Jump to content

உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. தேவையான அளவில் சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது.

அதேவேளையில், அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. சோடியம் உட்கொள்வதை குறைப்பது தொடர்பான அந்த அமைப்பின் அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வதை 30 சதவீதம் குறைக்கும் தனது இலக்கில் இருந்து உலக நாடுகள் விலகி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சோடியம் அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய், பக்கவாதம் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகளவில் உள்ளது.

அஜினொமோட்டோ போன்றவற்றிலும் சோடியம் உள்ளது. உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் 5 சதவீதம் மட்டுமே சோடியம் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விரிவான, கட்டாய கொள்கைகளை கொண்டுள்ளன.

73 சதவீத உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது.

சோடியம் பயன்பாடு குறைப்பு கொள்கைகள் மூலம் 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.

ஆனால் தற்போது பிரேசில், சிலி, செக் குடியரசு, லித்துவானியா, மலேசியா, மெக்சிகோ, சௌதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே சோடியம் உட்கொள்வதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளின் விரிவான தொகுப்பு உள்ளது.

சர்வதேச அளவில் இறப்பிற்கும் நோய் ஏற்படுவதற்கும் சுகாதாரமற்ற உணவு காரணமாக அமைகிறது. அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வதும் முக்கிய காரணமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசூஸ் கூறுகிறார்.

"பெரும்பாலான நாடுகள் சோடியம் குறைப்புக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நல பிரச்னை ஆபத்திற்கு தங்கள் மக்களை அவை ஆழ்த்துகின்றன. சோடியம் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும். உணவில் சோடியம் உள்ளடக்கத்திற்கான தங்களின் அளவுகோலை உற்பத்தியாளர்கள் செயல்படுத்த வேண்டும," என்று உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தினசரி உணவில் எவ்வளவு உப்பை எடுத்துகொள்ள வேண்டும்?

ஒரு ஆரோக்கியமான நபர் தினசரி 4 கிராம் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

“ஆனால், தற்போது சராசரியாக 10.8 கிராம் உப்பு மக்களால் தினமும் உட்கொள்ளப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இது இந்தியாவில் 9.8 கிராம் ஆக உள்ளது. இது நமது தினசரி தேவையை விட 2 மடங்கு அதிகம் ஆகும். குழந்தைகளுக்கு வழங்கும் தினசரி உணவில் 2 கிராம் வரை உப்பை சேர்க்கலாம்.

சராசரி நபர் 4 கிராம் உப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் 3 கிராம் உப்பை உணவில் சேர்க்கலாம். ” என்றார். இதேபோல், வயது, அவர்களின் நோயின் தன்மை ஆகியவற்றை பொறுத்தும் உப்பை உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

நமது உணவில் இரண்டு விதமாக உப்பை சேர்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், “முதலாவதாக, கண்ணுக்கு தெரியும் வகையில் உப்பை பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக கண்ணுக்கு தெரியாத வகையில் உப்பை பயன்படுத்துகிறோம்.

நாம் உட்கொள்ளும் அரிசி, பருப்பு, காய்கறி, கீரை போன்றவற்றிலும் உப்பு உள்ளது. ஆனால் இவற்றில் மிக குறைந்த அளவே உப்பு உள்ளது. இதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய், சோடா பயன்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றிலும் கண்ணுக்கு தெரியாத உப்பு அதிகளவில் உள்ளது.” என்கிறார் அவர்.

உப்பு பயன்பாடு, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்
 
படக்குறிப்பு,

மீனாட்சி பஜாஜ், ஊட்டச்சத்து நிபுணர்

பாதிப்பு எப்படி இருக்கும்?

உப்பை அதிகம் உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய பிரச்னை ஏற்படும் என்று மட்டுமே பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், உப்பை அதிகமாக எடுத்துகொண்டால் இதய நோய், பக்கவாதம், வயிற்றில் புற்றுநோய், கிட்னியில் கல், எலும்புகள் வலு இழப்பது, உடல் பருமன் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று மீனாட்சி பஜாஜ் எச்சரிக்கிறார்.

