Jump to content

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் பொருளாதார மந்த நிலையால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது.

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை குறைத்துள்ளது. அதேபோல், மேலும் திறமையான நிறுவனமாக மாற்றும் முயற்சியிலும் மெட்டா ஈடுபட்டுள்ளது. அதன் முந்தைய சுற்றுகளில், மெட்டா நிறுவனம் 11,000 தொழிலாளர்களைக் குறைத்தது.

இதுவே அந்த நிறுவனத்தின் முதல் பெரிய பணிநீக்கமாகும். தனது நிறுவனத்தை சமன் செய்யவும், மேலாளர்களுக்கு தொகுப்புகளை வழங்கவும், தேவையற்றதாகக் கருதும் முழு குழுக்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படிதான் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.

விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/243653

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

உந்த பேஸ்புக்,டிவிட்டரை ஒட்டுமொத்தமாக நிற்பாட்டினாலே உலகத்திலை கன பிரச்சனையள் தீரும்.:face_with_tears_of_joy:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள் என்ன சிக்கல்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மார்க் சக்கர்பெர்க்

பட மூலாதாரம்,KENZO TRIBOUILLARD/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மார்க் சக்கர்பெர்க்

இணையப் பாதுகாப்பு மற்றும் தரவுத் தனியுரிமை விதிகளை மீறும் வழக்கில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளன.

ஜனவரி 2023 இல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு முக்கியமான போரில் வெற்றி பெற்றார், அது தேர்தல் வெற்றி இல்லை.

இந்த வெற்றிக்கு பிறகு அவர் மீதான பேஸ்புக்கின் தடை நீக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியில் இருந்துவிட்டு இப்போது அவர் ஃபேஸ்புக்கில் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் சுதந்தரம் பெற்றுள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை ஃபேஸ்புக் முடக்கியது. இதையடுத்து, தேர்தல் முடிவை மாற்றக்கோரி முன்னாள் அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.

 

அப்போது, அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாக இருப்பதாகவும், இங்கு கருத்து தெரிவிப்பது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதியாக நம்பினால் மட்டுமே பேஸ்புக்கிற்கு திரும்ப அவர் அனுமதிக்கப்படுவார் என்றும் கூறி ஃபேஸ்புக் அவரது கணக்கைத் தடை செய்தது.

முகநூலைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதி, கடந்த காலங்களிலும் பல பதிவுகளால் சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில், அவர் மீதான தடையை நீக்கிய ஃபேஸ்புக் முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஃபேஸ்புக் விமர்சிக்கப்பட்டதும் இது முதல் முறை இல்லை. உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் தினசரி ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் இந்த சமூக ஊடக தளம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கித் தான் வருகிறது. பயனர்களின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளமான பேஸ்புக், அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகிறது.

ஃபேஸ்புக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அன்றாடச் சலசலப்பு

ஃபேஸ்புக்கிற்கு முன்பே பல சமூக ஊடக தளங்கள் இருந்தன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறையின் மூத்த ஆராய்ச்சியாளரும் ஊடக நிபுணருமான ஜூடிட் டோனாத் கூறுகிறார்.

"ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஐந்து மாணவர்கள் பேஸ்புக்கை அறிமுகப்படுத்தினர், இது சமூக ஊடகங்களை வியத்தகு முறையில் மாற்றியது. இது மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டாக்கள் அடங்கிய மாணவர் தகவல்களின் பேப்பர் டைரக்டரியாகத் தொடங்கியது." இந்த கோப்பகத்தின் பெயர்- ஃபேஸ்புக். இந்த மாணவர்கள் தங்கள் சமூக ஊடகத் தளத்திற்கும் அதே பெயரையே தேர்வு செய்தனர்."

