Jump to content

வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு உண்மையிலேயே பறிபோகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு உண்மையிலேயே பறிபோகிறதா?

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,இரா.சிவா
  • பதவி,பிபிசி தமிழ்
  • 15 மார்ச் 2023, 02:55 GMT

'தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது', 'வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது' போன்ற குரல்களை அண்மைக்காலமாக அதிகம் கேட்க முடிகிறது. அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், வட இந்தியர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் பல தொழில்கள் முடங்கிவிடும் என்கின்றனர். வட இந்திய தொழிலாளிகள் உண்மையிலேயே தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்களா?

வட இந்தியர்களால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறதா என்பதைப் பார்ப்பதற்கு முன் தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பின்னணி குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறுகிறது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) வெளியிட்ட செய்திக்குறிப்பு. இதில், 27.74 லட்சம் பேர் ஆண்கள், 7.13 லட்சம் பேர் பெண்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்திருக்கும் என நம்பப்படுகிறது.

உத்தர பிரதேசம், ஒரிசா, பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அசாம் போன்ற சில வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுகின்றனர்.

 

தமிழ்நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவகங்கள், காவலாளி, துணி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில வேலைகளில் மட்டுமே காணப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை இன்று ஏறக்குறைய அனைத்து வேலைகளிலும் பார்க்க முடிகிறது. அதேபோல சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே காணப்பட்ட அவர்கள் இன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர்.

இப்படியான சூழலில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேலைகளில் இருந்த தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியும், வட இந்தியர்களால் தமிழர்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறதா என்ற கேள்வியும் இயல்பாக எழுவதாக மாநிலத்தில் உள்ளவர்களில் சிலர் குரல் கொடுக்கின்றனர்.

எனவே, தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பணி செய்யும் துறைகளில் உண்மை நிலவரம் என்ன என்பதை பிபிசி தமிழ் அறிய முயன்றது.

தமிழ்நாட்டில் எவ்வளவு புலம்பெயர் தொழிலாளிகள் உள்ளனர் என்பது குறித்து அரசிடமோ அரசுசார அமைப்புகளிடமோ எந்தவித துல்லிய தரவுகளும் இல்லை. எனவே அந்தந்த துறை சார்ந்த சங்கங்கள், தொழிலாளர் அமைப்பினர் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை - ஹோட்டல்கள்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டுமே பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் உள்ளனர். இன்று சென்னையில் அனைத்து வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டாலும், ஹோட்டல் துறையில் சற்று கூடுதலாக உள்ளனர். சாதாரண சிறிய உணவகங்கள், நடுத்தர உணவகங்கள், உயர்தர உணவகங்கள், வெளிநாட்டு உணவுகளுக்கான உணவகங்கள் என சுமார் 7 ஆயிரம் உணவகங்கள் சென்னையில் உள்ளன.

ஹோட்டல் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு எடுக்க என்ன காரணம், இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதா என சென்னை உணவகங்களின் சங்கத்தலைவர் எம்.ரவியிடம் கேட்டோம்.

’’சென்னையை பொறுத்தவரை உணவகங்களில் 55 சதவிகிதம் புலம்பெயர் தொழிலாளர்களே வேலை செய்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், நம்முடைய ஆட்கள் ஹோட்டல் வேலையை விரும்புவதில்லை. இன்றைக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பவர்கள்கூட படித்து முடித்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டும், கப்பலில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு சிலர்தான் தமிழ்நாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அவர்களும் நட்சத்திர ஹோட்டல்களுக்குத்தான் செல்கிறார்களேயொழிய, நடுத்தர ஹோட்டல்களுக்கு வருவதில்லை. வேலைக்கு ஆட்கள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தால் கூட எந்த அழைப்பும் வருவதில்லை. ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்பவர்கள் கூட ஹோட்டல் வேலைக்கு வர விரும்புவதில்லை. எனவே ஹோட்டல் துறையைப் பொறுத்தமட்டில் வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்று சொல்ல முடியாது’’ என்கிறார் எம்.ரவி.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

எம்.ரவி, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தலைவர்

புலம்பெயர் தொழிலாளிகளுக்கு குறைவான ஊதியம் வழங்கினால் போதும் என்ற காரணத்தால்தான் அதிகம் பணியமர்த்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்ட போது, ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதையும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

பெரிய உணவகங்களோடு ஒப்பிடும் போது சிறிய உணவகங்களில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கும். அதேபோல, சமைப்பவரோடு ஒப்பிடும்போது பாத்திரம், மேஜை சுத்தம் செய்பவர்களுக்கு குறைவாக இருக்கும். சம்பள வேறுபாடு இப்படித்தான் இருக்குமேயொழிய தமிழ்த்தொழிலாளி, வட இந்திய தொழிலாளி என்று வேறுபாடு பார்த்து கொடுக்கப்படுவதில்லை. அப்படி உங்களால் கொடுக்கவும் முடியாது, ஏனெனில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. எனவே நீங்கள் குறைவாக, பாரபட்சமாக கொடுக்கிறீர்கள் என்று நினைத்தால் அவர்கள் அடுத்த ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்று விடுவார்கள்’’ என்கிறார் எம்.ரவி.

