Jump to content

யாழ்.அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்: விசாரணையில் புதிய திருப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார்.

யாழ்.அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்: விசாரணையில் புதிய திருப்பம் | A New Twist In The Investigation

வாள்களுடன் வந்தவர்கள்

 

அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்குள் வாள்களுடன் மூவர் நுழைந்துள்ளனர்.

அவர்கள் முகத்தை மூடிக்கட்டியிருந்துள்ளனர். வீட்டில் தங்கியிருந்த ஆசிரியரையும், மின் இணைப்பு திருத்தத்துக்காகத் தங்கியிருந்தவரையும் கட்டியுள்ளனர்.

"உங்களுடன் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. அமைதியாக இருங்கள். இல்லையென்றால் வெட்டிவிடுவோம்" என்று வாள்களுடன் வந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த வீட்டின் உரிமையாளரை வாளால் தாக்கியுள்ளனர். அவரை வெளியில் இழுத்துச் சென்று "சி.ஐ.டி.யிடம் கொடுக்கக் கொண்டு வந்த ஆவணம் எங்கே?" என்று கேட்டுத் தாக்கியுள்ளனர்.

யாழ்.அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்: விசாரணையில் புதிய திருப்பம் | A New Twist In The Investigation

கைதாகவில்லை

 

அவரின் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் எதனையும் தாக்குதலாளிகள் கொள்ளையிடவில்லை. அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு இருந்த பொதிகளை அவிழ்த்துச் சோதனையிட்டு அதிலிருந்த ஆயிரத்து 20 கனேடிய டொலர் மற்றும் 25 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் என்பனவற்றை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளனர்.

"குருநகர் அல்லது ஊர்காவற்றுறையிலிருந்து படகுமூலம் அனலைதீவுக்கு தாக்குதலாளிகள் வந்துள்ளார்கள். கனேடிய கடவுச்சீட்டு, கனேடிய டொலர் மற்றும் இலங்கைப் பணத்தை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். தாக்குதலாளிகள் இதுவரை கைதாகவில்லை" என ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசத்தில் நிலவிய முற்பகைமை காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகப் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

https://tamilwin.com/article/a-new-twist-in-the-investigation-1677498127

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குள்ளானவர் ரொரண்டோ ஐயப்பன் ஆலயத்தின் பிரதான குருசாமி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனாலும்,இத் தகவலை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

தாக்குதலுக்குள்ளானவர் ரொரண்டோ ஐயப்பன் ஆலயத்தின் பிரதான குருசாமி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனாலும்,இத் தகவலை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

அது சரியான தகவலே. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் படங்கள் உள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பாக, 2008 வங்கிகள் தள்ளாடும் முன்னர், வீடுகள் வாங்குவது மிக எளிது. அப்படி பல இந்தியர்கள் இங்கே குடும்பத்துக்கு சொல்லாமல் அல்லது பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று வீடுகளை வாங்கி, அவைகளை நிர்வகிக்க முகவர்களிடம் கொடுத்து விடுவார்கள். 30, 40 முதல் 120 வீடுகள் வைத்திருந்த இந்தியர்கள் இருந்தார்கள்.

நாளைடைவில் பணம் பெருமளவில் வந்ததால், ஊருக்கு போய் நீண்ட நாள் தங்கி இருக்க தலைப்பட்டார்கள். இப்படி போன பலர், கொலையாகி இருக்கிறார்கள். பெரும் வன்முறை இல்லாமல், உணவில் விசம், விழுந்து இறத்தல், அல்லது வாகனத்தில் மோதி என்று மேலே போய் கொண்டிருந்தார்கள். இந்திய போலீசுக்கு காரணம் தெரியவில்லை அல்லது அக்கறை இல்லை. பிரிட்டிஷ் போலீசும், போன இடத்தில் இறந்து விட்டார் என்று முடித்து விட்டுக்கொண்டிருந்தார்கள். நூறு பேர் வரை இப்படி இல்லாமல் போய் கொண்டிருந்தார்கள்.

ஒரு பிரிட்டிஸ் பத்திரிகை இதை இந்தியாவில் உயிரிழக்கும் மில்லாலியனெயர் லாண்ட் லோட்ஸ் என கட்டுரையாகப் போட்டது.

இது குறித்து ஒரு அனுபவமிக்க முகவரிடம் பேசும் போது, சிரித்த வாறே சொன்னார். பிரிட்டிஷ் சட்டப்படி, உரிமையாளர் வாடகை வாங்காவிடில், 15 வருடத்தின் பின்னர் அவர் உரிமை கொண்டாடி வரமுடியாது. இதனை இலங்கையில், ஆட்சி உரித்து என்பார்கள்.

ஆக, சிம்பிளால பல வீடுகளை வாங்கி, வாடகைக்கு விட்டிருக்கும் ஆளை, அங்கேயே முடித்து விட்டால், அந்த வீடுகள் முகவருக்கு சொந்தமாகிவிடும்.

