Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. தேவையான அளவில் சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது.

அதேவேளையில், அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. சோடியம் உட்கொள்வதை குறைப்பது தொடர்பான அந்த அமைப்பின் அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வதை 30 சதவீதம் குறைக்கும் தனது இலக்கில் இருந்து உலக நாடுகள் விலகி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சோடியம் அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய், பக்கவாதம் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகளவில் உள்ளது.

அஜினொமோட்டோ போன்றவற்றிலும் சோடியம் உள்ளது. உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் 5 சதவீதம் மட்டுமே சோடியம் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விரிவான, கட்டாய கொள்கைகளை கொண்டுள்ளன.

73 சதவீத உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது.

சோடியம் பயன்பாடு குறைப்பு கொள்கைகள் மூலம் 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.

ஆனால் தற்போது பிரேசில், சிலி, செக் குடியரசு, லித்துவானியா, மலேசியா, மெக்சிகோ, சௌதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே சோடியம் உட்கொள்வதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளின் விரிவான தொகுப்பு உள்ளது.

சர்வதேச அளவில் இறப்பிற்கும் நோய் ஏற்படுவதற்கும் சுகாதாரமற்ற உணவு காரணமாக அமைகிறது. அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வதும் முக்கிய காரணமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசூஸ் கூறுகிறார்.

"பெரும்பாலான நாடுகள் சோடியம் குறைப்புக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நல பிரச்னை ஆபத்திற்கு தங்கள் மக்களை அவை ஆழ்த்துகின்றன. சோடியம் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும். உணவில் சோடியம் உள்ளடக்கத்திற்கான தங்களின் அளவுகோலை உற்பத்தியாளர்கள் செயல்படுத்த வேண்டும," என்று உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தினசரி உணவில் எவ்வளவு உப்பை எடுத்துகொள்ள வேண்டும்?

ஒரு ஆரோக்கியமான நபர் தினசரி 4 கிராம் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

“ஆனால், தற்போது சராசரியாக 10.8 கிராம் உப்பு மக்களால் தினமும் உட்கொள்ளப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இது இந்தியாவில் 9.8 கிராம் ஆக உள்ளது. இது நமது தினசரி தேவையை விட 2 மடங்கு அதிகம் ஆகும். குழந்தைகளுக்கு வழங்கும் தினசரி உணவில் 2 கிராம் வரை உப்பை சேர்க்கலாம்.

சராசரி நபர் 4 கிராம் உப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் 3 கிராம் உப்பை உணவில் சேர்க்கலாம். ” என்றார். இதேபோல், வயது, அவர்களின் நோயின் தன்மை ஆகியவற்றை பொறுத்தும் உப்பை உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

நமது உணவில் இரண்டு விதமாக உப்பை சேர்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், “முதலாவதாக, கண்ணுக்கு தெரியும் வகையில் உப்பை பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக கண்ணுக்கு தெரியாத வகையில் உப்பை பயன்படுத்துகிறோம்.

நாம் உட்கொள்ளும் அரிசி, பருப்பு, காய்கறி, கீரை போன்றவற்றிலும் உப்பு உள்ளது. ஆனால் இவற்றில் மிக குறைந்த அளவே உப்பு உள்ளது. இதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய், சோடா பயன்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றிலும் கண்ணுக்கு தெரியாத உப்பு அதிகளவில் உள்ளது.” என்கிறார் அவர்.

உப்பு பயன்பாடு, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்
 
படக்குறிப்பு,

மீனாட்சி பஜாஜ், ஊட்டச்சத்து நிபுணர்

பாதிப்பு எப்படி இருக்கும்?

உப்பை அதிகம் உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய பிரச்னை ஏற்படும் என்று மட்டுமே பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், உப்பை அதிகமாக எடுத்துகொண்டால் இதய நோய், பக்கவாதம், வயிற்றில் புற்றுநோய், கிட்னியில் கல், எலும்புகள் வலு இழப்பது, உடல் பருமன் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று மீனாட்சி பஜாஜ் எச்சரிக்கிறார்.

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உப்பு பயன்பாட்டை குறைப்பது எப்படி?

சோடியம் பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்தியா ஏற்கெனவே நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாக மீனாட்சி கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா மஞ்சள் பட்டியலில் உள்ளது. அதாவது, சோடியம் பயன்பாட்டை குறைக்க நாம் ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கி விட்டோம்.