சிவகாசி - பட்டாசு உற்பத்தி, அச்சகங்கள், பேக்கேஜிங் துறை

தமிழ்நாட்டின் கந்தக பூமி என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி, அச்சகங்கள், பேக்கேஜிங் ஆகியவை பிரதான தொழில்கள். மேற்கண்ட தொழில்களில் சுமார் 5 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தத் தொழில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே பணிபுரிந்த நிலையில், இன்று பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில்தான் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு உற்பத்தி அளவும், ஆள் பற்றாக்குறையும் ஒரு சேர அதிகரித்ததே காரணம் என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கமான டான்ஃபாமா-வின் தலைவர் கணேசன்.

‘’பட்டாசு ஆலைக்குள் வட இந்திய தொழிலாளிகளை நாங்கள் நேரடியாக பணியமர்த்துவதில்லை. ஏனென்றால் வெடிமருந்துகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஏதாவது தவறு நடக்க வாய்ப்புள்ளதால் ஆலைக்குள் நாங்கள் அவர்களை தவிர்த்து விடுகிறோம். மற்றபடி, பொருட்களை ஏற்றி இறக்குவது, பேக்கேஜிங் போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிவகாசியைப் பொறுத்தவரை சமீபத்திய சில ஆண்டுகளில் பட்டாசு, அச்சகங்கள், பேக்கேஜிங் என மூன்று துறைகளிலுமே உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே அதற்கேற்ப மனிதவளம் தேவைப்படுகிறது. அது தமிழ்நாட்டில் கிடைக்காத போது வெளியே இருந்துதான் தொழிலாளர்களை அழைத்துவர வேண்டியுள்ளது’’ என்கிறார் கணேசன்.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

கணேசன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர்

புலம்பெயர் தொழிலாளிகளால் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்ட போது, ‘’வட இந்திய தொழிலாளியால் இவருக்கு வேலை பறிபோனது என்று ஒருவரை கூட நீங்கள் சிவகாசியில் காட்ட முடியாது. இன்று கூலி வேலைக்கு வரும் தமிழ் ஆட்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்கு காரணம், நம் ஆட்கள் படித்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டனர். எனவே ஆட்கள் கிடைக்காத வேலைகளில்தான் வட இந்திய தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். சிவகாசியில் கணக்கு எழுதுதல், கணிணி தொடர்பான வேலைகளில் தமிழ் ஆட்கள்தான் இருக்கின்றனர், அதில் ஒரு வட இந்தியர் கூட கிடையாது’’ என்கிறார் கணேசன்.

குறைவான கூலி, அதிக வேலை நேரம் என்ற குற்றச்சாட்டை மறுத்த கணேசன், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு ரூ. 420 முதல் 450 ரூபாய்வரை ஒரே அளவில்தான் சம்பளம் வழங்கப்படுவதாகவும், கூடுதல் நேரம் வேலை பார்க்கும் தமிழ் மற்றும் வட இந்திய தொழிலாளிகளுக்கு அதற்கான சம்பளம் தனியாக வழங்கப்படுவதாகவும் கூறுகிறார்.

தூத்துக்குடி - உப்பு உற்பத்தி

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் முத்து நகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முக்கிய தொழில். இங்கு உற்பத்தியாகும் உப்பு, பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி கம்போடியா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டொன்றுக்கு 20 லட்சம் டன்னுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உப்பளங்களிலும் கணிசமான அளவு புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்துவருகின்றனர். உப்பளங்கள் மட்டுமின்றி உலர் உப்பு ஆலைகளிலும் அவர்களைப் பார்க்க முடிகிறது.

உப்பு உற்பத்தி தொழிலில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த என்ன காரணம் என உப்பு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் தனபாலனிடம் கேட்டோம்.

‘’தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் பெரிய அளவில் ஆள்பற்றாக்குறை உள்ளது. முன்பிருந்த அளவுக்கு தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து வேலை செய்கிறோம். உப்பளங்களைவிட உலர் உப்பு ஆலைகளிலேயே அதிகம் வட இந்தியத் தொழிலாளிகள் உள்ளனர். ஏனெனில் அங்குதான் கூலித்தொழிலாளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள்’’ என்கிறார் தனபாலன்.