தமிழரிடையே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தென் லண்டனில், ஒரு கோயில் தனி முதலாளி. உண்டியல் காசில் மொத்தம் 72 வீடுகள் அவர் பெயரில். மேலும், உறவினர்கள் பெயரில் பல வீடுகள்.

அவர் கோவிலுக்கு வந்த மொரிசியஸ் பெண்ணை இந்தியாவுக்கு தள்ளிக் கொண்டு போய், ரகசிய கலியாணம் செய்து, சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில்தமிழகத்தில், விபத்தில் இறந்து போனார்கள். திருப்பி வந்திருந்தால், சகலமும், அந்த பெண்ணுக்கே போயிருக்கும் அல்லவா.

அதேபோல, ஜெயலலிதா காலத்தில், லண்டனில் தமிழ் கடை வைத்திருந்த ஒரு தமிழ் தம்பதி தமிழக யாத்திரை போன இடத்தில், அவருடைய கடையில் வேலை செய்த ஒருவன் செய்த வேலையால் தமிழகத்தில் கடத்தப்பட்டு, பணம் கப்பமாக கோரி, கடைசியில், லண்டன், தமிழக போலீசாரின் வேலையால் மீட்கப்பட்டு, சகலரும் உள்ளே போனார்கள்.

ஆகவே, அந்த வகையிலே என்ன சொல்ல வருகிறேன் என்றால், இப்ப, இந்த வியாதி உழைத்து, ஓய்வு பெற ஊருக்கு திரும்பும் எம்மவர் மேலும் நடக்கிறது.

புரிஞ்சு, ஊருக்கு போனால், பந்தா காட்டாமல், நம்ம உடான்ஸ் சாமியார் மாதிரி, துன்னூரை அள்ளி பூசிக்கொண்டு, 'சச்சிதானந்தம், நீலகலகண்டம்' என்று இருங்கோ.  ஓணாண்டியார் மாதிரி, கார், கார் ஓட்டுனர், வேலைக்காரி என்று இராதீங்கோ. (ஓணாண்டி, இதை கோசன் தான் திண்ணையில சொன்னவர். எனக்கு தெரியாது)

Edited by Nathamuni
  • Thanks 2
  • Haha 2
  • Sad 1
Link to comment
Share on other sites

ஆக, இந்திய இறக்குமதிக் கடவுள் ஐயப்பனால் தன் பிரதான குருசாமியைக் கூட வாள் வெட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அச்சோ அச்சோ...

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது

இவர்களே உருவாக்கிய கதையா அல்லது கதை தெரிந்தவர்கள் அங்கே இருந்தார்களா?

8 hours ago, பெருமாள் said:

தாக்குதலாளிகள் இதுவரை கைதாகவில்லை"

8 hours ago, பெருமாள் said:

அவரின் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் எதனையும் தாக்குதலாளிகள் கொள்ளையிடவில்லை. அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு இருந்த பொதிகளை அவிழ்த்துச் சோதனையிட்டு அதிலிருந்த ஆயிரத்து 20 கனேடிய டொலர் மற்றும் 25 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் என்பனவற்றை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளனர்.

அணிந்திருந்த தாலிக்கொடியை விட கொள்ளையடிக்கப்பட்ட தொகை பெரிது, அதில் கொள்ளையர்களுக்கு வெள்ளையடிப்பு வேற!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அவர் கோவிலுக்கு வந்த மொரிசியஸ் பெண்ணை இந்தியாவுக்கு தள்ளிக் கொண்டு போய், ரகசிய கலியாணம் செய்து, சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில்தமிழகத்தில், விபத்தில் இறந்து போனார்கள். திருப்பி வந்திருந்தால், சகலமும், அந்த பெண்ணுக்கே போயிருக்கும் அல்லவா.

இங்கு கிட்டு புலிக்கு பெல் கட்ட வெளிகிட்டதால் ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றல்லவா கதைகிறார்கள் .

ஆனாலும் அவரின் சொத்துகளில் பாதி கோவிலில் எடுபிடி செய்பவனின் பெயரில் அவனுக்கு தெரியாமல் பினாமியாக வைத்து இருந்தார் ஆனால் அவன் ஒப்புக்கு நடிப்பவன் கட்டிட வேலை செய்பவன் போல் திரிவார் அவரின் இறப்புக்கு பின் அவரே முதலாளி  ஆனல் மாதம் ஒன்றானால் சாவிகொத்துடன் கிளம்பி விடுவார் வாடகை கலக்செனுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, satan said:

அணிந்திருந்த தாலிக்கொடியை விட கொள்ளையடிக்கப்பட்ட தொகை பெரிது, அதில் கொள்ளையர்களுக்கு வெள்ளையடிப்பு வேற!

