Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அல் நாசர் அணிக்காக இந்த சீசனில் 8 கோல்களை அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரொனால்டோ இருக்கிறார்.

26 பிப்ரவரி 2023, 05:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 26 பிப்ரவரி 2023, 06:27 GMT

ரொனால்டோ, கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்திருந்தார், அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது.

இப்போது அல் நாசர் அணிக்காக கடந்த 6 ஆட்டங்களில் 8 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது மட்டுமின்றி 2 கோல்கள் அடிக்க உதவி செய்தும்(அசிஸ்ட்-Assit) அசத்தி இருக்கிறார் இந்த நட்சத்திர வீரர்.

அல் நாசர் vs டமக்

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சௌதி அரேபியாவில் நடக்கும் கால்பந்து போட்டியான, 'சௌதி புரோ லீக்' தொடரில் நேற்று (பிப். 25) நடந்த போட்டியில் நட்சத்திர வீரரான ரொனால்டோ விளையாடும் அல் நாசர் அணி, டமக் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சௌதி லீக் போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்ற நம்பிக்கையுடன் அல் நாசர் அணி களம் கண்டது.

அந்த அணியின் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நல்ல ஃபார்மில் இருந்தது அல் நாசர் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியிருந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல் நாசர் அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்து வந்தது.

ரொனால்டோவின் பெனால்டி

அல் நாசர் அணியின் கோல் முயற்சிகளை தடுக்க டமக் அணி முயற்சி செய்த போது, ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் டமக் அணியின் கேப்டன் ஒரு சிறிய தவறை செய்தார்.

அல் நாசர் அணியில் கோல் அடிக்கும் முயற்சியின் போது D பாக்ஸில் டமக் அணியின் கேப்டனான இப்ராஹிம் கையில் பந்து பட்டதால், நடுவர் ஹேண்ட் பால் அறிவித்து பெனால்டியை வழங்கினார்.

எதிரணியின் தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணாக்காமல் கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் திணித்தார் ரொனால்டோ.

அல் நாசர் அணி 1-0 என முன்னிலை பெற்றாலும், தொடர்ந்து அட்டாங்கிங் செய்து வந்தது.

அந்த அணியின் ஃபார்வர்ட் வீரர்கள் பந்தை தொடர்ந்து எதிரணியின் கோல் ஏரியாவுக்குள்ளேயே வைத்திருந்தனர்.

ஹாட்ரிக் அடித்த ரொனால்டோ

கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட அல் நாசர் அணிக்காக இரண்டாவது கோலையும் அடித்து அசத்தினார் ரொனால்டோ.

முதலாவது கோல் அடித்த 5 நிமிடத்திலேயே, இரண்டாவது கோலை தனது weak foot ஆன இடது காலால் லாவகமாக அடித்தார் ரொனால்டோ.

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது கோல் தாகம் அத்துடன் அடங்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிய 1 நிமிடம் இருக்கையில் மீண்டும் ஒரு கோலடித்து அல் நாசர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.

அல் நாசர் அணியின் கரீப் கொடுத்த வைடு பாஸை பெற்ற அய்மென் யாயா, அதை ரொனால்டோவுக்கு பாஸ் செய்தார். அதை பெற்றுக் கொண்ட ரொனால்டோ நொடியும் தாமதிக்காமல் வலைக்குள் அனுப்பி தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அல் நாசர் அணிக்காக ரொனால்டோ இந்த சீசனில் அடிக்கும் இரண்டாவது ஹாட்ரிக் கோல் இதுவாகும். முன்னதாக பிப்ரவரி 9ஆம் தேதி அல் வேதா அணிக்கு எதிரான போட்டியில் 4 கோல் அடித்திருந்தார்.

ரொனால்டோ விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் கோல்கள் உட்பட 7 கோல்களை அவர் அடித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் 2 அசிஸ்ட் செய்து அல் நாசர் அணி வெற்றி பெற முக்கியமானவராக திகழ்ந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

புள்ளிப் பட்டியலில் முதலிடம்

டமக் அணியுடனான முதல் பாதியிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி முன்னிலை பெற்று இருந்தது.

அந்த முன்னிலையுடன் இரண்டாவது பாதியில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை தக்க வைத்தது.

அந்த அணியின் குஸ்டாவோ தடுப்பாட்டத்தை சிறப்பாக கையாண்டார். டமக் அணியை தனது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருக்க விடாமல் பாஸ்களை தொடர்ந்து கடத்திக் கொண்டே இருந்தார்.

இதன் காரணமாக டமக் அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட போட முடியவில்லை.

