Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களுடன் நீங்களே நேர்மறையாக பேசி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நீங்களே நேர்மறையாக பேசி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நேர்மறை எண்ணங்களை நமக்கு நாமே வளர்த்து கொள்வதும், நம்மிடம் நாமே நேர்மறை கருத்துக்களை பேசிக்கொள்வதும் நமது வாழ்வில் நல்ல பலன்களை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இன்று இணையதளங்களில் நிறைய மோசமான செய்திகள் கொட்டி கிடந்தாலும், அந்த எதிர்மறை கருத்துகள் அனைத்தையும் சமன் செய்யும் வகையில் அங்கே நேர்மறை செய்திகளும் இடம்பெறுகின்றன.

ஆங்கிலத்தில் இன்று நீங்கள், Inspiration, Motivation போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் தேட துவங்கினால், எண்ணிலடங்கா கணக்குகளில் நேர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும் நேர்காணல்களும், உத்வேகப்படுத்தும் வகையிலான கருத்துகளும், கட்டுரைகளும் உங்கள் முன் தோன்றும்.

அதில் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், ”அறிவை விட கற்பனைதான் சிறந்தது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தெரிவித்த கருத்துக்களையும், நிக்கி மினாஜின் “எல்லோரும் இறக்கிறார்கள்; ஆனால் எல்லோரும் வாழ்கிறார்களா” என்ற பாடல் வரிகளையும் நீங்கள் காணலாம்.

 

பெரிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இவ்வளவு ஏன் இன்றைய இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை அனைவரும் நேர்மறை கருத்துக்களையும், வார்த்தைகளையும் அதிகமாக பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

தான் சந்தித்த இனவெறி தாக்குதல்கள் குறித்து, மாயா ஏஞ்சலோ தன்னுடைய வசீகரமான எழுத்துகளில் எழுதியிருப்பதை, இந்த உலகத்தின் எந்த மூலையிலிருந்து எவர் படித்தாலும், அவர்களால் அதனை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள முடியும். ”உங்களிடமிருந்து பிரகாசிக்கும் ஒளியை எந்த சக்தியாலும் மங்க செய்ய முடியாது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

வாழ்க்கையில் இப்படி சாதனை புரிந்திருக்கும் எவருடைய கதைகளையும், அனுபவங்களையும் கேட்கும்போதும், படிக்கும்போதும் நமக்குள் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதை உணர்ந்திருப்போம்.

இத்தகைய எண்ணங்களில் நம்மை நாம் தொடர்ச்சியாக தக்கவைத்துகொள்ளும்போது, நமது வாழ்க்கை உண்மையிலேயே நேர்மறையான பாதையில் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேர்மறை உணர்வுகளை பெறுவது எப்படி?

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேர்மறையான உணர்வுகளுக்கு அதிகளவிலான சக்திகள் இருக்கிறது. உற்சாகம், ஆர்வம், நன்றியுணர்ச்சி மற்றும் பிற வகையான நேர்மறையான எண்ணங்களை நாம் முதன்மையாக கொண்டிருக்கும் நிலையை,”விரிவாக்கப்பட்ட சிந்தனை செயல்திறன்” (expanded thought-action repertoires) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள், புதிய சாத்தியங்கள் மற்றும் புதிய முயற்சிகள் மேற்கொள்வது குறித்து அதிகமான கற்பனை திறன் கொண்டிருப்பார்கள் எனவும், ஒரு பிரச்னையில் அவர்களால் எளிதாக தீர்வு காணமுடியும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க உளவியல் மருத்துவரான மார்டின் செலிக்மென், PERMA (Positive Emotion, Engagement, Relationships, Meaning, Achievement) என்னும் மாதிரி நல்வாழ்வு முறையை உருவாக்கினார். நேர்மறை எண்ணங்களை எளிதாக பின்பற்றுவதற்கு இந்த வாழ்க்கை முறை உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சாவல்கள் நிறைந்த சூழ்நிலைகளிலும் நேர்மறை கருத்துக்களை உள்வாங்கி கொள்வதற்கும், அன்பானவர்களுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், கடினமான சூழ்நிலைகளை எளிமையாக புரிந்து கொள்வதற்கும் இத்தகைய நல்வாழ்வு முறைகள் உதவுவதாக கூறப்படுகிறது.

பலனளிக்கும் மதசார்பற்ற பிரார்த்தனைகள் :

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாழ்வில் நாம் நேர்மறையான வகையில் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளும்போது, அது நமது வாழ்வின் பல்வேறு கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. செய்திகளில் உள்ளடக்கியிருக்கும் தார்மீக கருத்துக்களையும், அது சார்ந்த நினைவுகளையும் பலப்படுத்துவதற்கு இத்தகைய நேர்மறையான உறுதிமொழிகள் நமக்கு உதவுகின்றன.

”உணர்ச்சிவசப்பட்டு ஒரு செயலில் ஈடுபடுவதை விட, செயல்பாட்டின் மூலம் ஒரு உணர்ச்சியை நீங்கள் மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என அமெரிக்க உளவியலாளர் ஜெரோம் பர்னர் கூறுகிறார்.

அதேபோல சாதனை புரியும் மனிதர்கள் குறித்து மிச்செல் ஒபாமா கூறும்போது, ”உண்மையிலேயே சக்திவாய்ந்த மனிதர்கள் மற்றவர்களையும் வாழ்க்கையில் உயர்த்திக் கொண்டு செல்வார்கள்; வலிமையான மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பார்கள்” என குறிப்பிடுகிறார்.

