Jump to content

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன?

திருச்சி சிவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஐ. காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், இதில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால், சிவாவின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

 

இந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பிரமுகர்களின் வாகனங்கள் சென்றுள்ளன. சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர்.

இருந்தபோதும் அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் அதனைக் கடந்து சென்றவிட்டன. திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

@KN_NEHRU

பட மூலாதாரம்,@KN_NEHRU/TWITTER

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர்.

இதையடுத்து காவல்நிலையம் முன்பாக பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் கே.என். நேரு தரப்பிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தரப்பிற்கும் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cl46l4ezrx3o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை" - திருச்சி சிவா எம்.பி

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு
6 மணி நேரங்களுக்கு முன்னர்

திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றனர். ஆனால் அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால் அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீடு புகுந்து கார், பைக் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

 

இதையடுத்து கருப்பு கொடியை காட்டிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது திமுகவின் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் மற்றும் சிலர் அங்கு தாக்குதல் நடத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

இதைத்தொடர்நது திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும்,மாமன்ற உறுப்பினருமான முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளரரும் மாமன்ற உறுப்பினருமான ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது திருச்சி சிவா அவரது வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்த சிலர் கல் வீச்சில் காயம் அடைந்தனர். இந்த நிலையில், ஊர் திரும்பிய திருச்சி சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு

அப்போது பேசிய அவர்,” நாடாளுமன்ற குழுவுடன் பஹ்ரைன் சென்றிருந்த நேரத்தில் என் வீட்டை சிலர் தாக்கிய தகவலை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் வாயிலாகவும் அறிந்தேன்.

நடந்த சம்பவம் குறித்து எதையும் பேசும் மனநிலையில் நான் இல்லை. கடந்த காலங்களில் கூட நான் இத்தகைய பல சோதனைகளை சந்தித்தேன். அப்போது கூட யாரிடமும் நான் புகார் சொன்னதில்லை. தனி மனித இயக்கத்தை விட கட்சி பெரியது என கருதுபவன் நான்.

நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் மன வேதனை அடைந்துள்ளனர். வீட்டில் வேலை செய்து வந்த 65 வயது பெண்மணி கூட காயம் அடைந்துள்ளார். நான் இதுவரை மனச்சோர்வில் இருப்பதாக சொன்னதில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் இருக்கிறேன்” என்றார் திருச்சி சிவா.

https://www.bbc.com/tamil/articles/crgqm7qm8y7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி.

இதுக்கு வந்த 28 பின்னூட்டத்தையும் வாசித்தீர்களா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இதுக்கு வந்த 28 பின்னூட்டத்தையும் வாசித்தீர்களா? 🤣

இன்னும் வாசிக்கவில்லை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா, திமுகவுக்குள் நடக்கும் பிரச்சனை குறித்து நடுநிலை ஊடகங்கள் சொல்லும் விசயங்களை இணைத்தாலும் தூக்குபடுது.

பார்த்துத்தான் தூக்குகினமோ, அல்லது பார்க்காமலே, டபெக்கெண்டு தூக்குகினமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.