இரண்டாவது பாதியிலும் ரொனால்டோ தனது ஆதிக்கத்தை செலுத்தி வலைக்குள் மீண்டும் பந்தை அனுப்பினார். ஆனால் நடுவர் அதை ஆஃப் சைடு என அறிவித்ததால் அது கோலாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இறுதியில் அல் நாசர் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் டமக் அணியை வீழ்த்தியது.

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,SPL.COM

 
படக்குறிப்பு,

அல் நாசர் அணி 13 வெற்றிகளுடன் 43 புள்ளிகள் பெற்று, அல் இட்டிஹாத் அணியை விட 2 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் இருக்கிறது

இந்த வெற்றியின் மூலம் சௌதி புரோ லீக்கில் அல் நாசர் அணி முதலிடம் பெற்றது.

நேற்று அல் இட்டிஹாத் - அல் ரீத் அணிக்கான போட்டி சமனில் முடிந்ததையடுத்து டமக் அணியுடனான வெற்றியின் மூலம் கிடைத்த 3 புள்ளிகளுடன் அல் நாசர் அணி முதலிடத்தை பிடித்தது.

கோல் போட்டியில் ரொனால்டோ

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டிக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது அணியுடன் நான் மிகவும் இணக்கமாக இருக்கிறேன். எனது சக வீரர்களின் நகர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஏற்ப நானும் களத்தில் நகர்கிறேன். இது அணிக்கு மிக முக்கியமானது."

சௌதி புரோ லீக்கில் தற்போது அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 கோல்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் அல் நாசர் அணிக்காக ஜனவரி மாதம் களமிறங்கிய அவர், 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இன்னும் 5 கோல்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த பட்டியலில் ரொனால்டோவின் சக அணி வீரரான ஆண்டர்சன் டலிஸ்கா 14 போட்டிகளில் விளையாடி 13 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c1vx6vd7klpo

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌ல‌ வ‌ய‌தானாலும் வேற‌ லெவ‌ல்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

த‌ல‌ வ‌ய‌தானாலும் வேற‌ லெவ‌ல்...............

வயது போகப்போக எப்பவுமே வேற லெவல் தானே அப்பன்....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

வயது போகப்போக எப்பவுமே வேற லெவல் தானே அப்பன்....:cool:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

பிகு

அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

பிகு

அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல்  அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல்  அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா❤️🙏😁..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல்  அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎

அப்படியா தாத்தா?

அப்ப தமிழீழத்தோடு உக்ரேனை ஒப்பிடுவது இனத்துரோகம் எண்டு எழுதியதெல்லாம் - உங்கள் வாரிசுகளுக்கு பொருந்தாதா தாத்தா?🤣

இது கருணாநிதியை வெண்ட வாரிசு அரசியலா இருக்கே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣😁😂...............

12 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

பிகு

அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣

அப்ப‌ இது என்ன‌ Bro சொல்லுங்கோ......................

Screenshot-20230227-135942-Chrome.jpg

 

 

த‌மிழில் கிறுக்கும் போது யோசிச்சு கிறுக்கினா ந‌ல்ல‌ம்🤣😁😂...........................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

 

காசு

பணம்

துட்டு

மணி  மணி???☺️

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

🤣😁😂...............

அப்ப‌ இது என்ன‌ Bro சொல்லுங்கோ......................

Screenshot-20230227-135942-Chrome.jpg

 

 

த‌மிழில் கிறுக்கும் போது யோசிச்சு கிறுக்கினா ந‌ல்ல‌ம்🤣😁😂...........................

ஆ…ப்ரோ…

அதென்னெண்டா….உந்த படம் முந்தி ஒரு இருபது வருசமா மஞ்சள் சிவப்பிலதான் இருந்தது. வடிவா பாருங்கோ வடக்கு-கிழக்கு தவிர்ந்த இலங்கை ஒரு ஓநாய் குந்தி இருப்பது போல இருக்கும். அது கறுப்பில் இருக்கும்.

பிறகு போன வருடம் சிலர் உக்ரேனில் அடிபாடு தொடங்கின நேரம் உக்ரேனியருடன் solidarity (சகோதரதுவம்) காட்டும் முகமாக இந்த படத்தை உக்ரேன் கலருக்கு மாத்தினவை.

ஆனால் நீங்கள் ரஸ்ய அனுதாபி எல்லோ? அதான் உதை ஏன் வச்சனியள் எண்டு கேட்டனான். தாத்தாக்கு விளங்கி விட்டது. அதான் அவரவர் விருப்பம் எண்டு சொல்லி இருக்கிறார்.

நான் நினைக்கிறன் நீங்கள் பார்க்க மிட்டாஸ் கலரில இருக்கு எண்டு வஞ்சகமில்லாமல் வச்சிருக்கிறியள் போல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

 

நான் நினைக்கிறன் நீங்கள் பார்க்க மிட்டாஸ் கலரில இருக்கு எண்டு வஞ்சகமில்லாமல் வச்சிருக்கிறியள் போல?

