Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறுக்க முடியாத, வேதனை தரும் உண்மை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text
 
📱 இன்றைய தலைமுறையினருக்கு
பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்
📱 படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...
📱 யாருக்குமே மரியாதை தரக்கூடாது..
📱 தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...
📱 எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...
📱 சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..
📱 பெண்கள் மீது மரியாதையே இல்லை..
📱 ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...
📱 வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..
📱 ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..
📱 ஒரு வரி கூட வாசிப்பதில்லை..
📱 தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...
📱 ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..
📱 வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..
📱 பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..
📱 சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..
📱 எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..
📱 ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....
📱 இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..
📱 பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
📱 பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..
📱 தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...
📱 அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....
📱 இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..
📱 பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..
📱 இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..
📱 மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.
📱 காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்
📱 கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு.....
 
🌹*இவை மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை*..........🌹
 
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரும்பாலானவை வயது போகும் போது தன்னை விட இளவட்டங்கள் மகழ்சசியாக வலம் வருவதை பார்தது கிழடுகளின் புறுபுறுப்பே. காலாகாலமாக நடப்பது தான். 

மாற்றங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நடப்பவை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற கோலங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க  தவறான  பார்வை

பிள்ளைகளுடன் பழகாமல்

அவர்களை  தூரத்திலிருந்து  பார்த்து  எழுதப்பட்டிருக்கும்  ஒரு வஞ்சகமான எழுத்து இது..

மிகவும் கண்டனத்துக்குரிய பார்வை.☹️

இதில் ஒன்றுகூட நான் பழகுபவர்களுக்:கு 

என்  பிள்ளைகளுக்கு  பொருந்தாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே, எந்தக் காலத்திலும் பழசுகள், இளசுகளை பார்த்து சொல்லுறதை, லிஸ்ட் போட்டு சொல்லி இருக்கினம்.

ஏதோ தாங்கள், தண்ணி அடிக்காத மாதிரியும், பெட்டயலை 'சுழட்டி' கொண்டு திரியாதவை மாதிரியும், எல்லாம், வாசிச்சு, படிச்சு பல்கலைக்கழகம் போன மாதிரியும் புலம்பல்.

இப்ப செல்போனில் பார்க்கிறதை, அப்ப புத்தகமாக, பேப்பராக வாங்கி பார்க்காதமாதிரியும், தியேட்டரில் போய் கனவுக்கன்னிகளை ரசிக்காத மாதிரியும்.... புலம்பல்..

அட, 20ல் ஆடி முடியாமல், 70ல் புலம்பி என்ன பயன்?

பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான்.... பல்லு இல்லாதவன் புலம்பி பிரயோசனம் இல்லை. 

2 hours ago, விசுகு said:

முழுக்க முழுக்க  தவறான  பார்வை

பிள்ளைகளுடன் பழகாமல்

அவர்களை  தூரத்திலிருந்து  பார்த்து  எழுதப்பட்டிருக்கும்  ஒரு வஞ்சகமான எழுத்து இது..

மிகவும் கண்டனத்துக்குரிய பார்வை.☹️

இதில் ஒன்றுகூட நான் பழகுபவர்களுக்:கு 

என்  பிள்ளைகளுக்கு  பொருந்தாது

விசுகர், பதறாதீங்கோ... சும்மா ஜோக் ஆக எடுத்துக்கொள்ளுங்கள். 😁

Edited by Nathamuni
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது  ஒரு பிரச்னை என்பது உண்மை. அனால், அதை தேவை இல்லாத பூகோள அரசியலாக்கி, icc க்கு இழுத்து சென்றது - இதை குழப்பி விட்டது. ருசியா மறுத்து இருந்தால், icc வரை போய் இருக்கலாம்.   ரஷ்யா இப்பொது உத்தியோக பூர்வம் இல்லாடதா கலந்துரையாடலை UN பாதுகாப்பு சபையில் தொடக்க இருக்கிறது . இதன் வழியே, இதில் இருக்கும் அரசியல் வெளிப்பட்டு, வேறு நாடுகள் வேறு முடிவை எடுக்க கூடும்.
    • மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், இந்திய, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள்.
    • சண்டை பிடிக்கும்போதும், மற்றவர்களை குறை சொல்லும்போதும் பாவிக்கும் சொல்😂இப்ப நினைத்துப்பார்த்தால் சிரிப்பாக இருக்கு.
    • நீங்கள் இருவரும் சொல்வது உண்மைதான். இங்கு மத்திய கிழக்கு நாடு வந்தவுடன் எந்த மல்லு கடைக்கு போனாலும் இந்த பிட்டு தான். அதுவும் வாழைப்பழம், அப்பளம் போன்றவற்றை பிட்டுவோடு பிசைந்து அடிப்பார்கள்.. ‘வ்வ்வேவே’ என வாந்திதான் வரும்.  ஆனால் ஊரில் கிராமத்தில் எப்பொழுதாவது அம்மா பச்சரிசி மாவை இடித்து குழைத்து அவித்து அதனுடன்  தேங்காய் துருவல் மற்றும் சீனியை கலந்து அம்மா செய்து கொடுப்பார்கள். அம்மா செய்த அவ்வகை புட்டு பிடிக்கும்.
    • த்யா காயத்ரி   Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு.   ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!" என்றார். ஆழ்ந்த இரங்கல்கள்! கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!|kalakkapovathu yaru show first title winner kovai guna passed away (vikatan.com)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.