Jump to content

பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்

பல் ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 மார்ச் 2023, 03:38 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள் இருக்கின்றன.

2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் தெரிவிக்கிறது.

குறிப்பாக மிகவும் பின்னடைந்திருக்கும் நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும்தான் மக்கள் அதிகமான பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அத்தகைய நாடுகளில் நான்கில் மூன்று பேருக்கு பல் சம்பந்தபட்ட நோய்கள் இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.

”மக்கள் சரியாக பல் துலக்காமல் இருப்பதே 99சதவீத பல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

பல் துலக்குவதில் செய்யும் தவறுகள்

பல் ஆரோக்கியம்

“நம்முடைய ஊர்களில் மக்களிடையே பல் ஆரோக்கியத்தின் மீது பொதுவாகவே ஓர் அலட்சிய மனபான்மை நிலவுகிறது. பற்களில் சிறு சிறு அசௌகரியங்கள் வரத் தொடங்கினாலும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால் அதை மக்கள் மிக எளிதாகக் கடந்து செல்கிறார்கள்,” என்கிறார் பல் மருத்துவர் கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "நம் ஊர்களில் மக்கள், பற்களை சரியான முறையில் துலக்காமல் இருப்பதே வாய் ஆரோக்கியம் தொடர்பான பெரும்பாலான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மக்களுக்கு ஏற்படும் ஈறு தொடர்பான பிரச்னைகளும் (Gum disease), பல் சுத்திகளும் (Periodontal Disease) ஏற்படுவதற்கு 99% காரணம் நாம் பற்களைச் சரியாகத் துலக்காமல் இருப்பதுதான்.

பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு, அவர்கள் இரவு நேரங்களில் பல் துலக்குவது இல்லை. இரவு நேரங்களில் பல் துலக்குவது மிகவும் அவசியமான ஒன்று. அதேபோல் சிலர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பற்களை மிக வேகமாகத் துலக்கி விடுவார்கள். மற்ற சிலர் 10 நிமிடங்கள் வரை பல் துலக்குகிறார்கள். இது இரண்டுமே மிக தவறான விஷயம்.

நீண்ட நேரம் பல் துலக்குவதால் ஈறுகள் இறங்கிப் போவதற்கும், பற்கள் தேய்ந்து போவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சில நேரங்களில் பற்கள் உடைந்து போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை Dental Abrasion என்று கூறுவோம். இவை அனைத்தும் தவறான பல் துலக்கும் முறைகளால் வரக் கூடிய பிரச்னைகள். அதேபோல் பற்களில் மஞ்சள் நிறத்தில் படியக் கூடிய காரையும் தவறான பல் துலக்கும் முறைகளால்தான் ஏற்படுகிறது.

சரியான டூத் பிரஷ்களை தேர்ந்தெடுத்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பற்களைத் துலக்க வேண்டும். இரவு நேரங்களிலும் பல் துலக்கும் பழக்கத்தைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

டூத்பிரஷ்களின் வகைகள்

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டூத் பிரஷ்கள் தேர்ந்தெடுப்பதிலும், மக்களிடம் இங்கே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

  • பொதுவாக நாம் பிரஷ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறோம். ஒன்று குழந்தைகளுக்கான Pedo Brush மற்றொன்று Adult Brush.
  • அடுத்ததாக வடிவமைப்பைப் பொருத்தவரை பற்களின் பின்பக்கங்களிலும் எளிமையாக சுத்தம் செய்யக்கூடிய வகையில் Flexible Toothbrush-கள் இருக்கின்றன.
  • பிரஷ்களுடைய நரம்புகளின் (bristles) வடிவமைப்பைப் பொருத்தவரை Straight மற்றும் Zigzag அல்லது Crisscross என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. இதுதவிர பற்களில் கிளிப் அணிந்திருப்பவர்களுக்காக Ortho Brush என்ற வடிவமைப்பும் இருக்கிறது.
  • பிரஷ்களின் தன்மைகளைப் பொறுத்தவரை Hard, Medium, soft, Ultra soft என நான்கு வகையிலான பிரஷ்கள் இருக்கின்றன.