தமில்வின்னும்  நேரத்துக்கு ஏற்றமாதிரி தலையங்கத்தை மாற்றி மாற்றி போட்டு கடைசியில் இங்கு இணைத்த தலையங்கதுக்கே வந்து நிக்குது . இங்கு நட்டத்தில் ஓடுவதாக கணக்கு காட்டி டப் அலைவரிசைக்கு நாமம் போட்டு விட்டார்கள் ibc எனும் பெயரில்  இப்ப நம்ம ஊபர் ஓடும் தமிழர்களுக்கு ஆதவன் fmதான் கடவுள் போல் .

இந்த விடயத்தில் நம்ம  தமிழ் ஊடகங்களும் சேர்ந்தே கூட்டு களவாணித்தனம் பண்ணுகினம் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இங்கு கிட்டு புலிக்கு பெல் கட்ட வெளிகிட்டதால் ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றல்லவா கதைகிறார்கள் .

ஆனாலும் அவரின் சொத்துகளில் பாதி கோவிலில் எடுபிடி செய்பவனின் பெயரில் அவனுக்கு தெரியாமல் பினாமியாக வைத்து இருந்தார் ஆனால் அவன் ஒப்புக்கு நடிப்பவன் கட்டிட வேலை செய்பவன் போல் திரிவார் அவரின் இறப்புக்கு பின் அவரே முதலாளி  ஆனல் மாதம் ஒன்றானால் சாவிகொத்துடன் கிளம்பி விடுவார் வாடகை கலக்செனுக்கு .

பிள்ளையாரே, சா...ச பெருமாளே... நீங்கள் சொன்னது புது கேஸ். நான் சொன்னது பழைய கேஸ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பிள்ளையாரே, சா...ச பெருமாளே... நீங்கள் சொன்னது புது கேஸ். நான் சொன்னது பழைய கேஸ். 

இன்னும் நிறைய இருக்கு மணியர் இப்படியும் நடக்குது என்று கொசிப்பு போட்டால்தான் பேப்பர் யாபரமாகுது என்று பேப்பர் முதலாளி அழுதவர் அதனால் இப்படி  இடையிடையே மசாலா 😀தூவணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

 

நான் கேள்விப்படாத அறிந்திருக்கவேண்டிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி நாதமுனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆக, இந்திய இறக்குமதிக் கடவுள் ஐயப்பனால் தன் பிரதான குருசாமியைக் கூட வாள் வெட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அச்சோ அச்சோ...

எமது இந்துக்கடவுள்கள் யாரையும் இறக்குமதியோ ஏற்றுமதியோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் அவரவர் விளக்கத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப உருவ வழிபாட்டையோ, ஆன்மிக வழியையோ அல்லது ரெண்டயுமோ பின்பற்றலாம். எமது சமயம் அதைதான் கூறுகிறது. எமது அப்பா அவரது இளமைக்காலத்தில் இருந்து அய்யப்பன் சிலையை சாமி அறையில் வைத்திருந்து அய்யப்பன் பாடல்களையும் கேட்டுவந்தவர். இது ஒரு உதாரணம் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமில்வின்னும்  நேரத்துக்கு ஏற்றமாதிரி தலையங்கத்தை மாற்றி மாற்றி போட்டு கடைசியில் இங்கு இணைத்த தலையங்கதுக்கே வந்து நிக்குது . இங்கு நட்டத்தில் ஓடுவதாக கணக்கு காட்டி டப் அலைவரிசைக்கு நாமம் போட்டு விட்டார்கள் ibc எனும் பெயரில்  இப்ப நம்ம ஊபர் ஓடும் தமிழர்களுக்கு ஆதவன் fmதான் கடவுள் போல் .

இந்த விடயத்தில் நம்ம  தமிழ் ஊடகங்களும் சேர்ந்தே கூட்டு களவாணித்தனம் பண்ணுகினம் போல் உள்ளது .

 

எரிகிற வீட்டில் புடுங்கிய லாபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

புரிஞ்சு, ஊருக்கு போனால், பந்தா காட்டாமல், நம்ம உடான்ஸ் சாமியார் மாதிரி, துன்னூரை அள்ளி பூசிக்கொண்டு, 'சச்சிதானந்தம், நீலகலகண்டம்' என்று இருங்கோ.  ஓணாண்டியார் மாதிரி, கார், கார் ஓட்டுனர், வேலைக்காரி என்று இராதீங்கோ. (ஓணாண்டி, இதை கோசன் தான் திண்ணையில சொன்னவர். எனக்கு தெரியாது)

          உ

         சிவமயம் 

  - திருச்சிற்றம்பலம் -

கார், கார் ஓட்டுனர் எண்டு இருந்தாலும் காரியம் இல்லை. வேலைக்காரியே கதி என்று இராதேங்கோ.