இந்த விதத்தில் நாம் நேர்மறை உறுதிமொழிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, அது மதசார்பற்ற பிரார்தனைகளுக்கு நிகராகிறது. அதாவது நீங்கள் சத்தமாக பிரார்த்தனைகள் மேற்கொள்ளும்போது, அந்த பிரார்த்தனைகள் உங்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும், ஆறுதலையும் அளிக்கும். அதேபோல நேர்மறையான கருத்துக்கள் கொண்ட மேற்கோள்களை நீங்கள் வாசிக்கும்போதும், உத்வேகமளிக்கும் பாடல்களை பாடும்போதும் அது உங்களுக்கு அதிக ஆற்றல்களை கொடுக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதேபோல நமக்கு ஏற்படும் ஏமாற்றங்களையும், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் சமாளித்து, நமது லட்சியங்களை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதற்கு, நாம் எடுத்துக்கொள்ளும் நேர்மறையான உறுதிமொழிகள் உதவிபுரியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “ தன்னை தானே நேர்மறை வார்த்தைகளால் உத்வேகப்படுத்தி கொள்கிறவர்கள்தான், வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும், அவர்களே தங்களது வாழ்க்கையிலும் வேலையிலும் நிறைவான திருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையை அழகாக்கும் நுண்ணிய உணர்வுகள் :

வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கூரிய அனைத்தையும் விட, வாழ்க்கையை நாம் எந்த மனநிலையில் அணுகுகிறோம் என்பதே நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதும், நமது மனநிலையை சார்ந்தே அமைகிறது.

நீங்கள் சமூக நீதிக்காக போராடுபவராக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை மகிழ்ந்து அனுபவிக்க விரும்பும் ஒரு சாமனிய மனிதராக இருந்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கை நினைவுகள் அனைத்தையும் உங்களது மனநிலைதான் தீர்மானிக்கிறது.

அதனால் எப்போதும் உங்களை உத்வேகப்படுத்தும் வகையிலான கருத்துகளை படியுங்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான பாடல்களை கேளுங்கள். உங்களுடைய படுக்கறை சுவர்களிலோ, எப்போதும் நீங்கள் வைத்திருக்கும் பைகளிலோ நேர்மறையான சிந்தனைகளை பிரதிபலிக்கும் குறிப்புகளை வைத்துகொள்ளுங்கள். எப்போதெல்லாம் நீங்கள் சோர்வடைகிறீர்களோ அப்போதெல்லாம் அதனை எடுத்து படியுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேளுங்கள். அப்போது உங்களின் லட்சியங்கள் குறித்தும், உங்களது வாழ்க்கையின் நோக்கங்கள் குறித்தும் பெரிதாக கற்பனை செய்ய துவங்குங்கள். அது உங்களது எண்ணங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்களது நேர்மறையான எண்ணங்களை மற்றவர்களிடமும், சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்காக உங்களை நீங்களே அவ்வபோது பாராட்டி கொள்ளுங்கள்.

நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து பேசும்போது, அது உங்களிடமும், உங்களை சுற்றி இருப்பவர்களிடமும் ஏற்படுத்தும் மாற்றங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் உங்களால் முழுமையாக உணர முடியும். மீண்டும் மீண்டும் நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது உங்களிடம் ஏற்படுத்தும் ஆதித ஆற்றல்களை கண்டு நீங்கள் நிச்சயம் ஆச்சரியமடைவீர்கள்.

https://www.bbc.com/tamil/articles/czk84p3dgj7o

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை தேவாலயங்களில் பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். பேச்சிப்பாறையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸார் இவர்மீது வழக்கு பதிவுசெய்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் நேற்று காலை முதல் போலீஸார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியிருக்கிறார் பாதிரியார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம்கார்டுகளை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.     கைதான பாதிரியார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் உள்ளிட்டவை படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேவையாற்ற வேண்டும் என்பது மரபு. ஒருகட்டத்தில், பாதிரியார் பொறுப்பிலிருந்து வெளியேறி காதலியைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருக்கிறார்.   பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது   ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம். தனது காதல் ஆசை நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாம். அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் வைத்திருந்திருக்கிறார். சென்னையிலுள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை தனியாகச் சந்திப்பது வழக்கமாம்.   கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்திருக்கிறார். புது...புது இளம்பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சாட்டிங் செய்யும்போதே இளம்பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ விசாரணையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் | Police interrogates priest Benedict arrested for sexual abuse - Vikatan
    • ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும்.
    • நாங்கள் கேள்விமட்டும்தான் கேட்பம். அதையே நீங்கள் திருப்பிக்கேட்டால்?? வேறென்ன எஸ்கேப் அல்லது தூங்குபவர்களை போல நடிக்கிறார்கள் என்பது. கவுண்டர் சொல்வதுபோல், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!
    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை இப்போது இந்த குழந்தைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால்?? அது எமக்கு ஒரு துரும்பாக அமையலாம் அல்லவா?
    • நாம் அல்ல 2500 வருட வரலாற்றைக் கொண்ட இனமாக பீற்றிக் கொள்ளும் சிங்கள பெளத்த இனம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.