Jump to content

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று விகிதம் இதோ !

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

https://athavannews.com/2023/1326037

 

 

May be a cartoon of text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களே ஏத்துவாங்களாம்! அப்புறம் இவங்களே இறக்குவாங்களாம்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு பவுண்ஸ் 411/= ( மத்திய வங்கி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது.

 

54 minutes ago, MEERA said:

இன்று ஒரு பவுண்ஸ் 411/= ( மத்திய வங்கி)

 

54 minutes ago, MEERA said:

இன்று ஒரு பவுண்ஸ் 411/= ( மத்திய வங்கி)

எது சரியானது   .......411-351=60.     இது மிகப்பெரிய வித்தியாசம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

 

 

எது சரியானது   .......411-351=60.     இது மிகப்பெரிய வித்தியாசம் 😄

அண்ணா, செய்தியில் உள்ளது USD அமெரிக்க டொலர் நான் கூறியது GBP  பிரித்தானிய பவுண்ஸ்.

British Pound 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-02  411.1135 429.3269

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-02  343.9719 356.7393
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

 

 

எது சரியானது   .......411-351=60.     இது மிகப்பெரிய வித்தியாசம் 😄

என்ன கந்தையர் இன்னும் முறியலையோ😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூபா வலுவடைந்து வருவது தொடர்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்

 

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 பெப்ரவரிக்குள் 23.5% அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதனை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2022 செப்டம்பரில் 94.9% ஆக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது.

2022 செப்டம்பரில் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261% அதிகரித்து 2023 பெப்ரவரிக்குள் 107,639 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/242944

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாவின் பெறுமதி உயர்வு

Published By: T. SARANYA

02 MAR, 2023 | 04:27 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை உயர்வடைந்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் விற்பனை பெறுமதி 356.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 351.72 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 362.95 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/149555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலை

British Pound 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-03  398.4192 417.7282

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-03  334.5016 348.0322
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 பெப்ரவரிக்குள் 23.5% அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், இதனை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அட உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்காமலே அபிவிருத்தி அடைந்து விடுவார்களாம் பக்கத்து நாட்டு பங்களாதேஷ் காரன் இன்னும் கண்ணை கசக்கி கொண்டு நிக்கிறான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

அட உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்காமலே அபிவிருத்தி அடைந்து விடுவார்களாம் பக்கத்து நாட்டு பங்களாதேஷ் காரன் இன்னும் கண்ணை கசக்கி கொண்டு நிக்கிறான் ...

உலகப் பொருளாதாரமே புரியாமல், இலங்கை மக்களை ஏமாத்துறாங்கள்.

இரண்டு நாளா சர்வதேச சந்தையில் டொலர் பெறுமதி சிறு வீழ்ச்சி. அதனால் இலங்கை நாணய பெறுமதி உயர்ந்து விட்டதாக அடித்து விடுகிறார்கள். நாளை மீண்டும் பழைய பெறுமதிக்கு டொலர் திரும்ப, என்ன கதை அளப்பார்கள் என்று பாருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய் மதிப்பின் திடீர் உயர்வு பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 36 நிமிடங்களுக்கு முன்னர்
டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை, பொருளாதார ரீதியில் இன்று படிப்படியாக முன்னேற்றத்தை கண்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 351 ரூபா 72 சதமாகவும், விற்பனை விலை 362 ரூபா 95 சதமாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சி பீடம் ஏறும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 177 ரூபாவில் காணப்பட்டது.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி, அதாவது சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 201 ரூபா 89 சதமாக காணப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான காலத்தில் பாரிய சரிவை சந்தித்திருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 202 ரூபா 09 சதமாக காணப்பட, அடுத்த நாள் 229 ரூபா 50 சதம் வரை சடுதியாக வலுவிழந்தது.

இந்த பெறுமதி வலுவிழப்பானது, தொடர்ந்தும் பல மடங்குகளாக வலுவிழந்தது, இலங்கை பொருளாதாரத்தை பாரிய சவாலுக்கு உட்படுத்தியிருந்தது.

குறிப்பாக 2022ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையான காலத்திற்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 364 ரூபா 76 சதமாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் பிரகாரம், 364 ரூபா 76 சதமாக நிர்ணயிக்கப்பட்ட அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, தனியார் முகவர் நிலையங்கள் மற்றும் கருப்பு சந்தையின் ஊடாக சுமார் 410 ரூபா வரை சென்றிருந்தது.