சரியானதை உட்கொள்ளுங்கள் (Eat Right) இயக்கம் மூலம் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைத்து சாப்பிடுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பதப்படுத்த உணவை சாப்பிடுவதை குறைத்து பருவ காலத்திற்கு ஏற்க உள்ளூர் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மீனாட்சி அறிவுறுத்துகிறார்.

“உப்புக்கு மாற்றான இஞ்சி, பூண்டு, வெங்காயம், பட்டை, எலுமிச்சை போன்றவற்றை நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம். இவற்றின் மூலம் உணவில் உப்பின் தேவையை குறைக்க முடியும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கடலை, மோனோசோடியம் க்ளூடமைட், இன்ஸ்டண்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நமது தினசரி உப்பு தேவையே 4 கிராம்தான். ஒரே ஒரு இன்ஸ்டென்ட் உணவை சாப்பிடுவதன் மூலம் நான் இதனை பெற முடியும். இவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துகொள்வதை குறைப்பது மூலம் பாதி பிரச்னையை சரி செய்துவிடலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதோ, வெளியில் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டாலோ உணவு வகைகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

https://www.bbc.com/tamil/articles/cl46n7n7r7no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.கடைச் சாப்பாடு

2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள்

இவற்றோடு ...

3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

1.கடைச் சாப்பாடு

2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள்

இவற்றோடு ...

3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

கடந்த முறை (போன செப்ரம்பரில்), வழக்கமான குருதி சோதனை செய்த போது என் குருதியில் உள்ள சோடியத்தின் அளவு குறைவு (Low) என்று காட்டியது (134 mmol/L). இது நல்லதா கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கடந்த முறை (போன செப்ரம்பரில்), வழக்கமான குருதி சோதனை செய்த போது என் குருதியில் உள்ள சோடியத்தின் அளவு குறைவு (Low) என்று காட்டியது (134 mmol/L). இது நல்லதா கூடாதா?

இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது.

ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது.

ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.   

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

Link to comment
Share on other sites

18 minutes ago, island said:

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

ஐலண்ட்,

ஆம், பெரும்பாலானோரில் மருந்தை நிறுத்த முடியும், ஆனால் சில நிபந்தனைகள் இருக்கின்றன

கொலஸ்திரோல் - அதுவும் LDL கொலஸ்திரோல் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது தான் சில வகையான கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பர். அதைப் பரிந்துரைக்கும் போதே, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் அறிவுரையும் வழங்கப் படும்.  வருடாந்தம் இரத்தம் பரிசோதித்து, மருத்துவருடன் ஆலோசித்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்தைக் குறைப்பதா, முற்றாகக் கைவிட்டுப் பார்ப்பதா என்று தீர்மானிக்க முடியும். மருத்துவர் இந்த முடிவை எடுக்க, இரத்தக் கொலஸ்திரோலின் அளவோடு, உங்கள் ஏனைய நோய்கள் (நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்றன), உடல் பருமன், குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் உண்டா போன்ற காரணிகளையும் கவனத்திலெடுப்பர்.

எனவே, இது மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு முடிவு.

வெகு சிலருக்கு (~300 பேரில் ஒருவர்) குறிப்பிட்ட ஜீன்களின் குறைபாடு காரணமாக கொலஸ்திரோல் அதிகரிக்கும். இவர்கள் தொடர்ந்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

அனேகமான நேரங்களில் சோறு சாப்பிடும் போது மிளகாய் பொரியலுடன் சாப்பிடுவேன்.

பிரசருக்கு குளிசையும் போட்டுக் கொண்டு இந்த உப்பில போட்ட மிளகாயையும் நல்லா தின்னுங்கோ என்று வீட்டில் பேசுவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.

கொலஸ்ரரோல் மருந்து எடுப்பவர்கள் சொன்னதை வைத்து அது எடுத்தால் வாழ் நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்று  இதுவரை நினைத்தேன்.

எனக்கு ஒரு பெரியவர் சொன்னார்.தனக்கு நீரழிவு நோய் இருந்ததாகவும் உணவு கட்டுப்பாடு மூலம் அதை மாற்றிவிட்டதாக, அதை நான் நம்பவில்லை இப்போ நீங்கள் உங்கள் அப்பாவை பற்றி சொன்ன போது தான் நினைக்கிறேன் அது உண்மையாக இருக்குமோ.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

அனேகமான நேரங்களில் சோறு சாப்பிடும் போது மிளகாய் பொரியலுடன் சாப்பிடுவேன்.

