக விளையாடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்திய நட் சிவர் ப்ரண்ட்

17வது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் ஆனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்ததும், ஒரு மாதம் முன்பு நடந்த உலகக் கோப்பை அரை இறுதி போட்டி பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.

ஏனெனில் அரை இறுதியில் சேஸிங்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்மன் ப்ரீத்தின் ரன் அவுட் இந்திய அணிக்கு பாதகமானது.

ஆனால், இம்முறை அவரது அணியின் சக வீரர்கள் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு அந்த தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தவில்லை.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்று பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. பிரண்ட் கடைசி வரை களத்தில் நின்று பொறுப்பாக விளையாடி 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவரே பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் வென்றார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய மெக் லானிங், மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்த அணி எனக் குறிப்பிட்டார்.

நீண்ட நாட்களாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்குக் காத்திருந்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நேற்றைய தினம் அவருக்கான நாளாக அமைந்தது.

https://www.bbc.com/tamil/articles/c137e3rz5n4o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.