❤️🙏.............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவை அலறவிட்ட அல் பேட்டின்: அல் நாசரை காப்பாற்றிய கடைசி நிமிட 'மேஜிக்' கோல்கள்

அல்நாசர் - ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சௌதி புரோ லீக்கில் அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ரொனால்டோவின் அல்-நாசர் அணி, கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து வெற்றியைத் தன்வசமாக்கியது.

கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி புரோ லீக், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உள்நாட்டுத் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்டது.

வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

முந்தைய 3 ஆட்டங்களில் இரு முறை ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதையும் வென்றார்.

 

சௌதி புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதில் அல்-நாசர் அணிக்கும், அல்-இட்டிஹாட் அணிக்கும் இடையேதான் கடும் போட்டி நீடிக்கிறது. அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மீண்டும் முதலிடத்தப் பிடிக்கலாம் என்ற நிலையில் அல்-நாசர் அணி இருந்தது.

அல்-நாசர் அணி கடந்த செப்டம்பருக்கு பிறகு இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவே இல்லை. மறுபுறம், அல்பேட்டின் அணியோ நடப்புத் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 12 ஆட்டங்களில் அல்-நாசர் அணி 9 முறையும், அல்-பேட்டின் அணி 3 முறையும் வென்றுள்ளன. நடப்புத் தொடரில் 39 கோல்களை அடித்துள்ள அல்-நாசர் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தைக் கொண்ட அணியாக உருவெடுத்துள்ளது. அல்-பேட்டின் அணியோ வெறும் 12 கோல்களுடன் மிகக் குறைந்த கோல்களை அடித்த அணியாக உள்ளது.

அல்நாசர் - ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளி விவரங்களின்படி பார்த்தால், அல்-பேட்டின் அணியை கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய அல்-நாசர் அணி எளிதில் வீழ்த்திவிடும் என்றே கால்பந்து வல்லுநர்கள் கணித்திருந்தனர். சிறப்பான ஃபார்மில் இருந்த ரொனால்டோ இந்தப் போட்டியிலும் கோல் மழை பொழிவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் கிங் சௌத் யுனிவெர்சிட்டி ஸ்டேடியத்தில் அல்-நாசர் மற்றும் அல்-பேட்டின் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அல்-நாசர் அணியின் தாக்குதலை அல்-பேட்டின் வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.

அத்துடன், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அல்-பேட்டின் அணி கோல் அடித்து முன்னிலையும் பெற்றது. அந்த அணி வீரர் ரென்சோ லோபெஸ் எதிரணி வீரர்களை ஏமாற்றி தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

கோல் வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் கடுமையாகப் போராடினர். குறிப்பாக, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்கடி எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டபடி இருந்தார்.

ஒரு கட்டத்தில் பந்தை ரொனால்டோ கோல் வளைக்குள் திணிக்கவும் செய்தார். ஆனால், அதை ஆஃப்சைடு என்று நடுவர்கள் அறிவித்ததால் அவர் ஏமாற்றமடைந்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அல்-நாசர் அணி வீரர்கள் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முயன்றனர். தாக்குதல் ஆட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய ரொனால்டோ, சில கோல் வாய்ப்புகளை உருவாக்கவும் செய்தார்.

ஆனால், அல்-பேட்டின் அணியின் தற்காப்பு மிகவும் வலுவாக இருந்ததால், அவை எதுவும் கோலாக மாறவில்லை. அல்-பேட்டின் அணியின் கோல் கீப்பர் மார்ட்டின் கம்பானா தனி ஒருவனாக மலை போல் நின்று அல்-நாசர் அணியின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.

அல்நாசர் - ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் அல்-பேட்டின் ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. வலுவான அல்-நாசர் அணியோ கோல் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதனால், அல்-நாசர் அணிக்கு அல்-பேட்டின் அணி அதிர்ச்சி கொடுக்கக்கூடும் என்ற நிலையே இருந்தது.

ஆனால், ஆட்டத்தின்போது வீணான நேரத்தை ஈடுகட்டுவதற்காக வழங்கப்பட்ட கூடுதலான 12 நிமிடங்களில் ஆட்டமே தலைகீழாக மாறிப் போனது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் இடைவிடாத முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

அல்-பேட்டின் அணியின் கோல் கம்பத்தை அந்த அணி முற்றுகையிட்டிருந்தபோது கிடைத்த வாய்ப்பை அல்துல் ரஹ்மான் காரீப் கோலாக மாற்றினார். இதனால், ஆட்டம் சமநிலைக்கு நகர்ந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இன்னும் 9 நிமிடங்கள் எஞ்சியிருந்ததால் இரு அணிகளுமே கோல் அடித்து வெற்றியை வசப்படுத்திவிடத் துடித்தன. ஆனால், திரில்லிங்கான இந்தக் கட்டத்தில் வலுவான அல்-நாசர் அணி தனது அனுபவத்தைப் பயன்படுத்தி முத்திரை பதித்தது.