பிரஷ்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”இங்கே சிலருக்கு அழுத்தமாகப் பல் தேய்த்தால்தான் பல் துலக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அதற்காக கடினமான நார்களைக் (Hard brush) கொண்ட பிரஷ்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மென்மையான பிரஷ்களை பயன்படுத்துவதுதான் எப்போதும் நல்லது. ஆனால் நிறைய பேர் இங்கே சரியான முறையில் பல் துலக்குவது இல்லை. அவ்வாறு இருப்பவர்கள் Medium பிரஷ்களை பயன்படுத்தலாம்.

ஏனெனில் சரியாகப் பல் துலக்காமல் இருந்தாலும், Medium பிரஷ்களை பயன்படுத்தும்போது அது அவர்களுடைய பற்களில் உள்ள கறைகளை நீக்குவதற்கு உதவி செய்கிறது. ஆனால் அதேநேரம் Hard & Medium பிரஷ்களை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் பற்கள் சேதமடையும் என்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.

பற்கள் நேரான வரிசையில் இருக்கும் நபர்களுக்கு Straight பிரஷ்களை தேர்ந்தெடுத்தாலே போதும். ஆனால் அதுவே பல் வரிசை சீராக இல்லாமல் இருப்பவர்கள் Criss Cross பிரஷ்களை தேர்ந்தெடுக்கலாம்.

வயதானவர்கள் அல்லது பற்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள், பற்கூச்சம் உடையவர்கள் Ultra soft பிரஷ்களை உபயோகித்தால் நல்லது.

இதில் நமக்கு எந்த வகையான பிரஷ்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குழப்பமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். அதேபோல் ஒரு டூத்பிரஷை இரண்டு மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் ஒரே பிரஷை பயன்படுத்துவதில் எந்த பலனும் இல்லை,” என்று விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எலக்ட்ரானிக் டூத் பிரஷ்கள் அவசியமா?

இன்றைக்கு நிறைய இளைஞர்கள் எலக்ட்ரானிக் டூத்பிரஷ் பயன்படுத்துவதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர். உண்மையிலேயே எலக்ட்ரானிக் டூத்பிரஷ் பயன்படுத்துவது பற்களுக்கு நல்ல பலன்களை அளிக்கிறதா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்தபோது, அதற்கு இல்லை என்றே பதில் கூறுகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

”சாதாரண பிரஷ்களை விட எலக்ட்ரானிக் டூத்பிரஷ்கள் சிறந்தது என இதுவரை எந்த ஆய்விலும் நிரூபனம் ஆகவில்லை” என்று அவர் கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, “சாதாரண டூத் பிரஷ்களைவிட எலக்ட்ரானிக் டூத் பிரஷ் உபயோகிப்பது நல்ல பலன்களை அளிக்கிறது என அதன் நிறுவனங்கள் மட்டுமே கூறி வருகின்றன. ஆனால் மற்ற ஆய்வுகள் எதுவும் அப்படி கூறவில்லை. சாதாரண டூத்பிரஷ்கள் உபயோகிப்பதே எப்போதும் நல்லது. ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வேண்டுமானால் நாம் எலக்ட்ரானிக் டூத் பிரஷ்களை பரிந்துரைக்கலாம்,” என்று தெரிவித்தார்

பல் தழுவுதல் முறை

”நம்முடைய ஊர்களில் இன்னும் மக்களுக்கு பரீட்சியம் ஆகாத பல் பராமரிப்பு முறைகளில் ஒன்று பல் தழுவுதல் முறை (Flossing). சாதாரணமாக பல் துலக்கும்போது, நாம் பற்களின் முன்பக்கத்திலும், உள் பக்கத்திலும்தான் சுத்தம் செய்கிறோம்.

ஆனால் மீதமுள்ள பற்களின் 40சதவீத இடைபட்ட இடங்களை நாம் கவனிப்பது இல்லை. அந்த நுண்ணிய இடங்களிலும் சுத்தம் செய்வதற்குப் பல் தழுவுதல் முறை பயன்படுகிறது. இந்த பல் தழுவுதல் முறை நாம் எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய ஒன்றுதான்,” என்று கூறுகிறார் மருத்துவர்.