2019ம் ஆண்டிற்கும், 2022ம் ஆண்டிற்கும் இடையிலான காலப் பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 187 ரூபா வரை வலுவிழந்திருந்தது.

இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் வசம், டாலர் கையிருப்பு பாரியளவில் குறைவடைந்ததை அடுத்து, நாடு பாரியதொரு தாக்கத்தை எதிர்நோக்கியிருந்தது.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாலர் கையிருப்பு குறைய காரணம் என்ன?

இலங்கையின் எதிர்நோக்கிய ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் பெருந்தொற்று ஆகிய காரணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பிரதான காரணங்களாக அமைந்திருந்தது.

எனினும், சுதந்திர இலங்கையின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக மக்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்கள்.

சுற்றுலாத்துறை, ஆடை, தேயிலை, ரப்பர் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கை தமக்கான வருமானத்தை பெரிதும் நம்பியிருந்தது.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது.

ஈஸ்டர் தாக்குதல் காரணமாக, சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 166,975 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்த போதிலும், அடுத்த மாதம் அந்த தொகையானது 37,802ஆக வீழ்ச்சி கண்டிருந்தது.

அதையடுத்து, 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான காலத்தில் கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் 71,370 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்த நிலையில், அந்த மாதம் கோவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணி கூட வருகைத் தரவில்லை.

எனினும், டிசம்பர் மாதம் 393 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ம் ஆண்டு முழுமையாக 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்த நிலையில், 2020ம் ஆண்டு மொத்தமாகவே 5 லட்சத்து 7 ஆயிரத்து 704 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தார்கள்.

2021ம் ஆண்டு அந்த தொகையானது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 495ஆக குறைவடைந்தது.

இதனால், இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் முழுமையாக இழக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தமது வருமானத்தை இழந்து இலங்கை, கையிருப்பிலிருந்த டாலர் உள்ளிட்ட சொத்துக்களையும் இழந்தது.

இது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது.

எனினும், இன்று சுற்றுலாத்துறையில் சாதகமான முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளது.

2023ம் ஆண்டின் கடந்த இரு மாத காலப் பகுதியில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் 162 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சார வெட்டு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு என பல்வேறு சவால்களை சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்று, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, சர்வதேச தொடர்புகள் மற்றும் புதிய கொள்கைகளின் ஊடாக அந்நிய வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடனுதவிகள், சுற்றுலாத்துறை மேம்படுத்தல், சர்வதேசத்திற்கு வழங்க வேண்டிய கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி எப்படி சடுதியாக அதிகரித்தது?

இலங்கை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை குறுகிய காலத்திற்கு செலுத்தாதிருக்கின்றமை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி வருமானம் சற்று அதிகரித்துள்ளமை, வெளிநாட்டு பணியாளர்களின் வருமானத்தின் வருகை அதிகரித்துள்ளமை மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற உதவித் திட்டம் ஆகியவற்றினால் கிடைக்கப் பெற்ற டாலரினால் நாட்டின் கையிருப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு உதவி வழங்கும் வகையில், 400 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கியின் முதலீட்டு பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது சந்தையில் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் கூறுகின்றார்.

''முக்கியமான காரணம், 400 மில்லியன் டாலரை, இலங்கையிலுள்ள 3 வங்கிகளின் ஊடாக வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. உதவியாக வழங்கப்படும் இந்த தொகையை இறக்குமதிகளுக்காக பயன்படுத்த முடியும் என்ற ஒரு அறிவிப்பு வந்துள்ளது. என்னை பொறுத்த வரையில், ஏற்றுமதியில் கிடைத்த அதிகரிப்பு என்றும் நான் சொல்ல மாட்டேன். அந்நிய செலாவணி வந்தமைக்கான அதிகரிப்பு என்று சொல்வதையும் நம்பமாட்டேன். உலக வங்கி உதவி தொகையை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பானது, சந்தையில் ஒரு சாதகமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சந்தையில் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. அதனாலேயே ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது." என பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபா மதிப்பு அதிகரிப்பு
 
படக்குறிப்பு,

பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி

இந்த ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை சாதகமாக பார்க்க முடியுமா? என பிபிசி தமிழ், பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் வினவியது.