😂

சோறுடன் மிளகாய் பொரியலும் அப்பளமும் எனக்கும் பிடித்தவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிரசர் குளிசை மற்றும் கொலஸ்ரோல் குளிசை சம்பந்தமாக 28 வருட அனுபங்கள் உண்டு.அதன் அடிப்படையிலான உணவு முறையிலும் பல அனுபவங்கள் உண்டு. என்னை நானே பரீட்சித்து பார்த்ததும் உண்டு.உயிருடனான விளையாட்டு.பிரசர் குளிசை என்றால் பல்வேறு கொம்பனிகளின் தயாரிப்புகளை பரிசோதித்து பார்த்ததும் உண்டு.
எனது குடும்ப வைத்தியரைப்போல்  அல்லாது எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.

இங்கே பல ஜாம்பவான்கள் இருப்பதால் சொந்த அனுபவங்களை பகிர்ந்து அடி வாங்காமல் விலகியிருப்பதே சாலச்சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வாழ்க்க்கையில் இப்போ குளீசை மருந்தும் உணவாகவும் மாறி விட்டது 

எனது வீட்டிலு கூட அம்மா அப்பா  

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள் எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.   ப்ரக்ஜோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்பவரின் மகள் பானுமதி. இவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகுடைய பானுமதியைக் கரம்பிடிக்கஅங்கே அனைத்து தேசத்து அரசர்களும் அணிவகுத்திருந்தனர். அப்போட்டியில் பங்கேற்க துரியோதனனும் சென்றிருந்தான். அவனுக்குத் தோழனாக கர்ணனும் சென்றிருந்தான். பார்த்ததுமே பானுமதியின் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் அவளோ சுயம்வர மாலையோடு துரியோதனன் பக்கம் வந்ததும் வேறு பக்கம் திரும்பி விட அவளைக் கடத்திச் சென்று மணக்கத் துடிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் கர்ணன் தேரோட்டியாக இருந்து பல்வேறு மன்னர்களுடன் போரிட்டு  இருவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் திருமணம் அதன் பின் இருமனம் இணைந்த திருமணமாக முடிந்தது. ஒருமுறை பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே துரியோதனன் வருகை புரிந்தான். கணவனைக் கண்ட பானுமதி மரியாதை நிமித்தமாக எழுந்தாள். தோற்கும் நிலையில் இருந்த அவள் ஆட்டத்தைவிட்டு வெளியேறுவதாக நினைத்த கர்ணன் வேகமாக அவள் உடையைப் பற்றி அமரவைக்க எத்தனித்தான். ஆனால் அவள் இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலை என்னும் ஆபரணம் அறுபட்டு அதிலிருந்து மணிகள் தரையெங்கும் உருண்டோடின. இருவருமே பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட துரியோதனன் ” எடுக்கவோ, கோர்க்கவோ” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். தன் மனைவியுடன் தன் சிநேகிதனே ஆனாலும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் ஆடுவதையோ அவன் பற்றியதால் அவளது ஆடையின் மேகலை அறுந்து உதிர்ந்ததையோ பெரிதாக எண்ணாமல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் மேல் வைத்த நம்பிக்கை கர்ணனைத் தன் வாழ்நாள் முழுவதும் அசைத்துக் கொண்டிருந்தது. இது எப்போது வெளிப்பட்டது என்றால் குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் பாண்டவர்களின் தாயான குந்தி, கர்ணன் தன் மகன் என்ற உண்மையை கர்ணனிடமே உரைக்க வந்தாள். மேலும் போரில் அவன் பாண்டவர் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள வந்தாள். அப்போது கர்ணன் வாய்மொழியாகவே இந்நிகழ்வு வெளிப்பட்டது. கர்ணன் தன் தாயிடம்” பிறந்தவுடனே என்னைக் கைவிட்ட தாயான நீங்கள் இப்போதுதான் மகனாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். ஆனால் என் நண்பனான துரியோதனனோ நான் யாரென்று தெரியாமலே என் வீரத்தைப் பார்த்துச் சகோதரனாக ஏற்று அங்க தேச அரசனாக்கினான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது என் செஞ்சோற்றுக் கடன். இதைவிடத் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும்போது அவள் மேகலை அறுந்து வீழ்ந்ததைக் கூடத் தப்பாக எண்ணாமல் எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட அவன் பண்பின் முன் என் எல்லா அன்பும் இணைந்துவிட்டது அம்மா. ” ”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா. மாயக் கிருஷ்ணனின் துணையை நீங்களெல்லாம் நம்பும்போது என் வில்திறமையை மட்டுமே நம்புகிறான் அம்மா. இப்படிப்பட்ட என் நண்பனுக்குனுக்கு என் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யாவிட்டால், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்காவிட்டால் நான் வாழ்ந்ததன் பயன் ஏது?” என்று கேட்க அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் ஏவக்கூடாது என்றும், அர்ஜுனனைத் தவிர பாண்டவர்கள் யாருடனும் பொருதக் கூடாது என்றும் கர்ணனிடம் வரம் பெற்றுச் செல்கிறாள் குந்தி. இப்படித் தன் நண்பனுக்காகத் தாயே வந்து கேட்டும் மாறாத கர்ணனின் பண்பு உயர்ந்ததுதானே. அதனினும் குருக்ஷேத்திரப் போரின் போது பீஷ்மர் தடுத்ததால் அவன் வெறும் படைவீரனாகவே போரிட நேருமென்பதால் போரிடப் புகமாட்டேன் என்று மறுத்ததையும் துரியோதன் ஏற்றான். அதன்பின் பீஷ்மர் விழுந்ததும்தான் அவன் தன் நண்பன் துரியோதனுக்காகப் போர்க்களம் புகுந்தான். இதுவே இவர்களின் இணைபிரியாத புரிதலுள்ள நட்பினுக்கு எடுத்துக்காட்டு என்பதைப் பார்த்தோம் இல்லையா குழந்தைகளே.     Posted by Thenammai Lakshmanan at பிற்பகல் 8:07  http://honeylaksh.blogspot.com/2023/03/blog-post_19.html