பரபரப்பான இறுதிக்கட்டத்தில், அல்-நாசர் அணிக்கு சப்ஸ்டிடியூட் வீரராக உள்ளே வந்த முகமது அல்-ஃபேட்டில் கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது அவர் அடித்த கோல் அல்-நாசர் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து அல்-பேட்டின் அணி மீளும் முன்பே, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோலையும் அடித்து, 'சௌதி புரோ லீக்கில் யார் மாஸ்' என்று அல்-நாசர் அணி நிரூபித்தது. முகமது மாறன் இந்த கோலை அடித்து அல்-நாசர் அணிக்கு வலுவான முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்மூலம் அல்-நாசர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல்-பேட்டின் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் 46 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அல்-இட்டிஹாட் அணியைக் காட்டிலும் அல்-நாசர் 2 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில், கூடுதல் நேரமாக 12 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பலரும் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர், ரொனால்டோ கோல் அடித்த பின்னரே ஆட்டம் முடிவுக்கு வரும் என்று கிண்டலாக பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.

அல்நாசர் - ரொனல்டோ

பட மூலாதாரம்,TWITTER/LOGAN

அரபு மண்ணில் கால் பதித்த பின்னர், சௌதி ப்ரோ லீக் தொடரில் ரொனால்டோ இதுவரை 8 கோல்களை அடித்துள்ளார்.

முந்தைய ஆட்டங்களில் அசத்திய அவருக்கு நேற்றைய ஆட்டத்தில் கோல் அடிக்காதது ஏமாற்றமே. போட்டியின் முடிவு அவரது அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் ஏதும் எழவில்லை.

சௌதி ப்ரோ லீக்கில், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் அல்-நாசர் அணியும், அல்-இட்டிஹாட் அணியும் வரும் 9-ஆம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அல்-பேட்டின் அணிக்கு எதிராக ஏமாற்றம் தந்த ரொனால்டோ அடுத்த ஆட்டத்தில் மாயாஜாலம் நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cne3nlwnp0vo

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அனல் பறந்த ஆட்டம், ரொனால்டோவின் அநாயசமான கோல் - ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச கால்பந்தில் போர்ச்சுகல் தேசிய அணியில் மீண்டும் இடம் கிடைத்த உற்சாகத்தில், சௌதி ப்ரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காக நட்சத்திர வீரர் ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், ஆபா அணியை வீழ்த்திய அல்-நாசர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை நெருங்கியுள்ளது.

கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி ப்ரோ லீக் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகிவிட்டது.

வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அந்த அணியில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்மூலம் தனக்கு மட்டுமின்றி, சௌதி ப்ரோ லீக் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் மதிப்பு கிடைத்துள்ளது.

 

போர்ச்சுகல் அணியில் மீண்டும் இடம்

இதன் எதிரொலியாக, போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோ மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரொனால்டோவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த, கத்தார் உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி விளையாடிய 2 நாக்அவுட் போட்டிகளிலும் அவர் தொடக்கத்திலேயே களமிறங்க அப்போதைய பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.

இதனால், 35 வயதை எட்டிவிட்ட ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நிபுணர்கள் பலரும் கணித்தனர்.

ஆனால், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ரொபர்டோ மார்டினெஸ் அந்தக் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிக்கான போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோவுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சௌதி ப்ரோ லீக்கில் அசத்திய ரொனால்டோ

போர்ச்சுகல் அணியில் இடம்பிடித்த ரொனால்டோ, சௌதி ப்ரோ லீக் தொடரிலும் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்புடன், ஆபா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அல்-நாசர் அணிக்காக உற்சாகத்துடன் களமிறங்கினார்.

நடப்புத் தொடரில் அல்-நாசர் அணிக்காக 9 போட்டிகளில் 8 கோல்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருந்த அவர், முதலிடத்தில் இருந்த பிரேசிலின் ஆண்டர்சன் தலிஸ்காவை முந்தும் வாய்ப்பு இருந்தது.

இதற்கேற்ப, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ரொனால்டோ புது உத்வேகத்துடன் ஆடியதைப் பார்க்க முடிந்தது. அல்-நாசர் அணி தொடக்கத்திலேயே தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கையில் எடுத்தது.