''பார்க்கலாம். ஆனால், இது தற்காலிகமானது. வழக்கமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்லுமாக இருந்தால், இது அனைத்தும் ஆவியாகி விடும். ஏனென்றால், இலங்கை இப்போது கடனை திருப்பி செலுத்தவில்லை. இறக்குமதிகளை மிகவும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். அதனால் தான், ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதை போன்று காட்டுகின்றதே தவிர, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, ரூபாவின் பெறுமதி அதிகரிக்கவில்லை. இன்னுமொரு காரணம் இருக்கின்றது. இதுவரை காலமும் பணத்தை அரசாங்கம் அச்சிட்டது. ரூபாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, டாலருக்கான கேள்வி அதிகரிக்கும். ரூபாவின் நிரம்பல் அதிகரிக்கின்றது, அவ்வாறான நிலையில் டாலர் வரவில்லை என்றால், டாலரின் பெறுமதி அதிகரிக்கும். இப்போது ரூபா அச்சிடப்படுவதில்லை. ரூபா அச்சிடாமையினால், ரூபாவின் நிரம்பல் குறையும் அல்லவா?. டாலரின் பெறுமதி குறைவடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைகின்றது." என அவர் கூறுகின்றார்.

அவ்வாறாயின், நாடு உண்மையாகவே பொருளாதாரத்திலிருந்து மீளவில்லையா என பிபிசி தமிழ் அவரிடம் கேள்வி எழுப்பியது.

''நிச்சயமாக இல்லை. இதுபோலியாக உருவாக்கப்பட்ட ஒரு நிலைமை. இதனை ஒரு சாதகமான நிலைமையாக பார்க்க முடியாது. இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3gdyd42nz0o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தின் விலை குறைந்தது

 

இன்று (03) தங்கத்தின் விலை வேகமாகக் குறைந்துள்ளது.

1627874685_gold1-1200x800-1-300x200.jpg
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00

  • 24 கரட் 1 கிராம் – ரூ.22,520.00
  • 24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 180,150.00
  • 22 கரட் 1 கிராம் – ரூ. 20,650.00
  • 22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.165,150.00
  • 21 கரட் 1 கிராம் – ரூ. 19,710.00
  • 21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 157,650.00

https://thinakkural.lk/article/243239

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2023 at 06:18, தமிழ் சிறி said:

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

எனக்கு உந்த தலையங்கம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு :cool:
உங்களுக்கு???????? :beaming_face_with_smiling_eyes:

விட்டால் சிறிலங்கா உலக வல்லரசாகின்றது எண்டு எழுதினாலும் எழுதுவானுகள் :face_savoring_food:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பிச்சைக்காரன் கண்ட கனவு. மக்கள் இன்னும் திண்டாட்டத்தில் தெருவில் போராட்டம் தொடருகிறது. ரணில் உப்பிடி எத்தனை புலுடா கதைகளை உருவாக்கி எத்தனை காலம் கதிரையை அலங்கரிக்கப்போகிறார்? உண்மையை பேசி, நல்லதை செய்து உயர விருப்பமில்லை. பொய்யிலே மக்களை ஏமாற்றி ஆட்சியை தொடரலாமென நினைக்கிறாரோ.

10 hours ago, குமாரசாமி said:

விட்டால் சிறிலங்கா உலக வல்லரசாகின்றது எண்டு எழுதினாலும் எழுதுவானுகள்

ஓமோம்.... அமெரிக்காவுக்கே சவால் விடும் வாய்ச்சவடால்கள். நாங்கள் பண வல்லரசாக மாறியிருப்போம், வந்த கொரோனா; இலங்கைக்கு மட்டும் வந்திருந்தால்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

British Pound 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-08  370.6313 392.3973

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-08  313.7749 331.0583
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

—————//——

இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம்உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர்எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

________//_____

 

சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்குவதற்கான எல்லா வழிகளும் திறந்துவிட்டன என்று இலங்கை அறிவித்துள்ளது.. சீனாவும் இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டிவிட்டன.. இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வந்து சேர உள்ளது.. அநேகமாக இந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி நல்லநிலைக்கு வந்து நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் லேசுபட்டவர்கள் இல்லை உலக வங்கிக்கே ஆப்பு கொடுக்க போகிறான்கள்😀 பொதுவாகவே எந்த நாட்டுக்கும் உலக வங்கி கடன் அளிப்பது என்றால் அந்த நாட்டின் பண பெறுமதியை வலுவிழக்க செய்த பின்பே குறிப்பிட்ட விகிதம் டொலருக்கு எதிராக குறைவடைய கடன் நாட்டுக்குள் போகும்  அது பொதுவான நடைமுறை இங்கு சகுனி ரணிலின் திருவிளையாடல் பொய்யாக பெறுமதியை உயர்த்தி காட்டி கடன் வரும்போது தற்போதைய பெறுமதிக்கு இறக்கி  கொள்வது ஆனால் இந்த பழைய விளையாட்டு எல்லாம் ஆபிரிக்க நாடுகளிடம் கற்றுகொண்டு அப்டேட் ஆகத்தான் கடன் கொடுப்பவன் இருப்பான் என்பதை மதனமுத்தாக்கள் இலகுவில் மறந்து விடுகின்றனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

சிங்களம் லேசுபட்டவர்கள் இல்லை உலக வங்கிக்கே ஆப்பு கொடுக்க போகிறான்கள்😀 பொதுவாகவே எந்த நாட்டுக்கும் உலக வங்கி கடன் அளிப்பது என்றால் அந்த நாட்டின் பண பெறுமதியை வலுவிழக்க செய்த பின்பே குறிப்பிட்ட விகிதம் டொலருக்கு எதிராக குறைவடைய கடன் நாட்டுக்குள் போகும்  அது பொதுவான நடைமுறை இங்கு சகுனி ரணிலின் திருவிளையாடல் பொய்யாக பெறுமதியை உயர்த்தி காட்டி கடன் வரும்போது தற்போதைய பெறுமதிக்கு இறக்கி  கொள்வது ஆனால் இந்த பழைய விளையாட்டு எல்லாம் ஆபிரிக்க நாடுகளிடம் கற்றுகொண்டு அப்டேட் ஆகத்தான் கடன் கொடுப்பவன் இருப்பான் என்பதை மதனமுத்தாக்கள் இலகுவில் மறந்து விடுகின்றனர் .

ஶ்ரீலங்கா… உலக வங்கியிடம் ஏழு முறைக்கு மேல் வாங்கிய கடனை    இதுவரை…. கட்டவில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா… உலக வங்கியிடம் ஏழு முறைக்கு மேல் வாங்கிய கடனை    இதுவரை…. கட்டவில்லையாம்.

ஓரிருதடவை வாங்கினால் கடன், தொடர்ந்து ஏந்தினால் பிச்சை .......குடுக்கத் தேவையில்லை.......குடுக்கிறவனும் எதிர்பார்க்க மாட்டான்......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

United States Dollar 

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 
2023-03-08  313.7749 331.0583

 

53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அநேகமாக இந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி நல்லநிலைக்கு வந்து நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்..

பெப்ருவரி மாதம் 359.47 ரூபாய் இலங்கையில் இருந்த டொலர் பெறுமதி இன்று 313.77 பெறுமதியில் உள்ளது. இதற்கு ஆதவன்நியுஸ் எப்படி தலைப்பு கொடுத்திருக்க வேண்டும்.

வீழ்ச்சி அடையும் ரூபாய் பெறுமதி   டொலர் தனது பெறுமதியில் உயர்ச்சி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததால் சீனி, பருப்பின் விலைகளும் குறைந்தன!

Published By: VISHNU

08 MAR, 2023 | 06:45 PM
image

 

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக ஒரு கிலோ வெள்ளைச்  சீனியின் மொத்த விலை 30 ரூபாவினாலும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளைச் சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை குறைப்பின் பயனை நுகர்வோர் பெற வேண்டும் என்று  புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபா 25 சதமாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு  7,000 கோடி ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/150038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக குறையலாம் என ஃபிட்ச் கணித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி!

இன்றைய (09) நிலவரப்படி இலங்கையில் இம்மாத தொடக்கத்தை விட 24 கரட் தங்கத்தின் விலை 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் 24 கரட் தங்கம் 184,000 ரூபாவாக இருந்தது. எனினும், இன்று 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 170,000 ஆக இருந்ததுடன், தற்போது 134,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

https://thinakkural.lk/article/244149

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.