அதுக்கு குருநகரில் இருந்து வாள் குரூப் எல்லாம் இல்லை, வீட்டிலயே அம்மியோ, குழவியோ, உலக்கையோ கையில ஆப்பிடுறத வச்சு ஆப்பிழுத்து போடுவார்கள்.

- திருச்சிற்றம்பலம் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பிரிட்டிஷ் சட்டப்படி, உரிமையாளர் வாடகை வாங்காவிடில், 15 வருடத்தின் பின்னர் அவர் உரிமை கொண்டாடி வரமுடியாது. இதனை இலங்கையில், ஆட்சி உரித்து என்பார்கள்.

 

இங்கத்தையான் சட்டம்தான் இலங்கையிலும் இருக்கிறது. Adverse Possession என்பார்கள். 12 வருடம், காணிக்கு உரியவர், உரிமை கோராமல் அதே சமயம் இன்னொருவர் உரிமையாளரின் அனுமதி இன்றி காணியை தனது போல் போவித்தால் - காணியின் title அவருக்கு போகலாம்.

ஆனால் இது நடக்க வாய்ப்பு குறைவு.

1. உரிமையாளர் இறந்தாலும் அவரது சொத்துரிமை அவரின் வாரிசுகளுக்கு பாத்தியப்படும். அப்போ வாரிசுகள் 12 வருடம் காத்திராமல் உரிமை கோர வாய்ப்பு அதிகம்.

2. அடுத்து - இது squatters எனும் உரிமையாளர் அனுமதி இன்றி குடி இருபோருக்கு உரியதே. இதை சட்டப்படி long leasehold அல்லது வருடாந்தம் புதுபிக்கப்படும் short term tenancy யில் இருப்போர் அனுபவிக்க முடியாது.

3. எனக்கும் ஒருக்கா @பாலபத்ர ஓணாண்டி வயிற்றில் புளியை கரைக்க ஆசைதான். ஆனால் நமக்கு பின் என்ன நடக்க வேண்டும் என்ற wills and probate வேலைகளை ஒழுங்காக செய்து வைத்திருந்தால் இதில் இருந்து தப்பலாம்.

4. மோர்கேஜ்ஜை முழுவதும் கட்டாமல் பாங்கில் ஒரு தொகை ஈட்டை வைத்திருப்பது - title மாற்றும் போதாவது ஒரு எச்சரிக்கையை தரும். ஆனால் அதற்குள் 12 வருடம் ஓடி இருந்தால் - too late.

5. இதில் களவு கூட நடப்பது, இறந்தவரின் வாரிசு உரிமை இல்லாதபோது அல்லது பொய்யாக ஒருவரை வாரிசு என கூட்டி வரும் போதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

நீங்கள் சொன்ன விடயத்துடன் இன்னோரு விசயமும்.

வீட்டுக்காரி செலவாளி. அவவுக்கு தெரியாமல் கொஞ்சம் சேமிக்க வேணும் என்று வீட்டுக்காரர் நினைப்பதுவே இதன் அடிப்படை.

சீட்டு போட்டு வரும், 1,000, 2,000 தை போட்டு வீட்டுக்காரிக்கு தெரியாமல் வீடு வாங்கி விட்டவர்கள் பலர். காரணம் வீடு வாங்குவது மிக எளிதான சமாசாரம். (இப்ப இல்லை)

அதேபோல சேமிப்பு கணக்குகளில் போட்டு வைத்து, மேல்சொன்ன செலவாளி விடயத்தால் வீட்டுக்கு சொல்லாமல், அப்படியே மண்டையை போட்டு ஒருவருக்குமே பிரயோசனம் இல்லாமல் செய்தவர்கள் பலர்.

டேவிட் கேமரன் அரசில், வங்கிகள் இந்த காசை அமுக்குவதை அறிந்து, புதிய சட்டம் கொண்டு வந்தார். அதன் படி 15 வருடத்துக்கு மேல் உரிமை கோராமல் இருக்கும் வங்கி கணக்குகளில் உள்ள பணம் அரசினை சேர்ந்து விடும். அரசு அந்த பணத்தினை, ஒரு சமுக நம்பிக்கை அமைப்புக்கு கொடுக்கும். அது சமூகம் தொடர்பான வேலைகளுக்கு உதவும்.

ஆனால் காணி விடயத்தில் 15 வருட சட்டம் கொண்டு வர முடியாது. நீங்கள் சொல்வது போல, will எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வந்து வாழும் மக்களிடையே குறைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 12:46, goshan_che said:

wills and probate வேலைகளை ஒழுங்காக செய்து வைத்திருந்தால்

ஒருவர் தனது இறப்பிற்கு பின்பு உறவுகளிடையே ஏதாவது பிரச்சனை வரும் என நினைத்தால்.. அல்லது உயில் எழுத வேண்டிய தேவை இருந்தால் அல்லது உயில் எழுத வசதி கிடைத்தால் எழுதி வைப்பதே நல்லது.