பெரும்பாலான நேரம் அந்த அணி வீரர்கள் வசமே பந்து இருந்தது. தங்களுக்குள் அற்புதமாக பாஸ் செய்து கொண்ட அவர்கள், அடிக்கடி ஆபா அணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்ட படி இருந்தனர்.

ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே அல்-நாசர் அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆபா அணியின் கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமாக ரொனால்டோ எதிரணி வீரர்களால் தடுக்கப்பட்டு கீழே விழ, பெனால்டி கேட்டு நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர் அதை நிராகரித்துவிட்டார்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபா அணி முதல் கோல் அடித்து முன்னிலை

இதைத் தொடர்ந்து ஆபா அணியும் தாக்குதல் பாணியை கைக்கொள்ள, ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்து இரு அணிகளின் கோல் கம்பங்களின் பக்கமும் மாறி மாறிச் சென்ற வண்ணம் இருந்தது. ஆனால், கோல் ஏதும் விழவில்லை.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் அந்தத் திருப்புமுனை நிகழ்ந்தது. அல்-நாசர் அணியின் தாக்குதலை முறியடித்த ஆபா அணி வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். அந்த அணியின் சாட் பிகுயிர் கொடுத்த அற்புதமான பாஸை பெற்ற முன்கள வீரர் ஆடம் அதைத் திறமையாக கோலுக்குள் திணித்தார்.

இதன்மூலம் ஆபா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் கோலை அடித்த வீரர் ஆடம், கடன் முறையில் அல்-நாசர் அணியிடம் இருந்து ஆபா அணியால் பெறப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கோலை வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஆபா அணி வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் முறியடித்தனர்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆபா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதலே பதில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர அல்-நாசர் அணி முனைப்புடன் செயல்பட்டது. அந்த அணி வீரர்கள் களத்தில் இதற்காகத் துடிப்புடன் மோதினார்கள்.

சில நிமிடங்களிலேயே அல்-நாசர் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, ஆபா அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தை மீறி பந்து உள்ளே செல்ல முடியவில்லை. இதேபோல் அல்-நாசர் அணி வீரர்களுக்குக் கிடைத்த சில வாய்ப்புகள் அடுத்தடுத்து கைநழுவிப் போயின.

பந்து அதிக நேரம் அல்-நாசர் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த அணியின் கையே ஓங்கியிருப்பது போலத் தோன்றினாலும், ஆபா அணியின் தடுப்பரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.

முடிவில், ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் இடையறாத போராட்டத்திற்குப் பலன் கிடைத்தது. அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் நட்சத்திர வீரர் ரொனால்டோ 35 மீட்டர் தொலைவில் இருந்து அநாயசமாக பந்தை கோல் வலைக்குள் திணித்து அசத்தினார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ரொனால்டோ அடித்த கோலால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. இதனால், வெற்றி மதில்மேல் பூனையாகிப் போனது.

அடுத்த நிமிடத்திலேயே ஆபா வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இது அல்-நாசர் அணிக்குச் சாதகமான அம்சமாக மாறியது.

ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் அல்-நாசர் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணிக்காக விளையாடும் பிரேசிலை சேர்ந்த ஆண்டர்சர் தலிஸ்கா கோலாக மாற்றினார்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அல்-நாசர் அணி வீரர் ஆண்டர்சன் தலிகா கோல் அடித்த காட்சி

ஆபா அணி பதில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவம் அடிக்கவில்லை. இதனால், அல்-நாசர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆபா அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் சௌதி ப்ரோ லீக் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அல்-இதிஹாட் அணியை ரொனால்டோவின் அல்-நாசர் அணி நெருங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.

போர்ச்சுகல் தேசிய அணியில் இடம் பிடித்ததன் மூலம் சர்வதேச கால்பந்து வாழ்க்கையைத் தொடரவுள்ள ரொனால்டோ, எதிர்வரும் வியாழக்கிழமையன்று (மார்ச் 23) லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கிறார்.

சர்வதேச கால்பந்தில் 196 போட்டிகளில் 118 கோல்களை அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை சிகரத்தில் அமர்ந்துள்ள ரொனால்டோ, தனது கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c1vqg4662dvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரொனால்டோ " அசாத்தியமான ஒரு வீரன்.........!   💐

நன்றி ஏராளன் .........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌ல‌ கால் வைச்ச‌ இட‌ம் எல்லாம் வெற்றி

இன்னும் ப‌ல‌ கோல் அடிக்க‌ த‌ல‌க்கு வாழ்த்துக்க‌ள்......................