"பேப்பர் டைரக்டரியில் நபர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது, அதைப் பற்றி நீங்கள் கருத்தும் தெரிவிக்க முடியாது. அவர்கள் எளிதாக மக்களைக் கண்டுபிடிக்கும் தளத்தை உருவாக்க முயன்றனர். மார்க் ஜுக்கர்பெர்க், கணினி அறிவியல் மற்றும் உளவியல் மாணவர் ஆவார். அவர் ஃபேஸ்புக்கை உருவாக்குவதில் ஈடுபட்டார். இதற்காக அவர் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார்."

ஃபேஸ்புக்கின் பயணம் குறித்து ஜூடிட் டோனாத் கூறும்போது, "பல்கலைக்கழகத்தில்தான் தொடங்கினார்கள் ஆனால் பிற்காலத்தில் மற்ற பல்கலைகழகங்களிலும் இது தொடங்கப்பட்டது. அதிக மக்கள் இணைந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நிலை உருவானது. மற்ற பலகலைக்கழக மாணவர்கள் இணைக்கப்பட்டனர். அவர்களுக்கென்று நண்பர்கள் மற்றும் நெட்வொர்க்குகள் இருந்தன, பின்னர் அவர்களின் உறவினர்களும் அவர்களுடன் இணைந்தனர், மேலும் இந்த நெட்வொர்க் பரவியது." என்றார்.

2006 ஆம் ஆண்டில், பேஸ்புக் ஒரு பெரிய சமூக ஊடக தளமாக மாறியது, இது மற்றவர்களுடன் போட்டியிடத் தொடங்கியது.

அந்த நேரத்தில், மைஸ்பேஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ்டர் போன்ற பிற பிரபலமான மற்றும் பெரிய சமூக ஊடக நெட்வொர்க்குகள் இருந்தன, அங்கு மக்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களின் சுயவிவரங்களைப் பார்க்கவும், அவர்களின் நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும்.

ஆனால் அவை 'நிலையான' வலைத்தளங்கள், அங்கு எதுவும் மாறவில்லை. அதனால்தான் இதை மாற்றும் வகையில் ஃபேஸ்புக் தனது தளத்தில் நியூஸ்ஃபீட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

ஃபேஸ்புக் இணை நிறுவனர்கள் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ்

பட மூலாதாரம்,JUSTINE HUNT/THE BOSTON GLOBE VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஃபேஸ்புக் இணை நிறுவனர்கள் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ்

ஜூடிட் டோனாத் கூறுகிறார், "பேஸ்புக் தொடங்கப்பட்டது. இப்போது மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பகிர முடியும். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது. அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பன நண்பர்களின் நெட்வொர்க்கில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது."

இப்போது பெரும்பாலான மக்கள் இதைப் பகிரத் தயங்குவதில்லை. ஆனால் இது முதலில் ஆரம்பித்தபோது மக்களுக்கு மிகவும் புதிய விஷயமாக இருந்தது.

ஃபேஸ்புக்கின் ஆரம்ப வடிவமைப்பை உருவாக்கும் போது மார்க் ஜுக்கர்பெர்க், மக்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதை உணர்ந்தார் என்று ஜூடிட் டோனாத் கருதுகிறார். இது அவருடைய கருத்து.

இது குறித்து அவர் கூறுகையில், 'கான்டாக்ட் கோஆப்ட்' என்பது நமது நண்பர்களைப் பற்றி மட்டுமின்றி அவர்களின் நண்பர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளத் தொடங்கும் ஒரு கருத்தாகும்.

சில நேரங்களில் நாம் ஒரு குறிப்பிட்ட நபரிடம் சொல்ல விரும்பும் ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் சொல்ல மாட்டோம். ஆனால் ஃபேஸ்புக்கில் சொன்னது இப்போது பெரிய நெட்வொர்க்கை எட்டியது. இதன் காரணமாக, தகவல் கொடுக்கும் முறையுடன், பரஸ்பர உறவுகளின் சமன்பாடுகளும் மாறத் தொடங்கின.

இந்த சமூக ஊடக தளம் மிக விரைவாக வெற்றி பெற்றது. நான்கு ஆண்டுகளில் மைஸ்பேஸ் நிறுவனத்தை பேஸ்புக் முந்தியது. பின்னர் பல சமூக வலைதளங்கள் வந்தாலும் ஃபேஸ்புக் இன்னும் முதலிடத்தில் இருந்தது.