எனது தனிப்பட்ட அனுபவத்தில் சொல்வேன் wills and probate இருந்தால் இலகு/பாதுகாப்பு. எழுதாவிட்டால் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரலாம். எழுதினால் மட்டும் போதாது அதனை உரியவாறு பதிவு செய்தும் வைத்திருந்தால்தான் நல்லது.  ஆனால் பொதுவாக உயிலை எழுத எல்லோரும் விரும்புவதில்லை என நினைக்கிறேன். ஏன் என விளங்குவதில்லை. 

ஆனால் ஒரு வயதினைக் கடந்தவுடன் அதனை எழுதி வைத்திருப்பதே நல்லது. எனக்கு தெரிந்த ஒருவர் உயிலை எழுதாமல் இறந்து போனார் .. அவர் இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்பே சொத்துக்கள் உரியவர்களிடம் சேர வழி கிடைத்தது.... அதுவரைக்கும் பிள்ளைகளுக்கு இதனால் தேவையற்ற அலைச்சல் இருந்தது.. இதில் வெளிநாடு உள்நாடு என்ற இல்லை.

 

9 hours ago, Nathamuni said:

 

சீட்டு போட்டு வரும், 1,000, 2,000 தை போட்டு வீட்டுக்காரிக்கு தெரியாமல் வீடு வாங்கி விட்டவர்கள் பலர். காரணம் வீடு வாங்குவது மிக எளிதான சமாசாரம். (இப்ப இல்லை)

அதேபோல சேமிப்பு கணக்குகளில் போட்டு வைத்து, மேல்சொன்ன செலவாளி விடயத்தால் வீட்டுக்கு சொல்லாமல், அப்படியே மண்டையை போட்டு ஒருவருக்குமே பிரயோசனம் இல்லாமல் செய்தவர்கள் பலர்.

 

 

எனக்கு ஒரு சந்தேகம், கணவனே மனைவியோ இருவரில் ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் கணவன் அல்லது மனைவிக்குத் தானே இறந்தவரின் சொத்துகள் சட்டப்படி உரித்தாகும் (விதி விலக்காக  உயிலில் ஏதாவது எழுதியிருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர). 

உயில் எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வரும் மக்களிடம் மட்டுமல்ல உள்ளூர்வாசிகளிடமும் அரிது என நினைக்கிறேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு ஒரு சந்தேகம், கணவனே மனைவியோ இருவரில் ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் கணவன் அல்லது மனைவிக்குத் தானே இறந்தவரின் சொத்துகள் சட்டப்படி உரித்தாகும் (விதி விலக்காக  உயிலில் ஏதாவது எழுதியிருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர). 

உயில் எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வரும் மக்களிடம் மட்டுமல்ல உள்ளூர்வாசிகளிடமும் அரிது என நினைக்கிறேன்.. 

உங்கள் சந்தேகத்துக்குரிய பதிலை நீங்களே தந்து விட்டீர்கள்

Spouse க்கு வாரிசுக்கு தெரியாமல் தேடிய தேட்டமே இப்படி சிக்கலாகும். 

மரண சாசணம் எழுதும் போது, சகல சொத்தையும் விபரமாக போடுவதால் நன்மை.

வங்கிகளில் பணம் போட்டு அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினால், வங்கிக்கு கடிதம் கொடுத்து வைக்கலாம். நான் வங்கியை குறித்த காலம் தொடர்பு கொள்ளாவிடில் (account inactive) எனது குடும்பத்துக்கு தெரியப்படுத்தவும். இவ்வகையில் அரசு கையகப்படுத்துவதை தடுக்கலாம்.

David Cameron recovered £800million!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

உங்கள் சந்தேகத்துக்குரிய பதிலை நீங்களே தந்து விட்டீர்கள்

Spouse க்கு வாரிசுக்கு தெரியாமல் தேடிய தேட்டமே இப்படி சிக்கலாகும். 

மரண சாசணம் எழுதும் போது, சகல சொத்தையும் விபரமாக போடுவதால் நன்மை.

வங்கிகளில் பணம் போட்டு அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினால், வங்கிக்கு கடிதம் கொடுத்து வைக்கலாம். நான் வங்கியை குறித்த காலம் தொடர்பு கொள்ளாவிடில் (account inactive) எனது குடும்பத்துக்கு தெரியப்படுத்தவும். இவ்வகையில் அரசு கையகப்படுத்துவதை தடுக்கலாம்.

 

 மனைவிக்குத் தெரியாமல் தேடிய சொத்துகள், சாதாரணமாகவே கணவன் இறந்தவுடன் மனைவிக்கும், மனைவி இல்லாத விடத்து பிள்ளைகளைக்கும் தானே போகும் என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் எழுதினீர்கள் அப்படிப் போகாது என்று அதுதான் எனது சந்தேகம். 