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும்.    https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/  
    • என்றாலும்  இலங்கை தமிழர்கள் சிலரது இதயங்கள் வாழ்கின்ற நாடுகள் 70 க்கும் 64 வது இடத்துக்கும் வந்தது கவலை தருகிறது. இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு 😂
    • நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST] சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கொரோனா தொற்று மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீண்டார் இளங்கோவன் இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html டிஸ்கி: அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?
    • காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது!   Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம் காணாமற் போயிருப்பதுடன், அவர்களுடைய மனைவிமார் அது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். தமது கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அப்பெண்கள் வழங்கிய சாட்சியத்தை தான் நம்புவதாகக் கூறிய நீதிபதி, இராணுவம் அவர்களை ஆஜர் செய்யத் தவறினால் அந்த நபர்கள் காணாமற் போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை எடுத்து விளக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஓர் ஆட்கொணர்வு மனு என்பது, பொது அல்லது தனியார் கட்டுக்காவலின் கீழ் சட்ட விரோதமாக அல்லது பொருத்தமற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்கும் நபரொருவரை ஆஜர்படுத்துமாறு நிர்ப்பந்திப்பதற்கு, அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு அல்லது சட்டத்தின் பிரகாரம் அந்த விடயத்தைக் கையாளுமாறு கேட்டுக் கொள்வதற்கு கிடைக்கும் ஒரு நிவாரணமாகும். இராணுவத் தளபதி, 58ஆவது படையணியின் தளபதி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த விண்ணப்பங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவம் நடந்த இடம் தொடர்பாக நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு விசாரணையை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென வவுனியா மேல் நீதிமன்றம் பணிப்புரை வழங்கியிருந்தது. இந்த விசாரணை முடிவடைவதற்கு ஒன்பது ஆண்டுகள் எடுத்தன. போரின் கடைசி நாட்களின் போது ஷெல் தாக்குதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றிலிருந்து தப்பிக் கொள்வதற்காக தாம் தப்பியோடிய போது நிலவிய கடும் திகில் மற்றும் குழப்ப நிலை என்பவற்றை அப்பெண்கள் எடுத்து விளக்கியிருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை சென்றடைந்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இருப்பின் அவர்கள் சரணடைய வேண்டுமென்றும், ஒரு விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில், அப்பெண்கள் தமது கணவன்மார் சரணடைய வேண்டுமென அவர்களைத் தூண்டினார்கள். அது தமது கணவன்மாரை அவர்கள் பார்த்த கடைசித் தடவை என்றும், இராணுவ ஆளணியினர் அவர்களை இலங்கை  போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏற்றி, எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும் அப்பெண்மணிகள் கூறினார்கள். 58ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன இராணுவத்தின் சார்பில் சாட்சியமளிப்பதற்கென சட்டமா அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தார். எவரும் கைது செய்யப்பட்டதனையோ அல்லது தடுத்து வைக்கப்பட்டதனையோ அவர் மறுத்தார். ஆனால், குறுக்கு விசாரணையின் போது 2009 மே 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் ஆட்கள் இராணுவத்திடம் சரணடைந்ததையும், அவ்விதம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஒரு பதிவேட்டை இராணுவம் வைத்திருந்தது என்பதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். எவ்வாறிருப்பினும், மேஜர் ஜெனரல் குணவர்தன அந்தப் பதிவேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். ஆனால், அதற்குப் பதிலாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு பதிவேட்டை அவர் எடுத்து வந்திருந்தார். அந்த மூன்று நபர்களும் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்கள் என அளிக்கப்பட்ட சாட்சியம் குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்திருப்பதாகக் கூறிய நீதிபதி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது இராணுவத்தின் பொறுப்பாகுமென சொன்னார். இராணுவம் மார்ச் 22 ஆம் திகதி (இன்று) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென கட்டளையிடப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே மாதிரியான ஒரு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. போரின் இறுதிக் கட்டத்தின் போது முல்லைத்தீவில் வைத்து தனது குடும்ப உறுப்பினர்களால் ஆயுதப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரொருவரை ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர்நீதிமன்றம் இராணுவத்துக்கு கட்டளையிட்டது. இராணுவம் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால் அவர் காணாமற்போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை அது எடுத்து விளக்க வேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், அதனை நிரூபிக்கும் பொறுப்பை இராணுவம் கொண்டிருப்பதாக மேலும் கூறினார். இராணுவத்தின் சார்பில் சாட்சியமளித்த சாட்சி ஒருவர் குறிப்பிட்ட தினத்தின் போது சரணடைந்தவர்களை ஆவணப்படுத்திய ஒரு பதிவேடு இருப்பதை ஏற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன நபர் ஆயுதப் படையினரின் கட்டுக்காவல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தார் என்பதை நீதிமன்றம் நம்புவதாக நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், அந்தப் பதிவேட்டை சாட்சி  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்த மூன்று பெண்களில் ஒருவர் அனந்தி சசிதரன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவராக இருந்து வந்த தனது கணவரான எழிலனை அன்றைய தினம் அவர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டுமென அனுப்பி வைத்திருந்தார். பின்னர் அவருடைய கணவர் காணாமற் போயிருந்தார். தன்னுடைய கணவர் மீண்டும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையிலேயே சரணடையுமாறு அவர் கணவரிடம் கூறியிருந்தார். கணவர் அவ்விதம் திரும்பி வராத பொழுது அனந்தி அவரைத் தேடத் தொடங்கியதுடன், அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அனந்தி தனது விடயத்தை ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் சென்றதுடன், போர்க் குற்றங்களுக்கு வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரங்கு  என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குள் பிரேவேசிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியத்துவம் குறித்த கேள்விகளுக்கு அனந்தி பதிலளித்ததுடன், நீதிக்கான தனது போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனக் குறிப்பிட்டார். உங்கள் கணவரை ஆஜர்படுத்துமாறு இராணுவத்தைக் கோரும் நீதிமன்ற தீர்ப்பு எவ்வளவுமுக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 18.05.2009 இல் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த இடத்தில் இலங்கை இராணுவத்திடம் நிராயுதபாணியாக கையளித்திருந்தேன். ICRC, HRC மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என்று சகலரிடமும் முறையிட்டேன். 2009 இலேயே ஐ.நா. மன்றத்திடமும் முறையிட்டிருந்தேன். ஒரு பதிலும் இல்லை. 2013 இல் ஆட்கொணர்வு மறுவழக்கு வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சரணடைந்த சம்பவம் முல்லைத்தீவு எல்லைக்குள் நடந்தபடியால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், இராணுவ புலனாய்வாளர்களாலும் பல அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை பின் தொடர்வதும், அச்சுறுத்துகின்ற வகையில் கண்காணிப்பதும், எனக்கு எதிராக CSD பண்ணையில் வேலை செய்கின்ற முன்னாள் போராளிகள், போராளிகளின் மனைவிமாரை கொண்டு போராட்டம் செய்வது, அவர்களைக் கொண்டு எனக்கு எதிராக கோசங்களை எழுப்புவது எல்லாமே நடந்தது. ஆனாலும் வழக்குகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தேன். இன்று வவுனியா உயர் நீதிமன்றில் எனது ஆட்கொணர்வு மனு வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது என்பது ஒரு நம்பிக்கையையும் தெம்பையும் தந்திருக்கிறது. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது. அது உங்களை எப்படி உணர வைத்தது? நான் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. மனக்காயம் கொஞ்சம் ஆறியமாதிரி இருக்கிறது.. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. இன்னும் நம்பிக்கையுடன், வலுவாக அறம் சார்ந்து போராடக்கூடிய மன எழுச்சி ஏற்பட்டிருக்கு. இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு நீங்கள் மேற்கொண்ட செயல்முறை என்ன?  18.05.2009 இல் என் கணவரை சரணடையக் கொடுத்துவிட்டு, அரச உத்தியோகத்தருக்கான சொற்ப சம்பளத்தில் பிள்ளைகளை வளர்க்க, கல்வியை ஊட்ட, பாதுகாப்பாக வைத்திருக்க என்று பலவகையில் பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் போராட வேண்டியவளாக இருந்தேன். இலங்கை இராணுவத்தின் விசாரணை, இலங்கை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் எல்லாமே இருந்தது. முதன் முதலாக 2011இல் எனது மூன்று பிள்ளைகளையும் கொழும்பிற்கு பஸ்ஸில் கூட்டிக்கொண்டு சட்டத்தரணி ரத்னவேல் அவர்களைச் சந்தித்து எனது கணவரை சரணடைய கொடுத்த சம்பவத்தை விசாரித்து ஆட்கொணர்வு மனு வழக்கு தாக்கல் செய்து தருமாறு கோரியிருந்தேன். ரத்னவேல் சேர் சொன்னார் இவ்வழக்கு மிகவும் அச்சுறுத்தலானது, நீங்கள் தனியாக இதில் ஈடுபடுவதை விட இன்னும் சிலரை சேர்த்து இவ்வழக்கை தாக்கல் செய்யலாம் என்றார். இந்த வழக்கிற்கான பணம் எதுவும் தரத் தேவையில்லை