"மெல்லிய நைலான் நூலை பயன்படுத்தி அனைத்து பல் இடுக்குகளிலும் நாம் சுத்தம் செய்துகொள்ளும் முறையே பல் தழுவுதல் எனக் கூறப்படுகிறது.

நைலான் நூல் பயன்படுத்தும் முறையைத் தவிர்த்து, யுனி ஃப்லாஸ் (Younifloss), வாட்டர் ஃப்லாஸ் (water floss) என மற்ற இரண்டு பல் தழுவுதல் வகைகளும் இருக்கின்றன. பல் இடுக்குகளில் வரக்கூடிய சொத்தைகளைத் தடுப்பதற்கு இந்த பல் தழுவுதல் முறை உதவுகிறது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பற்களுக்கு இடையே சுத்தம் செய்யும் முறை

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பற்களுக்கு இடையே சிக்கும் உணவுத் துணுக்குகளை நீக்குவதற்கு பல்லிடைத் துலக்கி (Interdental Cleaning Brush) உதவும் என்கிறார் கார்த்திகேயன்.

”பொதுவாக பற்களுக்கு இடையில் உணவுகள் சிக்கும்போது, அதை நீக்குவதற்கு நாம் ஊக்குகளையோ அல்லது டூத்பிக்குகளையோ (Tooth pick) உபயோகிப்போம். ஆனால் அவ்வாறு தொடர்ச்சியாகச் செய்வது பற்களை பாதிக்கலாம்.

எனவே Interdental Cleaning பிரஷ்களை உபயோகித்து பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளை அகற்ற வேண்டும். பற்களுக்கு இடையே சிக்கும் உணவுகளை அகற்றுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரஷ்கள் இவை. இது உபயோகிப்பதற்கும் மிகவும் எளிமையான ஒன்றுதான். அனைத்து மருந்தகங்களிலும் மிகவும் மலிவான விலையிலேயே இந்த Interdental பிரஷ்கள் கிடைக்கின்றன,” என்று அவர் கூறுகிறார்.

சிறு அலட்சியங்களால் ஏற்படும் பெரும் பாதிப்புகள்

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”பல் மருத்துவ சிகிச்சை என்பது இங்கே அதிகமான பொருட்செலவை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், மக்கள் தங்களுடைய பற்கள் பாதிக்கப்படும் ஆரம்பகட்டங்களிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஏற்படும் பெரும் செலவுகளைக் குறைக்கலாம்,” என்கிறார் மருத்துவர் கார்த்திக்கேயன்.

"சான்றாகச் சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரது பற்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்திருந்தது. அவருக்கு பல் சுத்தி (Periodontal Disease) ஏற்பட்டிருந்தது.

இது சரியாக பற்களைத் துலக்காததால் ஏற்படும் ஒருவகையான பாக்டீரியா பாதிப்பு. இந்த பாதிப்பில் பெரிதாக வலி இருக்காது, ஆனால் ஈறுகளில் ரத்தம் கசிவது, வீக்கம் ஏற்படுவது போன்ற தொந்தரவுகள் அவருக்கு ஏற்பட்டிருக்கும்.

அதை அவர் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து, மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் வெறும் ஆயிரம் ரூபாய்களில் சரிசெய்திருக்க முடியும். ஆனால் அவர் அதை அப்படியே விட்டு, பற்கள் முழுவதும் சேதமடைந்தப் பிறகு சிகிச்சைக்கு வந்திருந்தார். அப்போது பாக்டீரியா பாதிப்புகள் அதிகரித்து, அவரது பற்கள் முற்றிலும் அகற்றக்கூடிய நிலையை எட்டிவிட்டன. எனவே பற்களை எடுத்துவிட்டு, முற்றிலும் செயற்கையான பற்களை பொருத்தினோம். அதற்கு சில லட்சங்கள் வரை அவருக்கு செலவு ஏற்பட்டது.

எனவேதான் சொல்கிறோம், எந்தவொரு பல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை பற்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதுதான் பற்களை பாதுகாப்பதுடன், பெரும் மருத்துவ செலவுகளில் இருந்தும் நம்மை காக்கும்,” என்று அவர் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cd1qv79vgexo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.