Jump to content

கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை.

1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் தலைவர் அவர்கள். அந்தவகையில் 1998 ஆம் ஆண்டு முற்பகுதியில் புதிதாக கொள்வனவு செய்ப்பட்ட ஆயுதங்களில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட கனரக ஆயுதத்திற்க்கான பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டு அதன் சிறந்த சூட்டாளனாக வெளியே வருகிறான். இம்முறை அக்கனரக ஆயுதத்தின் மூலம் கடற் சண்டைகளில் பெரும் பங்காற்றியவன். தனது அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பால் படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அங்கும் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்கிறான் .அவ் வேளையில்தான் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது கனரக ஆயுதம் தரைத்தாக்குதலுக்கு தேவையான போது சிறப்புத் தளபதியால் விடுதலையின் தலைமையில் அணிகள் அங்கே அனுப்பப்ட்டது. அங்கு சிலமாதங்களாக தரைத்தாக்குதலில் தனது அநுபவங்களைப் பெற்று தனது அணிகளை செவ்வனவே வழிநடாத்தினான். மீண்டும் தரைத் தாக்குதலில் ஈடுபட்ட கடற்புலிகளின் அணிகளை கடலில் ஒரு வலிந்த தாக்குதலுக்காக எடுக்கப்பட்ட போது விடுதலையும் தனது அணிகளுடன் வந்து 16.09.2001 அன்று நடைபெற்ற இலங்கைக் கடற்படையினரின் மீதான வலிந்த தாக்குதலிலும் பங்குபற்றினான்.

23.09.2001ல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கைக்கு எதிரான கடற்சமரில் பாரிய விழுப்புண்ணடைகிறான். இச் சமரில் இவனது நெருங்கிய நண்பணான மேஜர் திருமலை வீரச்சாவடைகிறான். விழுப்புண்மாறி முகாம் திரும்பிய விடுதலை அக்காலப்பகுதியில் சமாதானம் நிலவியதால். முகாமில் நின்றார். அவ்வேளையில் ஆழ் கடல் விநியோகம் தென் தமிழீழத்திலும் தொடருமாறு தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு பணிக்கப்படுகிறது. அதற்கமைவாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்படுகிறார். அங்கு சென்ற அணிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ் விநியோகமுறை முற்றிலும் மாறுபட்டிருந்து .சாலையிலிருந்து வேகமான படகுகளிலில் கப்பலுக்குச் சென்று பொருட்களை இரவிற்க்குள் கொண்டு வந்தவர்களுக்கு ரோலரில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணித்து கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்து வருவதுமாக இருந்தது.விநியோக நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டபோது ஒரு பகுதிக்கான பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்பட்டு அதனை செவ்வனவே வழிநடாத்தினான்.

அவ் வேளையில் தான் ஒரு துரோக நடவடிக்கை உருவானபோது அணிகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தான். அத்துரோக நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடல் நடவடிக்கையை கடலில் நின்ற அணிகளுக்கு பொறுப்பாக கடலில் நின்றே வழிநடாத்தி வெற்றிக்கு வித்திட்டான்.அதனை தொடர்ந்து தென்பகுதிக்குச் சென்று ரோலர் கொள்வனவு செய்து அவ் ரோலரில் கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை மன்னாருக்கு கொண்டுவந்த விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்த்தான்.

இது ஒரு இலகுவான காரியமல்ல வன்னியிலிருந்தால் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் உடனடியாக சிறப்புத்தளபதியுடன் கதைத்து ஆலோசனை பெறலாம் அல்லது சிறப்புத்தளபதி பொறு அண்ணையிட்டை கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி அதற்கேற்ப உடனடியாக முடிவுகளைச் சொல்வார். இது அப்படியல்ல என்னவாகிலும் விடுதலையே முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படியாக இக்கட்டான இடங்களிலிருந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலிருந்து பணியாற்றிய விடுதலை . தென்தமிழீழத்தில் நடைபெற்ற பல்வேறு தரை கடற்சமர்களிலும் பங்குபற்றினான்.

