Jump to content

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,இரா.சிவா
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 மார்ச் 2023, 03:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஃபேட்டி லிவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அதிகமாகத் தாக்கும் ஃபேட்டி லிவர் நோயை ஆல்கஹால் அல்லாத கொழுப்புக் கல்லீரல் (Non-Alcoholic Fatty Liver) என்று மருத்துவ உலகம் வகைப்படுத்துகிறது.

முந்தைய தசாப்தங்களில் ஃபேட்டி லிவர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மது அருந்துபவர்களாகவே இருந்தனர். ஆனால், இந்த தசாப்தத்தில் மதுப் பழக்கம் அல்லாத பலரும் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்படுகின்றனர். உடலுழைப்பு அதிகம் இல்லாத இன்றைய வாழ்க்கை முறையும், முறையற்ற உணவுப் பழக்கமுமே இதற்குக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் நாள்பட்ட கல்லீரல் நோய்க்கு நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் நோயே முக்கிய காரணம் என்கிறது இந்திய அரசின் மதுப்பழக்கத்தால் ஏற்படாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல் அறிக்கை.

 

இந்தியாவில், நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் பாதிப்பு மொத்த மக்கள்தொகையில் 9 முதல் 32 சதவிகிதம்வரை இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக, உடல் பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவரால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்படுபவர்களில் 40-80 சதவிகிதம் பேர் இரண்டாம் வகை நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 30-90 சதவிகிதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸிடம் பிபிசி தமிழ் பேசியது. ஃபேட்டி லிவர் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

ஃபேட்டி லிவர் என்றால் என்ன?

பொதுவாக குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யாருடைய கல்லீரலிலும் கொழுப்பு இருக்காது. கல்லீரலில் கொழுப்பு படிப்படியாக சேர்ந்து ஆபத்தான கட்டத்தை அடைவதைத்தான் ஃபேட்டி லிவர் என்போம்.

இந்தக் கொழுப்பு கல்லீரல் மேல் படியாது. மாறாக கல்லீரலில் உள்ள திசுக்களுக்குள் படியும். ஒருவருடைய கல்லீரலில் ஐந்து சதவிகிதம்வரை கொழுப்பு இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கல்லீரலின் செயல்பாடும் குறையத் தொடங்கும்.

நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் (Non-Alcoholic Fatty Liver) என்றால் என்ன?

இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் நிலை. உடல் பருமன், நீரிழிவு, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைபாடு, தைராய்டு உடையவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இதற்கான தொடக்கம் என்பது முறையற்ற உணவுப் பழக்கமும், மாறிவரும் வாழ்க்கைமுறையும்தான்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?

துரதிர்ஷ்டம் என்னவென்றால் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. ஒரு சிலருக்கு வலது விலா பகுதியில் சிறிய அளவில் அசௌகரியம் இருக்கும். ஆனால், பாதிப்பு அதிகரிக்கும்போது உடல் சோர்வு ஏற்படும். பெரும்பாலும், அஜீரணக் கோளாறு போன்ற வேறு ஏதேனும் குறைபாட்டிற்கான சிகிச்சைக்காக வருபவர்களை பரிசோதிக்கும்போதுதான் அவர்களுக்கு ஃபேட்டி லிவர் இருப்பது தெரிய வரும்.

கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸ்
 
படக்குறிப்பு,

கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸ்

ஃபேட்டி லிவர் எவ்வளவு ஆபத்தானது?

ஃபேட்டி லிவர் என்று தெரிந்த பிறகும் முறையான கவனம் கொடுக்கப்படாமல் இருந்தால் சீர்ரோஸிஸ் என்ற முழுமையான பாதிப்படைந்த கட்டத்தை கல்லீரல் அடையும். அதன் பிறகு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படும்.

இதைவிட நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். கல்லீரல் முறையாக செயல்படாதபோது இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடும்.

இன்று இளம்வயதினர் பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதை நாம் பார்க்கிறோம். அதற்கு ஃபேட்டி லிவரும் முக்கிய காரணம். எனவே ஃபேட்டி லிவர் என்பது உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் இன்று அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறதே?

அது உண்மைதான். பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம்வயதினர்கூட சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவருக்கு இணையாக நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை மாதிரியான நகரங்களில் இன்று 30 சதவிகிதம் பேர் வரை ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபேட்டி லிவருக்கான சிகிச்சை என்ன?

சில சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் செய்யும் மாற்றமே ஃபேட்டி லிவருக்கான சிறந்த சிகிச்சை. அந்த மாற்றங்களைச் செய்தால் இரண்டு ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டுவிடலாம். இதில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் இருப்பவர்கள் எளிதாகக் குணமாகிவிடலாம். எந்த நிலையில் இருந்தாலும் இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயே.

வாழ்க்கை முறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்ய வேண்டும்?

உணவு முறையில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும். தங்களுடைய வயது, பாலினம், செய்யும் வேலையை அடிப்படையாக வைத்து தினசரி தேவையான கலோரி அளவைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

அதற்கேற்ப உணவுப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானங்களையும் குறைக்க வேண்டும்.

அதேபோல தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதை முறையாகப் பின்பற்றினாலே இரண்டு ஆண்டுகளில் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

https://www.bbc.com/tamil/articles/cglr5lnx6nno

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.