உப்பு பயன்பாடு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உப்பு பயன்பாட்டை குறைப்பது எப்படி?

சோடியம் பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்தியா ஏற்கெனவே நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாக மீனாட்சி கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா மஞ்சள் பட்டியலில் உள்ளது. அதாவது, சோடியம் பயன்பாட்டை குறைக்க நாம் ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கி விட்டோம்.

சரியானதை உட்கொள்ளுங்கள் (Eat Right) இயக்கம் மூலம் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைத்து சாப்பிடுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பதப்படுத்த உணவை சாப்பிடுவதை குறைத்து பருவ காலத்திற்கு ஏற்க உள்ளூர் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மீனாட்சி அறிவுறுத்துகிறார்.

“உப்புக்கு மாற்றான இஞ்சி, பூண்டு, வெங்காயம், பட்டை, எலுமிச்சை போன்றவற்றை நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம். இவற்றின் மூலம் உணவில் உப்பின் தேவையை குறைக்க முடியும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கடலை, மோனோசோடியம் க்ளூடமைட், இன்ஸ்டண்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நமது தினசரி உப்பு தேவையே 4 கிராம்தான். ஒரே ஒரு இன்ஸ்டென்ட் உணவை சாப்பிடுவதன் மூலம் நான் இதனை பெற முடியும். இவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துகொள்வதை குறைப்பது மூலம் பாதி பிரச்னையை சரி செய்துவிடலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதோ, வெளியில் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டாலோ உணவு வகைகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

https://www.bbc.com/tamil/articles/cl46n7n7r7no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.கடைச் சாப்பாடு

2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள்

இவற்றோடு ...

3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

1.கடைச் சாப்பாடு

2. அதிகம் பதப்படுத்தப் பட்ட துரித உணவுகள்

இவற்றோடு ...

3. வெளிநாடுகளில் எங்கள் ஆட்களின் விருந்துகளில் பரிமாறப் படும் "உப்பு, காரம், புளி" நிரம்பிய உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தாலே உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

கடந்த முறை (போன செப்ரம்பரில்), வழக்கமான குருதி சோதனை செய்த போது என் குருதியில் உள்ள சோடியத்தின் அளவு குறைவு (Low) என்று காட்டியது (134 mmol/L). இது நல்லதா கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கடந்த முறை (போன செப்ரம்பரில்), வழக்கமான குருதி சோதனை செய்த போது என் குருதியில் உள்ள சோடியத்தின் அளவு குறைவு (Low) என்று காட்டியது (134 mmol/L). இது நல்லதா கூடாதா?

இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது.

ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இத்தகைய சிறிதளவான குறைவு ஆரோக்கியமான ஒருவரில் சோடியம் குறைவாகக் கருதப் படுவதில்லை. 136 - 145 mmol/L தான் சாதாரண அளவு. இரத்தம் எடுக்க முன்னர் நீங்கள் தண்ணீரை அதிகம் குடித்து விட்டுப் போயிருந்தால் இப்படி சோடியம் குறைவாகக் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விளைவுகள் இருக்காது.

ஆனால், கால் வீக்கம் (நீர் தேங்குதல்), சீரியசான, நாள்பட்ட இதய நோய் போன்ற தெளிவாகத் தெரியக் கூடிய அறிகுறிகள் இருந்தால் குறைவான இரத்த சோடியம் பற்றி மருத்துவர் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்.   

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

Link to comment
Share on other sites

18 minutes ago, island said:

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

வணக்கம் ஜஸ்ரின் 

கொலொஸ்ரோல் மாத்திரை  எடுப்பவர்கள்  வாழ் நாள் முழுவதும் அதை எடுக்க வேண்டுமா? அல்லது அளவு சீரான பின்னர் கைவிடலமா?  கைவிட்டதன்  பின்னர் உணவு பழக்கங்கள் மூலம் கொலோஸ்ரோல் அளவை கட்டுக்குள் க்குள் வைத்திருக்க முடியுமா? மாத்திரைக்கு பழக்கப்பட்ட உடல் ஏற்றுக்கொள்ளுமா? 