தென் பகுதி துறைமுகம் மீதான தாக்குதலுக்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்த விடுதலை
அத்தோடு நின்று விடாமல் அணிகளை கூட்டிச் சென்று துறைமுகத்துக்கு அருகில் சென்று வழியனுப்பிவிட்டும் வந்தான். இப்படியாக இருந்தவேளையில் தென் தமிழீழத்தில் இருந்த போராளிகளை வன்னிக்கு அழைத்தபோது இறுதியாக வந்த போராளிகளுடன் தனக்கு இட்ட பணிகளை செவ்வனவே செய்த திருப்தியுடன் வந்து சேர்ந்தான். வன்னிக்கு வந்து லெப் கேணல் எழிற்கண்ணன் படையனிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு அப்படையணியுடன் மன்னார் சென்றான். கப்பலிலிருந்து ரோலர் மூலம் மன்னாருக்கு லெப். கேணல் டேவிற் படையணி மூலம் கொண்டு வந்த பொருட்களை மன்னாரிலிருந்து கடல்வழியாக லெப் கேணல் எழிற்கண்ணன் படையணி சுட்டபிட்டிக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள் இந் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து விடுதலை செயற்பட்டான்.

இவ்வேளையில் கடற்புலிகளின் தரைத்தாக்குதலுக்கு அணி ஒன்றை உருவாக்கி அவ் அணியை மன்னார் களமுனைக்கு அனுப்புமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட்டது.அதற்கமைவாக அணி ஒன்று உருவாக்கப்பட்டு விடுதலையிடம் சூசை அவர்களால் கொடுக்கப்பட்டு மன்னார் களமுனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது .அங்கு முன்னேறிவரும் படையினருக்கு எதிரான மறிப்புத் தாக்குதலிலும் முறியடிப்புத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு இரு தடவைகள் விழுப்புண்ணடைந்தும் விழுப்புண்மாறமுன்னரே களமுனைக்குச் சென்றவன் விடுதலை.

மன்னார் களமுனையைப் பொறுத்தளவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களுமே சண்டையாகயிருந்தது.அதன் பின்னர் மணலாற்றின் கடற்கரையோர முன்னரங்கப் பகுதி கடற்புலிகளிடம் வழங்கப்பட அதன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட விடுதலை அங்கு முன்னேறிய படையினருக்கு எதிரான சமரை திறம்பட நடாத்தினான். அதில் உடுப்புக்குளப்பகுதியில் பகுதியில் காலையில் முன்னேறியபடையினர் மீது ஒரு முறியடிப்புத் தாக்குதல் நடாத்தி பெருமளவில் படையினரைக் கொன்று பெருமளவிலான ஆயுதங்களும் படைச் சடலங்களும் கைப்பற்றப்பட்ட இவ் வெற்றிகர சமரை விடுதலையே வழிநடாத்தினான். இதற்க்கு பழிதீர்க்குமுகமாக குறிப்பிட்ட மணித்தியாலயத்திற்குள் ஆறு தடவைகள் விமானத்தாக்குதல் நடாத்தினான். இதிலிருந்தே தெரிய வேண்டும் இத்தாக்குதலின் இழப்பை. அதன் பின்னர் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடல் தரை என இருபகுதியில் நடைபெற்ற சமர்களை அணிகளுடன் நின்றே வழிநடாத்தினான்.

பல்வேறு களங்களில் பல்வேறு பணிகளை இக்கட்டான சூழ்நிலையில் மாவீரர்களையும் தலைவரையும் மனதில் சுமந்து தன்னால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்க்கு திறம்பட செயற்பட்ட விடுதலை .இறுதிவரை முள்ளிவாய்க்காலில் களமாடி வீரச்சாவடைகிறான்.

இவர் வீரச்சாவடைந்த திகதியோ தெரியாத நிலையில் உள்ளனர். இது மாதிரியான எத்தனையோ மாவீரர்கள் இம் மண்ணின் விடுதலைக்காக போராடி வெளித்தெரியாத் தடங்களாக இருக்கிறார்கள்.

“கடலிலே காவியம் படைப்போம்”

என்றும் அலையரசி.

http://eelamalar.com/கடற்புலிகளின்-துணைத்-தள/

Edited by நன்னிச் சோழன்
  • Sad 2
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலை

 

depurty viduthalai -sea tigers.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.