    • சிறித்தம்பி!  நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின்  அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?   
    • தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்   படக்குறிப்பு, தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆற்.கே. பன்னீர்செல்வம். 21 மார்ச் 2023, 09:07 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், அந்த அறிக்கையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டு அணிந்தபடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பத்து மணியளவில் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மற்ற பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்த மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானிய திருவிழாக்களும் நடத்தப்படும். இந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"20 மார்ச் 2023 'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி21 மார்ச் 2023 உடலில் உரசுபவரைக் குத்துவதற்கு இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் சின்னஞ்சிறு ஆயுதம்6 மணி நேரங்களுக்கு முன்னர் பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும். குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும். அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சமீபத்தில் கொள்கை வெளியிடப்பட்டது. விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க 10 ஆயிரம் ஹெக்டேருக்கு சான்றிதழைப் பெற மானிய உதவி அளிக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஐந்தாண்டுகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று ஐந்து லட்ச ரூபாய் பணப்பரிசுடன் விருது வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப் செட்கள் வாங்க இந்த மானியம் பயன்படும். தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய துவரை மண்டலத்தில் துவரை சாகுபடிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்: சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும் நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை பரவலாக்கம் செய்யவும் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற, மறுநடவு - புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். குட்டை - நெட்டை வீரிய ஒட்டுரக தென்னைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டில் 10,000 குட்டை - நெட்டை ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும். கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.   படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மல்லிகை பூ மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். பலா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 ஹெக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000: திமுக அரசின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்20 மார்ச் 2023 பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்21 மார்ச் 2023 பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் நடந்த திடீர் மாற்றம்20 மார்ச் 2023 வரும் ஆண்டு 1,000 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 19 கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும். 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும். வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 5 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 5 2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வேளாண் நிதி நிலை அறிக்கையில் இலக்கியத்திலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் உட்பட கலீல் ஜிப்ரான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட சர்வதேச கவிஞர்களிடமிருந்தும் மேற்கோள்காட்டிப் பேசினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். https://www.bbc.com/tamil/articles/cye4d4jwgn1o
    • பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா?  ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.