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று நின்ககிறேன். அதனால் நிறுத்துகிறேன். 

 

ஐலண்ட்,

ஆம், பெரும்பாலானோரில் மருந்தை நிறுத்த முடியும், ஆனால் சில நிபந்தனைகள் இருக்கின்றன

கொலஸ்திரோல் - அதுவும் LDL கொலஸ்திரோல் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது தான் சில வகையான கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பர். அதைப் பரிந்துரைக்கும் போதே, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும் அறிவுரையும் வழங்கப் படும்.  வருடாந்தம் இரத்தம் பரிசோதித்து, மருத்துவருடன் ஆலோசித்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்தைக் குறைப்பதா, முற்றாகக் கைவிட்டுப் பார்ப்பதா என்று தீர்மானிக்க முடியும். மருத்துவர் இந்த முடிவை எடுக்க, இரத்தக் கொலஸ்திரோலின் அளவோடு, உங்கள் ஏனைய நோய்கள் (நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்றன), உடல் பருமன், குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் உண்டா போன்ற காரணிகளையும் கவனத்திலெடுப்பர்.

எனவே, இது மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு முடிவு.

வெகு சிலருக்கு (~300 பேரில் ஒருவர்) குறிப்பிட்ட ஜீன்களின் குறைபாடு காரணமாக கொலஸ்திரோல் அதிகரிக்கும். இவர்கள் தொடர்ந்து கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உப்பின் அளவைப் பெருமளவு குறைத்து விடலாம்!

அனேகமான நேரங்களில் சோறு சாப்பிடும் போது மிளகாய் பொரியலுடன் சாப்பிடுவேன்.

பிரசருக்கு குளிசையும் போட்டுக் கொண்டு இந்த உப்பில போட்ட மிளகாயையும் நல்லா தின்னுங்கோ என்று வீட்டில் பேசுவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.

கொலஸ்ரரோல் மருந்து எடுப்பவர்கள் சொன்னதை வைத்து அது எடுத்தால் வாழ் நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்று  இதுவரை நினைத்தேன்.

எனக்கு ஒரு பெரியவர் சொன்னார்.தனக்கு நீரழிவு நோய் இருந்ததாகவும் உணவு கட்டுப்பாடு மூலம் அதை மாற்றிவிட்டதாக, அதை நான் நம்பவில்லை இப்போ நீங்கள் உங்கள் அப்பாவை பற்றி சொன்ன போது தான் நினைக்கிறேன் அது உண்மையாக இருக்குமோ.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

அனேகமான நேரங்களில் சோறு சாப்பிடும் போது மிளகாய் பொரியலுடன் சாப்பிடுவேன்.

😂

சோறுடன் மிளகாய் பொரியலும் அப்பளமும் எனக்கும் பிடித்தவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிரசர் குளிசை மற்றும் கொலஸ்ரோல் குளிசை சம்பந்தமாக 28 வருட அனுபங்கள் உண்டு.அதன் அடிப்படையிலான உணவு முறையிலும் பல அனுபவங்கள் உண்டு. என்னை நானே பரீட்சித்து பார்த்ததும் உண்டு.உயிருடனான விளையாட்டு.பிரசர் குளிசை என்றால் பல்வேறு கொம்பனிகளின் தயாரிப்புகளை பரிசோதித்து பார்த்ததும் உண்டு.
எனது குடும்ப வைத்தியரைப்போல்  அல்லாது எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.

இங்கே பல ஜாம்பவான்கள் இருப்பதால் சொந்த அனுபவங்களை பகிர்ந்து அடி வாங்காமல் விலகியிருப்பதே சாலச்சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வாழ்க்க்கையில் இப்போ குளீசை மருந்தும் உணவாகவும் மாறி விட்டது 

எனது வீட்டிலு கூட அம்மா அப்பா  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.