ஏனெனில் கணவனோ மனைவியோ, தனது துணைக்குத் தெரியாமல் சொத்துக்களை வைத்திருந்து இறந்துவிட்டால் உயில் இல்லாதவிடத்து உயிரோடு இருக்கும் துணை, சட்டப்படி சில உதவிகளை நாடி இவற்றை அறியலாம் என்றுதான் நினைக்கிறேன்(இங்கே). 

இங்கே உயில் இருந்தால் executor  இவர்கள் மூலம்  வங்கிகளுக்கு, காணி பதியும் தினைக்களத்திற்கு மற்றும் தேவையான அரச தினைக்களங்களுக்கு குறித்த நபர் இறந்ததை அறியத் தரும் பொழுது, இறந்தவரின் பெயரிலுள்ள சகல கணக்குகளும் காணிகளின் விபரங்களும் வழங்கப்படுவதால் தேடிய தேட்டம்/ஒளித்து வைத்திருந்த சொத்துகள் கூட முறையாக பகிரப்படும் என்றுதான் நினைக்கிறேன். 

 இந்த சொத்து விடயம் பெரிய பகுதிகளைக் கொண்டது, சட்ட நுணுக்கங்களும் உடையது. ஆகையால் நான் நினைப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அறிந்து வைத்திருப்பது நல்லதுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

 மனைவிக்குத் தெரியாமல் தேடிய சொத்துகள், சாதாரணமாகவே கணவன் இறந்தவுடன் மனைவிக்கும், மனைவி இல்லாத விடத்து பிள்ளைகளைக்கும் தானே போகும் என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் எழுதினீர்கள் அப்படிப் போகாது என்று அதுதான் எனது சந்தேகம்.

 

அனாமத்து சொத்து என்று நீண்டகாலம் பூட்டி இருக்கும் வீடுகளை, உள்ளூர் அரசு கதைவை உடைத்து எடுக்கிறது. கேட்டால் உள்ளூர் வரி கட்டவில்லை, பக்கத்து வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள். அதனை எடுத்து திருத்தி, பாவனைக்கு அகதிகளுக்கு கொடுத்து விடுவார்கள்.

பதிவு செய்த சொந்தக்காரரின் உறவுகளை எங்கே அரசு தேடும்?

இங்கே, இப்படி அனாமத்து சொத்துக்களை கண்டறிந்து, அரசு கையகப்படுத்தும் காலத்துக்கு முன்னர், அவர்களது உறவுகளை தேடி பல விசாரணைகளை மேல் கொண்டு, தேடிப்பிடித்து அவர்களிடம், தமக்குரிய கட்டணத்தினை பங்காக எழுதி வாங்கிகொண்டு, விபரத்தினை சொல்லி, அவர்களே மிகுதி சட்ட அலுவல்களை செய்து பணம் பார்க்கும் தனியார் நிறுவனங்கள் பல உள்ளன. அப்படி ஒரு நிறுவன நிகழ்வுகள் டிவியில் தொடராக வந்தது.

அப்படி ஒரு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் நல்ல காசு பார்க்கலாம்.

1977 கலவரத்தில் பல தமிழர்கள் அனுராதரபுர பகுதியில் கொல்லப்பட்டனர். மிகுதி பேர் திரத்தி அடிக்கப்பட்னர். அப்படி பல வீடுகள், 15 வருட காலத்தின் பின், ஆக்கிரமித்த சிங்களவர்களுக்கு போய் இருக்கும்.

அண்மையில் ஒரு யாழ் Youtubu காரர்கள் அங்கே போய் படமெடுத்த போது ஒரு பெரிய வீடு ஒன்றை காட்டினார்கள். யாருமே அங்கே குடி இருப்பதில்லை, பேய் வீடு என்பார்களாம் என்றார்.

நான் நினைக்கிறேன் அங்கே தமிழ் உரிமையாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். 😥

Edited by Nathamuni
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

 

அப்படி ஒரு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் நல்ல காசு பார்க்கலாம்

யாழ்ப்பாணத்திலா??😅.. 

நீங்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டனத்தில் செய்யுங்கோ.. ஏனென்றால் இரண்டு வகையான ஆட்கள் இருக்கிறார்கள்.. ஒரு பகுதி இடம்பெயர்ந்து,   உரிமையாளர் தெரியாமல் காணி ஒன்றில் வீடு கட்டி காலம் காலமாக வாழ்பவர்கள்(20 வருடங்களுக்கு மேலாக).. காணிச் சட்டம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள், அவர்களை திடீரென வெளிநாட்டிலிருந்து போனவர்கள் இது எனது பூர்வீக வீடு etc etc என்று, வீட்டில் உள்ளவர்களை எழும்பச் சொல்லி உள்ளூர் தாதாகளைக் கொண்டு மிரட்டுபவர்கள்.. 