புலம்பெயர் தொழிலாளிகளால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தார் அவர்.

மேலும், "அடுத்த தலைமுறையினர் நன்கு படித்து வேறு வேலைகளுக்கு செல்கின்றனர் அப்போது ஏற்படும் வெற்றிடத்தை வட இந்திய தொழிலாளர்கள் தற்போது நிரப்பிக்கொண்டுள்ளனர்’’ என்கிறார் தனபாலன்.

திருப்பூர் - நூற்பாலை, பின்னலாடை தொழில்

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் நூற்பாலை மற்றும் பின்னலாடை தொழில்கள் பிரதானமானவை. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த புலம்பெயர் தொழிலாளிகளில் கால்வாசிக்கும் அதிகமானோர் திருப்பூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ளனர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும் போது புலம்பெயர் தொழிலாளர்கள் வருகை என்பது திருப்பூருக்குப் புதிதல்ல. முந்தைய தலைமுறையில் புலம்பெயர் தொழிலாளியாக வந்து இன்று முதலாளிகளாக மாறியுள்ள பலர் திருப்பூர் பகுதிகளில் உள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், அவர்கள் இல்லையென்றால் திருப்பூரே முடங்கிவிடும் எனச் சொல்லப்படுவதும் உண்டு.

புலம்பெயர் தொழிலாளிகளால் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறதா என திருப்பூர் பகுதியில் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சம்பத்திடம் கேட்டோம்.

’’வட இந்தியர்கள் வருகையால் தமிழர்கள் வேலை பறிபோகிறது என்று சொல்ல முடியாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. வட இந்தியர் வருகை காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதிக வேலை வாய்ப்புகள் இருந்த போது அது பிரச்னையாக தெரியவில்லை. ஆனால், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை குறைப்பு, கொரோனா பொதுமுடக்கம், நூல் விலை உயர்வு, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் காரணமாக மொத்தமாகவே திருப்பூரில் இன்று உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்தி குறைந்துவிட்டதால் சற்று குறைவான ஊதியத்திற்கு யார் வேலை செய்வார்கள் என்று பார்த்து வட இந்திய தொழிலாளர்களுக்கு இங்கிருக்கும் முதலாளிகள் வேலை கொடுக்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

சம்பத், சிஐடியூ தொழிற்சங்கம்

மற்றொன்று, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இது போன்ற வேலைக்கு வர விரும்புவதில்லை. சமீபத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது. அங்கு வந்திருந்த பெரும்பாலான நிறுவனங்கள் 10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் 25 ஆயிரம்வரை மட்டுமே சம்பளம் வழங்கக்கூடியவை. அந்த முகாமில் 30,000 பேர்வரை கலந்து கொண்டனர். ஆனால், அவர்கள் யாருமே பின்னலாடை நிறுவனங்களுக்கு வேலை தேடி வருவதில்லை. காரணம், நம்முடைய ஆட்களுக்கு கண்ணியமான சம்பளம், வாழ்க்கைத்தரம் குறித்து ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் மனநிலையுடன் ஒப்பிடும் போது வட இந்திய தொழிலாளர்களுக்கு 'அந்த எதிர்பார்ப்பு' சற்று குறைவாக உள்ளது. காரணம், அந்தக் குறைவே அவர்களுக்கு நிறைவாக தெரிகிறது. அதை நம்முடைய முதலாளிகள் சாதகமாக்கிக் கொள்கின்றனர்’’ என்கிறார் சம்பத்.

திருப்பூரில் தமிழ்த்தொழிலாளிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு இடையே ஊதிய வேறுபாடு இருப்பதாக சம்பத் கூறுகிறார்.

‘’தமிழ்த்தொழிலாளிக்கு 450 முதல் 500 ரூபாய்வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், வட இந்திய தொழிலாளிகளுக்கு 300 ரூபாய்தான் சம்பளம் வழங்குகின்றனர். நிறுவனங்களைப் பொறுத்து இதில் ஏற்ற இறக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி என்றால் பணத்தை நேரடியாக ஏஜென்ட்டிடம் கொடுத்து விடுவார்கள். அந்த மாதிரியான நேரத்தில் இன்னும் குறைவான பணமே வட இந்திய தொழிலாளி கைக்குச் செல்லும்’’ என்கிறார் சம்பத்.

டெல்டா - விவசாய மற்றும் பண்ணை வேலைகள்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் விவசாய வேலைகளிலும் குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எண்ணிக்கை அளவில் குறைவுதான் என்றாலும் இனிவரும் காலங்களில் இது அதிகரித்து, உள்ளூர் மக்களின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த மாதவன்.

புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

மாதவன்

‘’தற்போது நிறைய ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வயல் வேலைகளில் வட இந்தியர்களை ஈடுபடுத்துகின்றனர். நம் ஆட்களுக்கு ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 6,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். ஆனால், வட இந்திய ஆட்கள் 3,000 ரூபாய்க்கு அந்த வேலையை செய்து கொடுக்கின்றனர். அதேபோல நம் ஆட்களுக்கு மதிய நேரத்தில் உணவு, டீ போன்றவை வழங்கப்படும். ஆனால், அவர்கள் அதை எதையும் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, ரேஷன் அரிசியை மட்டும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இயந்திரங்கள் வந்த பிறகு டெல்டா பகுதியில் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இப்படியான சூழலில் வட இந்தியர்களை விவசாய வேலையில் அமர்த்தினால் இன்னும் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது’’ என்கிறார் மாதவன்

கட்டுமானத்துறை

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளிகள் அதிகம் பணி செய்யும் துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று. கிராமப்புறங்களில் சாதாரண கட்டுமான வேலை தொடங்கி சென்னை மாதிரியான பெருநகரங்களில் மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகள்வரை அனைத்துவித பணிகளிலும் இவர்களைக் காண முடிகிறது.

கட்டுமான பணிகளில் அதிகப்படியான புலம்பெயர் தொழிலாளிகளை பணியமர்த்த என்ன காரணம், இதனால் தமிழ்த்தொழிலாளிகள் வேலை பறிபோகிறதா என்று கட்டுமான ஒப்பந்ததாரர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.

’’தமிழ்நாட்டில் கட்டுமான துறையைப் பொறுத்தவரை திட்ட வடிவமைப்பு, மேற்பார்வை போன்ற வேலைகளில்தான் நம் ஆட்கள் இருக்கிறார்கள். மற்றபடி, செங்கல் வரிசை வைப்பது, சாந்து குழைப்பது, பூச்சு, தளம் போடுவது போன்ற வேலைகளுக்கு வட இந்திய தொழிலாளிகளைத்தான் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அந்த வேலையைச் செய்யும் நம் ஆட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதற்கு காரணம், இன்று எல்லோருமே படிக்க ஆரம்பித்துவிட்டனர்.

படித்த யாரும் கட்டுமான வேலைக்கு வருவதில்லை. எனவே புதிதாக இந்த வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வேலை உடல் உழைப்பு சார்ந்தது என்பதால் 45 வயதுக்கு மேல் வேலை பார்ப்பது கடினம். எனவே ஏற்கனவே இருக்கும் தமிழ்த்தொழிலாளிகளும் இந்தத் துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகின்றனர். எனவே கட்டுமான வேலை நடக்க வேண்டுமென்றால் வட இந்திய தொழிலாளிகளைத்தான் நாம் ஈடுபடுத்தியாக வேண்டும்’’ என்கிறார் ஸ்ரீதர்.

ஆனால், கட்டுமானத்துறையில் புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையால் தமிழ்த்தொழிலாளர்களுக்கு வேறு வகையில் நெருக்கடி ஏற்படுவதாகக் கூறுகிறார் கொத்தனாராக பணியாற்றிவரும் அலெக்ஸாண்டர்.

‘’இன்று தமிழ் ஆட்கள் வேலைக்கு கிடைப்பதில்லை என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், வட இந்திய தொழிலாளிகள் வருகைக்குப் பிறகு ஏற்கெனவே இந்த வேலையைச் செய்துவரும் தமிழ் ஆட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான ஒப்பந்தம் பேசும் இடங்களில் சம்பளம் மற்றும் வேலை நேரம் தொடர்பாக வட இந்திய தொழிலாளர்களோடு எங்களை ஒப்பிடுகின்றனர். நாம் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றால் சில இடங்களில் ஒப்பந்தம் கிடைக்காமலும் போகிறது. அவர்கள் இங்கு வேலை தேடி வந்தவர்கள், அதனால் அவர்களுக்கு வேறு வேலை இருக்காது. எனவே கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியும். ஆனால், நாம் இங்கு வாழ்கிறவர்கள். நாம் எப்படி அவர்களைப் போல கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியும். அவர்கள் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்க தயாராக உள்ளனர், அந்த சம்பளத்தில் வேலை பார்ப்பது நமக்கு எப்படி கட்டுபடியாகும்’’ என்கிறார் அலெக்ஸாண்டர்.

https://www.bbc.com/tamil/articles/ck7zmv2k4ppo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.