Jump to content

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் 

Published By: VISHNU

15 MAR, 2023 | 08:44 PM
image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர். இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம். 

மேலும்   யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். 

மேலும் யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/150633

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 

என்ன முனியர் அனியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறீங்கள்.விமான நிலைய உரிமையாளர் தானே தீர்மானிப்பார் எங்கை விமானத்தை ஓட்டுறது என்டு.மற்றது கொழும்புக்கு விடுறது என்டால் கட்டுநாயக்குவுக்கு விட்டால் நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 

உந்தக்கேள்விக்கு முதல்,  நீங்கள் இலங்கைக்கு வரும்போது இந்திய நாணயமாக மாற்றிக்கொண்டு வாருங்கள், வந்தபின் உந்தக்கேள்விக்கான விடை தெரியவரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 

நாதம், சென்னை - கொழும்பு  அல்லது டெல்லி - கொழும்பு ( யாழில் அரை மணித்தியாலம் தரை தட்டி செல்லுதல்) 

இது வழமை தானே எமிரேட்ஸ் மாலேயில் தரை தட்டி கொழும்பு செல்வது போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க-பலாலி சேவை (இந்தியாவுக்கு போகாட்டிலும் கூட) அவசியம்.

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

கட்டுநாயக்க-பலாலி சேவை (இந்தியாவுக்கு போகாட்டிலும் கூட) அவசியம்.

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

வாற சீனாக்காரனும், ரசியா காரனும் செலவளிக்காத பிசினாறிப் பயலுக எண்டு சிங்களவர் திட்டுகினம்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில இருந்து போற நீங்களும், கொழும்பு பக்கம் தலை வைக்காமல் நேர யாழ்ப்பாணம் போனா... அவன் அழுதிருவான்.....😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

2015,2017 களில் ஊர் போயிருந்தேன்.
இரு தடவைகளும் கட்டுநாயக்காவில் இறங்கி நேரா ஊர் தான்.

அந்தநேரம் 14000-15000 எடுத்தார்கள்.

1 minute ago, Nathamuni said:

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில இருந்து போற நீங்களும், கொழும்பு பக்கம் தலை வைக்காமல் நேர யாழ்ப்பாணம் போனா... அவன் அழுதிருவான்

நம்மவர்கள் கொழும்பு போனாலும் உறவினர் வீடுகளிலேயே கூடுதலாக தங்குவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

வாற சீனாக்காரனும், ரசியா காரனும் செலவளிக்காத பிசினாறிப் பயலுக எண்டு சிங்களவர் திட்டுகினம்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில இருந்து போற நீங்களும், கொழும்பு பக்கம் தலை வைக்காமல் நேர யாழ்ப்பாணம் போனா... அவன் அழுதிருவான்.....😎

டு ஐ லூக் லைக் ஐ கேர்🤣.

ஊருக்கு நேரடியா லகேஜோட போய்ட்டு, பிறகு ஒரு சின்ன பாக்கோட தெற்கு டூர் போடுறவை போடலாம்.

7 minutes ago, ஈழப்பிரியன் said:

2015,2017 களில் ஊர் போயிருந்தேன்.
இரு தடவைகளும் கட்டுநாயக்காவில் இறங்கி நேரா ஊர் தான்.

அந்தநேரம் 14000-15000 எடுத்தார்கள்.

நான் ரத்மனலானையில் இருந்துதான் போயுள்ளேன்.  ஆனால் அதுக்கு எப்படியும் கொழும்புக்குள் போகவேண்டும்.

உங்களுக்கு லகேஜ் டிரான்ஸ்பர் எல்லாம் சுமூகமாக நடந்தததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

உங்களுக்கு லகேஜ் டிரான்ஸ்பர் எல்லாம் சுமூகமாக நடந்தததா?

உங்கள் கேள்வி தான் என்ன?

வானை ஒழுங்கு செய்திருந்தோம்.தூக்கி போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே.

1 hour ago, goshan_che said:

கட்டுநாயக்க-பலாலி சேவை (இந்தியாவுக்கு போகாட்டிலும் கூட) அவசியம்.

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

இதுகும் இங்கிருந்து நேராக யாழுக்கு ரிக்கட் போட முடியமென்றால்த் தான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் கேள்வி தான் என்ன?

வானை ஒழுங்கு செய்திருந்தோம்.தூக்கி போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே.

1 hour ago, goshan_che said:

நான்தான் பிழையாக விளங்கி கொண்டேன். நீங்கள் கட்டுநாயக்கா-ஊர் (பலாலி) விமானத்தில் போனதாக சொன்னதாக நான் தவறாக விளங்கி கொண்டேன்.

ஓம் வானில் நேரடியா ஊருக்கு போகலாம். அதை விட கனெக்டிங் பிளைட் இருக்கும், டிக்கெட் அதிக விலை வித்தியாசம் இல்லை எண்டால் வசதி கூட.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.