Jump to content

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 மணி நேரங்களுக்கு முன்னர்

"ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை"

- இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள்.

இந்த பின்னணியில்தான் சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் முகமது ஷமியைக் குறிவைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என்று சில ரசிகர்கள் முழக்கமிட்டது தொடர்பான இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவின் எதிர்வினை உற்று நோக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த டெஸ்டின் முதல் நாளில் எல்லைக்கோடு அருகே நின்றிருந்த முகமது ஷமியை நோக்கி சில ரசிகர்கள் அவ்வாறு முழக்கமிட்டார்கள்.

 

அடுத்து வந்த இரு நாட்களில் சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதுவே பேசுபடுபொருளாக மாறிப் போனது. அந்த காட்சி அடங்கிய வீடியோவை பலரும் பகிர்ந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அது வைரலாகிப் போனது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

நான்காவது டெஸ்டின் இறுதியில், அதாவது ஐந்தாவது நாள் ஆட்டநேரம் முடிந்த பிறகான பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

"ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். அங்கே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று அவர் பதில் தந்தார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் தொடர்ச்சியாகவே, முகமது ஷமிக்கு இதற்கு முன்பு நிகழ்ந்த இதேபோன்றதொரு நிகழ்வை ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அது 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை தருணம்...

அது வரையிலும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாற்றை தன் வசம் வைத்திருந்த இந்திய அணி முதன் முறையாக அந்த அணியிடம் தோற்றுப் போனது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியாக அது அமைந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் முகமது ஷமிக்கு அன்றைய தினம் மோசமானதாக அமைந்துவிட்டது. 3.5 ஓவர்கள் பந்து வீசிய அவர் 43 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அவரே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலராக இருந்தார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் முதன் முறையாக இந்திய அணி தோல்வியுற்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்களின் அதிருப்தி முகமது ஷமி மீது திரும்பியது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமியையும், அவர் சார்ந்த மதத்தையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.

ரசிகர்களிடம் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் வந்த எதிர்வினையை, அடுத்து வந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போதைய கேப்டன் விராட் கோலி துணிச்சலாக எதிர்கொண்டார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒருவர் மீது அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்துவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான செயல். களத்தில் வெற்றிக்காக நாங்கள் எவ்வளவு தூரம் கடுமையாக முயன்றோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஷமி போன்ற ஒருவர் இந்தியாவுக்கு எத்தனை போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

"உண்மையில், அந்த நபர்கள் மீது கவனம் செலுத்தி என் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க நான் மட்டுமல்ல, ஷமியோ அல்லது அணியில் உள்ள வேறு யாருமோ விரும்பவில்லை" என்று விராட் கோலி கடுமையாக எதிர்வினையாற்றினார்.

விராட் கோலி மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு பக்கபலமாக குரல் கொடுத்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் அதிரடி வீரர் சேவாக் உள்பட பலரும் முகமது ஷமியை ஆதரித்தும், விளையாட்டின் இயல்பு குறித்தும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் உடனடியாக பதிவு செய்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்த வேளையில், 2021-ம் ஆண்டில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்ட போது அப்போதைய பொறுப்பு கேப்டன் ரஹானே தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்.

தனியார் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ள முகமது சிராஜ், ""அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் என்னை நோக்கி கருப்புக் குரங்கு என்று ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அடுத்த நாளும் அது தொடர்ந்த போது எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்." என்றார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இனவெறி தாக்குதல் குறித்து நடுவரிடம் முறையிட தீர்மானித்த நான் அதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் தெரிவித்தேன். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை நீங்கள் வேண்டுமானால் களத்தில் இருந்து வெளியே இருக்கலாம் என்று நடுவர்கள் கூறினர். ஆனால் கேப்டன் ரஹானேவோ, நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம், மதிக்கிறோம், நாங்கள் ஏன் களத்தை விட்டு வெளியேற வேண்டும்? அவர்களை வெளியேற்றுங்கள்? நாங்கள் ஏன் வெளியேற வேண்டும்? என்று திட்டவட்டமாக கூறினார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய வீரர் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கிய ரசிகர்கள் மீது குஜராத் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், ரசிகர்களின் செயல்கள், விமர்சனங்களுக்குப் பதிலளித்து தேவையில்லாமல் சர்ச்சைகளை பெரிதாக்கக் கூடாது என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா அதுபோன்ற பதிலை அளித்திருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3gzkq7g4p9o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.