Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“வலியின் புனைபெயர் நீ” 


Recommended Posts

 “வலியின் புனைபெயர் நீ” 

 

பாரதிசந்திரன்

(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )

தமிழ்ப் பேராசிரியர்

 

 தீப்பிடித்து எரிகிறது

 அந்தச் செங்கொன்றை  என்று 

 பயமுறுத்தமாட்டேன் 

அது உனக்கான ஆராதனை”                             (வலியின் புனைபெயர் நீ)  

 

சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான்.

அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது,  தீஎன்கிற வார்த்தை, அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு செய்து விடலாம். அப்படியாக, உவமைகள் கூடக் காதலியிடம் பயமுறுத்த நான் விரும்புவதில்லை என்று கூறுகிற இந்த நவீன காதல் உணர்வுகள் எவ்வளவு மேன்மையானதாக இருக்கின்றது என்பதை உணர்கிறோம்.

காதலியின் மேலான அளவு கடந்த அன்பு காதலனை இவ்வாறு சொல்லச் சொல்கிறது. இவ்வாறான காதல் இருந்தால் போதும் உலகத்தில் எந்தக் காதலியும் மனைவியாகிறபொழுது உலகத்தைப் பார்த்துப் பயப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எதற்க்கும் பயப்படவே மாட்டாள்.

காதலிக்கும், காதலிக்குச் சொல்லப்போகும் உவமையிலும் கூட மென்மையை பதிவிக்கும் காதல் மனநிலைக்கு என்ன பரிசு தருவது?

அன்பு நிறைந்திருக்கும் உலகில் பூவின் மென்மையோடுக் காதலியை வாழ்விக்க எவ்வளவு மனத்தூய்மை வேண்டும். கூறும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஓசைகள், தொடும் தென்றல் இவை யாவும் காதலியைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட மோகன நிலையை ஒப்பிடக்கூடிய வார்த்தைகள் புவியில் வேறு எங்கு உள்ளது?

கூறப்படும் யாவும் யார் புதிதாய் பேசியது? இருந்த வார்த்தைகளை, இருந்த சிந்தனையை நாமே பேசியதாகவும், சிந்தித்ததாகவும் இறுமாப்புக் கொள்கின்றோம். அவ்வளவு தானே?

ஆழமாய் பதிந்து போனவைகள். சங்கம் தொட்டு இன்றுவரை காதல் எண்ணங்களில் விரிந்து கிளை பரப்பிக் கொண்டுதான் நிற்கின்றன.குதூகலத்தின் மையப் புள்ளியிலிருந்து பீறிட்டு வருகின்றன காதல் உணர்வுகள். அதைச் சாய்த்து விட எத்தனைக்கும் எவையும் அதற்குள்ளேயே ஜீரணித்து போய் விடுகின்றன.

உடலும், மனமும் துகள் துகளாய்ப் பிரிந்து பிரபஞ்சம் கலக்கும் சுகத்தை ஒவ்வொரு நொடியும் காதல் தருகிறது. காதலனும் தலை சுமந்து தூக்கிக் கிடக்கத் தவம் இருக்கிறாள் காதலி. உலகம் மறந்து அவளின் ஒற்றைச் சிரிப்பில் மனதைக் சிக்க வைத்துப் போய்க் கிடக்கின்றதில் நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறான் காதலன்.

ஆராதனை செய்து, ஆராதனை செய்து  வரம் கேட்டுக் கிடக்கின்றான் அளவு கடந்த பக்தியோடு பக்தனாய்…

(கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின்வலியின் புனைபெயர் நீ  என்னும் கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை.... அதற்கான  விமர்சனம்) 


 

பாரதிசந்திரன்

(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )

தமிழ்ப் பேராசிரியர்

திருநின்றவூர்.

9283275782

chandrakavin@gmail.com

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.......!  💐

அழகான ஒரு காதல் இலக்கியத்தின் கவிதையுடனும், அதன் விளக்கங்களுடனும் வந்திருக்கின்றீர்கள்.....தொடர்ந்து எழுதுங்கள்.......!

நன்றி ஐயா ......! 

யாழ் அரிச்சுவடியில் (மேலே இருக்கிறது) உங்களைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளலாமே......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 09:49, பாரதிசந்திரன் said:

 “வலியின் புனைபெயர் நீ” 

வணக்கம் பாரதிசந்திரன்.
வருக வருக என வரவேற்கின்றோம்.🙏🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 14:19, பாரதிசந்திரன் said:

 “வலியின் புனைபெயர் நீ” 

 

பாரதிசந்திரன்

(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )

தமிழ்ப் பேராசிரியர்

 

 தீப்பிடித்து எரிகிறது

 அந்தச் செங்கொன்றை  என்று 

 பயமுறுத்தமாட்டேன் 

அது உனக்கான ஆராதனை”                             (வலியின் புனைபெயர் நீ)  

 

சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான்.

அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது,  தீஎன்கிற வார்த்தை, அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு செய்து விடலாம். அப்படியாக, உவமைகள் கூடக் காதலியிடம் பயமுறுத்த நான் விரும்புவதில்லை என்று கூறுகிற இந்த நவீன காதல் உணர்வுகள் எவ்வளவு மேன்மையானதாக இருக்கின்றது என்பதை உணர்கிறோம்.