இன்னொரு பகுதி வெளிநாட்டிலிருந்து வந்தால் ஒன்றுமே தெரியாதவர்கள் என ஏமாற்றுபவர்கள்.. 

இப்படி பல பகுதிகள், காசு வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நிறுவனங்களை அங்கே உருவாக்கி உள்ளதையும் யாராவது கெடுத்துக் கொள்வார்களா??

7 hours ago, Nathamuni said:

 

அண்மையில் ஒரு யாழ் Youtubu காரர்கள் அங்கே போய் படமெடுத்த போது ஒரு பெரிய வீடு ஒன்றை காட்டினார்கள். யாருமே அங்கே குடி இருப்பதில்லை, பேய் வீடு என்பார்களாம் என்றார்.

 

கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது. உள்ளூர் பேப்பரில் வாடகைக்கு விடப்படும் என்ற பகுதியில் வரும் வீடுகளின் விபரங்களைப் பார்த்தால், ஏட்டிக்குப் போட்டியாக, தேவையற்ற விதத்தில் பெரிய வீடுகளைக் கட்டி பாராமரிக்க வசதியில்லாமல் வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் போடுகிறார்கள்..🤦🏽‍♀️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது.

முட்புதர், கறையான் புற்று படர்ந்து, பாம்புகளால் சூழப்பட்ட வீடுகளை திருத்தி பராமரித்த குடும்பங்களை பாராட்டுவதற்கு பதிலாக கால அவகாசம் கூட கொடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியிருந்தவர்களை விரட்டி தெருவில் விட்டிட்டு மீண்டும் பூட்டிப்போட்டு போனவர்களும், அவர்கள் கஷ்ரப்பட்டு திருத்திய வீட்டை அவர்கள் சொந்தமாக்கி விடுவார்கள் என்று அவர்களை எழுப்பி விட்டு வேறொருவரை குடியமர்த்தியவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை இங்கிருக்கும் ரவுடிக்கும்பல் ஒன்றுசேர்ந்து வெருட்டி பறிப்பவரும் உண்டு, அதேநேரம் தங்கள் வீடுகளை பராமரிக்கிறார்கள் என்று நன்றியோடு அவர்களுக்கு பணம் அனுப்புபவர்களும் உண்டு, தானமாக தங்கள் காணிகளை ஏழைகளுக்கு கொடுப்போரும் உண்டு. மனிதர் பலவகை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட ரவுடிக்கும்பல்களை சமாளிக்கக் கூடிய கம்பனி தான் நான் சொன்னது. அதாவது அப்படி ஒரு கம்பனியிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சகல விடயங்களையும் கவனிப்பார்கள். 😁

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ்ப்பாணத்திலா??😅.. 

நீங்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டனத்தில் செய்யுங்கோ.. ஏனென்றால் இரண்டு வகையான ஆட்கள் இருக்கிறார்கள்.. ஒரு பகுதி இடம்பெயர்ந்து,   உரிமையாளர் தெரியாமல் காணி ஒன்றில் வீடு கட்டி காலம் காலமாக வாழ்பவர்கள்(20 வருடங்களுக்கு மேலாக).. காணிச் சட்டம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள், அவர்களை திடீரென வெளிநாட்டிலிருந்து போனவர்கள் இது எனது பூர்வீக வீடு etc etc என்று, வீட்டில் உள்ளவர்களை எழும்பச் சொல்லி உள்ளூர் தாதாகளைக் கொண்டு மிரட்டுபவர்கள்.. 

இன்னொரு பகுதி வெளிநாட்டிலிருந்து வந்தால் ஒன்றுமே தெரியாதவர்கள் என ஏமாற்றுபவர்கள்.. 

இப்படி பல பகுதிகள், காசு வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நிறுவனங்களை அங்கே உருவாக்கி உள்ளதையும் யாராவது கெடுத்துக் கொள்வார்களா??

கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது. உள்ளூர் பேப்பரில் வாடகைக்கு விடப்படும் என்ற பகுதியில் வரும் வீடுகளின் விபரங்களைப் பார்த்தால், ஏட்டிக்குப் போட்டியாக, தேவையற்ற விதத்தில் பெரிய வீடுகளைக் கட்டி பாராமரிக்க வசதியில்லாமல் வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் போடுகிறார்கள்..🤦🏽‍♀️

 

 

5 hours ago, satan said:

முட்புதர், கறையான் புற்று படர்ந்து, பாம்புகளால் சூழப்பட்ட வீடுகளை திருத்தி பராமரித்த குடும்பங்களை பாராட்டுவதற்கு பதிலாக கால அவகாசம் கூட கொடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியிருந்தவர்களை விரட்டி தெருவில் விட்டிட்டு மீண்டும் பூட்டிப்போட்டு போனவர்களும், அவர்கள் கஷ்ரப்பட்டு திருத்திய வீட்டை அவர்கள் சொந்தமாக்கி விடுவார்கள் என்று அவர்களை எழுப்பி விட்டு வேறொருவரை குடியமர்த்தியவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை இங்கிருக்கும் ரவுடிக்கும்பல் ஒன்றுசேர்ந்து வெருட்டி பறிப்பவரும் உண்டு, அதேநேரம் தங்கள் வீடுகளை பராமரிக்கிறார்கள் என்று நன்றியோடு அவர்களுக்கு பணம் அனுப்புபவர்களும் உண்டு, தானமாக தங்கள் காணிகளை ஏழைகளுக்கு கொடுப்போரும் உண்டு. மனிதர் பலவகை.