ஜனவரியில், ஃபேஸ்புக்கின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளிவந்தன, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே தொண்ணூறு லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, தினமும் இரண்டு பில்லியன் மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஒரு பெரிய கேள்வி என்னவென்றால், பேஸ்புக் எப்படி வருவாய் ஈட்டுகிறது? என்பது தான்.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா

பட மூலாதாரம்,GETTY IMAGES

க்ளிக்குக்குப் பதில் ரொக்கம்

ஃபேஸ்புக் என்ற வலைதளம், பேஸ்புக் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இந்த நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டது.

இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஊடக ஆய்வுகள் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மர்லின் கோமரோவ்ஸ்கியிடம் பிபிசி இதன் வர்த்தகத்தைப் பற்றிப் பேசியது. அப்போது அவர், "இதன் முக்கிய வணிகம் விளம்பரம் தான். அதன் வருவாயில் 98 சதவீதம் விளம்பரத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இது விளம்பர உத்தியின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரம் அதற்கு வருவாய் ஈட்டித் தருகிறது." என்றார்.

மக்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள், பார்க்கிறார்கள். ஆனால் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களையும் வாங்கியுள்ளது.

டாக்டர். மெர்லின் கூறுகிறார், "இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சமூக ஊடகப் பயனர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் பல வலைத்தளங்களில் பதிவு செய்ய உங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள். இந்த தகவல்கள், விளம்பரங்களைத் திறம்படப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். விளம்பர நிறுவனங்கள் இந்த இணையதளங்களில் விளம்பரம் செய்கின்றன. அவர்களின் பயனர்களின் தேவைகளுக்கேற்ப அவை வெளியாகின்றன."

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மேலும் அவர், "ஃபேஸ்புக்கில் நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்து, மக்கள் அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் சென்று பொருட்களை வாங்குகிறார்கள். அதிக மக்கள் இந்த விளம்பரங்களை கிளிக் செய்தால், அதிக பணம் ஃபேஸ்புக்குக்கு வருகிறது. அதாவது, தினமும் குறைவான நபர்கள் பேஸ்புக்கில் பதிவு செய்தால், அதன் வருமானமும் குறையும்." என்கிறார்.

மெட்டாவர்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏற்ற இறக்கம்

2022 ஆம் ஆண்டில், ஃபேஸ்புக்கின் வருவாய் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் நான்காவது காலாண்டில், அது 32 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விடச் சிறப்பாக இருந்தது.

பேஸ்புக் 2022 இல் மொத்தம் 116 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது. பில்லியன் கணக்கான மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் 13 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள், இது எதிர்காலத்தில் அதன் வருமானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும்.

டாக்டர் மெர்லின் கூறுகிறார், "ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதற்கான மிகப் பெரிய வயதுப் பிரிவினர் 25 முதல் 34 வயதுடையவர்கள். இவர்கள் அதன் சந்தாதாரர்களில் கால் பகுதியினராக உள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற சமூக ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, இந்த வயதில் உள்ளவர்கள் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தகிறார்கள்."

ஆனால் இது விளம்பரதாரர்களுக்கு நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா? டாக்டர் மெர்லின் விளக்குகிறார், "விளம்பர நிறுவனம் எந்த வயதினரைப் பற்றி ஆர்வமாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆனால் இளம் நுகர்வோர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் உங்கள் தொடர்புகளுக்கு அபாயம் ஏற்படலாம்."

"இரண்டாவது விஷயம், ஃபேஸ்புக், விளம்பர வருவாயை மட்டுமே சார்ந்துள்ளது. இதில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். உதாரணமாக, கூகிள், தொலைபேசியுடன் பல்வேறு அம்சங்களையும் விற்பனை செய்கிறது. ஒரே ஒரு வருமான ஆதாரத்தை மட்டுமே நம்பியிருப்பது சற்று கடினம்."

