Jump to content

"சங்கப் படலை" என்றால் என்ன என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of tree and outdoors
 
சங்கப் படலை.

இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு,
மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்.

இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம்.
வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள்.
வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில்,
சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும்.
இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட
சங்கப் படலையானது காலப் போக்கில் ஓடுகள், சீமெந்து கொண்டு அமைக்கப்பட்டது.

சங்கப் படலையோடு மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
அங்கு நடந்த போரினாலும், பழமையை விட்டுப் புதுமையைத் தேடும் மனோபாவத்தாலும்
இத்தகைய சங்கப்படலைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாகவிருக்கும் சங்கப்படலைகள்
எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகின்றனவோ?

முன்னோர்கள் எவ்வித பலனையும் எதிர்பாராது, மற்றவர்களின் நலன் கருதிச் செய்த
பல விஷயங்களை நாம் தொடராமல் விட்டதோடு, அவர்கள் விட்டுச் சென்றவற்றைக்
கூடப் பாதுகாக்க முடியாதவர்களாக  இருக்கிறோ என்பது அவமானமே !

படம்:
யாழ்ப்பாணத்தில், "அளவெட்டி" என்னும் ஊரிலிருந்து "அம்பனை" என்னும் ஊருக்குப் போகும் வீதியில் சங்கப்படலையுடன் இப்போதும் காட்சியளிக்கும் வீடு.

Sriram Govind

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமை தாங்கியும் பாரம் தூக்கிச் செல்லும் பயணிகளுக்காக வைத்திருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

சுமை தாங்கியும் பாரம் தூக்கிச் செல்லும் பயணிகளுக்காக வைத்திருந்தனர்.

பிரசவத்தில்... இறந்த பெண்ணின், நினைவாக...
சுமைதாங்கியை  அந்த வீட்டுக்காரர் 
அமைத்துக் கொடுக்கும் பழக்கம், தமிழர்களில்  இருந்ததாக 
எங்கோ வாசித்தேன். உண்மை தெரியவில்லை.

தமிழ்நாட்டிலும்... சுமைதாங்கி அமைக்கும் பழக்கம் இருந்ததாம்.

நல்லூருக்குப் போகும் வழியில்... கந்தர்மடம், அரசடி வீதியில்  
ஒரு சுமைதாங்கி இருந்ததை கண்டுள்ளேன். இப்போ... உள்ளதோ தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவிற்கு.. சிலர் எழுதிய கருத்துக்கள், உங்கள் பார்வைக்கு.... 🙂

இப்போது இதே போல தின்னை வடிவமைத்தால் அதை டாஸ்மாக் பாராக மாற்றும் மக்கள்தான் ஏராளம். மாட்டு வண்டியிலோ நடைபயனமாகவோ வெகுதூரம் செல்லும் மக்கள் இல்லாமலே போயினர். அதனால் இளைப்பாறும் வேலையும் இல்லை. மாறாக சாலைக்கு சாலை ஏரிக்கரைகளில் தெருவிளக்கு அடியில் மாலையில் சுடச்சுட பீப் பகோடா பீப் ப்ரைட்ரைஸ் உடன் மது அருந்தும் நம் நாட்டின் உண்மை குடிகள் பெருகிவிட்டனர். இது போல தின்னை இருந்தால் குடித்துவிட்டு வம்பிழுக்க இன்னும் வசதியும் இருக்கும். காலக்கொடுமை. என்ன செய்வது சிலவற்றை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் திண்ணை  வீட்டுக்காரர்கள்.
- Rishikesh Venkatakrishnan -

இப்போது நம் தமிழகத்தில் இதைப்போல் சங்கப்படலை வைத்தால் குடிமகனின் குடிப்படலையாகி விடும்.
- Babu Nmc Vishvakarma -

ஏன் நமது கிராமங்களிலும் , நகரத்தில்உள்ள அந்த காலத்து வீடுகளிலும் இது போல தண்ணைகள் உண்டு. அந்த காலத்தில் இரவு படுக்க போகும் முன் சிலர் வாசலில் வந்து தேசாந்திரியம் போவோர் உண்ண வரலாம் என்று கூவி விட்டு படுக்க போவார்கள் . சில வீடுகளில் இருவர் உண்பதற்று தேவையான உணவை திண்ணையில் வைத்துவிட்டு படுக்கச்செலவர். இது பெரும்பாலும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் வீடுகளில் உள்ளோர் பழக்கம்.
- Ramani Krishnamurthy-

அவசரமான உலகில் போக்குவரத்து வசதிகள் நிறையவே வந்ததால், தங்கி களைப்பாறி செல்ல வேண்டிய தேவை இல்லாத காரணத்தால் சங்கப்படலை மட்டுமல்ல சுமைதாங்கி கற்கள் கூட காணாமல் போய்விட்டன.
-Raj Ragul-

இப்பொழுது மக்கள் விரைவு பயண வழிமுறைகளை கையாள்வதாலும் நடைபயணம் என்பது வெகுசிலர் மட்டுமே மேற்கொள்வதாலும் இதற்கான தேவை இப்பொழுது இல்லை என்றே கொள்ளலாம் என்பது என் கருத்து.
-Srimurugan Ponampalam-

எங்கள் கிராமங்களில் எங்கள் பாட்டி கடைசி பஸ் வந்து போன பத்து நிமிடங்கள் கழித்து தான் சோற்றில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
-Narayanan Sridhar-

எங்களுக்கும் புதிதாய் கட்டவிருப்பம் கட்டினால் யார் தங்குவார் தெருவில் மதுபானம் அருந்துவோரும் வாழ்வெட்டுக்குழுவும் தான் தங்கும். அப்போ யார்தான் பாதுகாப்பார்/ யார்தான் கட்டுவார். 😂
-Nadarasha Punchadsaralinkam-

இப்பல்லாம் சங்கப்படலை அமைத்தால் பயலுவ உழைக்க போகாம செல் போனோட வந்து உட்கார்ந்து கொண்டு நம்மள சங்கட படுத்து வானுவோ... 🤣
Basheer Ibrahim

இப்போ உள்ள காலத்தில் இப்படி வசதி செய்து கொடுத்தால் இதையே தண்ணி அடிக்கும் பார் ஆக்கி அங்கேயே மட்டையாகி விடுவார்கள்.... போதாக்குறைக்கு நாய்களும் ஆக்கிரமித்து விடும். 😎
-Jaffer Abdullah- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரில் இன்றும் சுமைதாங்கி தூண்கள் இருப்பதாக என உறவினர் ஒருவர் கூறினார்.

இந்தப்படம் கூகுளில் இருந்து  எடுக்கப்பட்டது.

 

பழம்பெருமை பேசும் சுமை தாங்கி கல் மேடை.. வயலூர் சாலையில் சென்றால் இதை  பார்க்கலாம்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.