எனவும் சொன்னார். எனவே, 2011 இல் கிளிநொச்சியில் எனது அலுவலக கடமை நேரம் முடிந்தபின் பஸ்ஸில் சென்று பல போராளிகளின் மனைவியார், தாய்மார்களைச் சந்த்தித்தேன். அதேபோல் யாழ்ப்பாணத்தில் சனி, ஞாயிறு நாட்களில் பஸ்ஸில் சென்று போராளிகளின் மனைவியாரைச் சந்தித்தேன். சுமார் 25 பேர் வரை சந்தித்தேன். இதில் நான்கு பேர் என்னுடன் சேர்ந்து வழக்குத் தாக்கல் செய்ய உடன்பட்டனர். பின்னர் இந்த நான்கு பேரையும் கொழும்பிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து ரத்னவேல் சேருடன் கடமையாற்றிய சட்டத்தரணி மங்களேஸ்வரி அவர்களின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அந்த நெருக்கடியான காலப்பகுதியில் CHRD யில் கடமையாற்றிய பலர் எங்களுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர். குறிப்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி மிகவும் துணிச்சலாக பக்கபலமாக இருந்தார். அடுத்த கட்டமாக ஐந்து பேரை இணைத்து வழக்கு தாக்கல் செய்தோம். இதில் பல சரணடைந்தவர்களின் மனைவியர் இதே வழக்கினை தாக்கல் செய்வதற்கு உடன்படவில்லை. தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அரசு தங்களை பழிவாங்கும், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மறுத்துவிட்டனர். இந்தத் தீர்ப்பால் என்ன நடக்கும் என்று நம்புகிறீர்கள்? இந்தத் தீர்ப்பு காணாமற்போனவர்களுக்காக போராடும் ஏனையோருக்கு முன்னுதாரணம். ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தார்கள். எனவே, ஏனையவர்களும் வழக்குகளை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். இனி பாதுகாப்பு தரப்பிலிருந்து என்ன வெளிப்பாடு வரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நீங்கள் ஜெனிவா சென்ற போது சர்வதேச சமூகம் உங்களுக்கு உதவியாக இருந்ததா? ஜெனிவா சென்றபோது அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் எங்களுக்கு எதுவுமே செய்துவிடவில்லை. ஆனாலும், நீதி கோருகின்ற பொது வேலைத்திட்டத்திற்கு 2014 இலிருந்து இன்றுவரை முன்னெடுத்து வருகிறேன். 2014/ 2015 களில் சர்வதேசம் எங்கள் கருத்துக்களை செவிமடுத்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானிய, சுவிஸ் போன்ற நாடுகள் போரில் சாட்சியாக என் குரலை செவிமடுத்தது. ஆனால், சர்வதேசம் உருவாக்கிய நல்லாட்சிக்கு பின் சாத்தியமான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச விசாரணை என்பதை வலியுறுத்தினோம். 30/1 தீர்மானம் கலப்பு பொறிமுறை என்றது. பின்னர் வலுவிழந்த தீர்மானங்கள் நீர்த்துப் போனதாக இருக்கின்றது. 2013/ 2015௧ளில் நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் கரிசனைக் காட்டியது. இதன் காரணமாக போர் சாட்சியாக என்னையும் முன்னிலைப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்ட 2015 ஆட்சி மாற்றத்தின் பின் எல்லாமே மாறிவிட்டது. ஆனாலும், தொடர்ந்து எனது நீதிகோரிய பயணம் தொடர்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் எத்தனை முறை உரையாற்றினீர்கள்? நான் 2014 தொடக்கம் இன்றுவரை 15 தடவைக்கு மேல் ஐ.நா. சபையில் பேசியுள்ளேன் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? நல்ல முடிவுக்காக இன்றும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்றும் போராடவேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகள் தங்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவே தவிர மனித நேயம் காக்கப்படுவதில்லை. மனித உரிமை என்பது வலுவிழந்தவர்களை கையாள எடுத்துக்கொள்ளும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 13 வருடங்கள் கடந்தும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகள், கொத்து குண்டுகள் கொண்டும் கொள்ளப்பட்டும் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கண்டுகொள்ளத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையை என்னவென்று சொல்வது? இறுதியில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? காலம் கடந்தாலும் நீதியைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்களின் ஆன்மாக்கள், இனவிடுதலைக்காக தங்கள் உன்னதமான உயிரை ஆகுதியாக்கிய ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாயங்கள் வீண்போகாது. நீதியை பெற்றுக்கொள்ள போராடுவோம். அறம் வெல்லும். Military to Face a Day of Reckoning Over the Disappeared என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான நேர்க்காணலின் தமிழாக்கம்.   https://maatram.org/?p=10758  
    • கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த முயற்சியும் இல்லை 😭  ஆகக் குறைந்தது யாழ் களத்திலாவது நெடுக்ஸ்யும் கோசானையும் யஸ்ரினையும் (ஒரு உதாரணத்திற்கு தான் 3 பெயர்கள்) ஆவது ஒரு கோட்டின் கீழ் கொண்டு வரமுடியுமா? முடிந்தால் அறிவாயுதப்போர் பற்றி பேசும் தகுதியாகவாவது கொள்ளலாம். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.