சமீப காலங்களில் மெட்டா தனது நிறுவனத்தின் பிராண்டிங்கை மாற்றியமைத்துள்ளது. அது மெட்டாவெர்ஸில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. மெட்டாவெர்ஸ் என்பது டிஜிட்டல் உலகம், அதில் கற்றல், விளையாடுதல் அல்லது தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றுடன் உங்கள் சொந்த டிஜிட்டல் வடிவத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் இணைக்கப்படுவீர்கள். ஆனால் இது நடைமுறைக்கு வர நீண்ட காலம் ஆகலாம்.

டாக்டர் மெர்லின் கூறுகிறார், "2023 ஆம் ஆண்டிற்கான மெட்டாவின் குறிக்கோள், நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதாகும். அதனால்தான் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஆண்டு இறுதியில் பதின்மூன்றாயிரம் பேரை பணிநீக்கம் செய்தார். இந்த முறை சரியானதா இல்லையா என்று சொல்வது கடினம்."

பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் சட்டப்போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் உதவிப் பேராசிரியர் டிஃப்பனி லீயிடம் பிபிசி பேசியது.

ஃபேஸ்புக் சர்வதேச அளவில் பலமுறை பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது என்று பேராசிரியர் டிஃப்பனி கூறுகிறார். "என்னைப் பொறுத்தவரை, 2018 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மிகப்பெரிய வழக்கு, இதில் நிறுவனம் பல மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த அனுமதித்தது, இதனால் மற்ற நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை அந்த நபர்களுக்கு வழங்க முடியும்."

"கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அத்தகைய மூன்றாம் தரப்பு டெவலப்பர்களில் ஒன்றாகும், மேலும் அவர்கள் இந்தத் தகவலை மக்களின் அனுமதியின்றி மற்றும் ஃபேஸ்புக் விதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளனர்."

அடிப்படையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஒரு அரசியல் ஆலோசனை நிறுவனமாகும். அதன் சேவைகள் டொனால்ட் டிரம்பின் 2016 தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார், அதன் பிறகு இந்த மோசடி 2018 இல் வெளிச்சத்திற்கு வந்தது.

அப்போது எட்டரை கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் தகவல்கள், அவர்களின் அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களுக்கு விளம்பரங்கள் அனுப்பப்பட்டன.

டிஃப்பானி லீ, "இது உலக அளவில் ஒரு சர்ச்சையை உருவாக்கியது. யாரும் தங்கள் தகவல்களைத் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. குறிப்பாக இதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணம் நல்லதல்ல. இது தவிர, பல சிக்கல்களும் எழுந்தன. தனியுரிமைப் பிரச்சினை, தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் தேர்தல் முடிவைப் பாதிக்கச் செய்தல் போன்ற பிரச்சனைகள் எழுந்தன. அதே நேரத்தில், கொரோனா தொடர்பான சதித்திட்டங்கள் பற்றிய வதந்திகள் ஃபேஸ்புக் மற்றும் அதன் பிற தளங்களில் பரவின. இணைய வழியில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதான செய்திகள் தொடர்ந்து வருகின்றன." என்கிறார்.

பொதுவாக, ஒரு நிறுவனம் இது போன்ற வழக்குகளால் காணாமலே போயிருக்கும். ஆனால், ஃபேஸ்புக் இன்றும் நிற்கிறது.

டிஃப்பானி லீ, "கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஊழலுக்குப் பிறகு, பல நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டன. சிலர் தேர்தல்களில் நியாயமற்ற முறையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய தளத்தை ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறினர். ஆனால் இறுதியில் அது பயனர்களின் கைகளில் உள்ளது. பயனர்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து பயணிக்கும் வரை, விளம்பர நிறுவனங்களும் பயணிக்கும்." என்கிறார்.

ஃபேஸ்புக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொறுப்பேற்பு

ஆனால் ஒரு பிரச்சனை என்றால் ஃபேஸ்புக் யாருக்கு பதில் சொல்லும், அதை யார் கேள்வி கேட்பார்கள்?

