Jump to content

வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

thumbnail_IMG_0459-1.jpg
வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர்
 
.thumbnail_IMG_0454-294x300.jpg

எங்கோ பிறந்து, யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கையானது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் “A Private War” திரைப்படம் ஈழத் தமிழர்களின் போர்க்கால உண்மையை உலகிற்கு வெளிக்காட்டியது.

thumbnail_IMG_0457-1024x945.jpg

“அது ஓர் அவசரமான அழைப்பு. ஆனால், சில மணிநேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை…..” என்று தொடங்கி மேரி கொல்வின் எழுதிய கட்டுரை இன்றைக்கும் இறுதுப் போர்க் குற்றத்தின் சாட்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இறுதிப் போர் முடிந்த பிறகும், அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அவர் பொருட் படுத்தவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தார்.

உலகத் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் நினைவிருக்கும் போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் பதினோராம் ஆண்டு நினைவு நாள் (22/2/2012) ஆகும்.

அப்பாவி தமிழர்களின் அபயக் குரல் :

அப்பாவிகளின் அபயக் குரல் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு தனது இருப்பைப் பதிவு செய்பவர் பத்திரிகையாளர் மேரி கொல்வின். அல்லட்படும் மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகவியலாளரே அவர்.

வன்னியில் இறுதிக்கட்ட போர்க் கால தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் தனது வாக்குமூலத்தையும் உலகறியச் செய்துள்ளார்.

மேரி கொல்வின் அவர்கள் தனது சுய வாக்குமூலத்தில் “2001 ம் வருடம் வன்னியிலிருந்த ஐந்து இலட்சம் தமிழர்களின் அவலநிலையினை அறிவதற்காய் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நான் நுழைந்தேன். அங்கு நான் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதிமறுத்ததால் சிறு விளக்குகளின் ஒளியுடன், பல முட்கம்பி வேலிகளை தாண்டி, இடுப்பளவு தண்ணீரில் காட்டுப் பாதையில் பயணம் செய்தேன்.

அனைத்துலக சாட்சிக் குரல் :

எனை இனம் கண்டுகொண்ட படையினர் என்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

நான் ஒரு பத்திரிகையாளர் என கத்தியபோதும் அவர்கள் அதை ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளவேயில்லை.

கைக்குண்டுகள் கொண்டு எனை தாக்கிய அவர்களின் முன்னால் நான் சென்றபோது நெஞ்சில் குண்டுக்காயங்களிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

அக்காயங்களுடனேயே எனை தாக்கிய படையினர் மிலேச்சத்தனமாக எனை அவர்களின் கனரக வாகனம் ஒன்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். இலங்கைப்படைகளின் தாக்குதலால் தன் கண் ஒன்றை இழந்த மேரி கொல்வின் அம்மையாரின் கூற்றே இதுவாகும்.

ஈழத்தமிழர்களிற்காக ஒலித்த சொற்ப சர்வதேச பத்திரிகையாளர்களின்

குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார்.

சிரியாவில் 2012இல் படுகொலை :

இலங்கை, ஆப்கானிஸ்தான், செச்னியா, ஈராக், லெபனால் உட்பட  உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதிகளில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் மேரி கொல்வின் தனது மனிதாபிமானத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை.

2012 பெப்ரவரி 22 ம் திகதி அவர் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த ஹொம்ஸ் நகரில் கொல்லப்பட்டார். அவர் இருந்த இடத்தை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டது.

அவர் ஓர் சர்வதேச பத்திரிகையாளர் என்பதால் அவரை மௌனமாக்குவதற்காக  இலக்கு வைத்து கொல்லப்பட்டார் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இத் தாக்குதல்

தற்செயலாக இடம்பெற்ற விடயமல்ல.

அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றே அறியப்படுகிறது.

கிழக்கு திமோரில் பெண் குழந்தைகளை காப்பாற்றிய மேரி :

மேரி கொல்வின் 1999 ம் ஆண்டு கிழக்கு திமோரில் முகாமொன்றில் சிக்குண்டிருந்த 1500 பெண்கள் குழந்தைகளை காப்பாற்றினார். அங்குள்ள அகதி முகாமிலிருந்து ஆண்கள் தப்பியோடிவிட்ட நிலையில் மேரிகொல்வினை அங்கிருந்து வெளியேறுமாறு  அதிகாரிகள் உத்தரவிட்ட போதிலும் அவர் அதனை ஏற்கமறுத்தார். மக்களின் சேவகனாக கடமை புரிந்த மேரி, தனது செய்திகளில் அவர் இந்த செய்தி குறித்தே அதிகம் பெருமைப்படுவார்.

இளம் பத்திரிகையாளர்கள் விடயத்தில் அவர்மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அவர்களை தனது பாதையில் பயணிப்பதற்கான உத்வேகத்தை எப்போதும் வழங்கினார். மேரி கொல்வின் உயிரிழப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் இளம் பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

அதில் மேரிகொல்வினின் சிரியா குறித்த அச்சமூட்டும் செய்திகள் தன்னையும் ஒரு பத்திரிகையாளராக மாற்றியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச ரீதியில் இளம் பத்திரிகையாளளர்களை முன்னோக்கி நகர்த்துவது மிகவும் கடினமான பணியாயினும், பல்வேறு போர்க்களங்களில் தனது உயிரை துச்சமென மதித்து மற்றய ஊடகவியலாளர்களுக்கு உறுதுணையாக இருந்தார்
.thumbnail_IMG_0453.jpgthumbnail_IMG_0459.jpg

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் “A Private War” திரைப்படமும், எங்கள் மக்களின் துயரத்தை உலகிற்கு உண்மையை வெளிச்சமாய் காட்டியுள்ளது.

மேரி கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டு பதினொரு வருடங்கள் ஆகின்றது. மக்களுக்காக குரல் கொடுத்த அவர், சிரியாவில் வைத்து 2012 பெப் 22 இல் படுகொலை செய்யப்பட்டாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் அவர் நிரந்தரமாய் என்றும் வாழ்கின்றார்.

         – ஐங்கரன் விக்கினேஸ்வரா.

 

 

https://akkinikkunchu.com/?p=239418

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பகிர்வுக்கு நன்றி.. 

 இவர்களைப் போன்றவர்களை அறிவதும் அறியத் தருவதும் நல்லதே!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2023 at 06:39, கிருபன் said:

மேரி கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டு பதினொரு வருடங்கள் ஆகின்றது. மக்களுக்காக குரல் கொடுத்த அவர், சிரியாவில் வைத்து 2012 பெப் 22 இல் படுகொலை செய்யப்பட்டாலும்

எங்கடை அரசியல் வாதி அவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்கிறார் அதான் சார் ஸ்ரீதரன் எனும் அரசியல்வாதி அவ்வளவுக்கு உலக அரசியல கரைத்து குடித்தவர் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2023 at 01:39, கிருபன் said:
வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர்

மேரி கொல்வினின் மரணவீட்டுக்கு நானும் போயிருந்தேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2023 at 13:06, ஈழப்பிரியன் said:

மேரி கொல்வினின் மரணவீட்டுக்கு நானும் போயிருந்தேன்.

நன்றியண்ணா. நாம் பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. எமது விடுதலை சாத்தியமாகும்போது எமது மக்களுக்காககப் போராடியவர்களின் பெயர்களோடு இவர்களின் பெயர்களும் எமது வரலாற்றில் இடம்பெறவேண்டும். பார்க்கலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

உந்தப் படத்திலை, மேரி கொல்வின் அம்மையாரின் குறிப்புகளின் படி, புலிகள் புகை பிடிப்பவர்களாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு மெய்யுண்மை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.