 

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2023 at 07:38, Nathamuni said:

இப்படிப்பட்ட ரவுடிக்கும்பல்களை சமாளிக்கக் கூடிய கம்பனி தான் நான் சொன்னது. அதாவது அப்படி ஒரு கம்பனியிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சகல விடயங்களையும் கவனிப்பார்கள். 😁

 

 

கரோ பகுதியில் ஒரு தம்பதி: 2 பிள்ளைகள், வளர்ந்து வேறு இனத்தவரை கலியாணம் செய்து போய்விட்டனர். யாழ்கொட்டடியில் ஒரு வீடு. முன்வளவில் பெரிய வீடு. பின்வளவில் ஒரு சின்ன வீடு. இரண்டையும் உறவினருக்கு கொடுத்து இருந்தார்கள். முன்வீட்டில் இருந்தோர் கடந்த வருடம் கனடா குடிபெயர, பின்வீட்டு வயது போன தூரத்து சின்னம்மா முன்வீட்டையும் பார்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டார். 

வேறு உறவினர் தந்த தகவலை வைத்து நேரே போன போது, தம்பிக்கு தெரியாது போல, உன்ர கொம்மா, அப்பவே எனக்கெல்லே எழுதீட்டா என்றாவாம். இதென்னடா வில்லஙகம் எண்டு பொலீசுக்கு போனா, போலீஸ் விசாரணைக்கு கூப்பிட, ஆள் ஆஸ்பத்திரில போய் படுத்துவிட்டா.

இவரும், வந்து திருப்பியும் போக, உறுதியெல்லாம் கோட்டில காட்டுறம். வீட்டுப்பக்கம் வந்து தேவையில்லாமல் பயமுறுத்த வேணாம் என்று எச்சரிக்க, போலீசுக்கு சொல்லிவிட்டாவாம்.

பின்ன பண்ணிப் பாருங்கோவன்🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கரோ பகுதியில் ஒரு தம்பதி: 2 பிள்ளைகள், வளர்ந்து வேறு இனத்தவரை கலியாணம் செய்து போய்விட்டனர். யாழ்கொட்டடியில் ஒரு வீடு. முன்வளவில் பெரிய வீடு. பின்வளவில் ஒரு சின்ன வீடு. இரண்டையும் உறவினருக்கு கொடுத்து இருந்தார்கள். முன்வீட்டில் இருந்தோர் கடந்த வருடம் கனடா குடிபெயர, பின்வீட்டு வயது போன தூரத்து சின்னம்மா முன்வீட்டையும் பார்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டார். 

வேறு உறவினர் தந்த தகவலை வைத்து நேரே போன போது, தம்பிக்கு தெரியாது போல, உன்ர கொம்மா, அப்பவே எனக்கெல்லே எழுதீட்டா என்றாவாம். இதென்னடா வில்லஙகம் எண்டு பொலீசுக்கு போனா, போலீஸ் விசாரணைக்கு கூப்பிட, ஆள் ஆஸ்பத்திரில போய் படுத்துவிட்டா.

இவரும், வந்து திருப்பியும் போக, உறுதியெல்லாம் கோட்டில காட்டுறம். வீட்டுப்பக்கம் வந்து தேவையில்லாமல் பயமுறுத்த வேணாம் என்று எச்சரிக்க, போலீசுக்கு சொல்லிவிட்டாவாம்.

பின்ன பண்ணிப் பாருங்கோவன்🥺

நாதம்ஸ் இதெல்லாம் பகுதி பகுதியாக பிரிக்க வேண்டிய விடயம்.

முதலில் ஜூனியர் மட்டத்தில் ஓர் சட்டத்தரணி. அவரிடமே வழக்கை வாதி இன்றி நடத்திட அனுமதி ( பிரயாணச் செலவை தவிர்த்தல்)

பிரதிவாதியை முற்றாக வெளியேற்றாமல் தொடர்ந்து பின்னால் உள்ள வீட்டில் ( Tenancy Agreement) உடன்படிக்கையுடன் இருப்பதற்கு அனுமதிக்கலாம் என்று வாதிட்டால் வழக்கு விரைவில் முடிவுற்கு வரும்.

வழக்கு வென்றவுடன் வழக்குச் செலவையும் கோரலாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.