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லை என்றும் இதுவே பெரிய பிரச்சனை என்றும் டிஃப்பானி லீ இந்த விஷயத்தில் கூறுகிறார்.

"உலகில் பல்வேறு அமைப்புகள் உள்ளன. அமெரிக்காவில், இந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மிகவும் மென்மையானவை மற்றும் இந்த நிறுவனங்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில், சட்டங்கள் மிகவும் கடுமையானவை."

அபராதம்

பல ஆண்டுகளாக, ஃபேஸ்புக், சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காக கோடிக் கணக்கான டாலர்களை அபராதமாகச் செலுத்தியுள்ளது. 2021 டிசம்பரில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வழக்கில் எந்தத் தவறையும் ஒப்புக்கொள்ளாமல் $700 மில்லியனுக்கும் அதிகமான அபராதத்தை ஏற்றுக்கொண்டது.

ஜனவரியில், தரவு தனியுரிமை மீறல்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு $400 மில்லியன் அபராதம் விதித்தது.

டிஃப்பானி லீ கூறுகிறார், "ஃபேஸ்புக் பல ஒழுங்குமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இணையத்தில் உள்ள அல்காரிதம்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வருகின்றன, அவை பயனர்களுக்கான உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கின்றன. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மற்றும் சட்டத்துக்குப் புறம்பான உள்ளடக்கமும் இதில் இருக்கலாம். ஃபேஸ்புக் மற்றும் பல இணைய நிறுவனங்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்."

ஆனால் அதே நேரத்தில், இந்த ஒழுங்குமுறை தொடர்பான விதிகள் லாபத்திற்காக வேலை செய்யாத விக்கிபீடியா போன்ற பல சிறிய நிறுவனங்களையும் பாதிக்கலாம் என்பதையும் அவர் நினைவூட்டுகிறார்.

'வேகமாக முன்னேறு, தடைகளை உடை'

ஆரம்ப நாட்களில், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென்று கோஷங்களை வைத்திருப்பது ஒரு வழக்கமாக இருந்தது.

'தீயவராக இருக்காதீர்கள்' (தீமையைத் தவிர்க்கவும்) என்பது கூகுளின் முழக்கம். அதே போல, ஃபேஸ்புக்கின் முழக்கம், 'வேகமாக முன்னேறு, தடைகளை உடை'.

டிஃப்பானி லீ கூறுகிறார், "இது சிலிக்கான் பள்ளத்தாக்கின் மந்திரம். இந்த முறை வேலை செய்யாது என்று இப்போது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவருடைய நிறுவனம் வெற்றிபெறும் போது, அவர் நிறைய பேசினார், ஆனால் இப்போது அவரால் செய்ய முடியாது. இப்போது அவர்கள் சட்டத்திற்கு இணங்க வேண்டும். அதே நேரத்தில் பயனர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதும் அவசியம்."

ஃபேஸ்புக்

பட மூலாதாரம்,MANJUNATH KIRAN/AFP VIA GETTY IMAGES

புது யுகத்தில் புது சவால்கள்

கடந்த சில ஆண்டுகளில், பல புதிய சமூக ஊடக நிறுவனங்கள் சந்தையில் வந்துள்ளன, அவை ஃபேஸ்புக்கிற்குப் புதிய சவால்களை முன்வைக்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்களை ஃபேஸ்புக் முறியடிக்க முடியுமா?

டாவோஸில் உள்ள சமூக ஊடகங்களின் பகுப்பாய்வு மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் கார்ல் மில்லருடன் பிபிசி பேசியது.

சமூக ஊடக உலகில், ஃபேஸ்புக் மற்ற தளங்களில் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வது அசாதாரணமானது அல்ல என்று அவர் கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்.

கடந்த ஆண்டு இது, அதிகபட்சமாக 700 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இருப்பினும், டிக் டாக்கின் சிக்கல் என்னவென்றால், இது ஒரு சீன நிறுவனத்திற்குச் சொந்தமானது மற்றும் பல நாடுகள் தரவு தனியுரிமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.

அதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில், மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுடன் இணைக்கப்பட்ட கணினிகள் மற்றும் மொபைல் போன்களிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பூரணத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கார்ல் மில்லர் கூறுகிறார், "சமீப காலங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வந்துள்ளன அல்லது கொண்டு வரப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது இந்த சட்டங்களின் வரம்பிற்குள் செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறுவது அபராதம் மட்டுமல்ல, நிறுவனத்திற்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் ஈர்க்கும் என்ற நிலையை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறோம்.

எந்தவொரு சமூக ஊடக வலைத்தளத்திற்கும் அதன் தளத்தில் யார் இருக்க வேண்டும் மற்றும் யாரை நீக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் தவறான முடிவை எடுப்பதில் ஆபத்துகள் உள்ளன. அதேபோல, எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதும் ஆபத்தாக முடியும்.

மெட்டாவெர்ஸின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், குறிப்பாக தனியுரிமை, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நியாயமான தேர்தல்கள் தொடர்பாக இணையச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு பல ஆண்டுகளாக அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

கார்ல் மில்லர் கூறுகிறார், "நிறுவனங்கள் பெரிதாகிவிட்டதால், எது சரி, எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்தனர். வெறுப்பூட்டும் அறிக்கைகள் என்ன, அவற்றின் இயல்பு என்ன? பயங்கரவாத அமைப்புகள் என்ன? முன்னதாக இந்த முடிவுகள் அரசாங்க இயந்திரத்தால் எடுக்கப்பட்டன. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன, அவை சாமானியர்கள் மற்றும் நிறுவனத்தின் பாதுகாப்பிற்குத் தேவையானவை."

ஆனால் அதே நேரத்தில், கார்ல் மில்லர் மேலும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பேஸ்புக்கிற்கு ஒரு சோதனையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வாக்காளர்களை சரியான அல்லது தவறான வழியில் செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள ஃபேஸ்புக் தயாராகி வருவது குறித்து, கார்ல் மில்லர் கூறுகையில், "2016 அமெரிக்க அதிபர் தேர்தலை விட, இம்முறை பிரச்சனையை முகநூல் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் அதன் குழு சரியான முறையில் செயல்படுகிறதா இல்லையா என்று சொல்வது கடினம். முன்பை விட அதிக வேகத்துடன், அது தனது தளத்தில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கியது.

ஃபேஸ்புக் தனது தளத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கார்ல் மில்லர் கூறுகிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடுகைகளை இடுகையிட மக்களை அனுமதிப்பது மற்றும் பயனர்களைப் பற்றிய சரியான தகவலைப் பெறுவது மற்றும் சரிபார்ப்பது போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.

மார்க் சக்கர்பெர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபேஸ்புக்கில் எல்லாம் சரியாக நடக்கிறதா?

சமூக ஊடகங்களில் மூன்று ஆண்டுகள் என்பதே நீண்ட காலமாகும், எனவே 19 ஆண்டுகள் மற்றவர்களை விட முன்னால் இருப்பது ஒரு பெரிய சாதனை.

இது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது, எதிர்காலத்தில் அதை விட்டுவிடுவதை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஆனால் ஃபேஸ்புக்கிற்குச் சில சவால்கள் கண்டிப்பாக உள்ளன. அதன் எதிர்காலம் மனித இயல்பு மற்றும் நடத்தையைப் பொறுத்தது, இது கணிக்க கடினமாக உள்ளது.

கார்ல் மில்லர் கூறுகிறார், "மக்கள் குழப்பம் நிறைந்தவர்கள், அவர்களும் தவறான எண்ணங்களால் தூண்டப்படுகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் நடத்தையை கணிப்பது கடினம். பார்வைகளின் துருவமுனைப்பு மற்றும் கோபம் உலகில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் பிரதிபலிப்பு பேஸ்புக்கிலும் தெளிவாகத் தெரிகிறது."

https://www.bbc.com/tamil/global-64854512

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.