காதலியின் மேலான அளவு கடந்த அன்பு காதலனை இவ்வாறு சொல்லச் சொல்கிறது. இவ்வாறான காதல் இருந்தால் போதும் உலகத்தில் எந்தக் காதலியும் மனைவியாகிறபொழுது உலகத்தைப் பார்த்துப் பயப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எதற்க்கும் பயப்படவே மாட்டாள்.

காதலிக்கும், காதலிக்குச் சொல்லப்போகும் உவமையிலும் கூட மென்மையை பதிவிக்கும் காதல் மனநிலைக்கு என்ன பரிசு தருவது?

அன்பு நிறைந்திருக்கும் உலகில் பூவின் மென்மையோடுக் காதலியை வாழ்விக்க எவ்வளவு மனத்தூய்மை வேண்டும். கூறும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஓசைகள், தொடும் தென்றல் இவை யாவும் காதலியைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட மோகன நிலையை ஒப்பிடக்கூடிய வார்த்தைகள் புவியில் வேறு எங்கு உள்ளது?

கூறப்படும் யாவும் யார் புதிதாய் பேசியது? இருந்த வார்த்தைகளை, இருந்த சிந்தனையை நாமே பேசியதாகவும், சிந்தித்ததாகவும் இறுமாப்புக் கொள்கின்றோம். அவ்வளவு தானே?

ஆழமாய் பதிந்து போனவைகள். சங்கம் தொட்டு இன்றுவரை காதல் எண்ணங்களில் விரிந்து கிளை பரப்பிக் கொண்டுதான் நிற்கின்றன.குதூகலத்தின் மையப் புள்ளியிலிருந்து பீறிட்டு வருகின்றன காதல் உணர்வுகள். அதைச் சாய்த்து விட எத்தனைக்கும் எவையும் அதற்குள்ளேயே ஜீரணித்து போய் விடுகின்றன.

உடலும், மனமும் துகள் துகளாய்ப் பிரிந்து பிரபஞ்சம் கலக்கும் சுகத்தை ஒவ்வொரு நொடியும் காதல் தருகிறது. காதலனும் தலை சுமந்து தூக்கிக் கிடக்கத் தவம் இருக்கிறாள் காதலி. உலகம் மறந்து அவளின் ஒற்றைச் சிரிப்பில் மனதைக் சிக்க வைத்துப் போய்க் கிடக்கின்றதில் நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறான் காதலன்.

ஆராதனை செய்து, ஆராதனை செய்து  வரம் கேட்டுக் கிடக்கின்றான் அளவு கடந்த பக்தியோடு பக்தனாய்…

(கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின்வலியின் புனைபெயர் நீ  என்னும் கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை.... அதற்கான  விமர்சனம்) 


 

பாரதிசந்திரன்

(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )

தமிழ்ப் பேராசிரியர்

திருநின்றவூர்.

9283275782

chandrakavin@gmail.com

தமிழ்ப் பேராசிரியர் முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். 
பாரதிசந்திரன் எனும் புனைபெயரை எதற்காக வைத்துள்ளீர்கள் ஐயா?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த்யா காயத்ரி   Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு.   ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!" என்றார். ஆழ்ந்த இரங்கல்கள்! கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!|kalakkapovathu yaru show first title winner kovai guna passed away (vikatan.com)
    • யாராவது IMF ஆபீஸ் பக்கம் போனால் அப்படியே பெரிய அதிகாரிக்கு சொல்லி விடுங்கப்பா கொடுக்கிற கடன் 2.பில்லியன் டாலருக்கும் சைனா வெடிக்கு ஓடர் பண்ணியிருக்கான்கள் என்று .
    • `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை தேவாலயங்களில் பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். பேச்சிப்பாறையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸார் இவர்மீது வழக்கு பதிவுசெய்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் நேற்று காலை முதல் போலீஸார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியிருக்கிறார் பாதிரியார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம்கார்டுகளை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.     கைதான பாதிரியார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் உள்ளிட்டவை படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேவையாற்ற வேண்டும் என்பது மரபு. ஒருகட்டத்தில், பாதிரியார் பொறுப்பிலிருந்து வெளியேறி காதலியைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருக்கிறார்.   பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது   ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம். தனது காதல் ஆசை நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாம். அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் வைத்திருந்திருக்கிறார். சென்னையிலுள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை தனியாகச் சந்திப்பது வழக்கமாம்.   கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்திருக்கிறார். புது...புது இளம்பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சாட்டிங் செய்யும்போதே இளம்பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ விசாரணையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் | Police interrogates priest Benedict arrested for sexual abuse - Vikatan
    • ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும். சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan)  ஆக்கலும் விட்ப்பார்கள் தகவலுக்கு நன்றி நாதமுனி.
    • நாங்கள் கேள்விமட்டும்தான் கேட்பம். அதையே நீங்கள் திருப்பிக்கேட்டால்?? வேறென்ன எஸ்கேப் அல்லது தூங்குபவர்களை போல நடிக்கிறார்கள் என்பது. கவுண்டர் சொல்வதுபோல், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!! என்ன விசுகர், எந்த கிரகத்தில இருக்கிறீர்கள்? சரி சரி நம்பிக்கைதானே வாழ்க்கை!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.